Saturday, May 31, 2014

எந்த கலரிலும் எழுதும் பேனா - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

எந்த கலரிலாவது நாம் பேனாவால் எழுத வேண்டும் என்றால் அந்த கலருடைய பேனாவை பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் புதிய பேனா ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

இந்த பேனா மூலம் எந்த கலரில் வேண்டுமானாலும் எழுதலாம். அச்சகங்களுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் படி இந்த பேனா உருவாக்கப்பட்டுள்ளது. பேனாவில் நீலம், மெஜந்தா, மஞ்சள், கறுப்பு வண்ணங்களில் தனித்தனியே மைகள் இருக்கும். அதில் சிறிய ரக எலக்ட்ரானிக் சென்சார் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.

எந்த கலரில் எழுத வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை தேர்வு செய்வதற்கு பேனாவில் எலக்ட்ரானிக் வசதிகள் உள்ளன. அதை தேர்வு செய்ததும் சென்சார் கருவி அதற்கு தகுந்தபடி மையை கலந்து பேனாவின் முனைக்கு அனுப்பும். இதன் மூலம் எந்த கலரில் வேண்டுமானாலும் நாம் எழுதிக் கொள்ளலாம்.

இந்த பேனாவை வைத்து லட்சக்கணக்கான கலர்களில் கூட எழுத முடியும் என்று பேனாவை உருவாக்கி இருப்பவர்கள் கூறியுள்ளனர்.


நடிகர் சூர்யா ஆதரவு வேண்டும் - இல்லையெனில் சாவதை தவிர வேற வழியில்லை..?

நடிகர் சூர்யா ஆதரவு வேண்டும்;இல்லையெனில் சாவதை தவிர வேற வழியில்லை-ஒரு இயக்குனரின் கண்ணீர் கடிதம்  

சரவணன் என்கிற சூர்யா இது படத்தின் தலைப்பு. இந்த படத்தை இயக்கியிருப்பவர் ராஜா சுப்பையா என்கிற புது இயக்குனர். இந்த தலைப்பில் என்ன பிரச்னை என்கிறீர்களா? இங்குதான் பிரச்னை ஆரம்பமானது.  நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன்.

சினிமாவிற்காக சூர்யாவாக மாற்றப்பட்டவர். படத்தின் பெயர் இவரை பிரதிப்பலிப்பதால் ஆரம்பம் முதலே எதிர்ப்பு வந்ததாக  கூறப்படுகிறது. படத்தின் தலைப்பை மாற்றக்கோரி இயக்குனர்க்கு பல தரப்பிலிருந்தும்  கூற்ப்பட்டன. ஆனால் இது நடிகர் சூர்யாவுக்கு எந்த விதத்திலும் இழுக்கு ஏற்படுத்தாது என்றும்,இந்த கதைக்கு இந்த தலைப்பே பொருத்தமானது என்றும் இயக்குனர் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு  வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து விளம்பரங்கள் வெளியிடும் நேரத்தில் சிக்கல்..சூர்யா மற்றும் சிவக்குமாரிடம் அனுமதி கடிதம்கொடுத்தால் மட்டுமே படம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்று  கூறப்பட்டதாம். இதனால் மனம் நொந்த  இயக்குனர், என் படத்துக்கு சூர்யா ஆதரவு தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் தான் சாவதை தவிர வேறு வழியில்லை என்று  கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு…..

பலபேர் வாழ்க்கைக்கு வழி அமைத்துகொடுத்துள்ள சூர்யா நிச்சயம் இந்த இயக்குனருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்பதே ரசிகர்களின் எண்ணம்!!

அந்த படத்தை பார்த்து அழுத கமல்..?

மூன்று தலைமுறை இணைந்து நடித்த மனம் படத்தை பார்த்து கண்கலங்கி விட்டாராம் கமல்.

மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையோடு சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்துள்ள படம் ‘மனம்’.  அக்கினேனி குடும்பத்தைச் சேர்ந்த நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் படம் மனம். இதில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்று சிறப்புக்காட்சியாக உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தை பார்த்து ரசித்தார். படம் பற்றி அவர் கூறும்போது,திரையில் அவர்கள் சிரிக்கும்போதெல்லாம், நாகேஸ்வர ராவுடனான எனது நினைவலைகள் ஞாபகத்திற்கு வந்து என்னை அழ வைத்தன. மனம், நாகார்ஜுனா, நாக சைதன்யா மற்றும் என் மூலமும் அந்த வரலாற்று நாயகன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.இப்படி ஒரு அற்புதமான படத்தை திரையுலகிற்கு கொடுத்ததற்காக அக்கினேனி ஃபேமிலியை நான் மனதாரப் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

மனம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நேரத்தில் நடிகர் நாகேஸ்வர ராவ் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்திற்கு இந்தியா கற்றுக் கொடுத்த 10 விஷயங்கள்!!!

இந்த கட்டுரையை படிக்கும் முன், நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். அது என்னவெனில், இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறீர்களா? ஆமெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால், இங்கு இந்தியாவிடமிருந்த உலக மக்கள் கற்றுக் கொண்டவைகளைப் பட்டியலிட்டுள்ளோம். பலருக்கு இவைகளை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவற்றால் உலகில் உள்ள பல மில்லியன் மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

உதாரணமாக, தற்போது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் யோகா, இந்தியாவில் பிறந்தது தான். அதுமட்டுமல்லாமல், காதல் என்பதை உலகிற்கு புரிய வைத்ததும் இந்தியா தான். இதுப்போன்று நிறைய விஷயங்களை இந்தியாவிடமிருந்து மற்ற நாட்டு மக்கள் கற்றுக் கொண்டு பலன் பெற்று வருகின்றனர்.

இங்கு அப்படி இந்தியாவிடமிருந்து மற்ற நாட்டு மக்கள் கற்றுக்கொண்டவைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
   
மொழிகள்
 
 உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் நிறைய மொழிகள் பேசப்படுகின்றன. அதிலும் 780 மொழிகள் இந்தியாவில் சரளமாக பேசப்படுகின்றன. எத்தனை மொழிகள் இருந்தாலும், மொழி வேற்றுமையின்றி அனைவரும் இந்தியர் என்ற எண்ணத்துடன், சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். இது இந்தியாவில் இருந்து மற்ற நாட்டினர் கற்றுக் கொண்டவைகளில் ஒன்று.

கூட்டுக் குடும்பம்

கூட்டுக் குடும்பத்தில் வாழ்வது சற்று சிரமமாக இருந்தாலும், கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதன் மூலம் கிடைக்கும் அன்பும், சந்தோஷமும் வேறு எங்கும் கிடைக்காது என்பதை உலகிற்கு காட்டியதும் இந்தியா தான்.
       
ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் என்பது இந்தியாவில் பிறந்த ஒரு பாரம்பரிய மருத்துவ முறை. இந்த முறையினால் நோய்களுக்கு சிகிச்சை அளித்து, குணப்படுத்த முடியும். இது மருத்துவ முறை மட்டுமல்லாமல், இந்த முறையானது இந்திய மக்களின் வாழ்க்கை முறையுடன் ஒன்றியிருப்பதால் தான், இந்தியர்கள் இன்றும் ஆரோக்கியமாகவும் வலுவுடனும் இருக்கின்றனர் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தி, மற்றவர்களும் ஆயுர்வேத முறையைப் பின்பற்றுகின்றனர்.

புடவைகள்

ஃபேஷன் வரும் போகும். ஆனால் என்றும் மாறாத ஒரு உடை தான் இந்திய பெண்களின் பாரம்பரிய உடையான புடவை. இந்த புடவையை பெண்கள் அணிந்தால், அவர்களின் மீது மதிப்பும், மரியாதையும் எழும். மேலும் தற்போது அனைத்து வெளிநாட்டினரும் இந்தியாவின் பாரம்பரிய புடவையை அணிய விரும்புகின்றனர்.
       
வணக்கம்

ஒருவரைப் பார்த்ததும் மரியாதை செலுத்மும் விதமாக அக்காலத்தில் இரு கைகளை கூப்பி வணக்கம் செலுத்துவார்கள். இதை உலக மக்களுக்கு கற்றுக் கொடுத்தது இந்தியா தான்.

செஸ்

செஸ் என்னும் விளையாட்டில் உள்ள ராஜா, ராணி, மந்திரி போன்றவை இந்தியாவில் பிறந்தது தான். இது இந்தியாவில் இருந்து பெர்சியா, அரபு பின்னர் ஐரோப்பா என்று பரவி பிரபலமான ஒரு விளையாட்டாகிவிட்டது.
   
பூப்பந்தாட்டம்

இந்தியர்களுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். இதனை ஆரம்பத்தில் இந்தியர்கள் விளையாட ஆரம்பித்து, பின் அது பல மில்லியன் மக்களால் விருப்பப்பட்டு விளையாடப்படும் விளையாட்டாகிவிட்டது.

உணவுகள்

பெரும்பாலான வெளிநாட்டவருக்கு இந்தியாவில் பிடித்தது என்றால் அது உணவுகள் தான். ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள், இந்த உணவுகளின் சுவைக்கு அதிக மணத்தையும், ருசியையும் தருகிறது. மேலும் தற்போது வெளிநாட்டவர் பலரும் இந்திய மசாலாக்களைப் பயன்படுத்தி உணவுகளை சமைத்து சாப்பிடுகின்றனர்.
   

யோகா

உடல், மனம் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள செய்யப்படும் ஒருவகையான உடற்பயிற்சி தான் யோகா. இதுவும் இந்தியாவில் பிறந்தது தான். இந்த யோகாவை தற்போது உலகில் உள்ள நிறைய மக்கள் தினமும் பின்பற்றி வருகின்றனர்.

தியானம்

நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், தியானம் அவசியம் செய்ய வேண்டும். இதுவும் உலகிற்கு இந்தியா கற்றுக் கொடுத்தவைகளில் ஒன்றாகும்.

சினி கிரிக்கெட்டர்ஸ்...! ஆஹா..!!!

ஊரெங்கும் எங்கு திரும்பினாலும் எல்லோருக்கும் ஐபில் காய்ச்சலாக உள்ளது. டீ கடையில் ஆரம்பித்து திகார் ஜெயில் வரை அனைவரும் டிவி பெட்டியின் முன் தான் உட்கார்ந்து இருக்கிறார்கள். இந்தியா கிரிக்கெட் விளையாடும் போது தான் எல்லோருக்கும் ரட்சகன் பட பாணியில் முறுக்கு ஏறும், ஆனால் அதற்கும் இப்போது வழியில்லாமல் ஊருக்கு ஊரு ‘பாப்பனாயக்கபட்டி சோல்ஜர்ஸ், ஏப்பம்பட்டி ஏலியன்ஸ்’ என்று ஸ்டேட்டுக்கு ஒரு டீம் வச்சு ஐபில் நடத்தி உள்ளுர்குள்ளேயே சண்டை போட ஆரம்பிச்சுடானுங்க..ஹிம் அத விடுங்க.. நம்ம கிரிக்கெட் வீரர்களுக்கும், நம் சினிமா நட்சத்திரங்களுக்கும் எப்போதும் சில ஒற்றுமைகள் இருக்கும், அந்த வகையில் எந்த கிரிக்கேட் பிரபலம்,எந்த சினிமா பிரபலத்திற்கு பொருந்துவார் என ஒரு அலசல் தான் இந்த தொகுப்பு...

ரஜினி வெஸ் தோனி!

என்றும் இருவருமே அவரவர் பீல்டில் சூப்பர் ஸ்டார் தான், இவர்களுக்குள் பொதுவாக பொருந்தும் சில ஒற்றுமைகள், இருவருமே தங்கள் வெற்றியை தலைக்கு கொண்டு செல்வதில்லை, தோல்வியை மனதிற்கு கொண்டு செல்வதில்லை, இவர்கள் ‘யானை இல்லை குதிரை’ ஒரு முறை தோற்றால், அடுத்த வாய்ப்பில் அதை விட பெரிய வெற்றியை ருசித்து விடுவார்கள். எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் மௌனம் ஒன்றையே பதிலாக கொடுப்பார்கள்.

கமல் வெஸ் சச்சின்!

இவர்கள் இருவரும் ’கிளாஸ்’ மனிதர்கள். யார் என்ன சொன்னாலும் தங்கள் வேலையை உன்மையாகவும், நேர்மையாகவும் செய்யகூடியவர்கள். இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு தங்கள் (படம், பேட்டிங்) பாணியிலேயே பதில் சொல்ல கூடியவர்கள்.

அஜித் வெஸ் கங்குலி!

இவர் தமிழ்நாடு தல அவர் கொல்கத்தா தாதா..இருவருமே அவரவர் ஊரில் மாஸ் தான், மிகவும் தன்னம்பிக்கை உள்ளவர்கள், அதைவிட தன்மானம் அதிகம் உள்ளவர்கள். வெற்றியோ, தோல்வியோ இவர்களின் ரசிகர் பலம் என்றும் குறையாது.

விஜய் வெஸ் சேவாக்!

என்றும் ஓப்பனிங்கில் இவர்களை அடித்துக்கொள்ள யாரும் இல்லை, இவர் படம் வந்தால் அதிரடி, இவர் பேட்டிங் இறங்கினால் சரவெடி தான். எதை பற்றியும் கவலைப்படாமல் தங்கள் வேலையில் மட்டும் கவனமாக இருப்பவர்கள்.

சூர்யா வெஸ் யுவராஜ்!

எப்போதும் இவர்கள் டாப் தான், இவர் நடிக்கும் எல்லா படங்களும் ஹிட் தான், அதே போல் இவர் அடிக்கும் ஒவ்வொரு பந்தும் சிக்ஸ் தான். எவருடனும் எந்த வித போட்டியிலும் ஈடுபடாமல் சைலண்ட்டாக வெற்றியடைந்து விடுவார்கள்.

விக்ரம் வெஸ் டிராவிட்!

இருவருமே நல்ல ப்ரொபஸ்னல்ஸ் அவர்கள் பீல்டில். எந்த பிரச்சனையையும் தனியாளாக நின்று போராட கூடியவர்கள், ஆனால் இவர்கள் திறமையை மக்கள் தகுந்த இடத்தில் வைக்கவில்லை என்பது தான் வருத்ததுக்குரிய விஷயம்.
சிம்பு வெஸ் கோஹ்லி!

இருவருமே மிகவும் திறமைசாலிகள், ஆனால் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர்கள். தங்கள் பணியில் வெற்றியடைய வேண்டும் என கடுமையாக உழைக்க கூடியவர்கள். பெண்கள் விஷயத்திலும் இருவரும் கில்லாடிகள் தான்.

தனுஷ் வெஸ் கம்பீர்!

அமைதியாகவே தங்கள் வேலையை சாதித்து விடுவார்கள். இவர் எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்பார், அவர் கேப்டன் பதவி வேண்டாம் என்பார், ஆனால் மறைமுகமாக இருவருமே இதற்கு தான் போட்டி போடுவார்கள். உள்ளூரில் இவர்கள் ஆட்டம் என்னமோ பலிக்கவே பலிக்காது, ஆனால் வெளியூரில் நல்ல ஆட்டகாரங்க..

விஜய்சேதுபதி வெஸ் ரெய்னா!

யார் விஷயத்திலும் தலையிட மாட்டார்கள், தான் உண்டு தன் வேலையுண்டுனு இருப்பவர்கள், எப்போதும் இருவருமே மினிமம் கேரண்டி நபர்கள், இவர்களை நம்பினால் சினிமாவில் போட்ட பணத்தை எடுத்து விடலாம், கிரிக்கேட்டில் வெற்றியும் பெற்று விடலாம்.

ஸ்ரீசாந்த் வெஸ் பவர் ஸ்டார்!

கிரவுண்டுல ஸ்ரீசாந்துனா அதற்கு சற்றும் குறையாதவர் நம்ம பவரு, இரண்டு பேருமே நம்ம மக்களுக்கு செம்ம எண்டர்டெய்ன்மெண்ட் தான். இவரு மேட்ச் பிக்ஸிங்ல மாட்டி கிரிக்கேட்டுக்கு டாட்டா சொன்னாரு, பவரு கடன் வாங்கி ஏமாற்றி ஜெயிலுக்கு சென்றதால் திரையுலகமே இவருக்கு டாட்டா சொல்லி வழியனுப்பியது.

நண்பன் படத்துக்கு சிபாரிசு பண்ணினதே விஜய்தான் - பார்த்திபன் விளக்கம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பாக நண்பன் படம் குறித்து இயக்குனர் பார்த்திபன் கூறியதாகச் சில செய்திகள் இணைய ஊடகங்களில் வெளியாகியிருந்தன. குறிப்பாக நண்பன் திரைப்படத்தில் விஜய்க்குப் பதிலாக சூர்யா நடித்தால் பொருத்தமாக இருக்குமென்று பார்த்திபன் கூறியதாக அச்செய்திகளின் சாரம் அமைந்திருந்தது.

இச்செய்திகள் குறித்த தனது கருத்தினை வெளியிட்டுள்ளார் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டிருக்கும் தகவல்...

”திரு.சத்யராஜுக்குப் பதிலாக நடிக்க அழைக்கப்பட்ட நான், இயக்குனர் சங்கரிடம் போய் விஜய்க்குப் பதிலாக சூர்யாவை நடிக்க வையுங்கள் என கருத்து சொன்னேனாம்... வடிவேலுவும் நானும் பண்ற காமெடியை மிஞ்சிடும் இது!

நடந்தது என்னவென்றால்...

’3 இடியட்ஸ்’ இயக்கம் எனக்கே வந்தது. பேச்சு வார்த்தையின் போது விஜய் சூரியா இருவரிடமும் தயாரிப்பு தரப்பில் பேசினார்கள். எனக்கு பதில்
இயக்குனர் சங்கரின் பெயரும் அடிபட்டது. முடிவில் ஷங்கர் + விஜய் கூட்டணியில் நண்பனானது. என்னை அப்படத்திற்கு சிபாரிசு செய்ததே நண்பர்
விஜய்தான். கதை இப்படியிருக்க விஜய் பற்றிய கருத்தை நான் எங்கு போய் சொல்ல?

சிறப்புத் தகுதிகள் இல்லாமல் யாரும் உயர்வதில்லை. விஜய்யின் இன்றைய உயரம் சிறப்பு வாய்ந்தது. துப்பாக்கி உச்சி முனை கத்தி! “

இவ்வாறு விஜய் பற்றிய தான் கூறிய கருத்தாக வெளியாகியிருக்கும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பார்த்திபன்.

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகிவரும் ”கதை திரைக்கதை வசனம் இயக்கம்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் 'கத்தி'. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் கைகோர்க்கப் போகிறார் விஜய்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். விஜய்யுடன் ஸ்ருதிநாசன் நடிப்பது இதுவே முதல் முறை.

மேலும், இப்படத்தில் ஸ்ரீதேவி , 'நான் ஈ' படத்தில் நடித்த சுதீப் ஆகியோர்  நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் நடிப்பதற்காக சுதீப்புக்கு ஆறு கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என்ரு சொல்லப்பட்டு வந்தது. ஆனால், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனை அழைத்துவர பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அவரிட தேதிகள் இல்லாததால் இங்கே உள்ள நடிகைகளில் யாரை அணுகலாம் என யோசித்தவர்களுக்கு பளிச்சென ஹன்சிகா கண்ணுக்கு தெரிந்தார்.

ஏற்கனவே விஜய்யுடன் ‘வேலாயுதம்’ படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார் ஹன்சிகா. தற்போது அவர் நிறைய படங்களில் நடித்து வந்தாலும் அவர் கைவசம் இவர்கள் கேட்ட தேதிகள் இருந்ததால் விஜய்க்கு ஜோடியாக அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

சி.எஃப்.எல். பல்பு ஜாக்கிரதை..!

'குடும்ப பட்ஜெட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு மின் கட்டணம், ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. குண்டு பல்பினால், அதிக மின்சாரம் செலவாகும் என்பதால், இன்று பெரும்பாலான வீடுகளிலும் குறைந்த மின்சாரத்தில், அதிக வெளிச்சத்தைத் தரும் சி.எஃப்.எல். பல்புகள்தான் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு குண்டு பல்பு, தான் உட்கொள்ளும் எரிசக்தியில் ஐந்து சதவிகிதம் மட்டுமே வெளிச்சமாக மாற்றுகிறது. ஒரு சி.எஃப்.எல் பல்பு, குண்டு பல்பைவிட ஐந்து மடங்கு குறைவாகவே மின்சக்தியை உட்கொள்கிறது. சி.எஃப்.எல் பல்புகள் மூலம் எரிசக்தி மிச்சமாகிறது; கார்பனின் அளவும் குறைகிறது. அப்படியானால், சி.எஃப்.எல் பல்புகளை, 'சுற்றுச்சூழலின் நண்பன்’ என்று கூறலாமா? ஆனால், அப்படிக் கூறத் தயங்குகிறார்கள் ஆய்வாளர்கள்.

சி.எஃப்.எல். பல்புகள் கை தவறி விழுந்து உடைந்துவிட்டால், உடனே அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. ஒவ்வொரு சி.எஃப்.எல். பல்புகளிலும் 68 மில்லிகிராம் மெர்க்குரி இருக்கிறது. இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம், ஆர்சனிக், துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மை உடையது. இந்த விஷத்தை முகர்ந்தாலோ, சருமத்தில் பட்டாலோ, மைக்ரேன் தலைவலி, மூளை பாதிப்பு, உடல்அசைவுகள் பாதிக்கப்பட்டு நிலைதடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம். அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, சருமப் பாதிப்புகளும் ஏற்படலாம். சி.எஃப்.எல். பல்புகள் உடைந்துவிட்டால், பாதுகாப்பாக இருப்பதுபற்றியும் சுகாதாரத் துறை விளக்கியுள்ளது.

அந்த அறையிலிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும். நெடி மூக்கில் ஏறக் கூடாது. 15 நிமிடங்களுக்குப் பிறகே அப்புறப்படுத்த வேண்டும். நொறுங்கிக்கிடக்கும் கண்ணாடி, காலில் படாமல் பார்த்துக்கொள்ளவும்.

வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்வம் உறிஞ்சப்பட்டால், அது உள்ளே ஒட்டிக்கொள்ளும். அதைத் திரும்ப உபயோகிக்கும்போது மெர்க்குரித் துகள்கள் அறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவி, மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு, துடைப்பத்தால் சுத்தப்படுத்தினால் போதும்.

சிதறிய துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து, 'சீல்’ செய்து, அவற்றைக் குப்பைத்தொட்டியில் போடாமல், கார்ப்பரேஷன் ஆட்கள் வரும்போது, தனியாக அவர்களிடம் கொடுத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு சொல்ல வேண்டும்.

சி.எஃப்.எல் பல்புகளை மிக அருகில், குறிப்பாக மேஜை விளக்குகளாகப் பயன்படுத்த வேண்டாம். மைக்ரேன், கண் எரிச்சல், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், சி.எஃப்.எல் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி. அல்லது  ஹலோஜன் பல்புகளைப் பொருத்துவது பாதுகாப்பு.

அஜீத்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார்..?

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. முன்னதாக தெலுங்கில் சில ஹிட் படங்களை இயக்கி வந்த இவர், அஜீத்திடமும் கதை சொல்லி ஓ.கே வாங்கி வீரம் படத்தை இயக்கினார். அப்படம் அஜீத்துக்கு கமர்சியல் ஹிட்டாக அமைந்ததால் அடுத்தபடியாகவும் சிவாவிடம் அவர் ஒரு கதையை கேட்டிருப்பதாக செய்தி பரவி கிடக்கிறது. இந்த நிலையில், அந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தற்போது இந்தியில் அதிரடிப்படங்களை கொடுத்து வரும் வித்யாபாலன் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகி கூடுதல் பரபரப்பினை கூட்டியிருக்கிறது.

ஆனால், இதுபற்றி டைரக்டர் சிவா கூறுகையில், அஜீத்திடம் நான் சில கதைகளை சொன்னேன். அதில் ஒன்றை அவர் ஓ.கே செய்து ஸ்கிரிப்ட்டை நன்றாக ரெடி பண்ணுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதனால், தற்போது வித்தியாசமான காட்சிகளை வசனங்களை கோர்த்து ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில், கதாநாயகியாக இந்தி நடிகை யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று பரிசீலனை செய்தபோது, வித்யாபாலனின் பெயரையும் எடுத்துக்கொண்டோம். ஆனால், இந்த படம் குறித்து இன்னும் அவரை அணுகவில்லை. கதை சம்பந்தப்பட்ட வேலைகள் முடிந்து, அஜீத் சார் கால்சீட் கொடுத்த பிறகுதான். அந்த தேதிகளைப் பொறுத்து எந்த நடிகை கிடைக்கிறாரோ அவரை வைத்து படப்பிடிப்பு நடத்துவோம். அதனால், அஜீத்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார் என்பது இன்னும் முடிவெடுக்கப்படாத செய்திதான் என்கிறார் சிவா.

புதுச்சேரியில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் க்ளைமேக்ஸ்..!!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி அமிரா நடிக்க இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை முடிவடைந்துவிட்டதாம்.

இன்னும் இரண்டு பாடல்களும் க்ளைமாக்ஸ் காட்சியும் மட்டும் தான் பாக்கியாம். இதில் க்ளைமேக்ஸ் காட்சி மற்றும் ஒரு பாடல் காட்சியை புதுச்சேரி அருகே அமைந்துள்ள 100 ஏக்கர் விவசாய நிலத்தில் படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

இப்படப்பிடிப்பு ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி, கிட்டத்தட்ட 15 நாட்கள் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து இன்னொரு பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக தனுஷ், அமிரா மற்றும் படக் குழுவினர் ஸ்காட்லாந்து பறக்கவிருக்கின்றனர். அத்துடன் படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது

ஞாபக மறதி உள்ளவரா நீங்கள்... உங்களுக்கான பதிவு இது..!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அதிகமாக இருக்கும் பிரச்னைகளில் முக்கியமானது ஞாபக மறதி. உடலை உறுதியாக பராமரிப்பது போல், நமது எண்ணங்களை நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிகள்:

* அறிவை பெருக்கும் விளையாட்டுகள்:

நினைவுத் திறனை கூர்மையாக்கும், அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள். உதாரணமாக செஸ், கேரம் போர்டு, குறுக்கெழுத்துப் போட்டி போன்ற விளையாட்டுகள் மூளையை கூர்மையாக்கும். நினைவுத் திறன், கவனம், ஒரு செயலின் மீது கருத்தை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மேம்படுத்தும்.

* நன்கு தூங்குங்கள்:

தூக்கத்தை பொறுத்து நினைவுத்திறன் மாறுபடும். போதுமான தூக்கத்தை பெறவில்லையென்றால் ஞாபக மறதியை ஏற்படுத்தும். தூக்கத்தில் ஏதேனும் நினைவுகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தினால் முழுமையான தூக்கத்தை பெற முடியாது. இது போன்ற காரணங்கள் நினைவுத் திறனை குறைக்கும்.
       
* வெவ்வேறு இடங்களில் அமர்ந்து படியுங்கள்:

ஞாபக மறதி உள்ள மாணவர்கள், வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ, நடந்து கொண்டோ படியுங்கள். மாலை நேரத்தில் படிக்கும் பாடங்களை, அடுத்த நாள் காலை, மற்றொரு முறை பார்வையிடுவது நல்லது. அவ்வாறு செய்வதால் படித்த பாடங்கள் மனதில் பதியும்.

* எண்ணங்களை கற்பனை செய்யுங்கள்:

பாடத்தில் உள்ள படங்கள், அட்டவணைகள், கிராபிக்ஸ்கள் போன்றவற்றை பார்த்தவுடன், எண்ணங்களில் ஏற்படும் கற்பனைகள் மற்றும் கருத்துக்களை குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். புத்தகத்தில் உள்ள முக்கியமான வாக்கியங்கள், வார்த்தைகளை வண்ணங்கள் கொண்டு கோடிட்டு வையுங்கள். இவற்றின் வாயிலாக, எளிமையாக பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
   
* எழுதும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்:

குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர, நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள். உதாரணமாக, பாடம் தொடர்பான சூத்திரங்கள், குறியீடுகள், போன்றவற்றை எழுதி வையுங்கள். எழுதியவற்றை நேரம் கிடைக்கும் பொழுது படித்துப் பாருங்கள். இதனால் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கும்.

* நினைவூட்டும் தந்திரங்கள்:

ஒரு பொருளையோ, நபரையோ, செய்தியையோ நினைவில் வைக்க விரும்புவோர், புகைப்படங்கள், வார்த்தைகள், வாக்கியங்கள், ஜோக்குகள், பாடல்கள், இணைப்பு வார்த்தைகள், வார்த்தைகளில் உள்ள எதுகை, மோனைகள் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

காமெடி கலாட்டா " அதுவேற இதுவேற " - திரைவிமர்சனம்!

பாட்சா ரஜினி மாதிரி, நாயகன் கமல் மாதிரி மிகப்பெரிய தாதாவாக வேண்டும் என்ற லட்சியத்துடன் ஊரில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் வர்ஷன். சென்னையில் தன் சித்தாப்பாவான இமான் அண்ணாச்சி வீட்டில் தங்குகிறார்.

இமான் அண்ணாச்சி போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கிறார். இவருக்கோ இன்ஸ்பெக்டராக வேண்டும் என்பதுதான் லட்சியம். வர்ஷன், கஞ்சா கருப்புடன் இணைந்து தாதாவாக வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார். ஒருநாள் இவர்கள் முயற்சியில் எதிர்பாராதவிதமாக நாயகி சானியாதாராவை ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார்கள். அதிலிருந்து சானியாதாரா, வர்ஷன் மீது காதல் வயப்படுகிறார். ஆனால் வர்ஷனுக்கு தன் லட்சியம் தான் முக்கியம் என்பதால் காதலில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்.

சானியாதாராவின் தந்தை சிங்கமுத்து மிகப்பெரிய அரசியல்வாதி. சானியாதாராவிற்கு மாடர்னாக இருக்க ரொம்ப ஆசை. ஆனால் சிங்கமுத்து பழமை விரும்பி. ஒரு கட்டத்தில் வர்ஷன் சிங்கமுத்துவின் கட்சியில் தொண்டனாக சேருகிறான். இது சானியாதாராவிற்கு பிடிக்கவில்லை. ஒருநாள் சிங்கமுத்து கட்சியின் முதல்வரை சந்திக்கும்போது, வர்ஷன் சிங்கமுத்துவை அடுத்த முதல்வர் வாழ்க!, என்று வாழ்த்தி கோஷமிடுகிறான். இதைப் பார்த்த முதல்வர், சிங்கமுத்துவை கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து விலக்குகிறார். இதனால் கோபம் அடையும் சிங்கமுத்து, வர்ஷனை கட்சியில் இருந்து நீக்குகிறார்.

இதனை கண்டு மகிழ்ச்சியடையும் சானியாதாரா, வர்ஷனிடம் உன்னுடைய லட்சியம் என்ன? என்று கேட்க, அதற்கு தன் லட்சியத்தை கூறுகிறார். அதற்கு சானியாதாரா, உன்னிடம் உள்ள பணத்தை வைத்து நாலுபேருக்கு நல்லது செய்தால் போதும். உன் லட்சியத்தை மாற்றி நல்லவனாக மாறு என்று அறிவுரை கூறுகிறார். இதனால் சானியாதாரா மீது காதல் வயப்படுகிறார் வர்ஷன்.

இதற்கிடையில் ஒருநாள் போதையில் இமான் அண்ணாச்சியிடம் லட்சியத்தை கூறுகிறார். அதற்கு எதாவது கொலை கேசில் உன்னை மாட்டி விடுகிறேன். நீயும் தாதாவாகிடுவாய், நானும் இன்ஸ்பெக்டராகி விடுவேன் என்று அண்ணாச்சி கூற, அதனை செயல்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள். அதன்படி ஒரு பைனான்சியர் கொலையில் இமான் அண்ணாச்சி, வர்ஷனை மாட்டிவிடுகிறார். இதனால் வர்ஷன் ஜெயிலுக்கு செல்ல நேருகிறது. இறுதியில், வர்ஷன் நிலை என்ன? நாயகி சானியாதாராவை கரம் பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

முழுநீள நகைச்சுவை படத்தில் நாயகன் பொறுப்பை ஏற்றுள்ள வர்ஷன் சிறப்பாக நடித்திருக்கிறார். படம் முழுக்க நகைச்சுவை கதாபாத்திரம் போலவே நடித்திருக்கிறார். நாயகியான சானியாதாரா, அழகு பதுமையாக படம் முழுக்க வலம் வருகிறார். கதையின் ஓட்டத்திற்கு இவரும் தன் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார். இதுவரை சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இமான் அண்ணாச்சி, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்துள்ளார்.

இவர் வரும் காட்சிகளில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, தியாகு, பொன்னம்பலம், ஷகீலா, தளபதி தினேஷ் ஆகியோரும் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறார்கள். தாஜ் நூர் இசை கேட்கும் ரகம். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் எம்.திலகராஜன். எந்தவித லாஜிக்கும் இல்லாமல் நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்தி காட்சிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். அதுவேற இதுவேற... ‘காமெடி கலாட்டா’

வாடகை வீடு தேடுபவரா நீங்கள்.! உங்களுக்காக..?

* வாடகைக்கு வீடு தேடும்போது, நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கும் பகுதியையே தேர்ந்தெடுங்கள். கொசுக்கள் மண்டிய, சாக்கடைகள் நிரம்பிய பகுதிகளை அவசியம் தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால், வாடகையில் மிச்சப்படுத்தும் பணத்தை மருத்துவமனைக்குத் தர வேண்டியிருக்கும்.

* இப்போதெல்லாம் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் வீட்டின் பயன்பாட்டுக்காக அமைத்துக் கொள்கிறார்கள். எனவே வாடகை வீட்டைத் தேர்ந்தெடுக்கும் முன் பார்க்கிங் வசதி பற்றி முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். நிறைய வீடுகளில் வாகனங்களைத் தெருவிலேயே நிறுத்த வேண்டியிருக்கும். இயன்றவரை பாதுகாப்பாக நிழலில் வாகனங்களை நிறுத்த இயலுமா என்பதையாவது உறுதி செய்து கொள்ளுங்கள்.

*  வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்க்கும் வழக்கம் இருந்தால் வாடகைக்கு வீடு தேடும்போது அங்கு அதற்கான வசதிகள் இருக்கின்றனவா என்று கவனியுங்கள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதை ஆட்சேபிப்பார்களா என்பதையும் விசாரித்துக் கொள்ளுங்கள். அதுபோல் உங்களுக்கு வளர்ப்பு பிராணிகள் அலர்ஜியாக இருக்கும்பட்சத்தில் அக்கம்பக்கத்தில் யாரேனும் அதை வளர்க்கிறார்களா என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

*  அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு குடிபுகும்போது லிஃப்ட் வசதி இருக்கிறதா, ஏசி பொருத்த ஆகும் ஒயரிங் செலவு மற்றும் யூபிஎஸ் ஒயரிங் செலவு யாருடையது என்பதையும் முன்கூட்டியே பேசிக் கொள்ளுங்கள். அதுபோல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகை தவிர பராமரிப்பு செலவு எனத் தனியே கணிசமான தொகை ஒன்றையும் தர வேண்டியிருக்கும். அதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

*  வீடு அமைந்திருக்கும் பகுதியில் திருட்டு பயம் உண்டா என்பதை விசாரியுங்கள். அக்கம்பக்கத்தில் ஏற்கெனவே திருட்டுகள் நடைபெற்று இருக்கிறதா? தனியே இருக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பான பகுதியா என்பதை எல்லாம் தீர விசாரித்துவிடுவது கவலைகளைத் தவிர்க்க உதவும். குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வருவதற்கு சிரமம் இல்லாதபடி வீடு அமைவது மிக மிக முக்கியம்.

*  நீங்கள் குடிபுகும் வீடு, பஸ் நிலையம் அல்லது ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், மருத்துவமனை, கடைவீதி, வங்கிக் கிளை ஆகியவற்றுக்கு நடந்து செல்லும் தூரத்தில் அமைந்திருந்தால் மிகவும் நல்லது. அலைச்சலில் மிச்சமாகும் நேரத்தை அவசியமான பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

*  வாடகை வீட்டுக்குக் குடி புகுவதற்கு முன்பு விரிவான ஒப்பந்தம் அவசியம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

பூஜை - ஜஸ்ட் மிஸ்ஸான ரேகா..!

 ஹரி எத்தனை படங்கள் எடுத்தாலும் கூட்டுக்குடும்பம், அப்பத்தா முதல் பேரன்வரையான உறவுகள் கண்டிப்பாக இடம்பெறும். பூஜையில் விஷாலின் அம்மா கதாபாத்திரம் பிரதானமாக வருகிறது.

தாமிரபரணியில் நதியாவின் கதாபாத்திரம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ அப்படியொரு வலுவான கதாபாத்திரமாம். அதில் இந்தி நடிகை ரேகா நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை அணுகியிருக்கிறார்கள்.

ஆனால் ரேகாவின் கால்ஷீட் இவர்களின் தேவைக்கு ஒத்துப் போகவில்லை. அதன் பிறகே அந்த வேடத்தில் நடிக்க ராதிகா சரத்குமாரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விஷால், ஸ்ருதி நடிக்கும் பூஜையை தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷாலே தயாரித்து வருகிறார். வரும் தீபாவளிக்கு படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
 

விஜய்யிடம் உதவி கேட்கவில்லை - மேஜர் முகுந்தின் குடும்பம் விளக்கம்..!

 காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் உயிர் இழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை சமீபத்தில் நோரில் சென்று சந்தித்தார் விஜய். அதுபற்றிய செய்தியை வெளியிட்ட சில ஊடகங்கள் முகுந்தின் மகள் அர்ஷியாவின் கல்வி செலவை விஜய் ஏற்றுக் கொண்டதாக எழுதியிருந்தனர். அதனை முகுந்தின் குடும்பம் சமூக வலைத்தளத்தில் மறுத்துள்ளது.

மேஜர் முகுந்தின் மகள் அர்ஷியா விஜய்யின் தீவிர ரசிகை. அதனை அறிந்த விஜய் முகுந்தின் குடும்பத்தை சந்தித்ததோடு அர்ஷிதாவுடன் சிது நேரத்தை செலவிட்டார். விஜய்யின் இந்த செயலுக்கு முகுந்தின் குடும்பம் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துள்ளது. அதேநேரம் முகுந்தின் பெயரைச் சொல்லி யாரிடமும் பண உதவி இதுவரை கேட்டதில்லை என்றும், அர்ஷிதாவின் கல்விச் செலவை ஏற்கும்படி யாரிடமும் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.

மேஜரின் குடும்பத்தின் கௌரவத்தை பாதிக்கும் இதுபோன்ற செய்திகளில் அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியம்.

பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
   
* ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. திரு மணங்களில் `ஊஞ்சல் சடங்கு' இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. இது ஒரு நல்ல பயிற்சி.

* கம்ப்ïட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன் றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

*தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப் படும்.
       
* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்துப் படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.

விஜய் சேதுபதியின் " மெல்லிசை " விரைவில் நிறைவடைகிறது..!

விஜய் சேதுபதி - காயத்ரி நடிப்பில் உருவாகிவரும் மெல்லிசை திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் நிறைவடையவுள்ளன. அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படம் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ரிபெல் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தினை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடவுள்ளது.

இயக்குனர் ராமின் உதவி இயக்குனரான ரஞ்சித் இப்படத்தின் கதையினைப் படப்பிடிப்புத் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்னரே விஜய் சேதுபதியிடம் சொன்னதாகவும், இப்படத்தின் கதை மிகவும் ஈர்க்கும் விதமாக இருந்ததால் விஜய் சேதுபதி நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் விஜய் சேதுபதியின் கால்ஷீட் இல்லாததால் இப்படத்தினை அடுத்த ஆண்டு படமாக்கத்தான் திட்டமிட்டிருந்தது படக்குழு. திடீரென விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் உடனே இயக்குனரிடம் இப்படத்தினைத் துவங்கலாம் என்றும், முப்பது நாட்களில் படத்தினை முடிக்கமுடியுமா என்றும் கேட்டாராம் விஜய் சேதுபதி. இயக்குனரும் அதற்கு ஒப்புக் கொள்ளவே புல்லட் வேகத்தில் இப்படத்தினைப் படமாக்கியுள்ளனர்.

தற்பொழுது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ள இப்படம் இசையினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் திரில்லர் படமாகும். அறிமுக இசையமைப்பாளர் சாம் சார்லஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

கோச்சடையான் படத்தால் தீபிகா படுகோனே கோபம்..?


‘கோச்சடையான்’ படத்தில் தனது உருவத்தை அலங்கோலமாக காட்டி விட்டதாக தீபிகா படுகோனே கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனே தமிழில் அறிமுகமான முதல் படம் கோச்சடையான்.

ஏற்கனவே ராணா படத்தில் ரஜினி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அது நின்று போனதால் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடிக்க வைக்கப்பட்டார். இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்தார். இதன் மூலம் தென்னிந்திய மார்க்கெட்டை பிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. சென்னையில் நடந்த இந்த படத்தின் பாடல், டிரெய்லர் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றார்.

கோச்சடையான் ரிலீசானதும் தனது நடிப்பு பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் இணைய தளங்களில் ரசிகர்கள் அவரது நடிப்பை விமர்சித்து கருத்துக்களை பதிவு செய்தனர். அனிமேஷனில் தீபிகா படுகோனே அழகை அலங்கோலபடுத்தி விட்டதாகவும் விமர்சனங்கள் வந்தன. படம் வெற்றிகரமாக ஓடினாலும் கூட தீபிகா படுகோனே கேரக்டருக்கு வரவேற்பு இல்லை. இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனது கேரக்டர் முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டதாகவும் அனிமேஷனில் தன்னை அழகாக காட்டவில்லை என்றும் நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம். தீபிகா படுகோனே கேரக்டரை கேலி செய்தும் இன்டர்நெட்டில் ஜோக்குகள் பரவுகின்றன. கோச்சடையான் படம் குறித்து இதுவரை அவர் கருத்து எதுவும் கூறவில்லை. படம் ஹிட்டானது பற்றியும் எதுவும் பேசவில்லை. ஆனால் தீபிகாவுக்கு நெருக்கமானவர்கள் இது வதந்தி என்று மறுக்கின்றனர்.

கோச்சடையான் படக்குழு மீது தீபிகா படுகோனேவுக்கு கோபம் இல்லை. படம் நன்றாக ஓடுவதை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறார் என்றனர்.

பிரமிக்க வைக்கும் அஜீத்தின் பைக் ரேஸ் காட்சிகள்!

அஜீத் நடித்த பல படங்களில் சண்டை காட்சிகளின்போது பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். இதனால், அவரது காலில்கூட அறுவை சிகிச்சை செய்தார். ஆனபோதும், தொடர்ந்து ரிஸ்க்கான காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பதை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆரம்பம், வீரம் படங்களில் சண்டை காட்சிகளில் டூப் பயன்படுத்தாத அஜீத், இப்போது நடித்து வரும் தனது 55வது படத்திலும் அதை தொடர்கிறார்.

அதிலும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரி வேடம் என்பதால், பைக் மற்றும் ஜீப் சேஸிங் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாம். குறிப்பாக அஜீத் நிஜத்திலும் பைக் ரேசர் என்பதால், பைக்கில் அவர் குற்றவாளிகளை துரத்திப்பிடிகக்கும் காட்சிகளை அதிகமாக புகுத்தியுள்ளாராம் கெளதம்மேனன். அதனால் அந்த காட்சிகளுக்கு தனது பைக் ரேஸ் பைக்கையே பயன்படுத்தியுள்ளாராம்.

அதோடு, சில பைக் சேஸிங் காட்சிகளில் ஸ்டன்ட் மாஸ்டர் சொல்லாத விசயங்களையும் தானே செய்திருக்கிறாராம் அஜீத். அதன்காரணமாக, சாதாரணமாக திட்டமிடப்பட்டிருந்த சில சேஸிங் காட்சிகள் அஜீத்தின் இன்வால்ப்மெண்ட் காரணமாக இப்போது இன்னும் பிரமாண்டமாக, ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

பண விஷயத்தில் 10 எச்சரிக்கைகள்..?

1. உங்கள் காசோலைகள் புத்தகத்தை உங்களுக்கு மட்டும் தெரிந்த பத்திரமான இடத்தில் வைத்திருங்கள்.

2. வங்கியில் உங்களில் தொடர்பு விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.

3. உங்கள் வங்கி மாதாந்திர அறிக்கையை கவனமாக பார்த்திடுங்கள் அல்லது உங்கள் பணப்பரிமாற்றங்களை ஆன்லைன் அல்லது டெலிபோன் பேங்கிங் மூலம் பரிசோதித்திடுங்கள்.

4. நீங்கள் செய்யாத ஏதாவது ஒரு பரிமாற்றம் நடந்திருப்பதாகத் தோன்றினால் உடனடியாக வங்கியை உஷார்ப்படுத்துங்கள். அவர்கள் அது குறித்து விசாரிப்பார்க்ள்.

5. நீங்கள் பணம் கொடுக்க வேண்டிய நபரிடம் நேரடியாக காசோலையை வழங்காத வரை அதில் கையெழுத்திடாதீர்கள்.

6. நீங்கள் தபாலில் காசோலை அனுப்புகிறீர்கள் என்றால் அதன் ஓரத்தில் இரண்டு கோடுகள் இடவோ அல்லது அக்கவுன்ட் பேயீ என்று குறிப்பிட மறக்காதீர்கள்.

7. நீங்கள் ஒரு காசோலையை ரத்து செய்கிறீர்கள் என்றால் அதன் எண்ணையும், எம்.ஐ.சி.ஆர். கோடையும் அடித்தபின் கிழித்து போட்டுவிடுங்கள்.

8. ஒரு வங்கியில் நீங்கள் உங்கள் கணக்கை முடிக்கிறீர்கள் என்றால் பயன்படுத்தாத காசோலை இதழ்களை அழித்துவிடுங்கள்.

9. ஆன்லைன் பேமண்ட் மின்னணு பணம் செலுத்தும் வழிகளை பயன்படுத்தலாமா என்று பாருங்கள். அப்போதும் உங்கள் பாஸ்வேர்டு விஷயத்தில் கவனமாக இருங்கள்.

10. உங்களுக்கு கிடைக்கும் காசோலை சரியானதாக தோன்றாவிட்டால் வேறு வழியில் பணம் செலுத்தக் கோருங்கள்.

கவர்ச்சி ஓவியமான ‘அப்சரஸ்’ - திரைவிமர்சனம்!

ஓவியர் ரவிவர்மனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படமே அப்சரஸ். மலையாளத்தில் மகரமஞ்சு என பெயரில் வெளிவந்த இப்படம் தற்போது தமிழில் அப்சரஸ்-ஆக வெளியாகியுள்ளது.

நாயகன் சந்தோஷ் சிவன் ஒரு ஓவியர். பெண்களை மிகவும் அழகாக வரையக் கூடியவர். இவருடைய அழகான ஓவியங்களைப் பார்க்கும் பெண்களும், ஓவியம் வரைய போஸ் கொடுக்கும் பெண்களும் இவருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள்.

ஒருநாள் சந்தோஷ் சிவனின் தோட்டத்தில் நித்யா மேனன் பூக்களை பறிக்கிறார். அதேபோல் மறுநாள் பூக்களை பறிக்கும் நித்யா மேனனை சந்தோஷ் சிவன் பார்த்து அவருடைய வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார். அங்கு முதல்நாள் பூக்கள் பறித்த காட்சிகளை ஓவியமாக வரைந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார் நித்யாமேனன். பிறகு அவரை வைத்து ஓவியம் வரைகிறார் சந்தோஷ் சிவன். ஓவியம் வரைந்து முடிந்தவுடன் நித்யா மேனன் இனிமேல் நான் இங்கு வரமுடியாது என்று வேதனை அடைகிறார். அந்த ஓவியத்தை உலகளவில் நடக்கும் ஓவிய போட்டிக்கு அனுப்பி வெற்றிப் பெறுகிறார். ஆனால் அந்த ஓவியம் வரைய காரணமாக இருந்த நித்யா மேனன், சந்தோஷ் சிவன் மீதுள்ள ஒரு ஈர்ப்பால் வேதனை அடைந்து இறந்து விடுகிறார்.

அதன்பிறகு ஒருநாள் சந்தோஷ் சிவன் சாலையில் புகைப்படம் எடுக்கும்போது கார்த்திகாவை சந்திக்கிறார். பின்னர் கார்த்திகா நடனமாடும் போது பார்க்கிறார். அவர்மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அவரை வைத்து ஓவியம் வரைய நினைத்து அவரை வீட்டுக்கு வரவழைக்கிறார். அங்கு சந்தோஷ் சிவன், கார்த்திகாவை கற்பனையாக நினைத்து வரைந்து வைத்த பல ஓவியங்களை பார்க்கிறார் கார்த்திகா. அந்த ஓவியங்களில் தன்னை நிர்வாணமாக வரைந்த ஓவியத்தைப் பார்த்து அதிர்ந்து போகிறார்.

பிறகு சந்தோஷ் சிவனிடம் கோபப்பட்டு ஓவியம் வரைய போஸ் கொடுக்க மாட்டேன் என்று மறுத்து விடுகிறார். அவரிடம் சந்தோஷ் சிவன் புராண கதைகளைச் சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறார். அவரை வைத்து நிர்வாண படமும் வரைகிறார். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

இதற்கிடையில் சந்தோஷ் சிவன் வரையும் பெண் தெய்வ படங்கள் தாசி, வேசியை வைத்து எடுக்கப்பட்டவை என்று புகார் எழுகிறது. இறுதியில் சந்தோஷ் சிவன் அந்த புகாரில் இருந்து தப்பினாரா? கார்த்திகாவுடன் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சந்தோஷ் சிவன், ரவிவர்மன் கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக நடித்திருக்கிறார். ஓவியக் கலைஞருக்கான கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தியிருக்கிறார்.

படத்தில் கார்த்திகா, நித்யா மேனன், மல்லிகா கபூர், பூர்ணா என பல கதாநாயகிகள் நடித்துள்ளனர். அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பூர்ணாவிற்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு. நித்யாமேனன், மல்லிகா கபூர் ஆகியோர் குறைந்த நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார்கள். கார்த்திகா அழகான பறவைபோல் வருகிறார். அனைவரும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஓவியம் வரையும் போது நித்யா மேனன், கார்த்திகாவின் முகபாவனைகள் அருமை.

மது அம்பாட்டின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். இயற்கை அழகை நம் கண்முன்னே கொண்டு வந்து பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத்தில் காண்பிக்கப்படும் ஓவியங்கள் அழகிறகு அழகு சேர்க்கிறது.

ரவிவர்மனின் உண்மைக் கதையை எடுத்துக்கொண்ட இயக்குனர் லெனின் ராஜேந்திரன் அதை திரைக்கதையில் புராணக் கதைகளை புகுத்தியிருப்பது காட்சிகளின் வேகத்தை குறைத்து போல் தோன்றுகிறது. படத்தில் சந்தோஷ் சிவனை தவிர வேறு ஆண்களே படத்தில் இல்லாதபோல் இருக்கிறது. ரசிகர்களை கவர்ச்சியால் ஈர்க்க முயற்சி செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘அப்சரஸ்’ கவர்ச்சி ஓவியம்.

தனிஷின் பாலிவுட்படத்தின் தலைப்பு ஷமிதாப்!

ராஞ்சனா திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமாகி, அறிமுகப் படத்திலேயே பெரும்பாலானவர்களின் இதயத்தைக் கொள்ளையடித்தார் தனுஷ். இப்படம் பல்வேறு விருதுகளையும் பெற்றுத்தந்ததோடு, பாலிவுட்டின் முக்கிய நடிகராகவும் தனுஷினை மாற்றியுள்ளது.

ராஞ்சனா திரைப்படத்தினைத் தொடர்ந்து தனுஷ் நடித்துவரும் இரண்டாவது திரைப்படத்திற்கு ஷமிதாப் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாம். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்புக்கள் நடைபெற்றுவந்தாலும் தற்பொழுதுதான் தலைப்பிடப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் மிக முக்கிய இயக்குனரான பால்கி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துவருகிறார். உலகநாயகன் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா இப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துவருகிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் தனுஷ் இணைந்து நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளியாக தனுஷ் நடித்துவரும் இப்படமும் தனுஷின் நடிப்பிற்குத் தீனியிடும் விதமாக அமையும் என்று பேச்சுக்கள் எழுந்துவருகின்றன. மேலும் இயக்குனர் பால்கி இயக்கிய முந்தைய படங்களான சீனி கும், பா முதலான படங்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றது நினைவிருக்கலாம்.

திருமண பந்தத்தில் இணைகிறார் திவ்யதர்ஷினி

பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியின் மிகப் புகழ் பெற்ற தொகுப்பாளர்களில் ஒருவர் திவ்யதர்ஷினி. டிடி என்று சுருக்கமாக
அழைக்கப்படும் திவ்யதர்ஷினி திரைத்துறையைச் சார்ந்தவர்களை விடவும் தமிழக மக்களிடம் மிகப்பிரபலம். இவரது சிரிப்பிற்கே இங்கே எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர்.

விஜய் டி.வி.யில் பிரபலங்களுடன் இவர் தொகுத்துவழங்கும் காபி வித் டிடி நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமோ பிரபலம். பெரும்பாலான
நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் டிடி விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார்.

வருகிற ஜூன் மாத இறுதியில் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனைக் கரம்பிடிக்கவுள்ளதாகவும், பெற்றோர்களால்
நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நிலத்தை வாங்குவதற்கு முன் நிலத்தின் தன்மையை எப்படி கண்டறிவது?

நிலத்தை வாங்குவதற்கு முன் நிலத்தின் தன்மையை எப்படி கண்டறிவது?

நீங்கள் வாங்கக்கூடிய நிலத்தில் 1×1 ஆழ அகலத்தில் குழியை தோண்டவும்.

அந்த குழியில் ஒரு சிறிய விளக்கை ஏற்றவும் அந்த விளக்கு எரிந்தால் அந்த இடத்தில் நல்ல வாயுக்கள் இருக்கிறது என்றும் விளக்கு அணைந்தால் அந்நிலத்தில் தேவையற்ற வாயுக்கள் இருக்கிறது என்றும் அறியலாம்.

 பிறகு அந்த குழியிலிருந்து எடுத்த மண்ணை அந்த குழியிலே போட்டு அழுத்தமாக மிதிக்கவும் மிதித்த பிறகு குழியை மூடிய பிறகும் மண் அதிகமாக இருந்தால் அந்த நிலம் உறுதியாக இருக்கிறது என்றும் அந்த குழியில் எடுத்த மண்ணை போட்டு மிதித்த பிறகும் குழி நிறைய வில்லை என்றால் அந்த நிலம் உறுதியற்றதாக இருக்கிறது என்றும் நீங்கள் அறியலாம்.

 அதற்க்கு தகுந்தாற்போல் கட்டிட வல்லுனர்களின் அறிவுரைகளின் பேரில் கட்டிடத்தை வடிவமைக்கலாம்.

இரைச்சலான ‘பூவரசம் பீப்பீ’ - திரைவிமர்சனம்..!

ஆறாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களான வேணுக்கண்ணா, ஆண்டனா, கபில்தேவ் ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். புத்திசாலியான இவர்கள் முழு ஆண்டுத் தேர்வை முடித்துவிட்டு ஊரில் சந்தோஷமாக சுற்றி வருகிறார்கள்.

ஒருநாள் இவர்கள் கடுமையான மழை பெய்துகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத சிலர் அந்த ஊரின் சலவைத் தொழிலாளியின் மனைவியை பலாத்காரம் செய்வதை பார்க்கிறார்கள். அவர்களால் அதை தடுக்க முடியவில்லை.

மறுநாள் ஆற்றங்கரையோரம் சலவைத் தொழிலாளியின் மனைவி இறந்து கிடக்கிறாள். அவள் ஆற்று வெள்ளத்தில் அடித்து இறந்துவிட்டதாக பொதுமக்கள் நம்புகிறார்கள். ஆனால், அவள் பலாத்காரம் செய்யப்பட்டுத்தான் இறந்துபோனால் என்பது இவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதனால் அந்த சிறுவர்கள் அடையாளம் தெரியாத அந்த மர்ம நபர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

இந்த நிலையில் மர்மநபர்கள் யார் என்பதை மிகவும் சாதுர்யமாக கண்டுபிடிக்கின்றனர். இவர்களை எப்படி தண்டிப்பது என்று யோசிக்கும் நிலையில், இவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற தாத்தாவின் வீட்டில் இருந்து ராணுவத்தில் பயன்படுத்தும் தொலைதொடர்பு கருவி ஒன்று கிடைக்கிறது.

இதை வைத்து இவர்கள் புத்திசாலித்தனத்தினால் அதை வானொலியாக பயன்படுத்தி அந்த கிராமத்தில் ‘பீப்பீ’ என ஒரு வானொலியை உருவாக்குகிறார்கள். இதை வைத்து அவர்களை எப்படி போலீசில் சிக்க வைக்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.

படத்தின் கதாநாயகர்களாக வலம்வரும் கௌரவ் (வேணுகண்ணா), பிரவீன் (ஆண்டனா), வசந்த் (கபில்தேவ்) மூன்று பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன. கதை முழுவதும் இவர்கள் மூவருமே ஆக்கிரமித்திருக்கிறார்கள். அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சிறுமியாக வரும் வர்ஷினி, சிறுவயதிலேயே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காளி, சாய்ஹரி, சுந்தர், கார்த்திக் ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை திறம்பட செய்திருக்கிறார்கள்.

புதுமுக இயக்குனரான ஹலிதா சாமீம் ஒரு அனுபவசாலி இயக்குனர் போல் கதையை நகர்த்தியிருக்கிறார். சிறுவர்கள் நடிக்கும் படத்தில் முகத்தை சுளிக்க வைக்கும் காட்சிகளை பயன்படுத்தாமல் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். சிறுவர்களை வைத்து இரண்டு மணி நேரத்திற்குள் கதையை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். ஆனால், தேவையில்லாத காட்சிகளை புகுத்தி படத்தை இரண்டரை மணி நேரம் இழுத்து கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறார்.

அருள்தேவின் இசையில் பாடல்களும், பிண்ணனி இசையும் படத்திற்கு வலுசேர்க்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் கிராமத்தை அழகாக படமாக்கியிருக்கிறது.

மொத்தத்தில் ‘பூவரசம் பீப்பீ’ சற்று இரைச்சல்.

கலெக்டராக சூப்பர் ஸ்டார்..!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் லிங்கா திரைப்படம் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டுவருகிறது. அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, லாரன் ஜே. இர்வின், சந்தானம் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப்பட்டாளங்கள் நடித்துவரும் இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார்.

இந்த இரண்டு வேடங்களில் ஒரு வேடத்தில் கலெக்டராக ரஜினிகாந்த் நடித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுஷ்கா கிராமத்துப் பெண்ணாக நடித்துவருகிறாராம். விரைவில் மற்றொரு வேடம் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிங்கா திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புக்கள் மைசூர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. மைசூரின் மிகப் புகழ்பெற்ற இடமான, மைசூர் மஹாராஜா அரண்மனையின் தங்க அறையிலும் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. மஹாராஜா அறையில் முதல் முறையாகப் படம்பிடிப்பு நடைபெற்றது இப்படத்திற்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

லிங்கா திரைப்படம் வருகிற தீபாவளி வெளியீடாக வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
   

ஜூலை இறுதியில் யான்!

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் முதல் முறையாக இயக்குனராகக் களம் கண்டிருக்கும் யான் திரைப்படம் வருகிற ஜூலை இறுதியில் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜீவா, துளசி நாயர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரில்லர் திரைப்படமான இப்படத்தினை ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட்  நிறுவனம் தயாரித்துள்ளது.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே மெஹா ஹிட்டாகியுள்ளன.

ஆப்பிரிக்கா நாடான மொராக்கோ உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டிற்கு முன்பே இப்படத்தின் சேட்டிலைட் உரிமம் பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளதால் மகிழ்ச்சியில் திளைத்துவருகிறது படக்குழு.

கடல் படத்தில் அறிமுகமான துளசி நடித்திருக்கும் இரண்டாவது படம் யான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

குடும்பத்தை சிக்கலின்றி நடத்துவது எப்படி..?

              இல்லறத்தில் கணவன் மனைவிக்கிடையே ஆயிரம் விசயங்கள் பேசுவதற்கு இருக்கும். அந்தரங்கமாக பேசும் விசயங்களை அவையில் பேசுவது நாகரீமாக இருக்காது. இது சிக்கலை ஏற்படுத்திவிடும். அதேபோல் கணவரிடம் நடந்து கொள்வதற்கும் சில வழிமுறைகள் உண்டு. இவற்றை கடைபிடித்தால் குடும்ப பயணம் சிக்கலின்றி இருக்கும். இப்போது ஆண்களுக்கு எது எது பிடிக்காது என்பதை பார்க்கலாம். அவற்றை பின்பற்றிப் பாருங்கள்.

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ கணவன் மனைவிக்கு இடையேயான அன்பிற்கும் ஒரு அளவு உண்டு. அடிக்கடி போன் செய்து நச்சரித்தால் வேலை கெடும். அந்த எரிச்சலில் கணவர் ஏதாவது கத்துவார் பின்னர் பிரச்சினை பெரிதாகும். எனவே அன்பாயிருக்கிறேன் என்று போன் பண்ணி டிஸ்டர்ப் செய்வது பிடிக்காதாம்.

சொல்ல வந்த விசயத்தை நேரடியாக சொல்லுங்கள். எதையாவது சொல்ல வந்து பின்னர் அதை விடுங்க என்று பொடி வைத்து பேசுவது கணவரை எரிச்சல் படுத்துமாம்.

எந்த விசயமென்றாலும் தனியாக சமாளித்து பழகுங்கள். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் கணவரை துணைக்கு அழைப்பது பிடிக்காதாம். ஏனெனில் அவருக்கும் நிறைய வேலை இருக்கும் இல்லையா?

சம்பளப் பணத்தைப் பற்றி எதற்கெடுத்தாலும் கணக்கு கேட்காதீங்க. பெரும்பாலான கணவர்களுக்கு மனைவி மேல் வெறுப்பு வர அதுதான் காரணமாக உள்ளது.

வேலை விசயமாக வெளியே அலைந்து விட்டு கணவன் வீட்டுக்கு திரும்பும்போது முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு பேசுவது கணவனுக்கு பிடிக்காதாம். முக்கியமாக ஏன் இவ்வளவு நேரம்? எங்கே ஊர் சுத்திட்டு வர்ரீங்க என்று கேட்க கூடாதாம்.

எதையும் அழுது சாதிக்கலாம் என்று நினைக்கும் மனைவியை கணவருக்கு அறவே பிடிக்காதாம். அழுது வடியும் அழுமூஞ்சி பெண்களை கண்டாலே காத தூரம் ஓடிவிடுவார்களாம்.

கணவருக்கு என்று சில கொள்கைகள் இருக்கலாம். ஆனால் தனக்கு பிடித்தமாதிரிதான் இருக்க வேண்டும் என்று கணவரை மாற்ற முயற்சி செய்வது கூடாதாம். அது சிக்கலில் கொண்டு போய் விடும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

அதேபோல் சாப்பிடும் நேரத்தில் சந்தோசமாக சாப்பிடாமல் குடும்ப பிரச்சினைகளை கிளறுவது சுத்தமாக பிடிக்காத விசயமாம். கணவருக்காக காத்திருக்கிறேன்  என்று இரவில் சாபிடாமல் காத்து கொண்டிருப்பது பிடிக்காத விசயமாம்.

பாசத்தின் உச்சக்கட்டம் ‘அம்மா அம்மம்மா’ - திரைவிமர்சனம்..!

திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தைகள் இல்லாத தம்பதிகளாக சம்பத்-சரண்யா. இவர்கள் குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள்.

ஒருநாள் கோவிலில் வைத்து ஆனந்த்-தேவதர்ஷினி தம்பதியினரை சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே இருவர் குடும்பத்திற்கும் நட்பு ஏற்படுகிறது. தேவதர்ஷினிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்நிலையில், இரண்டாவது குழந்தை பிரசவத்தின்போது தேவதர்ஷினி  இறந்துவிடுகிறார். தாய் இல்லாத அந்த குழந்தையை வைத்து மிகவும் கஷ்டப்படுகிறார் ஆனந்த்.

அப்போது சம்பத்-சரண்யா தம்பதியர் ஆனந்திடம் சென்று இரண்டாவது குழந்தையை நாங்கள் வளர்க்கிறோம் என்று மிகவும் பணிவோடு கேட்கிறார்கள். ஆனந்தும் இதற்கு சம்மதித்து அவர்களிடம் குழந்தையை கொடுக்கிறார்.

ஆனால் தனது அம்மாவே மீண்டும் குழந்தையாக வந்து பிறந்திருப்பதாக நினைக்கும் ஆனந்தின் மகன் அந்த குழந்தையை வீட்டுக்கு அழைத்து வரும்படி தனது தந்தையிடம் அடம்பிடிக்கிறான். ஆனால், ஆனந்த் அந்த குழந்தையை கூட்டிக் கொண்டு வராமல் தனது மகனை ஏமாற்றி வருகிறார்.

ஆனந்திடம் வாங்கிச் சென்ற அந்த குழந்தையை சரண்யா மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகிறார். அவளுடைய அரவணைப்பில், அவளையே தாயாக நினைத்து வளர்கிறது அந்த குழந்தை.

இதையடுத்து, ஆனந்தின் மகன், தனது தாயுடைய தங்கையின் உதவியோடு, தனது தங்கையை சரண்யாவிடமிருந்து மீட்டு, தன் வீட்டிற்கு அழைத்துவர முயற்சி செய்கிறான். இறுதியில்? சரண்யா தனது உயிராக நினைத்து வளர்த்துவரும் அந்த குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

குழந்தை இல்லாத தம்பதிகளாக வரும் சம்பத்-சரண்யா பொன்வண்ணன் இருவரும் தங்களுக்கு குழந்தையில்லையே என்ற தவிப்பை தங்களது அனுபவ நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

குறிப்பாக, சரண்யா குழந்தை இல்லையே என்ற தவிப்பாகட்டும், குழந்தையை அன்போடு வளர்ப்பதாகட்டும் பாசத்தை வெளிப்படுத்துவதில் திறமையாக நடித்திருக்கிறார். படத்தில் கொஞ்சம் இளமையாகவும் இருக்கிறார். சம்பத்துக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. சரண்யாவிடம் வளரும் குழந்தையாக நடித்துள்ள சிறுமியும், தேவதர்ஷியின் மகனான சிறுவனும் அழகாக நடித்திருக்கிறார்கள்.

இன்னொரு நாயகியாக வரும் தேவதர்ஷினி சிறிது நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய கணவராக வரும் ஆனந்தும் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மோகமுள், பாரதி, பெரியார் ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ள பாலு மணிவண்ணன் படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தாய் பாசத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். படத்தின் திரைக்கதையில் மட்டும் சற்று தொய்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

எம்.பி.ரகுவின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. பாடல்களும் பரவாயில்லை. கே.வி.ரமணி ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் அழகாக இருக்கின்றனர்.

மொத்தத்தில் ‘அம்மா அம்மம்மா’ பாசத்தின் உச்சக்கட்டம்.

Friday, May 30, 2014

தொலைந்துபோன மகிழ்ச்சிகள்...?

                   இன்று மளமளவென வளர்ந்துவிட்ட தொழில்நுட்பங்கள் நமக்கு அதிக பயன்பாடுகளைத் தந்தாலும், ஏனோ மனதிற்கு ஆழ்ந்த மகிழ்ச்சியை தருவதில்லை. எதுவுமே அளவுக்கு மீறிப் போகும்போது ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. ஐம்பது பைசா இன்லாண்ட் கடிதங்களும், 25 பைசா போஸ்டு கார்டும் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை இன்றைய மொபைல் போன்களும், பேஸ்புக்கும் வெளிப்படுத்துவதில்லை.

தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை மெல்ல மெல்ல சுயமாக பல காரியங்களைச் செய்ய இயலாதவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு திருமணம், புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பிவிட்டால் போதும், நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அனைவரும் ஆஜராகிவிடுவார்கள். ஆனால் இன்றைய நிலைமையே வேறு. நேரில் பத்திரிகை வைத்துவிட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் போன் செய்து அழைக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு நண்பரின் விஷேசத்திற்கு செல்ல வேண்டும் எனில் பத்திரிகை கையில் கிடைத்ததும் ஒருமுறை போன் செய்து எப்படி வரவேண்டும் என விசாரித்துவிட்டு, பிறகு விஷேச தினத்தில் "நான் பஸ் ஸ்டாண்ட் வந்துட்டேன் இங்கிருந்து எப்படி வருவது?", "விவேகானந்தர் நான்காவது தெருவுக்கு வந்துட்டேன்.. ஏழாவது தெருவுக்கு எப்படி வருவது?" என நிகழ்ச்சி நடத்தும் நண்பரின் மொபைல் போனுக்கு ஓயாமல் அலைபேசும் நபர்களும் இருக்கிறார்கள். ஏண்டா இவனைக் கூப்பிட்டோம் என நினைக்கும் அளவுக்கு எரிச்சலூட்டுகிறார்கள்.

முன்பெல்லாம் கடிதங்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வேண்டும் என நண்பருக்கு ஒரு கடிதம் போட்டால் போதும். அந்த நேரத்தில், அந்த இடத்தில் தவறாமல் ஆஜராகிவிடுவார்.

இன்றைய தேதியில் பிரசவ வார்டில் மனைவி இருக்கும் போது கூட, " Awaiting for my sweet little baby " என டுவிட்டரில் தகவல் பரிமாறி, பிரசவமான குழந்தையை உடனே புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றுகிறார்கள். குழந்தை பிறந்ததை விட, அந்த செய்தியை பதிவேற்றம் செய்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறார்களோ என்று தோன்றுமளவுக்கு தொழில்நுட்ப அடிமைகளாகிவிட்டனர்.

ஆனால் அன்று, குழந்தை பிறப்புக்காக அம்மா வீடு வந்த மனைவிக்கு குழந்தை பிறந்த தகவல் கடிதம் மூலம் மூன்று நாட்கள் கழித்து தான் தெரிய வரும். அதன்பிறகு விடுமுறை எடுத்துக் கொண்டு தனக்கு பிறந்த மகனை / மகளைப் பார்க்க ஊருக்கு சென்றவர்கள் ஏராளம். தனது மகன் எப்படி இருப்பான் என நினைத்துக் கொண்டே பயணித்து, மனம் நிறைய  மகனை அள்ளி முத்தமிடும் தருணத்தின் மகத்துவத்தை அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும்.

ஏதேனும் துக்கம் நிகழ்ந்துவிட்டால் ஊருக்கு ஒருவர் தகவல் சொல்ல கிளம்பி போவார். அவர் போகும் ஊரில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தகவல் சொல்ல தேவையில்லை. அந்த ஊரில் ஒருவருக்கு தகவல் சொன்னால்கூட போதும். அவர்கள் மூலம் தகவல் பரவி அனைவரும் வந்து சேர்ந்துவிடுவர். ஆனால் இப்போது அப்படி இல்லை.. சில குடும்பங்களில் மாமா, அத்தை, அத்தை மகன், அத்தை மகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக போன் செய்து தகவல் சொல்ல வேண்டியுள்ளது. இல்லையெனில் எனக்கு ஏன்  சொல்லவில்லை நான் முக்கியமான ஆளில்லையா என்ற சண்டைகள் ஏராளமாக நடப்பதைக் காணமுடிகிறது.

ஊரிலிருக்கும் தாத்தாவுக்கு போட்ட கடிதத்திற்கு பதில் கடிதம் வந்த அன்று அதை பிரித்து படிப்பதற்குள் மனதிற்குள் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. நேரத்திற்கு சாப்பிடு, கவனமாக பள்ளிக்கூடத்துக்கு போ, வெயிலில் அதிகம் அலையாதே, காலாண்டு விடுமுறைக்கு ஊருக்கு வா என ஒவ்வொரு வார்த்தையிலும் தாத்தாவின் பாசமும், அக்கறையும் இருக்கும். கடிதங்களின் ஓரத்து மடுப்புகளில் கூட தாத்தா, பாட்டியின் அன்பு ஒட்டிக் கொண்டிருக்கும்.

கடிதப் போக்குவரத்தில் 'இப்டிக்கு உங்கல் அன்புள்ள மகன்', 'இப்படிக்கு உங்க அன்புல்ல பேத்தி' என தப்பு தப்பாய் எழுதியிருந்தாலும், அதில் வார்த்தைக்கு வார்த்தை அன்பு நிறைந்திருக்கும். அவை பொக்கிஷம் போல் அவ்வப்போது எடுத்து எடுத்து படிக்கப்படுவதும் உண்டு.

ஆயிரம் எஸ்.எம்.எஸ். மெசேஜ்கள் அனுப்பினாலும், அவை ஒரே ஒரு கடிதம் சொல்லிய அன்பை முழுமையாகப் பரிமாறிவிட முடியுமா?

ஹேப்பி பர்த்டே கே.எஸ்.ரவிகுமார்ஜி...!

              1990ல் தமிழ் சினிமாவில் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த கே.எஸ்.ரவிகுமாருக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.. இந்த 25 வருடங்களில் இவர் அடைந்துள்ள உயரம் அளவிடமுடியாதது. தமிழ்சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினியும் கமலும் தங்களது அன்பு பிடியால் இவரை கெட்டியாக பிடித்துக்கொண்டு, முறைவைத்துக்கொண்டு ஆளுக்கொரு படத்தில் இவரது டைரக்ஷனில் நடித்த்தே இதற்கு அழுத்தமான சாட்சி.

விக்ரம், தனுஷ் தவிர மற்ற அனைத்து முதல்வரிசை நடிகர்களும் இவரது டைரக்ஷனில் நடித்துவிட்டார்கள். நல்ல கதை யாரிடமிருந்தாலும் அதை வாங்கி அதற்கு தனது தெளிவான திரைக்கதையாலும் டைரக்ஷனாலும் உயிரூட்டக்கூடிய வல்லமை இவருக்கு உண்டு.. சரத்குமாரை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைத்த பெருமையும் இவரையே சாரும்.

இதுவரை வெளிநபர்களின் கதைகளையே படமாக்கிவந்த கே.எஸ்.ரவிகுமார் சூப்பர்ஸ்டாரின் ‘கோச்சடையான்’ படத்திற்கு தானே கதை எழுதி அதை சூப்பர்ஹிட்டாகவும் மாற்றிக்காட்டியுள்ளார். இப்போது ரஜினியுடன் ‘லிங்கா’ படப்பிடிப்பை நடத்திக்கொண்டு இருக்கிறார்.

நயன்தாரா, அனுஷ்காவின் சம்பளம் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

              இதுவரை எந்தவொரு தமிழ், தெலுங்கு நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை என்று சொல்லும் அளவுக்கு எக்கச்சக்கமாக உயர்ந்திருக்கிறது நயன்தாரா, அனுஷ்காவின் சம்பளம். இவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 3 கோடி ரூபாய்! இருவருக்கும் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. எனவேதான் சம்பளத்தை வரலாறு காணாத அளவு உயர்த்தி உள்ளதாக காரணம் சொல்கின்றனர் திரையுலகைச் சேர்ந்தவர்கள்..

ஹிந்தியில் ஹிட்டான கஹானி படத்தின் தெலுங்கு ரீமேக்கான அனாமிகா படத்துக்காக நயன்தாராவுக்கு 2 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்தப் படம் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் படம் அட்டர் ப்ளாப். தமிழில் அஜீத் ஜோடியாக நடித்த ஆரம்பம், ஆர்யாவுடன் நடித்த ராஜாராணி, உதயநிதியுடன் நடித்த இது கதிர்வேலன் காதல்ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றியை அடையவில்லை.நயன்தாரா அது பற்றி கவலையேப் படாமல் தன் சம்பளத்தை 3 கோடியாக்கிவிட்டார்.

இவரைப்போல் அனுஷ்காவின் சம்பளமும் விண்ணைத்தொடுமளவுக்கு உயர்ந்துவிட்டது. ருத்ரமாதேவி என்ற சரித்திரப் படத்தில் நடிக்க இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் அனுஷ்கா. அடுத்தடுத்து தேடி வந்த படங்களில் நடிக்க மூன்று கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்..

ஈசிஆர் சாலையில் இருந்து மவுண்ட் ரோட்டுக்கு வந்த அஜீத்!!

             அஜீத்தின் 55வது படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தது. ரசிகர் கூட்டம் படையெடுக்கவே, பின்னர் செட் அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், செட் வேலைகள் முடிய சில மாதங்கள் ஆகும் என்பதால், அந்த கேப்பில் படப்பிடிப்பை தொடர நினைத்த அஜீத், கெளதம்மேனன் இருவரும் சில நாட்களாக இரவு நேரங்களில் அதே ஈசிஆர் சாலையில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்.

ஆனால், நேற்று முன்தினம் சென்னையிலுள்ள மவுண்ட் ரோடு பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள அப்பகுதியில் அஜீத் பைக் ஓட்டி வருவது போன்று முதலில் சில ஷாட்களை எடுத்த கெளதம்மேனன். பின்னர் அஜீத், வில்லன் சம்பந்தப்பட்ட சண்டை காட்சியில் சில முக்கிய ஷாட்களை படமாக்கினார்.

மேலும், அனுஷ்கா, சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் அதே ஏரியாவில் படமாக்கியிருக்கிறார் கெளதம்மேனன். மக்கள் போக்குவரத்து மிகுதியான இடம் என்பதால், ரசிகர்களை படப்பிடிப்பு நடக்கும் எல்லைக்குள் நெருங்க விடாமல் இருக்க பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

அரையாண்டில் செஞ்சுரி அடிக்கும் தமிழ் சினிமா!

இன்றைய தேதிக்கு சினிமா நன்றாக ஒடுகிறதோ இல்லையோ.. படமெடுக்க வரும் தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை தாறு மாறாக உயர்ந்து வருகிறது. லாபம் கிடைக்காவிட்டாலும், சினிமாவுக்கே உரிய கவர்ச்சி, பலரையும் தயாரிப்பாளராக்குகிறது.

அப்படி படம் தயாரிக்க வந்துள்ள திடீர் தயாரிப்பாளர்களால் இன்று 350 படங்கள் தயாரிப்பில் உள்ளன.

வாரத்துக்கு குறைந்தது நான்கு அல்லது ஐந்து படங்களாவது வெளியாகின்றன. கோச்சடையான் மாதிரி பெரிய படம் வரும்போது மட்டும் வாரத்துக்கு ஒன்றாக மாறிவிடுகிறது இந்த எண்ணிக்கை.

 மே 30ம் தேதி,  மட்டுமே 5 புதிய படங்கள் வெளியாகவிருக்கின்றன.

தவிர ஜூன் மாதம் மட்டும் 15 முதல் 18 புதிய படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன.

ஆக அரையாண்டுக்குள் செஞ்சுரி அடித்து சாதனைப் படைக்கவிருக்கிறது தமிழ் சினிமா.

இவற்றில் எத்தனை வெற்றிப் படங்கள் என்று மட்டும் கேட்டுடாதீங்க!

பொதுவான பொய்கள்..!

டீ கடைகாரர்:
இப்ப போட்ட வடை தான்
சார். .

மெடிக்கல் ஷாப் :
பேரு தான் வேற ,
இது அதைவிட நல்ல மருந்து .. .

பள்ளிசெல்லும் குழந்தை :
வயிறு வலிக்கிற
மாதிரி இருக்கும்மா .. .

ரியல் எஸ்டேட் செய்பவர் :
பத்து அடி ஆழத்துல நல்ல தண்ணி,
பக்கத்துலையே ரிங் ரோடு வருது ,
IT பார்க் வருது ..

காய்கறி கடையில்:
காலைல பறிச்ச
காய் தான்..

Sales Rep : இன்னையோட இந்த offer
முடியுது சார் ..

பஸ் கண்டக்டர்:
வழில எங்கயும்
நிக்காது , பாயிண்ட் டு பாயிண்ட்..
சில்ற இல்லமா…

நண்பன்:
உனக்கு கண்டிப்பா ட்ரீட்
வைக்கிறேன் மச்சி..!

#தப்பு தப்புதான்..

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது லிங்கா படம் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், இயக்குநர் ஷங்கர் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கா படத்தின் படப்பிடிப்பு மைசூரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

லிங்காவுக்கு அடுத்து ஷங்கர் படம்... ரஜினி முடிவு!

நான்கு நாயகிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா மற்றும் லாரன் இர்வின் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் ரஜினி ஜோடிகளாக நடிக்கின்றனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

இந்தப் படம் கடந்த மே 2-ம் தேதி மைசூரில் தொடங்கியது. தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து நடித்து வருகிறார் ரஜினி. யாருக்கும் அனுமதி கிடைக்காத மைசூர் அரண்மனையில் ரஜினியின் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்குகிறது. அங்கு மீதிப்படத்தை முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்பும் ரஜினி, ஷங்கருடன் கதை விவாதத்தில் ஈடுபடப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஷங்கர் தனது ஐ படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார். ஒரு பாடல் காட்சி மட்டும்தான் பாக்கியாம். ஜூன் இறுதி அல்லது ஜூலையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள். படத்தை வெளியிட்ட கையோடு, சில தினங்கள் ஓய்வெடுத்த பிறகு, ரஜினியின் படத்துக்காக களமிறங்கப் போகிறாராம் ஷங்கர்.

முன்பெல்லாம் மூன்றாண்டுகளுக்கொரு படம் என்ற கொள்கை வைத்திருந்த சூப்பர் ஸ்டார், இந்த ஆண்டே மூன்று படங்களில் நடிப்பது, ரசிகர்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சிதானே!

என்ன நடக்கிறது 'தாரை தப்பட்டை'யில்?

            தனது பாத்திரத்திற்கு சசிகுமார் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவது தான் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு துவங்காததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

'பரதேசி' படத்தினைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'தாரை தப்பட்டை'. இப்படத்தின் இசைக்காக மீண்டும் இளையராஜாவுடன் கூட்டணி சேர்கிறார் பாலா. செழியன் ஒளிப்பதிவு செய்ய, சசிகுமார் - பாலா இருவருமே இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.

இப்படத்திற்காக 12 பாடல்களை 6 நாட்களில் முடித்துக் கொடுத்துவிட்டார் இளையராஜா. மார்ச் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு என்று அறிவித்தார்கள். ஆனால் படப்பிடிப்பு இன்னும் துவங்காமல் இருக்கிறது.

ஏன் ஏன்று விசாரித்த போது, "இயக்குநர் பாலா படத்திற்கான மொத்த திரைக்கதை, பாடல்கள் என அனைத்தையும் முடித்து விட்டாராம். நாளைக்கு படப்பிடிப்பு என்றால் கூட போகலாம் என்று அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.

நாயகனாக நடிக்க இருக்கும் சசிகுமார், படத்தில் தனது வேடத்திற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். நாதஸ்வரம், மிருதங்கம் உள்ளிட்ட பயிற்சி, கரகாட்டாம் பயிற்சி என்று தீவிரம் காட்டி வருகிறார்.

படத்தில் சசிகுமாரின் கெட்டப் என்ன என்பதை முடிவு செய்துவிட்டார் பாலா. தற்போது தாடி வளர்த்து இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் சசிகுமார், பயிற்சிகள் முடித்து படப்பிடிப்பு கிளம்பும் நேரத்தில் படத்தின் கெட்டப்பிற்கு ஏற்றவாறு மாற இருக்கிறார்" என்றார்கள்.

முடிவடைந்த 'காவியத்தலைவன்' படப்பிடிப்பு..!

 கடந்த ஒரு வருடமாக வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்து வந்த 'காவியத்தலைவன்' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வந்த படம் 'காவியத்தலைவன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்தார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ராடியன்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

1930ல் இருந்த நாடக கம்பெனிகள் சம்பந்தப்பட கதை என்பதால் காரைக்குடி, தென்காசி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் இறுதி பாடலுக்காக மட்டும் படக்குழு காத்திருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது கடைசிப் பாடலை கொடுத்தவுடன், சென்னையில் செட் போடப்பட்டு சித்தார்த் கலந்து கொண்ட இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்று இரவு ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவுற்றது.

இது குறித்து சித்தார்த் தனது ட்விட்டர் தளத்தில், " வசந்தபாலனின் 'காவியத்தலைவன்' படப்பிடிப்பு முடிவுற்றது. மறக்க முடியாத பயணம். இறுதிகட்ட பணிகள் துவங்கிவிட்டன. படக்குழுவிற்கு நன்றி " என்று தெரிவித்து இருக்கிறார்.

இறுதிகட்டப் பணிகள் முடிந்து, இரண்டு மாதத்திற்குள் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, May 29, 2014

கோபம் இல்லாத மனைவி தேவையா..?

              குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக் கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.

மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:

1. மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.

2. மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.

3. முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் ‘மூடு அவுட்’டாக வாய்ப்பு அதிகம்.

4. வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

5. மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

6. மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.

8. மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லா வி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

9. கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.

11. மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.

12. வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

கடைசி கடைசியாக ஒரு யோசனை: இதை உங்கள் மனைவி பார்க்கிற மாதிரி வச்சு படிக்காதிங்க

நட்புக்கு மரியாதை கொடுக்கும் ரஜினி!

தன் கடந்த கால வாழ்க்கையை உச்சத்திற்க்கு சென்ற போதும் மறக்காதவர் சூப்பர் ஸ்டார். தற்போது இவரின் நிஜ வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட நட்பை பற்றி, 'ஒன் வே' என்ற கன்னடப்படமாகவும் 'ஒரு வழிச் சாலை' என்ற தமிழ்ப் படமாகவும் வரயிருக்கிறது.

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராஜ் பகதூர் இந்த படத்திலும் நண்பராகவே நடிக்கிறார், மேலும் இப்படத்தை பார்க்க ரஜினி ஆர்வமாக உள்ளதாகவும், படம் வெளியானதும் தன் நண்பருடன் சேர்ந்து பார்ப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்களாம். ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து பார்த்தால் மட்டுமே ரஜினி கதாபாத்திரத்தில் யார் நடித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என படக்குழு தெரிவித்துள்ளது.

திருநங்கை...?

திருநங்கை

*புதன், சனி, கேது கோள்கள் திருநங்கை

*இந்தியாவை ஆண்ட மாலிக்காபூர் ஓர்  திருநங்கை

*திருநங்கைகளுக்கு முகப்பரு உண்டாவதில்லை

*அர்ச்சுனன் ஓராண்டு திருநங்கையாக  வாழ்ந்தார்

*ஆண்டுக்கு ஒரு முறை கூவாகத்தில் திருநங்கை திருவிழா நடை பெறுகிறது.

தனது வில்லனைப் பாராட்டியுள்ள விஜய்!

கத்தி திரைப்படத்திற்குப் பிறகு இளையதளபதி விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடிக்கவுள்ளார்.

கன்னட நடிகரான சுதீப் சமீபமாக இயக்கி, நடித்திருக்கும் மானிக்யா திரைப்படம் கர்னாடகாவில் மாபெரும் வெற்றி கண்டதுடன், பலரது
பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது. மிர்ச்சி தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இப்படம் கன்னடத் திரையுலகினைக் கலக்கிவருகிறது. இப்படத்தில்
வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபமாக இப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளித்த விஜய், இப்படத்தினால் மிகவும் ஈர்க்கப்பட்டதுடன், சுதீப்பின் நடிப்பினையும்
வெகுவாகப் பாராட்டியுள்ளாராம். இதனால் சுதீப் மகிழ்ச்சியில் திளைத்துவருவதாகக் கூறப்படுகிறது.

பேசுங்க அனுஷ்கா.. நல்லா இருக்கும்” – கௌதம் மேனன் வேண்டுகோள்!!!

அஜீத் நடித்துவரும் பெயரிடப்படாத தங்களது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் படு மும்முரமாக இருக்கிறது கௌதம் மேனனின் படக்குழு. சமீபத்தில் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் அஜித் நடித்த சில காட்சிகளை படமாக்கினார்கள்.

இரு வேறு கெட்டப்புகளில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று தெரிகிறது.

அனுஷ்கா இதுவரை நடித்துள்ள படங்களில் இருந்து இந்தப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் முற்ரிலும் வித்தியாசமாக இருக்குமாம்.

இதனால் அதன் தனித்தன்மையை இன்னும் கூடுதலாக மெருகேற்றும் வகையில் அனுஷ்காவையே சொந்தக்குரலில் டப்பிங் பேசும்படி சொல்லியிருக்கிறாராம் கௌதம் மேன்ன். அந்த வகையில் அனுஷ்கா தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 18ல் பீட்சா 3டி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்து வெளியான படம் 'பீட்சா'. த்ரில்லர் படமான 'பீட்சா' ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வணிகரீதியிலும் லாபத்தைத் தந்தது.

இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 'டேவிட்' பட இயக்குநர் பிஜோய் நம்பியார் வாங்கினார். இந்தியில் இப்படத்தை அக்‌ஷய் அக்கினேனி இயக்கியிருக்கிறார். ஹீரோவாக அக்‌ஷய் ஓபராய் நடித்திருக்கிறார். பார்வதி ஓமனக்குட்டன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஜெயகிருஷ்ணா குமடி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மிக்கி, சுரப் கால்சி, ஷமிர் டான்டன் ஆகிய மூவரும் இசையமைத்துள்ளனர். ’யுத்தம் செய்’, ’முகமூடி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த கே இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்.

3டி தொழிநுட்பத்தில் உருவாகிவரும் இப்படம் ஜூலை 18ல் வெளியாகிறது. இப்படத்தை சித்தார்த் ராய் கபூருடன் இணைந்து, பிஜோய் நம்பியார் தயாரித்திருக்கிறார். யுடிவி ஸ்பாட்பாய் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

சின்ன சின்ன யோசனைகள்....!

         புக் செல்ப்புக்ளில் பூச்சிகள் தொல்லயா? பாச்சா உருண்டைதான் போடவேண்டும் என்பதில்லை.  வீட்டில் கர்ப்பூரம் இருந்தால் போட்டு வையுங்கள். பூச்சிகள் மாயமாய் மறைந்து போகும்.

என்னதான் பல் துலங்கினாலும் பற்களில் கரை போகவில்லையா? புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து  பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி பாருங்கள். பற்கள் பளிச்...

மல்லிகை, முல்லை செடிகள் நன்கு செழித்து வளர வில்லையா? அவற்றின் இலைகளை உருவி அந்த செடிக்கே உரமாக போட்டால் செடி செழித்து வளரும்.

கைக்குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுது கொண்டிருந்தால் 1 /2 மேசைக்கரண்டி தேன் கொடுத்தால் நன்கு தூங்கும்.

அருகம்புல்லை சுத்தமாக கழுவி வாயில் போட்டு நன்றாக மென்று பல்வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்து கொண்டால் பல்வலி குறையும்.

பெண்களுக்கு ஏற்ப்படும் பல நோய்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும், வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  ஆண்கள் வாழைத்தண்டை சமைத்து உண்ண வேண்டும்.

அதிக நார் சத்த்துள்ள வெங்காயத்தை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வதால், ரத்த அழுத்தம் வராமல் தடுத்து கொள்ளலாம். உடலில் வெப்பத்தை குறைக்கிறது. மலச்சிக்கல்  வரமால் தடுக்கும்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சண்ட காய்ச்சி பால் சக்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு நீங்கும்.

அடிக்கடி நாவறட்சி ஏற்ப்பட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்கிறதா.  கொஞ்சம் துளசி இலையை பறித்து நன்றாக மென்று விடுங்கள். நாவறட்சி மட்டுப்படும்.

வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை எண்ணையில் கலந்து தீப்புண், சீழ்வடிதல், மற்றும் ஆறாத காயங்கள் மீது தடவி வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒட்டு கொய்யா, மா, சப்போட்டா போன்றவை வாங்கி வளர்க்கிறிங்களா? முதல் வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டு விடுங்கள். அடுத்த வருடம் அமோகமாய் காய்க்கும்.

சித்த வைத்திய சிகாமணி MBBS! - 'கல்யாணத்துக்குப் பிறகு தாம்பத்தியத்தில் தடுமாற்றமா..?

                  'கல்யாணத்துக்குப் பிறகு தாம்பத்தியத்தில் தடுமாற்றமா..? என்கிட்ட வாங்க!’னு ஊர்ல இருக்கும் வாலிப-வயோதிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் நம்ம ஹீரோவுக்கே, கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்கலை. அதுவும்... பரம்பரை பரம்பரையா, பாரம்பரிய வழியில் இளைஞர்களின் மன, உடல் குறைகளைத் தீர்த்துவெச்ச குடும்பத்தோட அஞ்சாவது தலைமுறை இளைஞனுக்கு (ஹீரோ), கல்யாணம் பண்ணிக்கிறதுல சிக்கல். ஹீரோ அதை எப்படிச் சமாளிக்கிறார்..? இதுதான் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ படம்!'' - ஒரு வரியில் நம் ஆர்வத்தைத் தன் பக்கம் திருப்புகிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர்.

 ''பாரம்பரியச் சித்த வைத்தியம் தமிழ்நாட்டுல எவ்வளவு பெரிய நெட்வொர்க். அதை வெச்சு காமெடி பண்ணிட முடியுமா?''

''அட, கதையை முழுசாக் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க. ஒளிச்சு மறைச்சு எந்த ரகசியமும் கதையில இல்லை. க்ளைமாக்ஸ் வரைக்கும்கூட இப்பவே முழுக் கதையையும் சொல்றேன். பொண்ணு கிடைக்காத வெறுப்புல இருக்கும் ஹீரோ பரத், ஹீரோயின் நந்திதாவைப் பார்த்ததும் காதலில் விழுறார். அதனால, நந்திதா போற இடம் எல்லாம் ஃபாலோ பண்ணிட்டே இருக்கார். 'இவன் நம்மளைக் கடத்த வர்றான் போல’னு தப்பாப் புரிஞ்சுக்கிட்ட நந்திதா, அவங்க அப்பா, தம்பி ராமையாகிட்ட சொல்றாங்க.

கொம்புச் சண்டை மாஸ்டர் தம்பி ராமையா, தன் சிஷ்யர்களோட போய், பரத்தைக் கட்டிவெச்சு வெளுக்கிறார். அப்போ பரத் மொபைலுக்கு வர்ற ஒரு அழைப்பு, 'மருந்து தீர்ந்துடுச்சு. அடுத்து எப்போ மருந்து கொடுப்பீங்க?’னு ஸ்பீக்கர் போன்ல அலற, 'ஐயோ..! தம்பி நீங்க எம்.பி.பி.எஸ். டாக்டரா? இது தெரியாம உங்களை அடிச்சிட்டேனே!’னு தம்பி ராமையா பதற, அடி, உதைல இருந்து தப்பிக்க, 'ஆமாங்க... இவன் டாக்டர்தான்’னு பரத் ஃப்ரெண்ட் கருணா உளற... அடிச்ச கையாலயே பரத்துக்குக் கை-கால் அமுக்கிவிட்டு, 'எம்.பி.பி.எஸ். டாக்டரே மாப்பிளையா அமையுறது வரமாச்சே!’னு ஃபீலிங்ஸ் ஆரம்பிச்சிடுவார் ராமையா.

'நான் எம்.பி.பி.எஸ். டாக்டர் இல்லை. சித்த வைத்தியர்’னு பரத் உண்மையைச் சொன்னா, கல்யாணம் நடக்காது. ஆனா, அதுக்காக நந்திதா மேல இருக்கிற காதலைவிட முடியாது. அப்புறம் ஆரம்பிக்கும் பாருங்க... காமெடி ரைடு. வயித்து வலிக்கு டாக்டரைத் தேடுவீங்க!''

''எப்பவோ ஒரு காமெடி படம்னா சிரிக்கலாம்... எப்பப் பார்த்தாலும் காமெடி படம்னா..?''

''இது சும்மா உங்களைச் சிரிக்க வைக்கணும்கிற அச்சுபிச்சு காமெடி இல்லை. கதை, காட்சி, வசனத்தோட பின்னிப் பிணைஞ்ச காமெடி.

ஸ்கிரிப்ட் பார்த்த கே.பி. சார், 'இதுல எந்த ஆர்ட்டிஸ்ட் நடிச்சாலும் படம் ஹிட். யாரை வேணும்னாலும் ஃபிக்ஸ் பண்ணுங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சுடலாம்’னு சொன்னார்.

பரத், நந்திதா தவிர, தம்பி ராமையா, கருணாகரன், மனோபாலா, மயில்சாமி, இமான் உள்ளிட்ட 21 காமெடி நடிகர்கள் நடிக்கிறாங்க. ஆனா, யாரும் படத்துல தனியாத் தெரிய மாட்டாங்க.

பெங்களூருல இருந்து ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ்...னு தமிழுக்கு அறிமுகப்படுத்தின கே.பி சார், இந்தப் படத்துல கோமல் குமாரை அறிமுகப்படுத்துறார். கன்னடத்துல நம்பர் ஒன் காமெடி ஆர்ட்டிஸ்ட் அவர். 'சந்திரமுகி’ கன்னட வெர்ஷன்ல வடிவேலு கேரக்டர் பண்ணவர். அங்க 99 படங்கள் முடிச்சிட்டு, 100-வது படம் தமிழ்ல பண்றார்.

எங்களோட ஆர்வம், டீம் எல்லாத்தையும் பார்த்துட்டு, 'ஸ்கிரிப்ட்ல உள்ளதை உள்ளபடி எடுத்துட்டு வந்துடுங்க. கண்டிப்பா ஹிட்’னு ஆசீர்வாதம் பண்ணியிருக்கார் கே.பி. சார்.

அந்த ஆசீர்வாதமே எங்களுக்குப் பெரிய வரம்!''

கோடையில் காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

              கோடை க்காலத்தில் வெயிலின் தாக்கமானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், மார்கெட் சென்று வாங்கி வரும் காய்கறிகளானது சீக்கிரம் வாடிவிடும். காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்வது என்பது ஈஸியானது அல்ல. அதிலும் ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளில் காய்கறிகளானது ஒரு நாளைக்கு மேல் நிலைக்காது.

மேலும் நிபுணர்கள் காய்கறிகளை சமைத்து சாப்பிடும் வரை பிரஷ்ஷாக வைத்துக் கொள்ள சில வழிகள் இருப்பதாக சொல்கின்றனர். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை வெயிலில் கஷ்டப்பட்டு மார்கெட் சென்று வாங்கி வரும் காய்கறிகள் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளது. அதன்படி காய்கறிகளைப் பராமரித்தால், காய்கறிகளானது பிரஷ்ஷாக இருக்கும்.
       
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வாங்கி வந்தால், அதனை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது. குறிப்பாக வெங்காயத்துடன் சேர்த்து வைக்கக்கூடாது. ஏனெனில் வெங்காயத்தில் இருந்து வெளிவரும் வாயுவானது உருளைக்கிழங்கை விரைவில் வாடச் செய்யும்.

வெங்காயம்

வெங்காயத்தை எப்போதும் தனியாகவும், காற்றோட்டமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
       
செலரி

செலரி நீண்ட நாட்கள் ஃப்ரட்ஜில் இருக்க வேண்டுமானால், தண்டுப்பகுதியில் தண்ணீரை தெளித்து ஒரு கவரில் போட்டு வையுங்கள்.

காளான்

காளானை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, அதில் ஆங்காங்கு சிறு ஓட்டைகளைப் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் வரும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காயை நீண்ட நாட்கள் சேகரித்து வைப்பது மிகவும் சுலபம். ஏனெனில் இதை கனிந்த பின்னரும் சமைக்கப் பயன்படுத்தலாம்.
   
முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை வெயில் படாதவாறு, எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் இடத்தில் வைத்துக் கொண்டால், நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

குடைமிளகாய்

குடைமிளகாய் வாங்கிய பின், அதன் காம்புகளை வெட்டி எடுத்துவிட்டு, அதனை ஈரமான துணியால் சுற்றி வைத்தால், நீண்ட நாட்கள் இருக்கும்.

கேரட்

 கேரட்டின் மேல் பகுதியை வெட்டி, ஈரமான டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் வரும்.
       
ப்ராக்கோலி

ப்ராக்கோலியை ஈரமான துணியால் சுற்றி, ஃப்ரிட்ஜில் வைத்தாலும் சரி அல்லது ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தாலும் சரி நீண்ட நாட்கள் இருக்கும்.

வெள்ளரிக்காய்

கோடையில் வெள்ளரிக்காய் சீசன் என்பதால் பலர் இதனை அதிகம் வாங்கி வருவார்கள். அப்படி வாங்கி வரும் வெள்ளரிக்காயை ஈரத்துணியில் போட்டு சுற்றி வைத்தால், நீண்ட நாட்கள் வரும்.

பூண்டு

பூண்டு நீண்ட நாட்கள் வர வேண்டுமானால், அதனை இருட்டான இடத்திலோ அல்லது குளிர்ச்சியான இடத்திலோ பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.
       
பீன்ஸ்

 ஈரப்பதமான இடத்தில் பீன்ஸ் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும். எனவே பீன்ஸை ஈரத்துணியில் போட்டு சுற்றி வைக்க வேண்டும்.

வெண்டைக்காய்

இது மற்ற காய்கறிகளைப் போல் ஈரப்பதமுள்ள இடத்தில் இருக்காது. ஆகவே வெண்டைக்காயை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையை டப்பாவில் போட்டு மூடாமல், அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால், அது பல நாட்கள் நன்றாக இருக்கும்.

ஹாலிவுட் படங்களுக்கே கிடைக்காத அனுமதி, ரஜினியின் லிங்காவுக்கு கிடைத்தது எப்படி? ஆச்சரிய தகவல்..!

               ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் தயாராகி வரும் ‘லிங்கா’ படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் சில காட்சிகள் மைசூர் மகாராஜா அரண்மனையில் படமாக்க தற்போது சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புவரை அனுமதி தர மறுத்து வந்த மைசூர் அரண்மனை நிர்வாகிகள் தற்போது திடீரென அனுமதி வழங்கியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒரு காரணம் மத்தியில் ஆட்சி மாறியது என்பது.

மைசூர் அரண்மனையின் சில முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்ததோடு அல்லாமல், மகாராஜா பயன்படுத்திய தங்கத்தில் ஆன அறை ஒன்றிலும் படப்பிடிப்பு நடத்த அரண்மனை நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. ஹாலிவுட் பட இயக்குனர்கள் கேட்டும் அனுமதி கொடுக்காத அரண்மனை நிர்வாகம் ரஜினி படத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

ஆனால் மகாராஜா பயன்படுத்திய அறைக்குள் செல்ல நான்கு நபர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால், ரஜினி, அனுஷ்கா, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகிய நான்கு பேர் மட்டுமே தங்கத்தில் ஆன அறையில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

லிங்கா படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க உள்ளது.

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டு பிடித்துவிட முடியும் தெரியுமா..?

1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...தைரிய பார்ட்டிகள், நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..

3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..

4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்..நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..

8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..

9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ? ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?

குற்ற உணர்ச்சியினால் குமையலாமா..?

இருவரின் பழைய அனுபவங்கள் இவை.

ஒருவர், ஒருநாள் அவசரமாக ஒரு வேலையாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குட்டி நாய் வேகமாக ஓடி வந்து அவரது குதிகாலைக் கௌவியது. கோபமடைந்த அவர் அதைத் தூக்கி எறியவே, அருகிலிருந்த பெரிய கல்லின் மீது அதன் தலை இடித்து இரத்தம் ஒழுக உடனே அது இறந்துவிட்டது.

இன்னொருவர், தன்னுடன் விடுதியில் தங்கியிருந்த நண்பனுக்குத் தெரியாமல் இரண்டாயிரம் ரூபாய் பணத்தைத் திருடி விட்டார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பல ஆண்டுகளுக்கு முன்னே அவர்கள் வாழ்வில் நிகழ்ந்திருந்தாலும் இன்றும் அவர்களை அந்தக் குற்ற உணர்ச்சிகள் துரத்துகின்றன. எவ்வளவோ ஆண்டுகள் ஆகியும் இந்தக் குற்ற உணர்வு அவர்களை விட்டு நீங்க மறுக்கிறது. இந்த மாதிரி நிலைகளை எப்படிச் சமாளிப்பது?

குற்ற உணர்ச்சி என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிர்மறை உணர்வு! ஒரு தீராத நோயைப்போல அது பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் தன்மை வாய்ந்தது!

அது, தான் செய்தது குற்றம் என்னும் நிலைமையிலிருந்து மாற்றி "நான் நல்லவனே இல்லை" எனத் தன்னைத்தானே நினைத்துக் கொள்ளுமளவுக்கு ஒரு தன்னிலைப் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

இதனால்-

•தன் மீதே வெறுப்பு.
•தன்னம்பிக்கை இன்மை.
•தான் எதற்குமே உதவாதவன் என்கிற தாழ்வு மனப்பான்மை.
•ஒரு வகை வெட்க உணர்ச்சி - ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இத்தகைய மனிதர்கள் சிலர் இதைச் சுய பச்சாதாபத்திற்கும் சுயநலத்திற்கும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகக் கூறுகிறார்கள் உளவியல் மருத்துவர்கள் சிலர். இத்தகைய குற்ற உணர்ச்சி நீடித்தால் அது மன உளைச்சலை ஏற்படுத்தி, வாழ்வின் முன்னேற்றத்தை வெகுவாகப் பாதிக்கும்.

இந்தக் குற்ற உணர்ச்சியை எப்படி மாற்றுவது?

இதோ சில வழிகள்!

•தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்வது.

•நாம் எப்படி அந்தத் தவறு செய்தோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்து, அது போன்ற குற்றங்களை இனிச் செய்யாமல் இருக்கத் தீர்மானிப்பது.

•நாம் அந்த நாளில் புரிந்தோ, புரியாமலோ ஒரு தவறான காரியத்தைச் செய்துவிட்டோம் என மனதார உணர்ந்து கொள்வது.

•இரக்கமோ, யோசனையோ, சுயக் கட்டுப்பாடோ இல்லாததால் செய்த தவறு அது என்பதைப் புரிந்து கொள்வது.

இப்படியெல்லாம் செய்வதால் நம்மை நாமே மன்னித்துக் கொள்கிறோம். இதனால் தேவையில்லாமல் குற்ற உணர்வைச் சுமந்துகொண்டு அலைய வேண்டியதில்லை.

கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய இரண்டு நண்பர்களும் இப்படிச் செய்தார்கள்...

நாய்க் குட்டியைத் தூக்கி அடித்தவர், இப்போது தானே ஒரு நாயை அன்புடன் வளர்த்து அதற்கு ஜோசஃபின் என அழகான பெயரிட்டு வளர்க்கிறார். அந்த நாய்க்குட்டியை நாய் என மற்றவர்கள் சொன்னால் கூட அவருக்கு இப்போது கோபம் வருகிறது. அதன் செல்லப் பெயரான ஜோசஃபின் என்றுதான் அழைக்க வேண்டுமாம்.

நண்பனின் பணத்தைத் திருடிய நண்பர், நண்பனை இப்போது தொடர்பு கொள்ள முடியாததால் இப்போது முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த உணவை 2000 ரூபாய் அளவிற்கு அளித்து வருகிறார். இப்போது அவர் மனம் அமைதியாகி விட்டது.

குற்ற உணர்ச்சிகளால் குமைந்து போகாமல் அவற்றை இப்படி நேர்மறையான உணர்ச்சிகளாக மாற்றிக் கொள்ளலாமே!


--திரு.கே.ஆர்.ரவி எம்.பி.ஏ அவர்களின் Thinking between the lines எனும் ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பிலிருந்து நன்றியுடன்.

எந்த நேரத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும்?

          * தயிரைத் தயிராக உண்ண ஒரு பக்குவம் இருக்கிறது. முப்பது வயதுக்கு மேல் தயிரை மோராக்கித்தான் உண்ண வேண்டும். அந்த வயதுக்கு மேல் நிறைய மோரே சாப்பிட வேண்டும். தயிரைச் சாப்பிடுவதானால் அதை ரசம், குழம்பு, சாதம் சாப்பிட்ட பின் கடைசியாக உண்ணக் கூடாது. தயிரை காலையில்தான் உண்ண வேண்டும்.

காலையில் வெறும் தயிரில் லேசாக உப்புச் சேர்த்து ஸ்பூனால் எடுத்து விழுங்கலாம். இட்லியில் தோய்த்து உண்ணலாம். ரொட்டிக்குப் போட்டு கொண்டால் உப்புத் தேவையில்லை. ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மோர் சேர்த்துக் கொள்ளலாம். இரவு வெறும் மோர் சோறும், பழங்களும் போதும். இரவில் பலகாரங்களை உண்ணக் கூடாது. பழங்கள் நல்ல இரவு ஆகாரம்.

* காலையில் முழுச்சாப்பாடு சாப்பிடக் கூடாது. அப்போது ஆவியில் அவித்த அல்லது அதிகம் எண்ணெய் சேராத இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாத்தி,  கொழுக்கட்டை ஆகியவைகளை உண்ணலாம்.

* உண்ணும் உணவில் மிளகாய்(சிவப்பு) அறவே இருக்கக் கூடாது. அவசியமானால் சில பச்சை மிளகாய்களைச் சேர்த்துக் கொள்ளலாம். காரம் தேவை என்றால் மிளகைத்தான் பயன்படுத்த வேண்டும். வடை, போண்டாக்களில் கட்டாயம் மிளகு இருக்க வேண்டும். இஞ்சியும், மிளகும் சேர்ந்த அரிசிப் பொங்கல் மிகச்சிறந்த உணவு. முழுமையான சத்துள்ள உணவு. அதில் உடலின் எதிரிகளே இல்லை.

* பொரித்த அப்பளம் கூடாது. சுட்ட அப்பளம் சிறந்தது. கரி அடுப்பில்தான் அப்பளம் சுட வேண்டும்.

* தினசரி உணவில் பருப்புச் சேர்க்கக் கூடாது. வாரத்தில் இரண்டு நாள்தான் பருப்புச் சேர்க்க வேண்டும். அதாவது இரண்டு நாள்தான் சாம்பார், ரசம் வைக்கலாம். மற்ற நாட்களில் மோர்க் குழம்பு, மிளகு ரசம், எலுமிச்சை ரசம் சேர்க்க வேண்டும்.

* மதிய உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுச் சாப்பாடு சாப்பிடலாம். பருப்புச் சாதம், மோர் சாதம் என்று பலவகையாக அது இருக்க வேண்டும். அல்லது வற்றல் குழம்பு சாதம், மோர் சாதம் என்றும் இருக்கலாம். கட்டாயம் கீரை இருக்க வேண்டும். தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். ஏதாவது ஒரு கடலை சுண்டல் உணவில் இருப்பது நல்லது.

* மாலை நேரம் நவதானியங்களை முளைகட்டி சுண்டல் செய்து சாப்பிடலாம். ரஸ்க், பன், கார்ன்ப்ளாக், ஓட்ஸ் இது போன்ற ஏதாவது எண்ணெய் இல்லாத ஓர் அயிட்டத்தை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஐந்து லட்சத்தைத் தொட்டார் ரஜினி!

இணையத்தின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக சமூக வலைத்தளங்கள் படுவேகமாக வளர்ச்சியடைந்துவருகின்றன. சாதாரண மக்களையும் பிரபலங்களையும் இணைப்பதில் சமூக ஊடகங்களான டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் முன்னணியில் இருந்துவருகின்றன.

கடந்த மே 5ல் ட்விட்டரில் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறும் 23 நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ட்விட்டரில் இணைந்த சில மணி நேரங்களிலேயே அவரது டிவிட்டர் அக்கவுண்ட் வெரிபைடு செய்யப்பட்டதுடன் முதல் நாளிலேயே சுமார் 2 லட்சத்திற்கும் அதிமான பாலோயர்களைப் பெற்றார். முழுதாக மூன்று வாரங்கள் மட்டுமே ஆகியிருக்கும் இச்சூழலில் 5 லட்சம் பாலோயர்களைக் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கோச்சடையான் திரைப்படம் 50 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. தற்பொழுது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் லிங்கா திரைப்படத்தில் நடித்துவருகிறார்.