Saturday, May 31, 2014

விஜய் சேதுபதியின் " மெல்லிசை " விரைவில் நிறைவடைகிறது..!

விஜய் சேதுபதி - காயத்ரி நடிப்பில் உருவாகிவரும் மெல்லிசை திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் விரைவில் நிறைவடையவுள்ளன. அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படம் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ரிபெல் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தினை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிடவுள்ளது.

இயக்குனர் ராமின் உதவி இயக்குனரான ரஞ்சித் இப்படத்தின் கதையினைப் படப்பிடிப்புத் துவங்குவதற்குச் சில மாதங்கள் முன்னரே விஜய் சேதுபதியிடம் சொன்னதாகவும், இப்படத்தின் கதை மிகவும் ஈர்க்கும் விதமாக இருந்ததால் விஜய் சேதுபதி நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் விஜய் சேதுபதியின் கால்ஷீட் இல்லாததால் இப்படத்தினை அடுத்த ஆண்டு படமாக்கத்தான் திட்டமிட்டிருந்தது படக்குழு. திடீரென விஜய் சேதுபதி நடிக்கவிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால் உடனே இயக்குனரிடம் இப்படத்தினைத் துவங்கலாம் என்றும், முப்பது நாட்களில் படத்தினை முடிக்கமுடியுமா என்றும் கேட்டாராம் விஜய் சேதுபதி. இயக்குனரும் அதற்கு ஒப்புக் கொள்ளவே புல்லட் வேகத்தில் இப்படத்தினைப் படமாக்கியுள்ளனர்.

தற்பொழுது இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ள இப்படம் இசையினை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் திரில்லர் படமாகும். அறிமுக இசையமைப்பாளர் சாம் சார்லஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

0 comments:

Post a Comment