Friday, June 6, 2014

பழக்க வழக்கங்கள்...!




தலைவாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன?



சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும்.



வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன?



இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள் படையெடுக்கா வண்ணம் தடுக்க.



முதலில் காகத்தைக் காகா என அழைத்து சாப்பாடு வைத்துப் பின்னர் நாம் சாப்பிடுவது ஏன்?




உணவில் நஞ்சு கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய.

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் தீபிகா!

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது இந்தியில் இப்போது புதிய டிரண்ட். ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை பாஹ்க் மில்கா பாஹ்க் என்ற பெயரில் வெளிவந்து தேசிய விருது பெற்றது. தற்போது குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை சினிமாவாகி வருகிறது. இதில் மேரிகோமாக பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெய்வாலின் வாழ்க்கையை படமாக்க பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட் முடிவு செய்திருக்கிறார். இதில் சாய்னா கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்கலாம் என்று தெரிகிறது. படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்து சாய்னாவிடம் காட்டிய பிறகு சாய்னா நெய்வால் தான் தனது கேரக்டரில் நடிக்க சரியான நபர் தீபிகாதான் என்று மகேஷ் பட்டிடம் கருத்து தெரிவித்தாராம்.

காரணம் தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனே தேசிய பேட்மிட்டன் வீரர். தீபிகாவும் பள்ளி, கல்லூரி காலத்தில் பேட்மிட்டன் வீராங்கனையாக இருந்தவர். மாநில அளவில் விளையாடி இருக்கிறார். அதனால்தான் சாய்னா, தனது கேரக்டருக்கு தீபிகா பொருத்தமானவர் என்று கூறியிருக்கிறார். இது பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணவன் உண்டபின் அதே தட்டிலே உணவு உண்ணச் சொல்வது ஏன் தெரியுமா?

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா? 


அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான். அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், 


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...?



>> முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.


>> முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.


>> மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.


>> மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.


>>மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவளரும்.


>> பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முதல் முறையாக அதிவேக காமிராவான பாந்தம் ப்ளக்ஸ் 4கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பமொன்றில் இத்தகைய கேமிரா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!

இந்த காமிராவை ஸ்டீரியோவிஷன் நிறுவனம் லிங்காவுக்கு வழங்கியுள்ளது.

ரஜினி நடித்த ஸ்டன்ட் காட்சி ஒன்றை இந்தக் கேமராவைக் கொண்டு படமாக்கியிள்ளனர். ஹாலிவுட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் இயக்குநர் லீ விட்டேகர் அமைத்த ஒரு பெரிய சண்டைக்காட்சியை பாந்தம் ப்ளக்ஸ் கேமிராவில் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.

இத்தகவலை ஸ்டீரியோயோவிஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது லிங்கா படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. ஹைதராபாதில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நசக்கவிருக்கிறது.

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!


1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா? முருகதாஸ் விளக்கம்!

பாலிவுட்டிலும் கவனம் செலுத்தும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ஜாகையை மும்பைக்கு மாற்றமாட்டாராம்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸாகிறது. இதனால் கத்தி படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு முருகதாஸ் மும்பையில் தங்கி ரிலீஸ் வேலைகளை கவனித்து வருகிறார்.

ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா?: முருகதாஸ் விளக்கம்

இப்படி பாலிவுட், கோலிவுட் என்று போகிறாரே மனிதர் பிரபுதேவாவை போன்று மும்பையில் செட்டிலாகிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது. இதை அவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

தமிழ் படங்கள் எனக்கு புகழும், பணமும் கொடுத்தன. எனக்கு மேலும் பல இந்தி படங்கள் எடுக்க ஆசை. இந்தி கற்க விரும்புகிறேன். ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்துவேன். நான் மும்பைக்கு வந்து செல்வேனே தவிர இங்கு செட்டிலாகிவிட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றார்.

Thursday, June 5, 2014

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…


சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.

* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.

* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.

* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.

* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.

* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.

* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.

* காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.

* தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.

* பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

* வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

* அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

• காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அபானாசனம்! செய்முறை!

அபானாசனம்


செய்முறை :

முதுகு தரையில் படும்படி விரிப்பில் படுக்கவும். கால்களை மடித்து சற்று உயர்த்திய நிலையில் முட்டிகளை உள்ளங்கைகளால் பிடித்துக்கொள்ளவும். இருமுட்டிகளுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும்.

பிறகு, மூச்சை வெளியே விட்டபடி முட்டிகளை மார்புப் பக்கம் கொண்டு செல்லவும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடியே பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்யவும்.

பலன்கள்: 

வயிறு நன்றாக அமுக்கப்படுவதால் அப்பகுதி மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படும். முதுகு, தோள்பட்டையில் ஆரோக்கியம் பெறும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் குறைந்து, அடிவயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகள் நீங்கும். 

விஜய், விக்ரம் படங்களில் நடிக்கும் சீதா!

விஜய் மில்டன் இயக்கிய 'கோலிசோடா' படத்தில் நடித்தவர் சீதா. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது.

'கோலிசோடா' படத்தின் மூலம் விமர்சகர்கள், திரைநட்சத்திரங்கள் எனப் பலரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது விஜய்மில்டன் - விக்ரம் இணைந்துள்ள 'பத்து எண்றதுக்குள்ள' படத்தில் சமந்தாவின் தோழியாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தில் அலுவலகம் செல்லும் பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறார். இதன் மூலம் விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் இடம் பிடித்துவிட்டார் சீதா.

அமுக்குவான் பேய் - உண்மையா?....


இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்.


உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே, என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.


சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு. இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.


இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


 ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

அஜித்தை இயக்கும் முருகதாஸ்?

'தீனா' படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ் என்று சொல்லப்படுகிறது.

முருகதாஸின் முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். அஜித்தை தல என்று அன்போடு அழைத்தது 'தீனா' படத்தில்தான். இன்று வரைக்கும் அஜித் தல என்று அழைக்கப்படுகிறார்.

'தீனா' படத்தைத் தொடர்ந்து 'ரமணா', 'கஜினி', 'ஏழாம் அறிவு', 'துப்பாக்கி' படங்களை இயக்கிய முருகதாஸ் இப்போது 'கத்தி' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

'கத்தி' படம் முடிந்த பிறகு மீண்டும் அஜித்தை இயக்க இருக்கிறாராம். இதுவரை சூர்யாவுக்கும், விஜய்க்கும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் முருகதாஸ்.

அந்த வகையில் அஜித்துக்கும் இரண்டாவது முறையாக படம் இயக்க உள்ளார். இன்னும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் தெரியவரும்.

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.

இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர்.

பெருமளவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இந்த காலத்தில் இத்தகைய தவறான நம்பிக்கைகளையும் நாம் கைவிட மறுக்கிறோம். இத்தகைய தவறான கணிப்புகளையும், எண்ணங்களையும் இக்கட்டுரையில் காண்போம். அதிலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் முதலில் சரி என்று எண்ணிய பின் மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியால் இது தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அப்படி உண்மை என்று நினைக்கும் சில பொய்யான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
    
குளிர்காலத்தில் ஈரமான தலையுடன் வெளியே சென்றால் சளி பிடிக்கும்


தலையில் தொப்பி போடு அல்லது உனக்கு மிகுந்த சளி பிடிக்கும்' இப்படி எல்லா அம்மாகளும் குளிர்காலம் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது சகஜம் தான். இது சம்மந்தமான பல கணிப்புக்களும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. இந்த அடிப்படையில் குளிர்காலத்தில் வெளியே செல்பவர்களை விட குளிர்காலத்தை அனுபவிக்காதவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது நிருபணமான உண்மை. இதில் ஈரமான தலை அல்லது ஈரமில்லாத தலை என்றெல்லாம் எந்தவித வித்தியாசமும் கிடையாது.

   
சர்க்கரை குழந்தைகளை சுட்டியாக்கும்



அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசனின் பத்திரிக்கை குழந்தைகளையும் சர்க்கரையையும் வைத்து 23 ஆராய்ச்சி பாடங்களை வெளியிட்டது. அதன் முடிவு சர்க்கரை குழந்தையின் நடத்தையை பாதிப்பதில்லை. ஆனால் இது உண்மையானதாக நம்மில் திணிக்கப்பட்டுள்ளது.

 
உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்கும்


98 சதவிகித உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்குகின்றது எனவும், ஆதலால் தான் குளிர்காலத்தில தொப்பி அணிய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற இடங்களிலும் கூறுவது உங்கள் உடம்பில் இருந்து வெளியேரும் சூட்டின் அளவு பெரும்பாலும் பரப்பளவை பொறுத்ததே - தொப்பி அணியாத தலையை விட குளிர் நாளில் விரிவடைந்த கால்கள் மூலமோ அல்லது கைகள் மூலமோ தான் அதிக சூடு வெளியேறுகிறது.
       
சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படும்


இது நியாயமானதாக தோன்றினாலும் உண்மையல்ல. சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படாது. மேலும் எந்த சான்றும் இதை நிரூபிக்கவும் இல்லை மற்றும் சிறிய ஆராய்ச்சிகள் இவற்றில் நடத்தப்படும் போது, சுடக்கு உடைக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் சுடக்கு உடைக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூட்டு வீக்கம் ஏற்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவந்தது. மருத்துவத்துறையில் சுடக்கு உடைப்பதால் எழும்பை சுற்றியுள்ள தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும் அல்லது தசை நார்கள் இடப்பெயர்வுக்கும் தான் இணைப்பு இருப்பதே தவிர சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான இணைப்பு இல்லை.
   
நெப்போலியன் குள்ளமானவர்



நெப்போலியின் பிரெஞ்ச் நாட்டு அரசர். அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் பல வரலாற்று வல்லுனர்கள் தற்போது அவரது கூடுதல் உயரத்தை தந்துள்ளனர். அவர் பிரெஞ்ச் யூனிட்ஸ் பயன்படுத்தி அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று கணக்கிடபட்டுள்ளது. இந்த பிரஞ்ச் யூனிட்ஸ்சை இம்பீரியல் யூனிட்ஸ்சாக மாற்றப்பட்டால் அவரது உயரம் 5 அடி 7 அங்குலம் என்று மாறுகிறது. இந்த உயர அளவு பொதுவான பிரெஞ்ச் நாட்டு மனிதரின் சராசரி உயரத்தை விட அதிகமாவே உள்ளது.
   
உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும்

வாம் அப்' அல்லது உடற்பயிற்சிக்கு முன் கால், கைகள் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் ஸ்ட்ரெட்ச் செய்த பின் பயிற்சியை ஆரம்பித்தால் உங்களது செயல் திறன் அதிகரிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை மறுக்கின்றனர். ஸ்ட்ரெட்ச் செய்து பின்னர் ஓடினால் அது 5 சதவிகிதம் குறைச்சலான இயக்கு திறன் காணப்படும். அதே சமயத்தில் இத்தாலிய வல்லுனர்களின் கருத்துப்படி ஸ்ட்ரெட்ச் செய்வதால் செயல் திறன் குறைகிறது. மேலும் இந்த கூற்று சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
     
முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்திற்கு கேடு விளைவிக்கும்


உணவில் சேர்க்கப்படும் கொழுப்பு வகைகளும் அது ஏற்படுத்தும் பாதிப்புக்களும் மற்றும் அதற்கான உணவு கட்டுப்பாட்டு முறைகளும், இரத்த குழாய் சார்ந்த நோயை உண்டாக்குபவை பற்றிய ஆராய்ச்சியில் 1960-ல் சிறிதளவு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உருவாகியுள்ளது. ஆனால் இதை தவறு என்று உணர்த்த மிருகங்களிடையே தேவையை விட அதிக அளவு கொழுப்பு சத்தை சேர்த்த போதும், அது உடலில் கொழுப்பை அதிகப்படுத்தவில்லை. ஆனால் சாச்சுரேட்டட் கொழுப்பை (இறைச்சிகளில் உள்ள கொழுப்புக்கள்) உட்கொள்ளும் போது தான் அதிகரிக்கிறது. ஆகையால் முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்தை பாதிக்காது.

நாயின் ஏழு வயது ஒரு மனித ஆண்டு


மூன்று வயது நிரம்பிய நாய்க்கு மனிதர்களின் வாழ்நாளில் 21 ஆண்டுகள் என்பது சரியா? வல்லுநர்கள் இதை தவறு என்கிறார்கள். ஒருமித்த கருத்து என்னவென்றால் மனிதர்களை விட நாய்களின் முதிர்ச்சி வேகமாக இருக்கும். 21 ஆண்டு முதிர்ச்சியை இரண்டு ஆண்டுகளில் அடைந்து பின்னர் மெதுவாக குறைந்து ஒரு வருடத்திற்கு நான்கு மனித ஆண்டாக மாறும். டாக் விஸ்பரர் சீசர் மில்லன் நாயின் மனித ஆண்டை பின் வருமாறு கணக்கிட வேண்டும் என்கிறார்: நாயின் வயதில் இரண்டை கழித்து அதை நான்கால் பெருக்கி அதோடு 21-ஐ கூட்ட வேண்டும். என்ன கணக்கு புரிந்ததா? 

ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பற்கள் இருந்தது


20 வயதிலிருந்தே பற்களை இழக்க நேர்ந்த முதல் அமெரிக்க ஜனாதிபதிக்கு மரத்தால் ஆன பற்கள் இருந்தது என்பது தவறான கூற்று. அவருக்கு பற்கள் விழுந்தது உண்மை தான். அவரிடம் நான்கு பொய்யான பற்கள் இருந்தது அவை தங்கம், நீர்யானை தந்தம், ஈயம், மனித மற்றும் மிருகங்களின் பற்களால் ஆனவை. அக்காலத்தில் கழுதை மற்றும் குதிரையின் பற்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்த பற்களை ஒன்றாக பிடித்துக் கொள்ள பற்களுக்கிடையே போல்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் திறப்பதற்கு உதவியாக ஸ்பிரிங்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை முயற்சி அவருக்கு பிடித்த உணவான மேரி வாஷிங்டனின் சுவையான ஜிஞ்சர் பிரட் ஆகியவற்றை உண்ண முடிந்தது.

அற்புதமான இணையதளங்கள்! உங்களுக்கு இதோ!

தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.

இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.

ஒன்லைன் மூலம் பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

ஒரு சில விடயங்களை நீங்கள் ஒன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.

* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களா www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.

* நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

* எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள் www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.

* ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.

* உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள் www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.

விஸ்வரூபம் 2 லேட் ரகசியம்..?

க‌மல் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படத்துக்குப் பிறகுதான் வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு பல பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது கமலின் விஸ்வரூபம். அந்தப் படம் நல்ல வசூலையும் பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து, உடனடியாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார் கமல். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்ததது.

கடந்த ஜனவரியிலேயே படம் வெளியாகிவிடும் என்று கூறப்பட்ட நிலையில், 10 சதவீத படப்பிடிப்பு முடியாத நிலையில், கமல் தனது அடுத்தடுத்த படங்களுக்கு தேதி கொடுத்து நடிக்கப் போய்விட்டார். இப்போது உத்தம வில்லனில் நடிக்கும் கமல், அது முடிந்ததுமே, த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார். உத்தம வில்லன் செப்டம்பர் 10- ம் தேதி நிச்சய ரிலீஸ் என தயாரிப்பாளர் லிங்குசாமி கூறியுள்ளார். எனவே இந்தப் படத்துக்குப் பிறகுதான் விஸ்வரூபம் 2 வெளியாக வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் நிதி நெருக்கியில் சிக்கியிருப்பதாலேயே இந்த நிலை என்கிறார்கள் ஆஸ்கர் பிலிம்ஸ் வட்டாரத்தில்.

ரஜினியின் லிங்கா ரிலீஸ் தேதி..!

கே.எஸ். ரவிகுமார் இயக்கும் 'லிங்கா' படத்தை தீபாவலியை ஒட்டி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

ரஜினிகாந்த் இரட்டை  வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'லிங்கா'. இதில்  சோனாக்ஷி சின்ஹா,  அனுஷ்கா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

 நயன்தாரா ஒரு பாடலுக்கு ரஜினியுடன் டான்ஸ் ஆடுகிறார். சந்தானம் காமெடி ரோலில் நடிக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், விஜயகுமார், ராதாரவி ஆகியோர் இப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.

ரஜினியுடன் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடித்திருக்கிறார். 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு விருவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், தீபாவளிக்கு படத்தை வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.

விஜய் நடிக்கும் 'கத்தி', விஷால் நடிக்கும் 'பூஜை' , அஜித்- கௌதம் மேனன் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சான்’ சூர்யாவின் மாஸ் ‘ஓபனிங்’ சாங்!

படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படம் நாளுக்கு நாள் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்றிக் கொண்டே போகிறது. ஒருபுறம் டப்பிங் வேலைகள் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்க மற்றொ

எந்தத் தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்!
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்!
இங்க அப்பப்ப அங்கங்க தீப்பத்திக்குமே
ஓர் ஆபத்தில் அவன் பேரு காப்பாத்துமே
அந்தேரி புலி பேரச் சொன்னா அடி நெஞ்சிலே
பேங் பேங் பேங்!!!
ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங் பேங் பேங்!!!
ராஜு பாய் வந்து முன்னால நின்னா
பேங் பேங் பேங்!!!

இந்தப் பாடல் வரிகளை கவனிக்கும்போது ‘அஞ்சான்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யாவில் ஒருவர் மும்பை ‘டான்’ என்பதும், அவரின் பெயர் ‘ராஜு பாய்’ என்பதும் தெரிகிறது. ‘நாயகன்’, ‘பாட்ஷா’ வரிசையில் ‘அஞ்சான்’ படமும் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது சூர்யா ரசிகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் என்.லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் டீஸரை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் அனேகமாக ஜூலை மாதம் வெளிவரும்.
ருபுறம் ‘அஞ்சான்’ படத்திற்கான பாடல்களும் சூப்பராக உருவாகிக் கொண்டிருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் சூர்யாவுக்கான ஓபனிங் பாடலை சமீபத்தில் எழுதி முடித்திருக்கிறார் மதன் கார்க்கி. ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற இருக்கும் ‘அஞ்சான்’ சூர்யாவுக்கான ஓபனிங் பாடலின் சிலவரிகள் இங்கே உங்களுக்காக..

ரஜினி மீது தீபிகா திடீர் கோபம்!

ரஜினி மீது தீபிகா கோபமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக தகவல் வெளியிட்டுள்ளது.ரஜினி நடித்துள்ள படம் ‘கோச்சடையான். மோஷன் கேப்சர் முறையில் சவுந்தர்யா ரஜினி இயக்கினார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் பங்கேற்காததற்கு காரணம் அவரது கதாபாத்திரம் படத்தில் சரியாக காட்டப்படாததுதான் என்று பாலிவுட் தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி பாலிவுட் மீடியாவில் வெளிவந்துள்ள பரபரப்பு தகவல்:கோச்சடையான் படத் தில் தனது கதாபாத்திரம் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று தீபிகா எண்ணியதால்தான் அப்படத்தின் புரமோஷன்களுக்கும் வராமல் தவிர்த்துவிட்டார். இதுதொடர்பாக ரஜினி மீதும் சவுந்தர்யா மீதும் அவர் கோபமாக இருக்கிறார். மேலும் சல்மான் கான் நடிக்கும் ‘பிரேம் ரத்தன் தான் பயோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டதுடன் அவர் ஹீரோவாக நடித்த ‘கிக் படத்தில் குத்து பாடலுக்கு ஆட அழைத்தபோதும் மறுத்துவிட்டாராம். இதெல்லாமே சல்மான் மீது அவருக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதான்.

இவ்வளவுக்கு பிறகும் காதலன் ரன்வீர் படங்களில் நடிப்பதில் மட்டும் தீபிகா கவனமாக இருக்கிறார். ‘பஜிராவ் மஸ்தானி‘ என்ற படத்தில் ரன்வீர் ஜோடியாக நடிக்க மட்டும் அவர் கால்ஷீட் தந்திருக்கிறார். மற்ற ஹீரோயின்கள் டாப் ஹீரோக்களுடன் ஒத்துழைக்கும்போக்கை கடைப்பிடிக்கும் தருணத்தில் தீபிகா மட்டும் இப்படி மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் அவரது திரையுலக வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கிறார் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது

பின்னணி பாடுகிறார் சூர்யா!

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக சூர்யா சொந்த குரலில் பாடல் பாடப்போவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது,‘இப்படத்துக்காக சூர்யா சொந்த குரலில் பாடும் ஐடியா உள்ளது. ஆனால் இன்னும் அந்த பாடல் ஒலிப்பதிவாகவில்லை என்றனர். இப்படத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். பட ஷூட்டிங்கிற்கான ஆரம்ப கட்ட பணிகளில் வெங்கட் பிரபு மும்முரமாக உள்ளார்

சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்...??


சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன. சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள் ஏற்படுகின்றன


 பொதுவாக முகம், கழுத்து, அக்குள், முதுகு, தொடை போன்ற இடங்களிலேயே இவை அதிகம் தோன்றுவதுண்டு. இருந்தாலும் வேறு முடி உள்ள வேறு இடங்களிலும் தோன்றலாம். காது, மூக்கு போன்ற நொய்த இடங்களில் தோன்றும் கட்டிகள் கடுமையான வேதனையைக் கொடுக்கும்.


எவ்வாறு இருக்கும்?


கட்டி தோன்றும்போது ஆரம்பத்தில் சற்று வலி இருக்கும், தடவினால் வீக்கம் இருப்பதாக உணர்வீர்கள். உற்று நோக்கினால் அவ்விடம் சற்றுச் சிவந்து தடித்திருப்பதாகத் தென்படும். நாட்கள் செல்ல வீக்கம் அதிகரிக்கும். பின்பு கடினமமாக இருந்த வீக்கம் சற்று மெதுமையாகி தொள தொளவென மாறும். உள்ளே கட்டி கரைந்து சீழ் தோன்றியிருக்கும். சீழ் அதிகரிக்க வலியும் அதிகரிக்கும்.


கட்டிகளின் அளவுகளில் வித்தியாசங்கள் இருக்கும். கச்சான் கொட்டை அளவு முதல் டெனிஸ் பந்தளளவு அல்லது அதனிலும் பெரிதாகவும் வீங்கலாம். கட்டி பழுக்க ஆரம்பிக்கும்போது அதன் மத்தியில் சற்று மஞ்சள் நிறமாக மாற்றமுறும். இதனை மருத்துவத்தில் Pரளவரடந என்பார்கள்.
சில அருகருகாக பல கட்டிகள் தோன்றும்போது ஒன்றுடன் மற்றது இணைந்து பெரிதாக மாறக் கூடும்.


வலி அதிகமாகி வீக்கமும் அதிகரிக்கிறது எனில் நீங்கள் மருத்துவரை நாட நேரிடலாம். ஆனால் சில கட்டிகள் தானாகவே உடைந்து சீழ் வெளியேற வலி தணிந்துவிடும். உடைந்து சீழ் வெளியேறிய பின்னரும் சில நாட்களுக்கு அதிலிருந்து கசிவு ஏற்படக் கூடும். அவ்வாறு கசிவதனால் அவ்விடத்தில் தானாகவே காய்ந்து படிவதுண்டு.


சீழ்கட்டிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல கிருமியின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். கிருமித் தொற்றுக் காரணமாக உடலில் அலுப்பு வேதனை ஏற்டலாம். சில நேரங்களில் காய்ச்சலும் தோன்றக் கூடும். சிலருக்கு அது தோன்றுவதற்கு முன்னர் அவ்விடச் சருமத்தில் சற்று அரிப்பு ஏற்படுவதுண்டு.


நீங்கள் செய்யக் கூடியது எவை?


சிறிய வேதனை அதிகமற்ற கட்டி எனில் உடடியாக மருத்துவரை நாட வேண்டியதில்லை. அது தானாகவே உடைந்து சீழ் வெளியேறிய பின்னர் குணமாகும்.


சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளில் பலதடவைகள் செய்ய வேண்டும். இது வேதனையைத் தணிக்க உதவும். அத்துடன் கிருமி பெருகுவதையும் குறைக்கும்.


கைகளால் அழுத்தியோ அல்லது பிளெட் போன்ற கூரிய ஆயதங்களால் வெட்டியோ சீழை நீங்களாக அகற்ற முற்பட வேண்டாம். சீழ் அகலுவதற்குப் பதிலாக கிருமிகள் பரவி நோயை தீவிரப்படுத்தலாம்.


கட்டி தானாக உடைத்துவிட்டால் தொடர்ந்தும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவுங்கள். சீழ் வடிந்து கொண்டிருந்தால் அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
அந்த இடத்தை நீங்கள் தொட்டால் சுத்தமாக நன்கு கை கழுவிய வேண்டும்.


அதேபோல நோயாளி உபயோகித்த, துணி. டவல், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவர் உபயோகித்த துணிமணிகளை நன்கு கழுவி உலர்ந்த பின்னரே மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவற்றை சுடுநீரில் கழுவுவதும் சிறந்தது.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…உண்மை விளக்கம்!


ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பது

 ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..!



கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன்,


அரசனே ஆனாலும் கூட



 அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்

 என்பதுதான் உண்மையான அர்த்தம்…



1) ஆடம்பரமாய் வாழும் தாய்,



2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,



3) ஒழுக்கமற்ற மனைவி,



4) ஏமாற்றுவதும் துரோகமும்


 செய்யக்கூடிய உடன்


 பிறந்தோர் மற்றும்



5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்


 என்பதாகும்..

ஜூன் 19ல் வடகறி விருந்து!

ஜெய், ஸ்வாதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் வடகறி திரைப்படம் வருகிற ஜூன் 19ல் வெளியாகவுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனரான சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தினை தயாநிதி அழகிரியின் மேகா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடியிருப்பதால் படம் குறித்த பலவித எதிர்பார்ப்புக்கள் இளைஞர்களிடையே எழுந்துள்ளது. பிரபல ஆர்.ஜேவான பாலாஜியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர்களான மெர்வின் சாலமன் விவேக் சிவா ஆகியோர் இசையமைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் வில்லன் சூப்பர் சுப்புராயன்!

அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் காளி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இப்படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்கள்வெளியாகிவருகின்றன.

குட்டிப்புலி திரைப்படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள கொம்பன் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஹீரோயின் யாரென்பது இதுவரையிலும் தெரியாவிட்டாலும், குட்டிப்புலி படத்தின் ஹீரோயினும், கோலிவுட்டின் ராசியான நடிகையுமான லக்‌ஷ்மிமேனன் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொம்பன் திரைப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தின் வில்லன்
குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல சண்டைப்பயிற்சி மாஸ்டரான சூப்பர் சுப்புராயன் கொம்பன் படத்தில் கார்த்தியின் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

கிராமத்துக் கதையினை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இப்படத்தில் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா
இப்படத்திற்கு இசையமைக்கலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டுவருகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏக்சன் ஹீரோயினாக பூஜா குமார்!

உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்த விஷ்வரூபம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் ஜோடியாக நடித்திருந்தவர் பூஜா குமார். அமைதியான ஹீரோயினாக இப்படத்தில் அவரது வேடம் அமைந்திருந்தது. ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பூஜா குமார் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஷ்வரூபம். இதன் அடுத்த பாகமான விஷ்வரூபம் -2 திரைப்படம் ஏற்கெனவே படமாக்கப்பட்டு, வெளியீட்டிற்குத் தயார் நிலையில் இருந்துவருகிறது. இவ்விரு படங்களிலும் கமல்ஹாசனின் ஜோடியாக நடித்தவர் பூஜா குமார். இப்படங்களில் கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து கமல்ஹாசன் தற்பொழுது நடித்துவரும் உத்தம வில்லன் திரைப்படத்திலும் இவர் நடித்துவருகிறார்.

உத்தமவில்லன் திரைப்படத்தில் இவருடன் ஆண்ட்ரியா, பார்வதி மேனன் ஆகியோரும் நடித்துவருகின்றனர். உத்தமவில்லன் திரைப்படம் வழக்கமான காமெடிப் படமாக மட்டுமல்லாமல் வேறு சிலவற்றையும் எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார் பூஜாகுமார்.

கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கத்தில் உருவாகிவருகிறது உத்தமவில்லன் திரைப்படம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துவருகிறார்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

 

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்

. . . . உலகோர்க் கெல்லாம் காரமா

மூலியடா பங்கம்பாளை கொண்டு

. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்

கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்

. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்

நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா

. . . . அன்றான ஆகாசகருடன் மூலி

அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.


பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

பிக்கேட் 43 படத்தில் பிருத்திவிராஜ்வுடன் மோகன்லால்...!

பிருத்திவிராஜ் நடித்து கொண்டு இருக்கும் படம் பிக்கேட் 43. இந்த படத்தில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்து இருக்கிறது.

பிரபல இயக்குனர் மேஜர் ரவி இயக்கி கொண்டு இருக்கும் இப் படத்தில் மோகன்லால் நடிக்கிறது உறுதி என்று மலையாள உலகம் தெரிவிக்கிறது.

என்னென்றால் இது வரை இயக்கிய மேஜர் ரவி படத்தில் மோகன்லால் இல்லாமல் எடுத்து இல்லை அதுவும் அவர் என் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தால் கூட படம் நல்ல ஓடும் என்று நம்புகிறார்

ஒரு சிப்பாய் காஷ்மீரில் திசை தெரியாமல் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிக்கி கொள்கிறார். அதன் பின் அவர் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே பிக்கேட் 43 படம் படத்தின் கதை. இப் படத்தை ஹிந்திலும் எடுக்க உள்ளனர்.

ஜெயம் ரவி விட்ட சாபம் பலித்தது...!

தமிழ் நாட்டில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் வைத்து உருவாக்கப்படுள்ள படம் தான் "என்ன சத்தம் இந்த நேரம்". இதில் இயக்குனர் ஜெயம் ராஜா நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் படம்.

இந்த நன்கு குழந்தகளின் அப்பாவாக தான் இயக்குனர் ஜெயம் ராஜா நடித்து இருக்கிறார். இப் படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடை பெற்றது அப்போது பேசிய படத்தின் இயக்குனர் குரு ரமேஷ், ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த நான்கு குழந்தைகளும் ஜூவில் காணாமல் போய் விடுகின்றனர், அப்படி காணாமல் போன குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பது தான் கதையின் கரு என்று கூறினார்.

இயக்குனர் ஜெயம் ராஜா பேசுகையில் , இந்த படத்தோட ஷுட்டிங்குக்கு நடிக்க போகும் போது என் தம்பி ஜெயம் அடிக்கடி சொல்வான்

எங்க எல்லாரையும் படுத்தி வச்சேல்ல. இப்ப போய் பாரு. நடிப்புன்னா என்னன்னு தெரியும்’ என்று. நிஜமாகவே அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது எனக்கு. ஒவ்வொருத்தரையும் ரொம்ப பிழிஞ்சு எடுத்துருக்கோம்னு.

இனிமே ரொம்ப பிழிய கூடாது. ஆனால் நான் ஏன் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று என் வீட்டிலேயே ரொம்ப பேருக்கு ஆச்சர்யம். வேறொன்றுமில்லை நான் நடிக்க ஒப்புக்கொண்டதே அந்த நான்கு குழந்தைகளை பார்த்த உடனே தான் அவர்களுடன் நடிப்பதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

கத்தி படத்துக்கு பிரேக் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்...!

ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தின் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி வந்தார். துப்பாக்கி பிறகு இவர்களது கூட்டணி மீது மக்களிடைய பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

இதற்கிடையிலும் ஏ.ஆர்.முருகதாஸ் , துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து, ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார்.தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியே உதவியாளர்களை வைத்திருப்பதால் கத்தி மற்றும் ஹாலிடே படங்களின் வேலைகளை ஒரே நேரத்தில் கவனித்து வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்

வருகிற 6-ஆம் தேதி ஹாலிடே வெளியாக உள்ளதால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மும்பை சென்றுள்ளார்.இதன் காரணமாக வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா கார்டனில் நடை பெற்ற வந்த கத்தி படத்தின் ஷூட்டிங்க்கு ஒரு சின்ன பிரேக் விட்டு உள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்

ஹாலிடே படத்தின் புரமோஷன்க்காக சென்றுள்ள முருகதாஸ் அடுத்து பத்துநாட்கள் ஷூட்டிங் இல்லை என்றவுடன் விஜய் இந்த நாட்களை அடுத்து நடிக்க உள்ள படத்திற்கான போட்டோ செஷன் பண்ணிவிடலாமா என்ற யோசித்து வருகிறாராம்.

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்..!


அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.

'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.

அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.

தனுஷின் தயாரிப்பில் நான் இயக்கபோவது உறுதி..!

வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் உதயநிதியின் மனைவி கிருத்திக உதய் இயக்குனர் ஆனார். அதன் பிறகு வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் எல்லாம் நல்ல ஹிட்.

தன்னுடைய அடுத்த கதை விவாதத்தில் பிஸியாக இருந்த கிருத்திகவுக்கு தனுஷின் வொண்டர்பார் கம்பெனியில் படம் இயக்க ஒரு வாய்ப்பு வந்து உள்ளது. தற்போது வரை படத்தினுடைய நடிகர் நடிகைகள் யார் யார் என்று இன்னும் முடிவாகவில்லை ஆனால் தனுஷ் தயாரிப்பில் நான் படம் இயக்க போகிறேன் என்ற செய்தி உறுதி என்று கிருத்திக உதய் தெரிவித்தார்.

வொண்டர்பார் கம்பெனி தற்போது வேலையில்ல பட்டதாரி படமும் மற்றும் சிவ்கர்த்திகேயனின் டானா படமும் தயாரிப்பு பணியில் இருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் தனுஷ் கம்பெனியில் விஜய்சேதுபதி நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியானது,அது கிருத்திக இயக்க போகும் படத்தில் நடிக்க போகிறாரா என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி இந்த படத்துக்கும் இசை நம்ம இளம் இசைப்புயல் அனிருத் அவர்களே தான்.

மாதுளம்பூவின் பயன்கள்


மாதுளம்பூவின் பயன்கள்:-

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

ஏன் கத்தியில் 90 பிணை கைதிகளுடன் விஜய்..!

இளைய தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் கத்தி. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சமீபத்தில் கத்தி படத்தில் ஒரு குறிப்பிட்ட போர்ஷனில் 90 பிணை கைதிகளை தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அந்த கடத்தல் கும்பலுக்கு இன்னொரு விஜய் தான் தலைவராக இருக்கிறார் என்று செய்தி வெளிவந்து உள்ளது .

ஆனால் இந்த தகவல்பற்றியும் இப் படத்தின் கதை கரு பற்றி தெரிவிக்க பட குழுவினர் மறுத்து விட்டனர்.

இதற்கிடையில் கோலிவுட் வட்டாரத்தில் இப் படத்தின் கதையை பற்றி இப்பொழுதே கிசு கிசு ஆரம்பித்து விட்டார்கள் . இப்படத்தில் விஜய், சமந்தா ,நில் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப் படத்துக்கு அனிருத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கம்போஸ் செய்யப்பட்டன. படகுழுவினர் கத்தி படத்தின் பாஸ்ட் லுக்கை இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!


காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!

 இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க காபியும் உதவியாக உள்ளது. என்ன ஆச்சரியமாக உள்ளதா?

ஆம், குடிக்கும் காபியைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். இப்போது அந்த காபியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

 * குளிக்கும் அறையில் துர்நாற்றம் வருகிறதா? அப்படியெனில், காபி பொடியை ஒரு துணியில் போட்டு கட்டி, குளியலறையில் தொங்கவிட்டால், குளியலறையில் வரும் துர்நாற்றமானது நீங்கிவிடும்.

* வீட்டில் எறும்புகள் இருந்தால், அதனை போக்குவதற்கு எறும்புள்ள இடத்தில் காபி பொடியை தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

* பாத்திரங்களில் இருந்து வரும் முட்டை நாற்றத்தை போக்குவதற்கு, காபி பொடியை பயன்படுத்தி கழுவினால், பாத்திரத்தில் இருந்து வரும் நாற்றத்தை போக்கலாம்.

* செல்லப் பிராணிகளின் சிறுநீரால் வரும் கெட்ட நாற்றத்தைப் போக்குவதற்கு, வாணலியில் காபி பொடியை போட்டு, 2-3 நிமிடம் வறுத்து, நாற்றம் வரும் அறைக்கு எடுத்துச் சென்று வைத்தால், காபி தூளின் நறுமணத்தில், துர்நாற்றம் நீங்கிவிடும்.

* தோட்டத்தில் நல்ல வளமான மண்ணைப் பெறுவதற்கு, தோட்டத்தில் சிறிது காபி பொடியைத் தூவினால், மண் சத்து நிறைந்தாக இருக்கும். ஏனெனில் காபி தூளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

* நல்ல நறுமணமிக்க காபியை காலையில் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வினைப் போக்கலாம். எப்படியெனில், காபியின் நறுமணத்திற்கு, மனதை புத்துணர்ச்சி அடைய வைக்கும் சக்தி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாசை அடுத்த மணிரத்னம் என்று பாராட்டிய பிரபல நடிகர்!

தமிழில் துப்பாக்கி படம் வெளிவருவதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாசை சின்ன மணிரத்னம் என்று விஜய் குறிப்பிட்டுருந்தார் .

தற்போது அதே போல் பாலிவுட் நடிகரும் மற்றும் சோனக்க்ஷி சின்ஹா தந்தையுமான சத்ருகன் ஏ.ஆர்.முருகதாசை உன்னதமான மேதை என்றும் அடுத்த மணிரத்னம் என்றும் சொல்லும் தகுதி கண்டிப்பாக இவரிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்

சத்ருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் " துப்பாக்கி தழுவலான ஹாலிடே படத்தை பார்த்தேன் கண்டிப்பாக ஏ.ஆர்.முருகதாசை உன்னதமான மேதை மற்றும் அடுத்த மணிரத்னமாக திகழ்வார் என்றார்

படத்தை பற்றி கூறுகையில் ஹாலிடே ஒரு இந்தியன் ஆர்மி பற்றிய கதை, படம் மிக பிரமாதமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இப்படத்துக்கு வரிசலுகை கொடுத்தது சரி என்றார்

அக்ஷய் குமார் மற்றும் சோனக்க்ஷி நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக "பிரிடி தருவாள" கதாபாத்திரம் பேசப்படும் என்று தெரிவித்தார்

கம்ப்யூட்டர் பராமரிப்பு..!


நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் “”தினமும் என்னைக் கவனி” என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.

4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.

5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.

6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.http://www.revouninstaller.com/என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.

7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.

8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர் களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம். என் கம்ப்யூட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்திடாமல் நன்றாக இயங்கிக் கொண்டு தான் உள்ளது.

கஷ்டத்தை தூக்கி போடு - குட்டிக்கதைகள்!


ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன்.

அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி ஒன்று இருந்தது,அது தன் முன் காலால் தூக்கி வைத்து பார்த்தது பின்பு பின் காலால் நீட்டி எக்கி பார்த்தது அந்த எறும்பால் முடியவில்லை.

இறகை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது.பிறகு அந்த இறகை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி இடைவெளி மீது பாலம் மாதிரி வைத்து விட்டு இந்த வழியாக ஏறி அந்த வழியாக இறங்கி விட்டது.மீண்டும் அந்த இறகை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டது.

நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன்.ஒரு சிறிய எறும்பு எவ்வளவு லாவகமாக இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் சென்றது, ஆனால் ஆறறிவு படைத்த நாம் சிறிய இடர்வந்தாலும் துவண்டு போகிறோம்.

அந்த எறும்பு கடைசியாக அதன் வீட்டை அடைந்தது.அந்த எறும்பின் வீட்டு நுழைவுவாயில் ஒரு சிறிய ஓட்டை மட்டுமே இருந்தது.அது அந்த இறகை உள்ளே எடுத்து செல்ல எவ்வளவோ முயற்ச்சி செய்து பார்த்தது ஆனால் எறும்பால் முடியவில்லை.ஒரு கட்டத்தில் அது அந்த இறகை தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டது.

எறும்பு அந்த இறகை அங்கு இருந்து எடுத்து வரும்போது அது சுமையாக தெரியவில்லை எப்போது அது தனக்கு பயன்படாது என்று தெரிந்ததோ அப்போதே அதை தூக்கி போட்டுவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டது.

நம்ம வாழ்க்கையும் இப்படித்தான்.பணம் சம்பாதிக்க கஷ்டப்படுறோம்,வேலை செய்ய கஷ்டப்படுறோம்,குடும்ப பாரத்தை சுமக்க கஷ்டப்படுறோம்.அந்த இறகு மாதிரி தான் நம்ம கஷ்டமும்.கஷ்டத்தை தூக்கி போட்டுட்டு நாம பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துகிட்டே போகணும்.

சுருளிமலை அதிசயம்!


உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.


மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.


பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில்தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும்.இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம் :-

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற
 தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.


மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.


ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டி ருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது.இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.


ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.


அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெ டுக்கவும்,சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து,அன்ன தானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.


அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம்,மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது.! படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும்.எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.


உள்ளே மிகப்பெரிய அரங்கம்.ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம்.திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும்,நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.


மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும்,அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.


சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.


மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

செப்டம்பரில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’!

 ஜெயம்கொண்டான்’ மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஆர்.கண்ணன். மணிரத்னத்தின் ஆசிபெற்ற இவர் ‘சேட்டை’ படத்திற்கு பிறகு இயக்கி வரும் படம் ‘

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. விமல், ப்ரியாஆனந்த், சூரி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்யும் போது ஏற்படும் நட்பையும், அதன் பிறகு எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்களையும் மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் நாயகி விசாகா சிங் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது..

Wednesday, June 4, 2014

குட்டீஸ்களுக்கு உணவு ஊட்டும் போது பொறுமை முக்கியம்!

 
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

ருசியான உணவு

குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.

சரியான அளவு

குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஊட்டச்சத்து உணவுகள்

புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.

பொறுமை அவசியம்

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.

ஸ்பூன் எச்சரிக்கை

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முன் உதாரணம்

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

சிம்பு-செல்வராகவன் படம் டிராப் ஆனதற்கு இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் இணையமாட்டார்கள் என்று சொன்னவர்கள் ஒரு படத்தில் இணைந்தார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஒரு படம் நடிப்பதாக கூறிவந்த நிலையில் ’அட இதெல்லாம் நடக்காதுபா’ என்று அனைவரும் சொன்னது போல் சேர்வதற்கு முன்னாடியே இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த படத்தை தயாரிக்க முன்வந்தவர் வாயை மூடி பேசவும் படத்தினை எடுத்தவர்தான். இருவரின் நடவடிக்கைகள் தெரிந்தும் மகராசன் எப்படிதான் அந்த படத்தை தயாரிக்க முன்வந்தாரோ என எல்லோருமே ஆச்சரியப்பட்டனர்.

படபூஜையும் இனிதே ஆரம்பிக்க முதல் நாள் படப்பிடிப்பிற்கு செல்வராகவன் காலையிலேயே ஆஜரானாராம்.ஆனால் சிம்பு மாலை வரை வரவேயில்லையாம். இதனால் முதல் நாள் படப்பிடிப்பு கேன்சல். அடுத்த் நாளில் சிம்பு காலையில் வந்தாராம். ஆனால் செல்வராகவன் எஸ்கேப். முன்றாவது நாள் இருவரும் வந்தார்களாம். நம் பணத்தில் இவர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார்களே என்று நினைத்த தயாரிப்பாளர் இதற்கு மேலும் இது தொடர்ந்தால் நாம காலியாகிவிடுவோம் என நினைத்தாரோ என்னவோ இருவரையும் அழைத்து, ஐயா உங்க ரெண்டு பேரையும் பத்தி நிறைய கேள்விபட்டிருக்கிறேன்.. இப்பதான் நேருலையே பார்த்தேன். இதற்கு மேல் படப்பிடிப்பை தொடர்ந்தால் என் நிலைமையை ந்யாஆலும் காப்பாற்ற முடியாது.எனவே கிளம்புங்க என்றாராம்.

வாயை மூடி பேசவும்னு சொன்னவரையே இப்படி வாய் பேசவச்சிட்டாங்களே!!

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…!!


திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.

இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற "துர்கானா ஏரி" கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.

மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.

இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று "என்வைட்டினெட்". இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் "திரும்ப வராது" என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.

கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர்.

ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.

இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்' என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.

பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை

'கங்கா'(முனி-3) - சன் பிக்சர்ஸ் கையில்!!

முனி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட 'காஞ்சனாவும்' லாரன்ஸ்க்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது.

இப்போது முனி படத்தின் மூன்றாம் பகுதியை 'கங்கா' என்னும் பெயரில் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக டாப்ஸீ நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முடியும் தருவாயில் உள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்படத்தை தமிழிலும், தெலுங்கீலும் ஒரே பெயரில் வெளியிட உள்ளனர்.

தமன் இசையமைப்பில் விரைவில் பாடல்கள் மிரட்ட வரும் என எதிர்பார்க்கலாம்.

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும்.

ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்….

கமலுக்கு அடுத்த பிரச்சனை ஆரம்பம்!

உலக நாயகன் படம் வருகிறது என்றால் கூடவே பிரச்சனைகளும் வந்து விடுகிறது. இவர் நடிக்கும் எல்லா படத்திற்கும் ஏதோ ஒரு வகையில் சில இடையூருக்கள் வந்து கொண்டே தான் இருக்கும். இதில் விஸ்வரூபம் சற்று உச்சத்தை தொட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது விஸ்வரூபம் 2 முடிவடையும் தருவாயில் இருக்க, இவர் அடுத்து நடித்து கொண்டிருக்கும் உத்தம வில்லனுக்கும் பிரச்சனை ஆரம்பித்து விட்டது, 'விஸ்வரூபம்' படத்தை கமல்ஹாசன் திரையிட்ட போது அவருக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது. அட்வான்ஸ் கொடுத்தவர்களை விட்டுவிட்டு வேறு சிலருக்கு அவர் படத்தை திரையிட அனுமதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்கள் இப்போதே பிரச்சனைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.

உத்தம வில்லன் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே இவர்கள் வெளியிட்ட இனம் படத்திற்கே பல எதிர்ப்புகள் கிளம்பியது , தற்போது உத்தம வில்லனுக்கும் ஏதோ ஒரு வகையில் நெருக்கடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாயகனுக்கு மட்டும் எங்க இருந்து தான் கிளம்புரானுங்களோ...’

நடிகராகிறார் தோட்டா தரணி!

இந்திய சினிமாவின் பிரபலமான கலை இயக்குனர் தோட்டா தரணி. இவர் சிவாஜி, தசவதாரம், வரலாறு, சச்சின் போன்ற பல படத்திற்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தற்போது இவர் நடிகர் அவதாரமும் எடுக்கவுள்ளார். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்த கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கியவர் ஆர்.எஸ்.பிரசன்னா, இவர் சுவாமி சின்மயானந்தாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே. ஆங்கிலத்தில் தாயரிக்கப்படும் இப்படத்திற்கு QUEST என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

இதில் சுவாமி சின்மயானந்தாவாக நடிக்க போவது தோட்டா தரணி தானாம், இப்படம் சுமார் 90 நிமிடம் ஓடக்கூடியவையாம்.

மூக்கில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க சில டிப்ஸ்...


பொதுவாக அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது நடப்பதில்லை. அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, இது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். அதுவும் அவர்களுக்கு மூக்கில் தான் அதிகப்படியான எண்ணெய் பசையானது இருக்கும். இதனால் மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவை அதிகம் தங்கி, அந்த இடத்தையே ஒருவித தோற்றத்தில் வெளிப்படுத்தும்.


இருப்பினும் சரியான சரும பராமரிப்புக்களை மேற்கொண்டால், அழகாக வைத்துக் கொள்ள முடியும். இங்கு அப்படி மூக்கில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றி மூக்கை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்

* மூக்கில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் தினமும் 2 முறை கிளின்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* தினமும் முடிந்த வரையில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் அழுக்குகள் நீண்ட நேரம் படிவதைத் தடுக்கலாம். குறிப்பாக அப்படி கழுவியப் பின்னர், சுத்தமான துணி அல்லது டிஸ்யூ பேப்பர் மூலம் துடைக்க வேண்டும்.

* உடனே சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமானால், எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து மூக்கைத் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் 2-3 முறை செய்ய வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசையில் இருந்து விடுபடலாம்.

* வீட்டில் தேன் மற்றும் பாதாம் இருந்தால், அவற்றை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* உப்பு அல்லது சர்க்கரை கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி, எண்ணெய் பசையினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

* ஆப்பிள் சீடர் வினிகர் வீட்டில் இருந்தால், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த கலவைக் கொண்டு முகத்தை துடைத்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளையும் வேரோடு வெளியேற்றலாம். இதனால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம்.

* மூக்கில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதால் தினமும் 2 முறை கிளின்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

* தினமும் முடிந்த வரையில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் அழுக்குகள் நீண்ட நேரம் படிவதைத் தடுக்கலாம். குறிப்பாக அப்படி கழுவியப் பின்னர், சுத்தமான துணி அல்லது டிஸ்யூ பேப்பர் மூலம் துடைக்க வேண்டும்.

* உடனே சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்க வேண்டுமானால், எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து மூக்கைத் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் 2-3 முறை செய்ய வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசையில் இருந்து விடுபடலாம்.

* வீட்டில் தேன் மற்றும் பாதாம் இருந்தால், அவற்றை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

* உப்பு அல்லது சர்க்கரை கொண்டு சருமத்தை ஸ்கரப் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் நீக்கி, எண்ணெய் பசையினால் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

* ஆப்பிள் சீடர் வினிகர் வீட்டில் இருந்தால், அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அந்த கலவைக் கொண்டு முகத்தை துடைத்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளையும் வேரோடு வெளியேற்றலாம். இதனால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம்.

உங்கள் பேஸ்புக் Account- ஐ எப்படி பாதுகாப்பாக வைப்பது?


இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்கும் அக்கவுன்ட் எது என்றால் அது பேஸ்புக் தான். சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். 


மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.

பேஸ்புக் பிளேசஸ் இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

 பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.

யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lockஎன்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ளCustomize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?

பேஸ்புக் தளத்தில் விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும்.

பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.

அப்ளிகேஷன்களுக்குத் தடா:

பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applicationsஎன்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.

அணுகுவதற்குத் தடை:

 உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.

இறுதி நடவடிக்கை:

பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.

இடை மெலிய எளிய உடற்பயிற்சி!

இடை மெலிய எளிய உடற்பயிற்சி
இருபது வயதிலேயே இடை பெருத்து நடை தளர்ந்து போகின்றனர் இன்றைய இளம் பெண்கள். ஃபிட்டான தோற்றம் என்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. அதிலும் திருமணம், குழந்தைப்பேறுக்கு பிறகு, தங்களின் உடல் உருமாற்றத்தை பார்த்து பல  பெண்கள் பதட்டத்துக்கு ஆளாகின்றனர்.

மெல்லி இடைக்கான சிறப்பு பயிற்சி இதோ... முதலில் தரையில் குப்புறப்படுக்கவும். இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிய நிலையில் கால்களை லேசாக அகட்டவும். பிறகு மெதுவாக மூச்சை உள் இழுத்தபடி உடம்பை மேலே உயர்த்தவும். 


முகத்தை இடது பக்கம் திருப்பி, வலது கால் பாதத்தை பார்க்கவும். பத்து எண்ணும் வரையில் அதே நிலையில் இருக்கவும். மூச்சை வெளியே விட்டபடி திரும்பவும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே போல் மூசசை உள் இழுத்தபடி வலது பக்கம் திரும்பி இடது கால் பாதத்தை பார்க்கவும். 


பத்து எண்ணியவுடன் மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதுபோல் தொடர்ந்து 10 முறை செய்யவும்.

பலன்கள்:

முதுகு வலி நீங்கும். முதுகுதண்டு வலுப்பெறும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும். மலச்சிக்கல் குணமாகும். வயிற்று பகுதியில் சதை நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும். தைராய்டு பிரச்சனைகளுக்கு இந்த பயிற்சி ஏற்றது.

விஜய் பிறந்த நாள் பரிசு!

விஜய் ரசிகர்களுக்கு இந்த வருடம் திருவிழா தான். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி நடிக்கும் கத்தி திரைப்படம் தீபாவளிக்கு வரும் என தயாரிப்புக்குழு தெரிவித்திருந்தது.

தற்போது முருகதாஸ் துப்பாக்கி ஹிந்தி ரீமேக்கான ஹாலிடே படத்தில் பிஸியாக உள்ளதால் கத்தி படத்தின் படப்பிடிப்பு 10 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜய் பிறந்தநாள் அன்று படத்தின் டீசர் வரும் என் படக்குழு அறிவித்துள்ளது, இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் அன்றைய நாளுக்காக தான் வெயிட்டிங்.

வசூலை வாரிக் குவித்த 'யாமிருக்க பயமே'

 'யாமிருக்க பயமே' U சான்றிதழோடு வெளியாகி இருந்தால் இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருக்கும் என்று கூறுகிறார்கள் தமிழ் திரையுலகில்.

கிருஷ்ணா, கருணாகரன், ஒவியா, ரூபா மஞ்சரி உள்ளிட்ட பலர் நடிக்க, டி.கே இயக்கத்தில் வெளியான படம் 'யாமிருக்க பயமே'. எல்ரெட் குமார் தயாரிப்பில் மே 9ம் தேதி இப்படம் வெளியானது.

படத்திற்கு U/A சான்றிதழ் அளித்தார்கள் தணிக்கை அதிகாரிகள். ஒரு வேளை படத்திற்கு U சான்றிதழ் அளித்திருந்தால் இந்தாண்டின் மாபெரும் வசூலை வாரிக் குவித்த படமாக 'யாமிருக்க பயமே' அமைந்திருக்கும் என்றார்கள்.

எப்படி என்று விசாரித்ததில், "'யாமிருக்க பயமே' படத்தினை 3 கோடியில் தயாரித்து, 2 கோடி ரூபாயை விளம்பரத்திற்கு செலவு செய்து வெளியிட்டு இருக்கிறார் எல்ரெட் குமார். முதலில் இப்படத்தினை வாங்குவதற்கு எந்த ஒரு விநியோகஸ்தரும் முன்வரவில்லை.

அதனால், எல்ரெட் குமார் சொந்தமாக வெளியிட முடிவு செய்து, தனக்கு தெரிந்த விநியோகஸ்தர்கள் மூலமாக கமிஷன் அடிப்படையில் வெளியிட்டார். படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. பலர் படத்தினை இரண்டாவது முறை, மூன்றாவது முறை திரையரங்கு சென்று குடும்பத்தோடு கண்டு களித்திருக்கிறார்கள். வாரத்திற்கும் வாரம் திரையரங்கம் அதிமாகியிருக்கிறதே தவிர யாருமே திரையரங்கில் இருந்து படத்தினை தூக்கவில்லை.

திரையரங்கில் இருந்து மட்டும் தயாரிப்பாளருக்கு 8 கோடிக்கும் அதிகமாக மொத்த வசூலில் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அரசாங்கத்திற்கு வரி செலுத்திய பின்னும் 8 கோடி கிடைக்க இருக்கிறது. இப்படத்தினை Zee தமிழ் நிறுவனம் 3 கோடிக்கு வாங்கியிருக்கிறது. வெளிநாட்டு உரிமை, இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ரீமேக் உரிமைகள் என தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமன்றி திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே லாபம் கொடுத்திருக்கிறது. "இப்படம் மட்டும் U சான்றிதழோடு வெளியாகி இருக்குமேயானால் கண்டிப்பாக இன்னும் மிக அதிக லாபம் கிடைத்திருக்கும்." என்றார்கள்.

கோச்சடையானுக்குப் பின்: குவியும் படங்கள்..!



'கோச்சடையான்' வெளியான பிறகு வெளியிடலாம் என்று இருந்த படங்கள், தற்போது தொடர்ச்சியாக ஜுன் மாதத்தில் வெளியாக இருக்கின்றன.

மே 9ம் தேதி வெளியாக இருந்த 'கோச்சடையான்' திரைப்படம், 23ம் தேதி வெளியிடப்படும் என்று இறுதி நேரத்தில் அறிவித்தார்கள். அந்த நேரத்தில் 'யாமிருக்க பயமே', 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' ஆகிய படங்கள் வெளியாகி வசூலை அள்ளின.

மே 23ம் தேதி 'கோச்சடையான்' வெளியானதைத் தொடர்ந்து, தற்போது பல்வேறு படங்கள் வெளியாக தியேட்டர்கள் கிடைக்காமல் இருக்கின்றன. அந்தளவிற்கு படங்களின் வரிசை இருக்கிறது.

ஜுன் 6ம் தேதி விமல் நடிக்கும் 'மஞ்சப்பை', பிரகாஷ்ராஜ் நடித்து, தயாரித்து, இயக்கி இருக்கும் 'உன் சமையலறையில்' ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து பல படங்கள் 13ம் தேதியும், 20ம் தேதியும் வெளியாகும் என்று கூறி வந்தாலும், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியிலும், விநியோகஸ்தர்கள் மத்தியிலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

விவேக் நடிப்பில் 'நான் தான் பாலா', விஜய் சேதுபதி நடிக்கும் 'மெல்லிசை', விஷ்ணு நடிக்கும் 'முண்டாசுப்பட்டி', விக்ரம் பிரபு நடிக்கும் 'அரிமா நம்பி', ஜெயம் ரவி நடிக்கும் 'பூலோகம்', சித்தார்த் நடிக்கும் 'ஜிகர்தண்டா', விஜய் இயக்கத்தில் 'சைவம்', ஜெய் நடிக்கும் 'திருமணம் என்கிற நிக்காஹ்' உள்ளிட்ட பல படங்கள் போட்டியில் இருக்கின்றன.

மொத்தத்தில் ஜுன் மாதம் விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியிலும் கடுமையான போட்டி இருக்க போகிறது என்பது மட்டும் உண்மை.