Thursday, June 5, 2014

ஜெயம் ரவி விட்ட சாபம் பலித்தது...!

தமிழ் நாட்டில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் வைத்து உருவாக்கப்படுள்ள படம் தான் "என்ன சத்தம் இந்த நேரம்". இதில் இயக்குனர் ஜெயம் ராஜா நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் படம்.

இந்த நன்கு குழந்தகளின் அப்பாவாக தான் இயக்குனர் ஜெயம் ராஜா நடித்து இருக்கிறார். இப் படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடை பெற்றது அப்போது பேசிய படத்தின் இயக்குனர் குரு ரமேஷ், ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த நான்கு குழந்தைகளும் ஜூவில் காணாமல் போய் விடுகின்றனர், அப்படி காணாமல் போன குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பது தான் கதையின் கரு என்று கூறினார்.

இயக்குனர் ஜெயம் ராஜா பேசுகையில் , இந்த படத்தோட ஷுட்டிங்குக்கு நடிக்க போகும் போது என் தம்பி ஜெயம் அடிக்கடி சொல்வான்

எங்க எல்லாரையும் படுத்தி வச்சேல்ல. இப்ப போய் பாரு. நடிப்புன்னா என்னன்னு தெரியும்’ என்று. நிஜமாகவே அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது எனக்கு. ஒவ்வொருத்தரையும் ரொம்ப பிழிஞ்சு எடுத்துருக்கோம்னு.

இனிமே ரொம்ப பிழிய கூடாது. ஆனால் நான் ஏன் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று என் வீட்டிலேயே ரொம்ப பேருக்கு ஆச்சர்யம். வேறொன்றுமில்லை நான் நடிக்க ஒப்புக்கொண்டதே அந்த நான்கு குழந்தைகளை பார்த்த உடனே தான் அவர்களுடன் நடிப்பதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

0 comments:

Post a Comment