Thursday, June 5, 2014

இல்லத்தரசிகளுக்கு எளிய டிப்ஸ்…


சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.

* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.

* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.

* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.

* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.

* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.

* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.

* காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.

* தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.

* பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

* வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

* அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

• காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அபானாசனம்! செய்முறை!

அபானாசனம்


செய்முறை :

முதுகு தரையில் படும்படி விரிப்பில் படுக்கவும். கால்களை மடித்து சற்று உயர்த்திய நிலையில் முட்டிகளை உள்ளங்கைகளால் பிடித்துக்கொள்ளவும். இருமுட்டிகளுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும்.

பிறகு, மூச்சை வெளியே விட்டபடி முட்டிகளை மார்புப் பக்கம் கொண்டு செல்லவும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடியே பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்யவும்.

பலன்கள்: 

வயிறு நன்றாக அமுக்கப்படுவதால் அப்பகுதி மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படும். முதுகு, தோள்பட்டையில் ஆரோக்கியம் பெறும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் குறைந்து, அடிவயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகள் நீங்கும். 

விஜய், விக்ரம் படங்களில் நடிக்கும் சீதா!

விஜய் மில்டன் இயக்கிய 'கோலிசோடா' படத்தில் நடித்தவர் சீதா. இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது.

'கோலிசோடா' படத்தின் மூலம் விமர்சகர்கள், திரைநட்சத்திரங்கள் எனப் பலரிடமிருந்தும் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது விஜய்மில்டன் - விக்ரம் இணைந்துள்ள 'பத்து எண்றதுக்குள்ள' படத்தில் சமந்தாவின் தோழியாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தில் அலுவலகம் செல்லும் பெண்ணின் கேரக்டரில் நடிக்கிறார். இதன் மூலம் விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் இடம் பிடித்துவிட்டார் சீதா.

அமுக்குவான் பேய் - உண்மையா?....


இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய்.


உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந்திகளின் கூட்டிற்குள், எறும்புகளின் குறிப்பாக சிவப்பு எறும்புகளின் புற்றில், கரப்பான் பூச்சிகளின் பொந்துகளில் தான் வாழும். இது உலவும் நேரம் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு சற்று முன்பாக மூன்று மணியில் இருந்து நாலு மணி வரை ஆனால் சில சமயம் அவை பகலில் கூட வரும். என்றெல்லாம் சுவாரஸ்யமாக த்ரில்லாக கதை எழுத ஆசைதான் ஆனால் அது உண்மை இல்லையே, என்ன செய்வது? நம்மூரில் அமுக்குவான் பேய் என்று சொல்லப்படுவது உண்மையில் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு.


சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும். அதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது. துயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு. இதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.


இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும். இது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல. தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும். சில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் (மந்திரவாதிகளிடம் அல்ல) சென்றே ஆகவேண்டும். துயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


 ஆனால், இன்றும் பெரும் அளவில் மக்கள் இது ஏதோ பில்லி சூனியத்தின் வேலை என்று நினைத்துக் கொண்டு மந்திரவாதிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரி மூட நம்பிக்கைகளில் இருந்து மக்கள் விடுபடும் காலம் என்றுதான் வருமோ?

அஜித்தை இயக்கும் முருகதாஸ்?

'தீனா' படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ் என்று சொல்லப்படுகிறது.

முருகதாஸின் முதல் படம் 'தீனா'. அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இப்படத்தில் நடித்தனர். அஜித்தை தல என்று அன்போடு அழைத்தது 'தீனா' படத்தில்தான். இன்று வரைக்கும் அஜித் தல என்று அழைக்கப்படுகிறார்.

'தீனா' படத்தைத் தொடர்ந்து 'ரமணா', 'கஜினி', 'ஏழாம் அறிவு', 'துப்பாக்கி' படங்களை இயக்கிய முருகதாஸ் இப்போது 'கத்தி' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

'கத்தி' படம் முடிந்த பிறகு மீண்டும் அஜித்தை இயக்க இருக்கிறாராம். இதுவரை சூர்யாவுக்கும், விஜய்க்கும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் முருகதாஸ்.

அந்த வகையில் அஜித்துக்கும் இரண்டாவது முறையாக படம் இயக்க உள்ளார். இன்னும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல்கள் தெரியவரும்.

பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!!

கடந்த 16 ஆம் நூற்றாண்டு வரை எல்லோரும் சூரியனும் கிரகங்களும் பூமியை சுற்றி வருகிறது என எண்ணியிருந்தனர். கடந்த 19 ஆம் நூற்றாண்டு வரை காலரா மற்றும் பிளேக் போன்ற தொற்று நோய்கள் அழுகும் பொருட்களில் உள்ள துகள்கள் காற்றில் கலப்பதால் பரவி வருகின்றன என்று எண்ணியிருந்தார்கள். கடந்த 20 ஆம் நூற்றாண்டு வரை அறுவை சிகிச்சை நிபுணர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுத்த இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்களும் வெளியேறலாம் என்று இதை செய்து வந்தனர்.

இத்தகைய தகவல்களை உண்மை என்று நம்மை எண்ண வைத்த முன்னோர்கள் இப்போதும் உலகம் உருண்டையாக உள்ளதென்றும், ஐஸ் கிரீம்கள் நம்மை பருமனாக்கும் என்ற தவறான கருத்துக்களை நம்ப வைக்கின்றனர்.

பெருமளவில் வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இந்த காலத்தில் இத்தகைய தவறான நம்பிக்கைகளையும் நாம் கைவிட மறுக்கிறோம். இத்தகைய தவறான கணிப்புகளையும், எண்ணங்களையும் இக்கட்டுரையில் காண்போம். அதிலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் முதலில் சரி என்று எண்ணிய பின் மேற்கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியால் இது தவறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரி, இப்போது அப்படி உண்மை என்று நினைக்கும் சில பொய்யான விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.
    
குளிர்காலத்தில் ஈரமான தலையுடன் வெளியே சென்றால் சளி பிடிக்கும்


தலையில் தொப்பி போடு அல்லது உனக்கு மிகுந்த சளி பிடிக்கும்' இப்படி எல்லா அம்மாகளும் குளிர்காலம் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இது சகஜம் தான். இது சம்மந்தமான பல கணிப்புக்களும் ஆராய்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. இந்த அடிப்படையில் குளிர்காலத்தில் வெளியே செல்பவர்களை விட குளிர்காலத்தை அனுபவிக்காதவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது நிருபணமான உண்மை. இதில் ஈரமான தலை அல்லது ஈரமில்லாத தலை என்றெல்லாம் எந்தவித வித்தியாசமும் கிடையாது.

   
சர்க்கரை குழந்தைகளை சுட்டியாக்கும்



அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேசனின் பத்திரிக்கை குழந்தைகளையும் சர்க்கரையையும் வைத்து 23 ஆராய்ச்சி பாடங்களை வெளியிட்டது. அதன் முடிவு சர்க்கரை குழந்தையின் நடத்தையை பாதிப்பதில்லை. ஆனால் இது உண்மையானதாக நம்மில் திணிக்கப்பட்டுள்ளது.

 
உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்கும்


98 சதவிகித உடம்பில் உள்ள சூடு தலை வழியாக இறங்குகின்றது எனவும், ஆதலால் தான் குளிர்காலத்தில தொப்பி அணிய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற இடங்களிலும் கூறுவது உங்கள் உடம்பில் இருந்து வெளியேரும் சூட்டின் அளவு பெரும்பாலும் பரப்பளவை பொறுத்ததே - தொப்பி அணியாத தலையை விட குளிர் நாளில் விரிவடைந்த கால்கள் மூலமோ அல்லது கைகள் மூலமோ தான் அதிக சூடு வெளியேறுகிறது.
       
சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படும்


இது நியாயமானதாக தோன்றினாலும் உண்மையல்ல. சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படாது. மேலும் எந்த சான்றும் இதை நிரூபிக்கவும் இல்லை மற்றும் சிறிய ஆராய்ச்சிகள் இவற்றில் நடத்தப்படும் போது, சுடக்கு உடைக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் சுடக்கு உடைக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் மூட்டு வீக்கம் ஏற்படுவதில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளிவந்தது. மருத்துவத்துறையில் சுடக்கு உடைப்பதால் எழும்பை சுற்றியுள்ள தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும் அல்லது தசை நார்கள் இடப்பெயர்வுக்கும் தான் இணைப்பு இருப்பதே தவிர சுடக்கு உடைப்பதால் மூட்டு வீக்கம் ஏற்படுவதற்கான இணைப்பு இல்லை.
   
நெப்போலியன் குள்ளமானவர்



நெப்போலியின் பிரெஞ்ச் நாட்டு அரசர். அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் பல வரலாற்று வல்லுனர்கள் தற்போது அவரது கூடுதல் உயரத்தை தந்துள்ளனர். அவர் பிரெஞ்ச் யூனிட்ஸ் பயன்படுத்தி அவரது உயரம் 5 அடி 2 அங்குலம் என்று கணக்கிடபட்டுள்ளது. இந்த பிரஞ்ச் யூனிட்ஸ்சை இம்பீரியல் யூனிட்ஸ்சாக மாற்றப்பட்டால் அவரது உயரம் 5 அடி 7 அங்குலம் என்று மாறுகிறது. இந்த உயர அளவு பொதுவான பிரெஞ்ச் நாட்டு மனிதரின் சராசரி உயரத்தை விட அதிகமாவே உள்ளது.
   
உடற்பயிற்சி செய்வதற்கு முன் ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும்

வாம் அப்' அல்லது உடற்பயிற்சிக்கு முன் கால், கைகள் மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் ஸ்ட்ரெட்ச் செய்த பின் பயிற்சியை ஆரம்பித்தால் உங்களது செயல் திறன் அதிகரிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதை மறுக்கின்றனர். ஸ்ட்ரெட்ச் செய்து பின்னர் ஓடினால் அது 5 சதவிகிதம் குறைச்சலான இயக்கு திறன் காணப்படும். அதே சமயத்தில் இத்தாலிய வல்லுனர்களின் கருத்துப்படி ஸ்ட்ரெட்ச் செய்வதால் செயல் திறன் குறைகிறது. மேலும் இந்த கூற்று சான்றுகள் மூலம் நிரூபிக்கப்படவில்லை.
     
முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்திற்கு கேடு விளைவிக்கும்


உணவில் சேர்க்கப்படும் கொழுப்பு வகைகளும் அது ஏற்படுத்தும் பாதிப்புக்களும் மற்றும் அதற்கான உணவு கட்டுப்பாட்டு முறைகளும், இரத்த குழாய் சார்ந்த நோயை உண்டாக்குபவை பற்றிய ஆராய்ச்சியில் 1960-ல் சிறிதளவு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உருவாகியுள்ளது. ஆனால் இதை தவறு என்று உணர்த்த மிருகங்களிடையே தேவையை விட அதிக அளவு கொழுப்பு சத்தை சேர்த்த போதும், அது உடலில் கொழுப்பை அதிகப்படுத்தவில்லை. ஆனால் சாச்சுரேட்டட் கொழுப்பை (இறைச்சிகளில் உள்ள கொழுப்புக்கள்) உட்கொள்ளும் போது தான் அதிகரிக்கிறது. ஆகையால் முட்டையில் உள்ள கொழுப்பு இதயத்தை பாதிக்காது.

நாயின் ஏழு வயது ஒரு மனித ஆண்டு


மூன்று வயது நிரம்பிய நாய்க்கு மனிதர்களின் வாழ்நாளில் 21 ஆண்டுகள் என்பது சரியா? வல்லுநர்கள் இதை தவறு என்கிறார்கள். ஒருமித்த கருத்து என்னவென்றால் மனிதர்களை விட நாய்களின் முதிர்ச்சி வேகமாக இருக்கும். 21 ஆண்டு முதிர்ச்சியை இரண்டு ஆண்டுகளில் அடைந்து பின்னர் மெதுவாக குறைந்து ஒரு வருடத்திற்கு நான்கு மனித ஆண்டாக மாறும். டாக் விஸ்பரர் சீசர் மில்லன் நாயின் மனித ஆண்டை பின் வருமாறு கணக்கிட வேண்டும் என்கிறார்: நாயின் வயதில் இரண்டை கழித்து அதை நான்கால் பெருக்கி அதோடு 21-ஐ கூட்ட வேண்டும். என்ன கணக்கு புரிந்ததா? 

ஜார்ஜ் வாஷிங்டனுக்கு மரத்தாலான பற்கள் இருந்தது


20 வயதிலிருந்தே பற்களை இழக்க நேர்ந்த முதல் அமெரிக்க ஜனாதிபதிக்கு மரத்தால் ஆன பற்கள் இருந்தது என்பது தவறான கூற்று. அவருக்கு பற்கள் விழுந்தது உண்மை தான். அவரிடம் நான்கு பொய்யான பற்கள் இருந்தது அவை தங்கம், நீர்யானை தந்தம், ஈயம், மனித மற்றும் மிருகங்களின் பற்களால் ஆனவை. அக்காலத்தில் கழுதை மற்றும் குதிரையின் பற்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்த பற்களை ஒன்றாக பிடித்துக் கொள்ள பற்களுக்கிடையே போல்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல் திறப்பதற்கு உதவியாக ஸ்பிரிங்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகை முயற்சி அவருக்கு பிடித்த உணவான மேரி வாஷிங்டனின் சுவையான ஜிஞ்சர் பிரட் ஆகியவற்றை உண்ண முடிந்தது.

அற்புதமான இணையதளங்கள்! உங்களுக்கு இதோ!

தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது.

இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது.

ஒன்லைன் மூலம் பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

ஒரு சில விடயங்களை நீங்கள் ஒன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை.

* நீங்கள் போட்டோகிராபியில் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களா அதை பற்றி அடிப்படையில் இருந்து தெளிவாக கற்றுக்கொள்ள ஆசை படுகிறீர்களா www.photo.net என்ற இணையதளத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

போட்டோகிராபியில் இன்னும் பல புதுமைகளை தெரிந்துக்கொள்ள www.deepreview.com மற்றும் photography tutorials போன்றவைகளை பயன்படுத்தலாம்.

* நீங்கள் கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை பற்றி தெரிந்துக்கொள்ள விரும்பினால் www.codecademy.com என்ற இணையதளம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம்.

* எதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்ள விரும்புவர்கள் www.opencultre.com இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* சமையல் செய்வதில் ஆர்வம் உள்ளவர்கள் www.simplyrecipes.com மூலம் சமையல் செய்வதற்க்கு டிப்ஸ்களை பெறலாம்.

* ஓவியம் எப்படி வரைவது, வண்ணங்களை எப்படி தீட்டுவது போன்றவற்றை தெரிந்துக்கொள்ள www.artyfactory.com மற்றும் www.instructables.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்தலாம்.

* உங்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கலையையும் நீங்கள் ஆன்லைன் மூலம் இலவசமாக கற்றுக்கொள்ளலாம். அதற்க்கு நீங்கள் www.lifehacker.com இணையதளத்தை பயன்படுத்தலாம்.

* நீங்கள் நடனத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள் என்றால் www.dancetothis.com மூலம் அதை கற்றுக்கொள்ளலாம்.

விஸ்வரூபம் 2 லேட் ரகசியம்..?

க‌மல் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படத்துக்குப் பிறகுதான் வெளியாகும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு பல பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது கமலின் விஸ்வரூபம். அந்தப் படம் நல்ல வசூலையும் பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து, உடனடியாக விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்தார் கமல். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்ததது.

கடந்த ஜனவரியிலேயே படம் வெளியாகிவிடும் என்று கூறப்பட்ட நிலையில், 10 சதவீத படப்பிடிப்பு முடியாத நிலையில், கமல் தனது அடுத்தடுத்த படங்களுக்கு தேதி கொடுத்து நடிக்கப் போய்விட்டார். இப்போது உத்தம வில்லனில் நடிக்கும் கமல், அது முடிந்ததுமே, த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்க கால்ஷீட் தந்திருக்கிறார். உத்தம வில்லன் செப்டம்பர் 10- ம் தேதி நிச்சய ரிலீஸ் என தயாரிப்பாளர் லிங்குசாமி கூறியுள்ளார். எனவே இந்தப் படத்துக்குப் பிறகுதான் விஸ்வரூபம் 2 வெளியாக வேண்டும். விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் நிதி நெருக்கியில் சிக்கியிருப்பதாலேயே இந்த நிலை என்கிறார்கள் ஆஸ்கர் பிலிம்ஸ் வட்டாரத்தில்.

ரஜினியின் லிங்கா ரிலீஸ் தேதி..!

கே.எஸ். ரவிகுமார் இயக்கும் 'லிங்கா' படத்தை தீபாவலியை ஒட்டி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

ரஜினிகாந்த் இரட்டை  வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் 'லிங்கா'. இதில்  சோனாக்ஷி சின்ஹா,  அனுஷ்கா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

 நயன்தாரா ஒரு பாடலுக்கு ரஜினியுடன் டான்ஸ் ஆடுகிறார். சந்தானம் காமெடி ரோலில் நடிக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், விஜயகுமார், ராதாரவி ஆகியோர் இப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.

ரஜினியுடன் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடித்திருக்கிறார். 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு விருவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால், தீபாவளிக்கு படத்தை வெளியிடலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.

விஜய் நடிக்கும் 'கத்தி', விஷால் நடிக்கும் 'பூஜை' , அஜித்- கௌதம் மேனன் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஞ்சான்’ சூர்யாவின் மாஸ் ‘ஓபனிங்’ சாங்!

படப்பிடிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படம் நாளுக்கு நாள் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்றிக் கொண்டே போகிறது. ஒருபுறம் டப்பிங் வேலைகள் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்க மற்றொ

எந்தத் தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேருதான்!
மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான்!
இங்க அப்பப்ப அங்கங்க தீப்பத்திக்குமே
ஓர் ஆபத்தில் அவன் பேரு காப்பாத்துமே
அந்தேரி புலி பேரச் சொன்னா அடி நெஞ்சிலே
பேங் பேங் பேங்!!!
ராஜு பாய் உன்ன கண்ணால பாத்தாலே
பேங் பேங் பேங்!!!
ராஜு பாய் வந்து முன்னால நின்னா
பேங் பேங் பேங்!!!

இந்தப் பாடல் வரிகளை கவனிக்கும்போது ‘அஞ்சான்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யாவில் ஒருவர் மும்பை ‘டான்’ என்பதும், அவரின் பெயர் ‘ராஜு பாய்’ என்பதும் தெரிகிறது. ‘நாயகன்’, ‘பாட்ஷா’ வரிசையில் ‘அஞ்சான்’ படமும் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது சூர்யா ரசிகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் என்.லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் சில தினங்களில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் டீஸரை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பாடல்கள் அனேகமாக ஜூலை மாதம் வெளிவரும்.
ருபுறம் ‘அஞ்சான்’ படத்திற்கான பாடல்களும் சூப்பராக உருவாகிக் கொண்டிருக்கின்றன. யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் சூர்யாவுக்கான ஓபனிங் பாடலை சமீபத்தில் எழுதி முடித்திருக்கிறார் மதன் கார்க்கி. ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற இருக்கும் ‘அஞ்சான்’ சூர்யாவுக்கான ஓபனிங் பாடலின் சிலவரிகள் இங்கே உங்களுக்காக..

ரஜினி மீது தீபிகா திடீர் கோபம்!

ரஜினி மீது தீபிகா கோபமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக தகவல் வெளியிட்டுள்ளது.ரஜினி நடித்துள்ள படம் ‘கோச்சடையான். மோஷன் கேப்சர் முறையில் சவுந்தர்யா ரஜினி இயக்கினார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் பங்கேற்காததற்கு காரணம் அவரது கதாபாத்திரம் படத்தில் சரியாக காட்டப்படாததுதான் என்று பாலிவுட் தகவல்கள் கூறுகின்றன.

இதுபற்றி பாலிவுட் மீடியாவில் வெளிவந்துள்ள பரபரப்பு தகவல்:கோச்சடையான் படத் தில் தனது கதாபாத்திரம் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று தீபிகா எண்ணியதால்தான் அப்படத்தின் புரமோஷன்களுக்கும் வராமல் தவிர்த்துவிட்டார். இதுதொடர்பாக ரஜினி மீதும் சவுந்தர்யா மீதும் அவர் கோபமாக இருக்கிறார். மேலும் சல்மான் கான் நடிக்கும் ‘பிரேம் ரத்தன் தான் பயோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டதுடன் அவர் ஹீரோவாக நடித்த ‘கிக் படத்தில் குத்து பாடலுக்கு ஆட அழைத்தபோதும் மறுத்துவிட்டாராம். இதெல்லாமே சல்மான் மீது அவருக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதான்.

இவ்வளவுக்கு பிறகும் காதலன் ரன்வீர் படங்களில் நடிப்பதில் மட்டும் தீபிகா கவனமாக இருக்கிறார். ‘பஜிராவ் மஸ்தானி‘ என்ற படத்தில் ரன்வீர் ஜோடியாக நடிக்க மட்டும் அவர் கால்ஷீட் தந்திருக்கிறார். மற்ற ஹீரோயின்கள் டாப் ஹீரோக்களுடன் ஒத்துழைக்கும்போக்கை கடைப்பிடிக்கும் தருணத்தில் தீபிகா மட்டும் இப்படி மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் அவரது திரையுலக வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கிறார் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது

பின்னணி பாடுகிறார் சூர்யா!

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக சூர்யா சொந்த குரலில் பாடல் பாடப்போவதாக கூறப்படுகிறது.

இதுபற்றி பட குழுவினர் கூறும்போது,‘இப்படத்துக்காக சூர்யா சொந்த குரலில் பாடும் ஐடியா உள்ளது. ஆனால் இன்னும் அந்த பாடல் ஒலிப்பதிவாகவில்லை என்றனர். இப்படத்தையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். பட ஷூட்டிங்கிற்கான ஆரம்ப கட்ட பணிகளில் வெங்கட் பிரபு மும்முரமாக உள்ளார்

சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்...??


சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன. சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள் ஏற்படுகின்றன


 பொதுவாக முகம், கழுத்து, அக்குள், முதுகு, தொடை போன்ற இடங்களிலேயே இவை அதிகம் தோன்றுவதுண்டு. இருந்தாலும் வேறு முடி உள்ள வேறு இடங்களிலும் தோன்றலாம். காது, மூக்கு போன்ற நொய்த இடங்களில் தோன்றும் கட்டிகள் கடுமையான வேதனையைக் கொடுக்கும்.


எவ்வாறு இருக்கும்?


கட்டி தோன்றும்போது ஆரம்பத்தில் சற்று வலி இருக்கும், தடவினால் வீக்கம் இருப்பதாக உணர்வீர்கள். உற்று நோக்கினால் அவ்விடம் சற்றுச் சிவந்து தடித்திருப்பதாகத் தென்படும். நாட்கள் செல்ல வீக்கம் அதிகரிக்கும். பின்பு கடினமமாக இருந்த வீக்கம் சற்று மெதுமையாகி தொள தொளவென மாறும். உள்ளே கட்டி கரைந்து சீழ் தோன்றியிருக்கும். சீழ் அதிகரிக்க வலியும் அதிகரிக்கும்.


கட்டிகளின் அளவுகளில் வித்தியாசங்கள் இருக்கும். கச்சான் கொட்டை அளவு முதல் டெனிஸ் பந்தளளவு அல்லது அதனிலும் பெரிதாகவும் வீங்கலாம். கட்டி பழுக்க ஆரம்பிக்கும்போது அதன் மத்தியில் சற்று மஞ்சள் நிறமாக மாற்றமுறும். இதனை மருத்துவத்தில் Pரளவரடந என்பார்கள்.
சில அருகருகாக பல கட்டிகள் தோன்றும்போது ஒன்றுடன் மற்றது இணைந்து பெரிதாக மாறக் கூடும்.


வலி அதிகமாகி வீக்கமும் அதிகரிக்கிறது எனில் நீங்கள் மருத்துவரை நாட நேரிடலாம். ஆனால் சில கட்டிகள் தானாகவே உடைந்து சீழ் வெளியேற வலி தணிந்துவிடும். உடைந்து சீழ் வெளியேறிய பின்னரும் சில நாட்களுக்கு அதிலிருந்து கசிவு ஏற்படக் கூடும். அவ்வாறு கசிவதனால் அவ்விடத்தில் தானாகவே காய்ந்து படிவதுண்டு.


சீழ்கட்டிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல கிருமியின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். கிருமித் தொற்றுக் காரணமாக உடலில் அலுப்பு வேதனை ஏற்டலாம். சில நேரங்களில் காய்ச்சலும் தோன்றக் கூடும். சிலருக்கு அது தோன்றுவதற்கு முன்னர் அவ்விடச் சருமத்தில் சற்று அரிப்பு ஏற்படுவதுண்டு.


நீங்கள் செய்யக் கூடியது எவை?


சிறிய வேதனை அதிகமற்ற கட்டி எனில் உடடியாக மருத்துவரை நாட வேண்டியதில்லை. அது தானாகவே உடைந்து சீழ் வெளியேறிய பின்னர் குணமாகும்.


சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளில் பலதடவைகள் செய்ய வேண்டும். இது வேதனையைத் தணிக்க உதவும். அத்துடன் கிருமி பெருகுவதையும் குறைக்கும்.


கைகளால் அழுத்தியோ அல்லது பிளெட் போன்ற கூரிய ஆயதங்களால் வெட்டியோ சீழை நீங்களாக அகற்ற முற்பட வேண்டாம். சீழ் அகலுவதற்குப் பதிலாக கிருமிகள் பரவி நோயை தீவிரப்படுத்தலாம்.


கட்டி தானாக உடைத்துவிட்டால் தொடர்ந்தும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவுங்கள். சீழ் வடிந்து கொண்டிருந்தால் அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
அந்த இடத்தை நீங்கள் தொட்டால் சுத்தமாக நன்கு கை கழுவிய வேண்டும்.


அதேபோல நோயாளி உபயோகித்த, துணி. டவல், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவர் உபயோகித்த துணிமணிகளை நன்கு கழுவி உலர்ந்த பின்னரே மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவற்றை சுடுநீரில் கழுவுவதும் சிறந்தது.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…உண்மை விளக்கம்!


ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பது

 ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..!



கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன்,


அரசனே ஆனாலும் கூட



 அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்

 என்பதுதான் உண்மையான அர்த்தம்…



1) ஆடம்பரமாய் வாழும் தாய்,



2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,



3) ஒழுக்கமற்ற மனைவி,



4) ஏமாற்றுவதும் துரோகமும்


 செய்யக்கூடிய உடன்


 பிறந்தோர் மற்றும்



5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்


 என்பதாகும்..

ஜூன் 19ல் வடகறி விருந்து!

ஜெய், ஸ்வாதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் வடகறி திரைப்படம் வருகிற ஜூன் 19ல் வெளியாகவுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனரான சரவணராஜன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தினை தயாநிதி அழகிரியின் மேகா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடியிருப்பதால் படம் குறித்த பலவித எதிர்பார்ப்புக்கள் இளைஞர்களிடையே எழுந்துள்ளது. பிரபல ஆர்.ஜேவான பாலாஜியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இசையமைப்பாளர்களான மெர்வின் சாலமன் விவேக் சிவா ஆகியோர் இசையமைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் வில்லன் சூப்பர் சுப்புராயன்!

அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் காளி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இப்படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்கள்வெளியாகிவருகின்றன.

குட்டிப்புலி திரைப்படத்தின் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகவுள்ள கொம்பன் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஹீரோயின் யாரென்பது இதுவரையிலும் தெரியாவிட்டாலும், குட்டிப்புலி படத்தின் ஹீரோயினும், கோலிவுட்டின் ராசியான நடிகையுமான லக்‌ஷ்மிமேனன் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொம்பன் திரைப்படத்தின் இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இப்படத்தின் வில்லன்
குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல சண்டைப்பயிற்சி மாஸ்டரான சூப்பர் சுப்புராயன் கொம்பன் படத்தில் கார்த்தியின் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

கிராமத்துக் கதையினை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இப்படத்தில் ராஜ்கிரணும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். யுவன் சங்கர் ராஜா
இப்படத்திற்கு இசையமைக்கலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டுவருகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏக்சன் ஹீரோயினாக பூஜா குமார்!

உலக நாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்த விஷ்வரூபம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் ஜோடியாக நடித்திருந்தவர் பூஜா குமார். அமைதியான ஹீரோயினாக இப்படத்தில் அவரது வேடம் அமைந்திருந்தது. ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பூஜா குமார் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஷ்வரூபம். இதன் அடுத்த பாகமான விஷ்வரூபம் -2 திரைப்படம் ஏற்கெனவே படமாக்கப்பட்டு, வெளியீட்டிற்குத் தயார் நிலையில் இருந்துவருகிறது. இவ்விரு படங்களிலும் கமல்ஹாசனின் ஜோடியாக நடித்தவர் பூஜா குமார். இப்படங்களில் கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து கமல்ஹாசன் தற்பொழுது நடித்துவரும் உத்தம வில்லன் திரைப்படத்திலும் இவர் நடித்துவருகிறார்.

உத்தமவில்லன் திரைப்படத்தில் இவருடன் ஆண்ட்ரியா, பார்வதி மேனன் ஆகியோரும் நடித்துவருகின்றனர். உத்தமவில்லன் திரைப்படம் வழக்கமான காமெடிப் படமாக மட்டுமல்லாமல் வேறு சிலவற்றையும் எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார் பூஜாகுமார்.

கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கத்தில் உருவாகிவருகிறது உத்தமவில்லன் திரைப்படம். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துவருகிறார்.

பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் என்ன செய்யலாம் அருமையான தகவல்!

 

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்

. . . . உலகோர்க் கெல்லாம் காரமா

மூலியடா பங்கம்பாளை கொண்டு

. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்

கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்

. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்

நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா

. . . . அன்றான ஆகாசகருடன் மூலி

அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்

- சித்தர் பாடல்.

ஆடு தீண்டாப்பாளை, நாகதாளிக் கிழங்கு, ஆகாச கருடன் கிழங்கு, சிறியா நங்கை, இம் மூலிகைகளை வீட்டில் வளர்த்து வந்தால் இதன் வாசனைக்கு விச ஜந்துக்கள், பாம்புகளை நெருங்க விடாது என்கிறது பாடல்.


பாம்பு வீட்டினுள் வந்துவிட்டால் சோற்றுக் கஞ்சியில் உப்பைக் கரைத்து அதனுடன் பூண்டை அரைத்துக் கரைத்து இதில் சிறிது மண்ணெண்ணெய் சிறிது கலந்து பாம்பு இருக்கும் பகுதியில் சுற்றி தெளித்து விட பாம்பு சீராது ,கடிக்காது, ஓடாது அங்கேயே மயங்கி கிடக்கும்.

பிக்கேட் 43 படத்தில் பிருத்திவிராஜ்வுடன் மோகன்லால்...!

பிருத்திவிராஜ் நடித்து கொண்டு இருக்கும் படம் பிக்கேட் 43. இந்த படத்தில் மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளிவந்து இருக்கிறது.

பிரபல இயக்குனர் மேஜர் ரவி இயக்கி கொண்டு இருக்கும் இப் படத்தில் மோகன்லால் நடிக்கிறது உறுதி என்று மலையாள உலகம் தெரிவிக்கிறது.

என்னென்றால் இது வரை இயக்கிய மேஜர் ரவி படத்தில் மோகன்லால் இல்லாமல் எடுத்து இல்லை அதுவும் அவர் என் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தால் கூட படம் நல்ல ஓடும் என்று நம்புகிறார்

ஒரு சிப்பாய் காஷ்மீரில் திசை தெரியாமல் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிக்கி கொள்கிறார். அதன் பின் அவர் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே பிக்கேட் 43 படம் படத்தின் கதை. இப் படத்தை ஹிந்திலும் எடுக்க உள்ளனர்.

ஜெயம் ரவி விட்ட சாபம் பலித்தது...!

தமிழ் நாட்டில் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் வைத்து உருவாக்கப்படுள்ள படம் தான் "என்ன சத்தம் இந்த நேரம்". இதில் இயக்குனர் ஜெயம் ராஜா நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் படம்.

இந்த நன்கு குழந்தகளின் அப்பாவாக தான் இயக்குனர் ஜெயம் ராஜா நடித்து இருக்கிறார். இப் படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடை பெற்றது அப்போது பேசிய படத்தின் இயக்குனர் குரு ரமேஷ், ஒரே பிரசவத்தில் பிறந்த இந்த நான்கு குழந்தைகளும் ஜூவில் காணாமல் போய் விடுகின்றனர், அப்படி காணாமல் போன குழந்தைகள் என்ன ஆனார்கள் என்பது தான் கதையின் கரு என்று கூறினார்.

இயக்குனர் ஜெயம் ராஜா பேசுகையில் , இந்த படத்தோட ஷுட்டிங்குக்கு நடிக்க போகும் போது என் தம்பி ஜெயம் அடிக்கடி சொல்வான்

எங்க எல்லாரையும் படுத்தி வச்சேல்ல. இப்ப போய் பாரு. நடிப்புன்னா என்னன்னு தெரியும்’ என்று. நிஜமாகவே அங்க போன பிறகுதான் தெரிஞ்சுது எனக்கு. ஒவ்வொருத்தரையும் ரொம்ப பிழிஞ்சு எடுத்துருக்கோம்னு.

இனிமே ரொம்ப பிழிய கூடாது. ஆனால் நான் ஏன் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று என் வீட்டிலேயே ரொம்ப பேருக்கு ஆச்சர்யம். வேறொன்றுமில்லை நான் நடிக்க ஒப்புக்கொண்டதே அந்த நான்கு குழந்தைகளை பார்த்த உடனே தான் அவர்களுடன் நடிப்பதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

கத்தி படத்துக்கு பிரேக் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்...!

ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தின் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி வந்தார். துப்பாக்கி பிறகு இவர்களது கூட்டணி மீது மக்களிடைய பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

இதற்கிடையிலும் ஏ.ஆர்.முருகதாஸ் , துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து, ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார்.தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியே உதவியாளர்களை வைத்திருப்பதால் கத்தி மற்றும் ஹாலிடே படங்களின் வேலைகளை ஒரே நேரத்தில் கவனித்து வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்

வருகிற 6-ஆம் தேதி ஹாலிடே வெளியாக உள்ளதால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மும்பை சென்றுள்ளார்.இதன் காரணமாக வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா கார்டனில் நடை பெற்ற வந்த கத்தி படத்தின் ஷூட்டிங்க்கு ஒரு சின்ன பிரேக் விட்டு உள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்

ஹாலிடே படத்தின் புரமோஷன்க்காக சென்றுள்ள முருகதாஸ் அடுத்து பத்துநாட்கள் ஷூட்டிங் இல்லை என்றவுடன் விஜய் இந்த நாட்களை அடுத்து நடிக்க உள்ள படத்திற்கான போட்டோ செஷன் பண்ணிவிடலாமா என்ற யோசித்து வருகிறாராம்.

அறிஞர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள் - சர். ஐசக் நியூட்டன்..!


அமெரிக்க விஞ்ஞானி சர். ஐசக் நியூட்டன் பூமிக்கு புவியீர்ப்பு சக்தி இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துச் சொன்னவர்.
அவர் ஒரு சமயம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் அங்கிருந்த அறைக் கதவில் பெரியதும் சிறியதுமாக இரண்டு துவாரங்கள் வட்டமாக இருந்ததைப் பார்த்தார்.

'அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போட்டிருக்கின்றீர்களே அது ஏன்?' என்று நியூட்டனிடம் கேட்டார். அதற்கு நியூட்டன் சொன்னார்: நான் சிறியதும், பெரியதும் என்று இரண்டு பூனைகள் வளர்க்கின்றேன். வீட்டின் அந்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியில் போய் விட்டால் பெரிய துவாரம் வழியாக பெரிய பூனையும், சிறிய துவாரம் வழியாக சிறிய பூனையும் அறைக்குள் வருவதற்காகவே இந்த இரண்டு துவாரங்களையும் போட்டிருக்கிறேன்' என்று.

அதற்கு இரண்டு துவாரங்கள் தேவையில்லையே? பெரிய துவரம் வழியாகவே இரண்டு பூனைகளும் வந்து விடலாமே' என்று நண்பர் கூறியதும், விஞ்ஞானி நியூட்டன் திடுக்கிட்டார். 'ஆமாம், நீங்கள் சொல்வது சரி தான். எனக்கு இந்த யோசனை தோன்றவில்லையே' என்று கூறியவர் சிறிய துவாரத்தையும் அடைக்கச் சொன்னார்.

தனுஷின் தயாரிப்பில் நான் இயக்கபோவது உறுதி..!

வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் உதயநிதியின் மனைவி கிருத்திக உதய் இயக்குனர் ஆனார். அதன் பிறகு வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் பாடல்கள் எல்லாம் நல்ல ஹிட்.

தன்னுடைய அடுத்த கதை விவாதத்தில் பிஸியாக இருந்த கிருத்திகவுக்கு தனுஷின் வொண்டர்பார் கம்பெனியில் படம் இயக்க ஒரு வாய்ப்பு வந்து உள்ளது. தற்போது வரை படத்தினுடைய நடிகர் நடிகைகள் யார் யார் என்று இன்னும் முடிவாகவில்லை ஆனால் தனுஷ் தயாரிப்பில் நான் படம் இயக்க போகிறேன் என்ற செய்தி உறுதி என்று கிருத்திக உதய் தெரிவித்தார்.

வொண்டர்பார் கம்பெனி தற்போது வேலையில்ல பட்டதாரி படமும் மற்றும் சிவ்கர்த்திகேயனின் டானா படமும் தயாரிப்பு பணியில் இருக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க சமீபத்தில் தனுஷ் கம்பெனியில் விஜய்சேதுபதி நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியானது,அது கிருத்திக இயக்க போகும் படத்தில் நடிக்க போகிறாரா என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி இந்த படத்துக்கும் இசை நம்ம இளம் இசைப்புயல் அனிருத் அவர்களே தான்.

மாதுளம்பூவின் பயன்கள்


மாதுளம்பூவின் பயன்கள்:-

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

ஏன் கத்தியில் 90 பிணை கைதிகளுடன் விஜய்..!

இளைய தளபதி விஜய் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படம் கத்தி. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சமீபத்தில் கத்தி படத்தில் ஒரு குறிப்பிட்ட போர்ஷனில் 90 பிணை கைதிகளை தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு அந்த கடத்தல் கும்பலுக்கு இன்னொரு விஜய் தான் தலைவராக இருக்கிறார் என்று செய்தி வெளிவந்து உள்ளது .

ஆனால் இந்த தகவல்பற்றியும் இப் படத்தின் கதை கரு பற்றி தெரிவிக்க பட குழுவினர் மறுத்து விட்டனர்.

இதற்கிடையில் கோலிவுட் வட்டாரத்தில் இப் படத்தின் கதையை பற்றி இப்பொழுதே கிசு கிசு ஆரம்பித்து விட்டார்கள் . இப்படத்தில் விஜய், சமந்தா ,நில் நிதின் முகேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப் படத்துக்கு அனிருத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கம்போஸ் செய்யப்பட்டன. படகுழுவினர் கத்தி படத்தின் பாஸ்ட் லுக்கை இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!


காபியைக் கொண்டு செய்யக்கூடிய சில அற்புதமான விஷயங்கள்..!

 இத்தகைய பொருட்கள் அனைத்தும் சமையலில் பயன்படுவது மட்டுமின்றி, சுத்தப்படுத்தவும் பெரிதுவும் உதவியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல், அந்த பொருட்கள் அனைத்துமே அழகுப் பராமரிப்பிலும் உதவி புரிகின்றன. அந்த வகையில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்கு அனைவருக்கும் பிடித்த நறுமணமிக்க காபியும் உதவியாக உள்ளது. என்ன ஆச்சரியமாக உள்ளதா?

ஆம், குடிக்கும் காபியைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம். இப்போது அந்த காபியைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்ப்போம்.

 * குளிக்கும் அறையில் துர்நாற்றம் வருகிறதா? அப்படியெனில், காபி பொடியை ஒரு துணியில் போட்டு கட்டி, குளியலறையில் தொங்கவிட்டால், குளியலறையில் வரும் துர்நாற்றமானது நீங்கிவிடும்.

* வீட்டில் எறும்புகள் இருந்தால், அதனை போக்குவதற்கு எறும்புள்ள இடத்தில் காபி பொடியை தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

* பாத்திரங்களில் இருந்து வரும் முட்டை நாற்றத்தை போக்குவதற்கு, காபி பொடியை பயன்படுத்தி கழுவினால், பாத்திரத்தில் இருந்து வரும் நாற்றத்தை போக்கலாம்.

* செல்லப் பிராணிகளின் சிறுநீரால் வரும் கெட்ட நாற்றத்தைப் போக்குவதற்கு, வாணலியில் காபி பொடியை போட்டு, 2-3 நிமிடம் வறுத்து, நாற்றம் வரும் அறைக்கு எடுத்துச் சென்று வைத்தால், காபி தூளின் நறுமணத்தில், துர்நாற்றம் நீங்கிவிடும்.

* தோட்டத்தில் நல்ல வளமான மண்ணைப் பெறுவதற்கு, தோட்டத்தில் சிறிது காபி பொடியைத் தூவினால், மண் சத்து நிறைந்தாக இருக்கும். ஏனெனில் காபி தூளில் பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

* நல்ல நறுமணமிக்க காபியை காலையில் குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வினைப் போக்கலாம். எப்படியெனில், காபியின் நறுமணத்திற்கு, மனதை புத்துணர்ச்சி அடைய வைக்கும் சக்தி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாசை அடுத்த மணிரத்னம் என்று பாராட்டிய பிரபல நடிகர்!

தமிழில் துப்பாக்கி படம் வெளிவருவதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.முருகதாசை சின்ன மணிரத்னம் என்று விஜய் குறிப்பிட்டுருந்தார் .

தற்போது அதே போல் பாலிவுட் நடிகரும் மற்றும் சோனக்க்ஷி சின்ஹா தந்தையுமான சத்ருகன் ஏ.ஆர்.முருகதாசை உன்னதமான மேதை என்றும் அடுத்த மணிரத்னம் என்றும் சொல்லும் தகுதி கண்டிப்பாக இவரிடம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்

சத்ருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் " துப்பாக்கி தழுவலான ஹாலிடே படத்தை பார்த்தேன் கண்டிப்பாக ஏ.ஆர்.முருகதாசை உன்னதமான மேதை மற்றும் அடுத்த மணிரத்னமாக திகழ்வார் என்றார்

படத்தை பற்றி கூறுகையில் ஹாலிடே ஒரு இந்தியன் ஆர்மி பற்றிய கதை, படம் மிக பிரமாதமாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இப்படத்துக்கு வரிசலுகை கொடுத்தது சரி என்றார்

அக்ஷய் குமார் மற்றும் சோனக்க்ஷி நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக "பிரிடி தருவாள" கதாபாத்திரம் பேசப்படும் என்று தெரிவித்தார்

கம்ப்யூட்டர் பராமரிப்பு..!


நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் “”தினமும் என்னைக் கவனி” என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.

2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.

3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.

4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.

5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.

6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.http://www.revouninstaller.com/என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.

7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.

8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.

9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர் களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம். என் கம்ப்யூட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்திடாமல் நன்றாக இயங்கிக் கொண்டு தான் உள்ளது.

கஷ்டத்தை தூக்கி போடு - குட்டிக்கதைகள்!


ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன்.

அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி ஒன்று இருந்தது,அது தன் முன் காலால் தூக்கி வைத்து பார்த்தது பின்பு பின் காலால் நீட்டி எக்கி பார்த்தது அந்த எறும்பால் முடியவில்லை.

இறகை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது.பிறகு அந்த இறகை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி இடைவெளி மீது பாலம் மாதிரி வைத்து விட்டு இந்த வழியாக ஏறி அந்த வழியாக இறங்கி விட்டது.மீண்டும் அந்த இறகை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டது.

நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன்.ஒரு சிறிய எறும்பு எவ்வளவு லாவகமாக இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் சென்றது, ஆனால் ஆறறிவு படைத்த நாம் சிறிய இடர்வந்தாலும் துவண்டு போகிறோம்.

அந்த எறும்பு கடைசியாக அதன் வீட்டை அடைந்தது.அந்த எறும்பின் வீட்டு நுழைவுவாயில் ஒரு சிறிய ஓட்டை மட்டுமே இருந்தது.அது அந்த இறகை உள்ளே எடுத்து செல்ல எவ்வளவோ முயற்ச்சி செய்து பார்த்தது ஆனால் எறும்பால் முடியவில்லை.ஒரு கட்டத்தில் அது அந்த இறகை தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டது.

எறும்பு அந்த இறகை அங்கு இருந்து எடுத்து வரும்போது அது சுமையாக தெரியவில்லை எப்போது அது தனக்கு பயன்படாது என்று தெரிந்ததோ அப்போதே அதை தூக்கி போட்டுவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டது.

நம்ம வாழ்க்கையும் இப்படித்தான்.பணம் சம்பாதிக்க கஷ்டப்படுறோம்,வேலை செய்ய கஷ்டப்படுறோம்,குடும்ப பாரத்தை சுமக்க கஷ்டப்படுறோம்.அந்த இறகு மாதிரி தான் நம்ம கஷ்டமும்.கஷ்டத்தை தூக்கி போட்டுட்டு நாம பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துகிட்டே போகணும்.

சுருளிமலை அதிசயம்!


உலக அதிசய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ [unesco] நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது.


மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது.


பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" இதில்தான் அமைந்துள்ளது.இதனுடன் இணைந்து கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்கும் ஒரு மலைதான் "சுருளி மலை" ஆகும்.இம் மலை தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சுருளி மலை பற்றிய அதிசய செய்தி ஒன்று சுமார் 25 -வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வெளிவந்தது. அதில் உள்ள விபரம் :-

அந்தக் கால அதிசயம் - மர்மக்குகையில் தேவ கன்னிகைகளா ? என்ற
 தலைப்பில் வெளியான கட்டுரை விபரம்.


மதுரையில் இருந்து தேனி வழியாக 70 -கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளிமலை.


ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டி ருக்கும் சுருளி அருவி மிகப் பிரசித்தி பெற்றது.இவ்வளவு நீர் எங்கி ருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர்.


ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் காட்டுக்குள் மனிதர்கள் செல்வ தில்லை கதம்ப வண்டுகள் ஐந்து கொட்டினாலே ஆள் காலி என்கின்றனர்.


அருவிக் கரையில் இருந்து மூன்று பர்லாங் தொலைவில் “கைலாச நாதர் குகை” உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மை இனமான கன்னடம் பேசும் கவுடர்களில் "மார்கழியார்" என்ற பிரிவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்குள் பூசாரி ஒருவரை தேர்ந்தெ டுக்கவும்,சுருளி மலையில் மறைந்துள்ள "கிருஷ்ண பகவானின்" புல்லாங் குழலைக் கண்டு பிடிக்கவும் இங்கு யாகம் வளர்த்து,அன்ன தானம் செய்தனர்.அப்போது பத்து வயது சிறுவனுக்கு சாமி [அருள்] வந்து கைலாசநாதர் குகைக்குள் நுழைந்தாக வேண்டும் என்றான்.


அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.குகைக்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல.கும்மிருட்டு விஷ ஜந்துக்கள் இருக்கலாம்,மேலும் நிமிர்ந்த நிலையில் உள்ளே புக முடியாது.! படுத்த நிலையில் தவழ்ந்துதான் போக வேண்டும்.எனவே சிறுவன் கையில் ஒரு அகல் விளக்கை கையில் பிடித்தபடி தவழ்ந்து சென்றான்.சுமார் ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்து அவன் சொன்ன செய்திகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.


உள்ளே மிகப்பெரிய அரங்கம்.ஒளி உமிழும் உருண்டைகள் ஆங் காங்கே கல் தூண்களின் நுனியில் பொருத்தப் பட்டிருந்தனவாம்.திரு நீற்றில் புரண்டு எழுந்தார் போல் வெண்மையான உடலும்,நீண்ட தாடியும் கொண்ட முனிவர்கள் கல் ஆசனங்களில் அமர்ந்து தேவ கன்னிகளின் நடனத்திற்காக காத்திருந்தார்களாம்.


மற்றொரு அதிசயச் செய்தி இருப்பதாகவும்,அது "தேவ ரகசியம்" என்றும் அந்த சிறுவன் கூறினான்.


சுருளி மலையில் உள்ள அருவியிலிருந்து மேற்கே சுமார் ஐந்தாறு மைல்களுக்கு அப்பால் தான் கேரளா,தமிழ் மாநிலங்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வரும் “கண்ணகி கோயில்” [மங்கள தேவி கோட்டம்] உள்ளது.


மதுரையை எரித்த கையோடு தலைவிரி கோலமாக நடந்து வந்த கண்ணகி இந்த அருவியில் நீராடி புஷ்பக விமானம் ஏறிச் சென்றதாக கூறுகிறார்கள்.மேலும் இங்கு தோண்டி எடுக்கப்பட்ட கண்ணகி சிலை மற்றும் கல்வெட்டுக்கள் மூலமாக இன்னும் பல ஆதாரபூர்வமாக வியத்தகு செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

செப்டம்பரில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’!

 ஜெயம்கொண்டான்’ மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஆர்.கண்ணன். மணிரத்னத்தின் ஆசிபெற்ற இவர் ‘சேட்டை’ படத்திற்கு பிறகு இயக்கி வரும் படம் ‘

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. விமல், ப்ரியாஆனந்த், சூரி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்யும் போது ஏற்படும் நட்பையும், அதன் பிறகு எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்களையும் மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் நாயகி விசாகா சிங் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது..