Tuesday, May 27, 2014

எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் புன்னகை..!

          புன்னகை சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே.

சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்சினைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரிப்பு, 'பெர்சனாலிட்டி'யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள்.

அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். எப்படிப்பட்ட நபரையும் 'ஹேண்டில்' செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள். பணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழ விடுங்கள். இது செயற்கையான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும்.

உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது 'மூடி'யான கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் உங்களை நடத்தும் விதம் மாறலாம்.

உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம் என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள். தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் விஷால்!

இயக்குனர் சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரண்மனை திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. ஹன்சிகா, லக்‌ஷ்மிராய், வினய் மற்றும் பலருடன் சுந்தர்.சி யும் இணைந்து நடித்திருக்கும் இப்படம் நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அரண்மனை திரைப்படத்திற்குப் பிறகு விஷால் நடிக்கவுள்ள திரைப்படத்தினை சுந்தர்.சி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி மற்றும் பலர் நடித்த மதகஜராஜா திரைப்படம் இன்னும் திரைக்குவரவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.

ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் நடித்துவரும் விஷால் இப்படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் பேச்சுக்கள்
அடிபட்டுவருகின்றன. பூஜை படத்தின் படப்பிடிப்புக்களை வெறும் நாற்பதே நாளில் முடிக்கவிருப்பதாக ஹரி கூறியிருப்பதால் இப்படம் தீபாவளி
வெளியீடாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகலாம் என்றும், விரைவில் இதுகுறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என்றும் பேசிவருகிறது கோலிவுட் வட்டாராம்.

பெரும் தொகைக்கு விற்கப்பட்டிருக்கும் யான்!

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்குனராகக் களம் கண்டுள்ள திரைப்படம் யான். ஜீவா, துளசி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின்
சேட்டிலைட் உரிமம் ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் சிற்சில தாமதங்களால் இவ்வாண்டுதான் நிறைவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில்
இப்படத்தின் அனைத்துப் படப்பிடிப்புக்களும் நிறைவடைந்து பின்னர் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் துவங்கின. வருகிற ஜூன் மாதத்தில் இப்படம்
வெளியாகவுள்ளது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சில காட்சிகள் ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐ படம் கைமாறுமா?

சியான் விக்ரம் - எமி ஜேக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஐ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கள் நடைபெற்றுவருகின்றன.
இன்னும் ஒரே ஒரு பாடல்காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கும் சூழலில் அப்பாடல் காட்சி இன்னும் படமாக்கப்படாமல் இருந்துவருவதாகத் தெரிகிறது.

எமிஜேக்சன் நடனமாடும் அப்பாடல்காட்சிக்கான பிரம்மாண்ட செட் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ள சூழலில் படத்தின் ஹீரோயின் எமி ஜேக்சன் சம்பளப் பிரச்னை காரணமாக இப்பாடல் காட்சியில் நடிக்காமல் காலம் தாமதித்துவருவதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தனக்கு வரவேண்டிய சம்பளம் இன்னும் கிடைக்காதபடியால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லையாம்.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக படப்பிடிப்புக்கள் நடைபெற்று இறுதியில் இவ்வாறு நின்றுகொண்டிருப்பதால் இயக்குனர் ஷங்கர்
தயாரிப்பாளரிடம் இப்படத்தினை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்குமாறு கோரிவருவதாகத் தெரிகிறது. இதனால் விரைவில் இப்படம் மற்றொரு தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் வெளியாகலாம் என்று கிசுகிசுக்கப்பட்டுவருகிறது.