Tuesday, May 27, 2014

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் விஷால்!

இயக்குனர் சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரண்மனை திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. ஹன்சிகா, லக்‌ஷ்மிராய், வினய் மற்றும் பலருடன் சுந்தர்.சி யும் இணைந்து நடித்திருக்கும் இப்படம் நகைச்சுவை கலந்த திகில் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அரண்மனை திரைப்படத்திற்குப் பிறகு விஷால் நடிக்கவுள்ள திரைப்படத்தினை சுந்தர்.சி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி மற்றும் பலர் நடித்த மதகஜராஜா திரைப்படம் இன்னும் திரைக்குவரவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.

ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் நடித்துவரும் விஷால் இப்படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கலாம் என்றும் பேச்சுக்கள்
அடிபட்டுவருகின்றன. பூஜை படத்தின் படப்பிடிப்புக்களை வெறும் நாற்பதே நாளில் முடிக்கவிருப்பதாக ஹரி கூறியிருப்பதால் இப்படம் தீபாவளி
வெளியீடாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகலாம் என்றும், விரைவில் இதுகுறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகும் என்றும் பேசிவருகிறது கோலிவுட் வட்டாராம்.

0 comments:

Post a Comment