Tuesday, May 27, 2014

பெரும் தொகைக்கு விற்கப்பட்டிருக்கும் யான்!

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்குனராகக் களம் கண்டுள்ள திரைப்படம் யான். ஜீவா, துளசி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின்
சேட்டிலைட் உரிமம் ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் சிற்சில தாமதங்களால் இவ்வாண்டுதான் நிறைவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில்
இப்படத்தின் அனைத்துப் படப்பிடிப்புக்களும் நிறைவடைந்து பின்னர் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் துவங்கின. வருகிற ஜூன் மாதத்தில் இப்படம்
வெளியாகவுள்ளது.

ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சில காட்சிகள் ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment