Saturday, May 24, 2014

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் திரிஷா?

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் அனைவரும் விரும்பும் நடிகர் விஜய்சேதுபதி. இந்த குதிரையை நம்பி பணம் கட்டினால் கண்டிப்பாக போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்று சொல்வது போல், இவர் நடித்த எல்லா படங்களும் தயாரிப்பாளர்களுக்கு மினிமம் கேரண்டி வசூலை தந்துவிடும்.

சூதுகவ்வும் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமியும், விஜய்சேதுபதியும் மீண்டும் இணைய உள்ளனர். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க போகிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

சமீபத்தில் திரிஷா ஒரு பேட்டியில் “தற்போது உள்ள நடிகர்களில் எனக்கு விஜய்சேதுபதியின் நடிப்பு தான் மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எறும்பு தொல்லை தீர..?

உங்க வீட்ல எறும்பு தொல்லை இருக்கா.
அது தீர ஒரு சூப்பர் ஐடியா.

ஒரு சின்ன கிண்ணத்துல சர்க்கரையோட‌ மிளகாய் பவுடர் மிக்ஸ் பண்ணி வச்சிடுங்க...
எறும்பு சர்க்கரைன்னு நினைச்சி சாப்பிடும்....
அப்போ அதோட நாக்கு காரத்துல எரியும்...

அப்போ எந்த எறும்பு தண்ணீர் தண்ணீர் தொட்டிக்கு வரும்...

நீங்க பின்னாடி இருந்து தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுங்க...

எறும்பு செத்துடும்...எப்படி என் ஐடியா!!!

இந்த கடிய விட எறும்பு கடி பரவாயில்லைன்னு தோணுதோ
   

கார்த்தியுடன் இணையும் கார்த்திக்..!

 கார்த்தியுடன் இணையும் கார்த்திக்..!

குட்டிபுலி இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு கொம்பன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் கார்த்தியின் மாமனாக நடிக்க கார்த்திக்கிடம் பேசப்பட்டு வருகிறது. இப்படத்தில் கார்த்தி தாடியுடன் கிராமத்து ஆளாக நடிக்கவிருக்கிறார்

இந்தக்கதையில் முதலில் நடிக்கவிருந்தவர் அருள்நிதி ஆனால் சிலகாரணங்களால் அருள்நிதிக்குப் பதிலாக கார்த்தி நடிக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் கிடாபூசாரி மகுடி..!

தமிழ் திரை விருட்சம் சார்பாக த.தமிழ்மணி தயாரிக்கும் முதல் படம் கிடாபூசாரி மகுடி. இப்படத்தில் அறிமுக நாயகர்களாக தமிழ், ராம்தேவ் ஆகியோரும், நாயகியாக நட்சத்திராவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி, வெவ்வாழை ராசு, போண்டா மணி, கலைராணி, கம்பம் மீனா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக ஜெயகுமார்.ஜெ அறிமுகமாகிறார். இவர் வேலு பிரபாகரன், ராம் கிரிஷ்மிர்லானி, வியாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் பழகுவது மட்டும் காதல் அல்ல, திருமணத்திற்கு பிறகு உருவாகும் ரத்த பந்தத்தில்தான் உண்மையான காதல் உள்ளது என்ற கருத்தை மையமாக கொண்ட இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், அரியலூர் மாவட்டம் மருங்கூர் குவாகம், தாமரைபூண்டி கிராம பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

பொம்மையாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் தான்: ராகவா லாரன்ஸ் அறிக்கை..!

"கோச்சடையான்” படம் பார்த்து ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

கோச்சடையான் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார் அவர் பொம்மையாக நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர்.

ரஜினி பொமையாக நடிப்பது ரசிகர்களை திருப்திபடுத்துமா? என்றார்கள்.

படம் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி ரசிக்கிறார்கள் பொமையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இந்த படம் சூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்றாக இருக்கும். யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ஹாலிவுட் தரத்துடன் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கி இருப்பது பாராட்டுக் குரியது.

இந்த படம் வழக்கம் போல் ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் திருப்பதிபடுத்தும் புது முயற்சி இது, இந்த முயற்சி வரும் காலத்தில் இது போன்ற படங்கள் தமிழில் தயாரிக்க முன்னுதாரணமாக இருக்கும்.

பொமையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் குரல் பதிவாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்று நிரூபித்திருக்கிறார் என்று லாரன்ஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

பரபரப்பு ஏற்படுத்தாத 'கோச்சடையான்!!!

ரஜினிகாந்த் படங்கள் வெளியானலே திரையுலகத்தில் மட்டும் இன்றி, தமிழகத்திலும் பெரும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் நேற்று வெளியான கோச்சடையான் படத்தைப் பொறுத்தவரை எந்தவித பரபரப்பும் ஏற்படவில்லை.

கோச்சடையான் கிரீன் மரத்தான் ஓட்டம் ஒன்றை ரஜினியின் மனைவி லதா ஏற்பாடு செய்து, தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தினார். இது போல சில நிகழ்ச்சிகளில் கோச்சடையான் படம் தொடர்பாக நடந்தாலும், படம் வெளியீட்டான நேற்றைய தினம் எந்தவித பரபரப்பும் ஏற்படவில்லை. திரையரங்குகளிலும் கூட்டம் குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதற்கு காரணம் 'கோச்சடையான்' அனிமேஷன் படமாக உருவாகியிருப்பது தான் என்று கூறப்படுகிறது. கதை, திரைக்கதை இரண்டிலும் கோச்சடையான் சிறப்பாக இருந்தாலும், அதை அனிமேஷன் அல்லாமல், நிஜமாக எடுத்திருந்தால் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருக்கும் என்றும் திரையுலகினர் சிலர் கூறிவருகிறார்கள்...

தோல்வி, தோல்வியல்ல தம்பி!

வாழ்வில் தோல்வி என்பது சாதாரணம். மனம் தளர்ச்சி அடைவது இயல்பு. அந்தத் தளர்ச்சி அடைந்த காலங்களில் நாம் ஆற அமர யோசிக்க வேண்டும். அப்போது நமக்குப் புது வழிகள் தென்படும்.

வழக்கமாக, நாம் என்ன செய்கிறோம்? பலரும் தோல்விகளைக் கண்டு சலித்துவிடுகிறோம். "இப்படித்தான் முன்பு முயன்றேன். தோல்வி கண்டேன். அங்கே போனேன், அதிலும் தோல்விதான் கிட்டியது. என் அதிர்ஷடம் அவ்வளவுதான். நான் ஒரு தோல்வியாளன்" என்று நம்மைப்பற்றி நாமே தீர்மானம் செய்துவிடுகிறோம்.

நாம் தோல்வியாளன் என்று நம்மீது நாமே முத்திரை குத்திவிடுகிறோம். ஆனால், நாம் தோல்வியாளர்களா? இல்லை! நாம் எத்தனையோ முறை இதற்கு முன் வெற்றி பெற்றிருக்கிறோம். ஏதோ இந்தமுறை தோல்வியுற்றோம். அவ்வளவுதான்.

அப்படி எடுத்துக்கொள்ளாமல், நம் தோல்வியை எண்ணிப் புலம்பிக் கொண்டிருந்தோமானால், எல்லோரிடமும் அதைச் சொல்லி அழுது கொண்டிருந்தோமானால் - எதையும் சாதிக்க முடியாது! நமது நிலைமை இன்னும் மோசமாகிவிடும்!

666 மருந்து
ஒரு மருந்துக்கு 666 என்று பெயரிட்டார்கள். காரணம் 665 முறை முயன்றும் அதை அவர்களால் தயாரிக்க முடியவில்லை. ஆனால் சளைக்கவில்லை. 666-வது முறைதான் அதைத் தயாரித்தார்கள். எனவேதான் அதற்கு பெயர் "சால்வர்சான் 666".

அதேபோல, எடிசன் மின்சார விளக்கைத் தயார் செய்து கொண்டிருந்தார். அதற்கு மின்சாரம் பாய்ந்தவுடன் ஒளி விடும் ஒரு கம்பி தேவை. அதாவது மின்சார சக்தியைத் தடுத்து, ஒளியாக மாற்றும் ஒரு சுருள் கம்பி தேவை. எடிசன் எத்தனையோ உலோகக் கம்பிகளை எடுத்து முயன்றார்.. முயன்றார்.. மனம் சளைக்காமல் முயன்றார். கடைசியில் 'டங்ஸ்டன்' என்ற உலோகக் கம்பி அந்த வேலையைச் செய்தது!

தோல்வியை சமாளிப்பது எது? சளைக்காத மனம்தான்!
தோல்வியை வெற்றி கண்டது எது? விடாமுயற்சிதான்!

"தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்" என்பார் வள்ளுவர். ஆம், தெய்வத்தால் முடியாதது கூட, முயற்சியால் முடியும். தம்பீ ! சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இல்லாமல், மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள், விதியைக்கூட வெற்றி கொள்வார்கள் என்றும் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

22 - 26 வயது..., ஆண்களுக்கு..?

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

பெண் குழந்தையும் அப்பாவின் கடமையும்..!

                                பெண் குழந்தையும் அப்பாவின் கடமையும்


               வாழ்க்கையைப்பற்றி மகளுடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவளுக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள். மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற் படும் பிரச்னைகளை விளக்குங் கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள். நன்றாக யோசித்துப் பார்த் தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர் கள் நம் முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.

இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்! மறக்காமல் மகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்.

கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவளுடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள். கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவள் அறியட் டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை மகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.

உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவளுக்கு தெளிவாக சொல்லுங்கள். நீங்கள் எவ்வளவு தூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவளைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவளுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.

நம் குடும்பத்தைப் பற்றி மகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவள் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவள் அறியட்டும். நாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறுவார்கள். அம்மாவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.

ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம். பெண்களென்றால் வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம் உண்பதைப்போல் மகளுளையும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். உணவு வகை களை ருசிக்கும் அதேநேரம் உணவ பழக்கங்கள், எப்ப டிப் பறிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும். உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்னைகள் வெளியுலகில் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

இன்வெர்டர்(inverter) பராமரிப்பு செய்வது எப்படி?

மின்சாரமின்றி மின்தட்டுப்பாட்டில் சிக்கி தவிக்கும் மக்கள், அதற்கு மாற்றீடாக இன்வர்ட்டரைப் பயன்படுத்துகின்றனர். இன்வர்ட்டரில் பல வகையுண்டு.

அதிக விலை  கொடுத்து வாங்கப்பட்ட இன்வர்ட்டர் (Costly Power Inverter) தரமானதாக இருக்கும். குறைந்த விலையில் வாங்கப்பட்ட இன்வர்ட்டர் தரம் குறைந்து காணப்படும். அல்லது அதில் மின்சாரம் தேக்கிவைக்கும் அளவு (Inverter Storage Capacity) குறைவானதாக இருக்கும். நல்ல தரமிக்க விலையுயர்ந்த இன்வர்ட்டர்களை வாங்குவது சிறந்தது.

இன்வர்ட்டர் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி, கணினி போன்ற முக்கியமான விலை உயர்ந்த சாதனங்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றனர். இன்வர்ட்டர் சரியான மின்சாரத்தை சீராக கொடுக்கும்பொழுது இதுபோன்ற சாதனங்கள் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது. எனவேதான் இன்வர்ட்டர் பராமரிப்பு மிக மிக அவசியமாகிறது.

இன்வர்ட்டர்களை எப்படி பராமரிப்பது? எப்படி பாதுகாப்பது என்பது குறித்த விளக்கங்கள் கீழே…

Inverter வைக்கும் இடம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எட்டும் வகையில் தரையில் வைக்க கூடாது. முடிந்தளவு இன்வர்ட்டரை உயரமான செல்ப் மீது வைப்பது நல்லது.

இன்வர்ட்டரை கீழே வைக்கும் நிலை இருந்தால் இன்வர்ட் இருக்கும் இடத்தில் தண்ணீர் போன்ற ஈரம் படாமல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். குழுந்தைகள் செல்லாத இடமாக இருக்க வேண்டும்.
இன்வர்டர் சார்ஜ் (Power Inverter charging)ஆகிக்கொண்டிருக்கும்போது, மின் இணைப்பை துண்டிக்க கூடாது.
சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும்போது பேட்டரியை (Battery Removal) கழற்றுவதும் தவறான செயல்.

மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து கிடைத்தாலும், மாதத்தில் ஒரு நாளாவது முழுமையாக இன்வர்ட்டர் மூலம் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் இன்வர்ட்டரின் செயல்படும் திறன் (Inverter act) குறையாமல் இருக்கும்.

இன்வர்ட்டர் பேட்டரியின் டிஸ்டில்ட் வாட்டர் (Battery distilled Water) குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறையும்போது அதை நிரப்பி வைக்க மறக்க கூடாது.

இன்வர்டர் பேட்டரிகளில் இரு வகை உண்டு. 1. Tubular battery. 2. Flat Battery. இதில் சிறந்ததாக கருதப்படுவது டியூப்ளர் பேட்டரி. நீண்ட நாட்கள் உழைக்க கூடியது.

வெப்பமிகுந்த இடங்களிலும் இன்வர்ட்டரை வைப்பது நல்லதல்ல.. உதராணமாக கேஸ் ஸ்டவ் (Gas stove) உள்ள இடம். அதேபோல தீயை பயன்படுத்தும் இடங்கள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள் போன்ற தீயால் எரியும் விளக்குகள் ஆகியவற்றை இன்வர்ட்டர் அருகில் வைக்க கூடாது.

இன்வர்ட்டரை சார்ஜ் செய்யும்பொழுது, அதனுடைய அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட(Permissible speed) , கூடுதல் வேகத்துடன் சார்ஜ் செய்யக்கூடாது. சிலர் விரைவாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என நினைத்து வேகத்தை கூட்டுவார்கள். ஆனால் அது இன்வர்டர் விரைவிலேயே பழுதாக காரணமாக அமைந்துவிடும்.

அதிக நாள் இன்வர்ட்டரை பயன்படுத்தாத சூழலில், அதை நேராக நிறுத்தி வைக்க வேண்டும். தூசி, குப்பைகள் போன்றவைகள் படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான இடத்தில் வைப்பது நல்லது.
இன்வர்டர் இயக்கத்தில் உள்ளபோது தூசிகளிலிருந்து பாதுகாக்க அதன்மீது எளிதில் தீப்பற்றக்கூடிய துணிகளை போட்டுவைக்க கூடாது.

புதிய இன்வர்ட்டரின் (New inverter)  மீது குப்பைகள் விழாமல் இருக்க ஒரு சிலர் துணி அல்லது அட்டைப்பெட்டிகளால் மூடிவைத்துவிடுவார்கள். அதுபோன்ற செயல்கள் ஆபத்தை உருவாக்கிவிடும்.

மேலும் Inverter UPS வாங்கும்போது அதனுடன் கொடுக்கப்பட்ட Manual Guideல் குறிப்பிடப்பட்டிருக்கும் பராமரிப்பு முறைகளை நன்றாக படித்துணர்ந்து, அதன்படி பராமரிப்பு செய்தால் Power Inveter நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

மார்பக டீசர்ட் – ஜப்பானில் இளம்பெண்களின் லேட்டஸ்ட் பேஷன்!

சில இளம்பெண்கள் தங்களுக்கு மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்காக வருத்தபடுவர். மேலை நாடுகளில் இளம்பெண்கள் மார்பகங்கள் சிறிதாக இருந்தால் அவற்றை பெரிதுபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சர்ஜரி செய்து கொள்வதுண்டு.ஆனால் இத்தகைய எண்ணம் உடையவர்களுக்காக ஜாப்பானிய உடை வடிவமைப்பாளர் தாகயுகி புகுசுவா பிரத்யேக டீ சர்ட் பனியன்களை வடிவமைத்து உள்ளார்.

இவர் விதவிதமான டிசைன்களில் மற்றும் கலர்களில் மார்பக படங்களுடன் கூடிய டீ-சர்ட்டுக்கள் தயாரித்துள்ளார். இதை அணிந்துகொண்டால் டிசைனிங் மார்பகங்கள் உண்மையான மார்பகங்கள் போலவே வெளியே தெரியும் வண்ணம் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்களின் வசதிக்காகவே இத்தனகைய டிசைனில் தான் டீ-சர்ட்டுகள் தயாரித்ததாக ஜப்பானிய டிசைனர் கூறியுள்ளார்.

15 வருடமாக டிசைனிங் துறையில் இருந்து வரும் தாகயுகி புகுசுவா என்பவர்தான் இந்த வித்தியாசமான மார்பக டீசர்ட்டை உருவாக்கியுள்ளார். டீ-சர்ட்டில் மார்பகம் இருக்கும் இடத்தில் பஞ்சு போன்ற மென்மையான பொருளை வைத்து பெரிதாக இருக்குமாறு அவர் செய்துள்ள டிசைன் உண்மையான மார்பகங்கள் போலவே பார்ப்பதற்கு உள்ளதாக அதை வாங்கி உபயோகித்தவர்கள் கூறியுள்ளார்கள். ஜப்பானில் தற்போது இந்த புதிய வகை டீ-சர்ட்டுக்கள் மிக வேகமாக பரவி வருகிறது. விதவிதமான கலர்களில் வெளிவந்துள்ள இந்த டீசர்ட் இன்னும் சில நாட்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

ரவி கே சந்திரன்- ஜீவா மீண்டும் இணைகிறார்கள்?


பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே சந்திரனுக்கு இயக்குநராக வேண்டும் என நீண்ட கால ஆசை. ஒளிப்பதிவாளராக பணிபுரிய தொடர்ந்து கமிட்மெண்ட் இருந்ததால் அவரால் டைரக்டர் நாற்காலியில் உட்கார முடியவில்லை. இவரைப்போலவே இயக்குநராக ஆசைப்பட்டு, இயக்குநராகியும் விட்ட ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், ரவி கே சந்திரனுக்கு கூறிய அட்வைஸ் என்ன தெரியுமா? டைரக்டராகணும்னா முதல்ல கேமராமேனாக வொர்க் பண்றதை ஸ்டாப் பண்ணணும். அப்பதான் டைரக்டராக முடியும்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பெரிய இயக்குநர்கள், பெரிய ஹீரோக்களின் படங்களில் பணிபுரிய ஒப்புக்கொண்டிருந்த ரவி கே சந்திரன்,கே.வி.ஆனந்த் சொன்ன அட்வைஸின்படி அனைத்து படங்களில் இருந்தும் விலகினார். இனி கேமராமேனாக பணிபுரியமாட்டேன் என்ற அறிவித்துவிட்டு, யான் படத்தை இயக்கத் தொடங்கினார். படப்பிடிப்பு முடிந்து யான் படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

யான் படம் மிக சிறப்பாக வந்திருப்பதைக் கண்டு தயாரிப்பாளருக்கு ஏக சந்தோஷம். படம் நிச்சயம் வெற்றியடையும் என்று நம்பி பிரம்மாண்டமாக விளம்பரம் செய்ய தயாராகிவிட்டார். இதை எல்லாம் பார்த்ததும், யான் படம் ஹிட்டானால் ரவி கே சந்திரன் முன்னணி இயக்குநராகிவிடுவார், எனவே இப்போதே துண்டைப்போட்டு வைப்போம் என்ற எண்ணத்தில், அடுத்தப்படத்துக்கு நீங்கள் எப்போது கால்ஷீட் கேட்டாலும் தருகிறேன் என்று சொல்லி வருகிறாராம் ஜீவா. ரவி கே சந்திரனோ புன்னகையை மட்டும் பதிலாக தந்திருக்கிறார்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் சூர்யா…!!

மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கி இந்திய அளவிலும் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் பிரியதர்ஷன். தமிழில் “கோபுர வாசலிலே, சிநேகிதியே, லேசா லேசா,” தேசிய விருது பெற்ற 'காஞ்சீவரம்' ஆகிய படங்களை இயக்கியவர்.

கடைசியாக அவர் இயக்கி மோகன்லால் நடித்து சென்ற ஆண்டில் மலையாளத்தில் வெளிவந்த 'கீதாஞ்சலி' படம் தோல்விப் படமாக அமைந்தது. தற்போது தமிழிலும், மலையாளத்தில் இரண்டு படங்களை இயக்க முடிவெடுத்திருக்கிறாராம். தமிழ்ப் படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், மலையாளப் படத்தில் ஃபகத் பாசிலும் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

பிரகாஷ்ராஜ், ஷம்மு நடித்து பிரியதர்ஷன் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளிவந்த 'காஞ்சீவரம்' படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும், அந்த ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதையும், பிரகாஷ்ராஜுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. ஏறக்குறைய ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் படத்தை இயக்க உள்ளார் பிரியதர்ஷன்.

மணிரத்னம் படத்தில் தெலுங்கு நடிகர்கள்…!!

  'கடல்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்தைப் பற்றிய எந்த விதமான அறிவிப்பையும் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். ஆனாலும், அவரது படத்தில் தெலுங்கு நடிகர்களான நாகார்ஜுனா, மகேஷ் பாபு ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கப் போகிறார்கள் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்தன.

என்ன ஆயிற்றோ தெரியவில்லை…. திடீரென அந்த படத்திலிருந்து அவர்களிருவருமே விலகி விட்டார்கள் என்ற செய்தியும் வெளியானது. அவர்களின் விலகலுக்குக் காரணம் சம்பளப் பிரச்சனைதான் என்கிறார்கள். பொதுவாகவே மணிரத்னம் தயாரித்து, இயக்கும் படங்களுக்கு நட்சத்திரங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் வழக்கமில்லை என்பது திரையுலகில் அனைவருக்குமே தெரியும்.

தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் எண்ணத்தில்தான் மணிரத்னம் தெலுங்கு நடிகர்களை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஏனென்றால், தமிழ் நடிகர்களை தெலுங்கில் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், தமிழில் அப்படியல்ல, மற்ற மொழி நடிகர்களை சீக்கிரமே ஏற்றுக் கொள்வார்கள். மேலும், தெலுங்கிலும் பெரிய அளவில் பிசினஸ் செய்ய முடியும்.

நாகார்ஜுனா, மகேஷ்பாபு சம்மதிக்கவில்லை என்றதும் அதோடு நின்று விடாமல், சுஹாசினி ஏற்பாட்டின்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்துப் பேசியிருக்கிறார் மணிரத்னம். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவையும், அவருடைய சகோதரி மகன் அல்லு அர்ஜுனையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கும் எண்ணத்தை வெளியிட்டாராம் மணிரத்னம். அவரும் சம்மதித்து விட்டதாகத் தெரிகிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.

கோச்சடையான் - இது நம்ம விமர்சனம்!!!

         கோச்சடையான் அனிமேஷன் படம் அல்ல, 'மோசன் காப்ட்சர் படம்' என்று மக்களுக்கு படத்தைப் பற்றி புறிய வைத்துவிட்டு தான் படத்தையே ஆரம்பிக்கிறார்கள். அனிமேஷன் படத்திற்கும் இப்படத்திற்கு வித்தியாசம் இருந்தாலும், மக்களுக்கு அது பெரிதாக புரியப்போவதில்லை. இருப்பினும், படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் இது அனிமேஷன் படம் என்பதையும் மறக்கச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கிறது படத்தின் கதையும், திரைக்கதையும்.

கோச்சடையான் என்ற தனது தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை தனது வீரத்தினாலும், தந்திரத்தினாலும் மகன் ராணா எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.

கோட்டைபுரம் நாட்டு குடிமகனான ரஜினிகாந்த் சிறுவயதில் ரோமாபுரி நாட்டுக்கு ஓடி, அங்கே அனாதை சிறுவனாக வளர்ந்து, மன்னனின் போர் படையில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார். பிறகு தனது திறமையால் அந்நாட்டு தளபதியாகும் ரஜினிகாந்த், தனது தந்திரத்தினால், ரோமபுரியில் அடிமைப்பட்டு கிடக்கும் கோட்டைபுர நாட்டு வீரர்களை மீட்டு கோட்டைபுரம் நாட்டிற்கு திரும்புகிறார்.

கோட்டைபுர நாட்டு மன்னன் நாசரின் மகனான சரத்குமார், ரஜினியின் தங்கையான ருக்மணியை காதலிக்க, சரத்குமாரின் தங்கையான தீபிகா படுகோனே ரஜினியை காதலிக்கிறார். இந்த காதலை எதிர்த்தாலும், சூழ்நிலைக் காரணமாக சரத்குமார்-ருக்மணிக்கு நாசர் திருமணம் செய்து வைக்கிறார்.

இந்த நிலையில், தனது தந்தை கோச்சடையான் மீது வீன் பழி சுமத்தி மரண தண்டனை விதித்து, அவரை கொலை செய்த நாசரை கொலை செய்ய முயற்சிக்கும் போது ரஜினிகாந்த் படை வீரர்களால் பிடிபட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அதே சமயம் ரஜினியின் செயலால் கோபம் கொண்ட ரோமபுரி நாட்டு மன்னர் ஜாக்கி ஷெராப்பும், அவருடைய மகன் ஆதியும் ரஜினியை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் கோட்டைப்புர நாட்டுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

சிறையில் இருக்கும் ரஜினிகாந்த் எப்படி மீண்டு வந்து தனது தந்தையைக் கொன்ற கோட்டைபுர மன்னன் நாசரை பழிவாங்கி, அதே சமயம் ரோமாபுரி படையை விரட்டியடிக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

படம் ஆரம்பித்தவுடன், படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் யார் யார் என்று, புரிந்துகொள்வதற்காகவே ரசிகர்கள் அரை மணி நேரம் யோசிக்கிறார்கள். பிறகு அனைத்து யோசனைகளை மூட்டைக்கட்டி போட்டு விடுகிறது ராணாவின் தந்திர செயல். அதிலும் கோச்சடையானின் பிளாஸ் பேக் ஆரம்பித்ததும், அனிமேஷன் படம் என்பதையும் மறக்கச்செய்து படம் ஜெட் வேகத்தில் நகர்கிறது.

ரஜினிகாந்துக்கே உரிய அதிரடி ஸ்டைல்கள் இந்த படத்தில் குறைவாக இருந்தாலும், அந்த அனிமேஷன் உரும்வ நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. அதிலும் கோச்சடையானின் அந்த சிக்ஸ் பேக் தோற்றமும், அவர் ஆடும் சிவதாண்டவமும், நடுக்கடலில் நடக்கும் சண்டைக்காட்சியும் சூட்நுணியில் அமைர வைக்கிறது.

ரஜினியின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்ட விதத்தை எவ்வளவு பாராட்டுகிறோமோ, அதே அளவுக்கு நாசரின் கதாபாத்திர வடிவத்தையும் பாராட்ட வேண்டும். அனிமேஷன் கதாபாத்திரமாக இருந்தாலும், நடித்திருப்பது நாசர் தான் என்று 200 சதவீத நம்பிக்கையைக் கொடுக்கும் அளவிற்கு வில்லத்தனைக் காட்டியிருக்கிறது அந்த கதாபாத்திரம்.

ஜாக்கி ஷெராப், நாசர், ஆதி, ரஜினிகாந்த் ஆகியோரது உருவங்கள் மோசன் கேப்சர் மூலம் வடிவைக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தாலும், சரத்குமார், ருக்மணி, தீபிகா படுகோனே ஆகியோரது உருவாக்கத்தில் இன்னும் கொஞ்சம் முனைப்பு காட்டியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நாகேஷின் கதாபாத்திர உருவாக்கமும், அந்த வேடத்தின் நடிப்பும் நாசரை மீண்டும் பிறக்க வைத்திருக்கிறது.

என்ன தான் நம்ம ஹாலிவுட் அளவுக்கு யோசித்து படம் எடுத்தாலும், அந்த பாடல்களை வைத்து, "நாங்க கோடம்பாக்கத்து காரங்க" என்று நிரூபித்து விடுகிறார்கள். இருப்பினும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாகத் தான் இருக்கிறது. பின்னணி இசையின் மூலம் படத்தை ஒருபடி மேலே தூக்கி நிறுத்தும் ரஹ்மான், படத்தின் ஆரம்பத்தில் கதையை விவரிக்கும் தன்னுடைய குரலினாலும் நம்மை கவறுகிறார். வைரமுத்து மற்றும் வாலி ஆகியோரது பாடல் வரிகள் ஒவ்வொன்றும் கருத்துக்களை வாரி இறைக்கிறது.

அனிமேஷன் படமாக இருந்தாலும், அதை ரசிகர்களின் மனதில் இருந்து எடுப்பது, கே.எஸ்.ரவிகுமாரின் கதை, திரைக்கதை, வசனம் தான். எந்த இடத்திலையும் தொய்வு ஏற்படாத வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருக்கும் ரவிகுமாரின், வசனங்களும், காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

இந்திய திரையுலகில் முழுக்க முழுக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாராகும் படங்களுக்கு, இருந்த வரவேற்பு  இதுவரை எப்படியோ, கோச்சடையான் படத்திற்கு பிறகு அது அதிகரிக்கும் என்றே சொல்லலாம்.

கதாபாத்திரங்கள் வடிவமைப்பு, சில இடங்களில் அவைகளுடைய நடிப்பு என்று படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், இப்படத்தின் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின், தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ரஜினி என்ற நட்சத்திரத்தையும், எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி, இப்படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் 'கோச்சடையான்', இந்திய திரையுலகத்தை வேறு பரிணாமத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது...

இந்தியாவின் பிரதமராக அரை மணி நேரம் பொறுப்பு வகித்த 19 வயது வாலிபர்!

மன்மோகன்சிங் பிரதமர் பதவியிலிருந்த போது @PMOIndia என்ற பெயரில் டுவிட்டர் அக்கவுண்ட் ஒன்றை வைத்திருந்தார். பிரதமர் அலுவலக செய்திகள் அதன் வாயிலாக வெளியிடப்பட்டன. புதிய அரசு பொறுப்பேற்க தயாரானதும், பாலோவர்களை வேறு அக்கவுண்டுக்கு மாற்றி விட்டனர். இந்நிலையில் பெயர் மாற்றத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவே பழையபடி @PMOIndia அக்கவுண்ட், புதிய அரசின் பிரதமருக்கு வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் @PMOIndia முடக்கப்பட்டது. அப்போது தான் அந்த விபரீதம் நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் லக்னொவை சேர்ந்தவர் கைசர் அலி என்பவர் @PMOIndia என்ற பெயரில் எதேச்சையாக அக்கவுண்ட் தொடங்க டுவிட்டரும், அது போல யாரும் தற்போது அக்கவுண்ட் வைத்திருக்கவில்லை என்று கூறி கைசர்அலிக்கு அனுமதி கொடுத்து விட்டது.அனுமதி கிடைத்த அரை மணி நேரத்தில் கைசர் அலியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அப்போது தான், நாட்டின் பிரதமருக்கான டுவிட்டர் அக்கவுண்ட்டை தான் பயன்படுத்தியது கைசர் அலிக்கு தெரிய வந்துள்ளது.

இது குறித்து கைசர் அலி ”2011ம் ஆண்டில் டுவிட்டரில் நான் சேர்ந்தேன். முதலில் @Iamqaiserali என்ற பெயரில் அக்கவுண்ட் ஆரம்பித்து நான் டுவிட் செய்து வந்த நிலையில் நாடெங்கும் தேர்தல் ஜுரம் பரவியுள்ளதால், தேர்தல் சார்ந்த ஒரு யூசர் நேம் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு மே 20ம்தேதி, பெயர் மாற்று வேலையை செய்தேன். பிரதமர் பதவி குறித்து அப்போது மக்களிடையே பரபரப்பாக பேச்சு எழுந்ததால் PMOIndia என்பதை யூசர் நேமாக வைக்கலாம் என பெயர் தேர்வு செய்து கொடுத்து பார்த்தேன். அந்த பெயரை பயன்படுத்த டுவிட்டர் எனக்கு அனுமதித்தது.

அந்த அக்கவுண்ட்டை நான் ஆரம்பித்ததும், நாடு முழுவதிலுமிருந்து பல மக்கள், பிரதமர் என்று நினைத்து எனக்கு டுவிட் செய்தனர். என்னிடம் தேர்தல் தொடர்பாக கேள்விகளும் கேட்ட போதுதான் எனக்கு லேசாக நடுக்கம் ஆரம்பித்தது. தெரியாத்தனமாக, பெரிய தவறை செய்து விட்டதை உணர்ந்த நான், உடனடியாக மன்னிப்பு கேட்டு அதிலேயே டுவிட்டும் செய்தேன். அரை மணி நேரத்திற்குள் அந்த கணக்கு முடக்கப்பட்டது.

இது பற்றி தெரிந்ததும் எனது பெற்றோர் என்னை திட்டினாலும் நண்பர்கள் என்னை பிரதமராகிய யோகக்காரன் என்று பாராட்டினார்கள். நான் செய்த தப்புக்காக, என்னை சிறையில் போட்டு விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. நான் தவறு செய்யவில்லை. டுவிட்டர் அனுமதி அளித்தால் நம்பி அக்கவுண்ட் ஆரம்பித்தேன். இதற்காக நாட்டு மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். ஒரு சிறு சம்பவத்தை தான் பிபிசி செய்தி நிறுவனம் அரை மணி நேர பிரதமர் என சுவாரஸ்யமாக வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்லைன் புக்கிங்!

சென்னை, மதுரை, கோவை, ராமேஸ்வரம் உள்பட நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைக்கு ஆன்-லைன் மூலம் புக் பண்ணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உறுதி செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட் மற்றும் ஆர்ஏசி டிக்கெட் வைத்திருப்போர் ஆன்-லைனில் தங்கும் அறையைப் பதிவு செய்யலாம்.

அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கோவை, அகமதாபாத், அலகாபாத், அமேதி, புவனேஸ்வர், மும்பை சென்ட்ரல், உள்பட 67 ரயில் நிலையங்களில் உள்ள தங்கும் அறைகளுக்கு ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம். சென்ட்ரலில் 8 ஏசி தங்கும் அறைகள் உள்ளன. வாடகை ரூ. 825. விஐபி அறை வாடகை ரூ. 1393.

இந்த ரயில் நிலையங்களில் ஆன்-லைனில் தங்கும் அறையை பதிவு செய்வதற்காக அங்கே கம்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு www.railtourismindia.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். இதன்படி 60 நாட்களுக்கு முன்னதாக தங்கும் அறையைப் பதிவு செய்ய முடியும். உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் அல்லது ஆர்.ஏ.சி. டிக்கெட்டின் (இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்) பி.என்.ஆர். எண் மற்றும் புறப்படும் இடம், போய்ச்சேரும் இடத்தைக் குறிப்பிட்டு தங்கும் அறையை பதிவு செய்யலாம்.

முன்பதிவு இல்லாத டிக்கெட் வைத்திருப்போர், ரயில்வே பாஸ் வைத்திருப்போர், டிக்கெட் தவிர இதர ஆவணங்களுடன் பயணம் செய்வோர் ரயில் நிலையங்களில் உள்ள கம்ப்யூட்டரில் மட்டும் 2 நாட்களுக்கு முன்னதாக தங்கும் அறையைப் பதிவு செய்ய முடியும். இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ள ரயில் நிலையங்களின் பட்டியலில் சேலம், திருச்சி, நெல்லை, எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் சேர்க்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் இந்த ரயில் நிலையங்களையும் தங்கும் அறைக்கான ஆன்-லைன் புக்கிங் பட்டியில் சேர்க்க வேண்டும் என்றும் ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

                 ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.

ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் விக்கிரகங்களை உலோகத்தால் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு முக்கியமான ஒரு காரணம் உண்டு.

உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மையுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.

நீர்:
*****
கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில் நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில கோவில்களில் கல்லில் நீரூற்று வருவதை காணலாம்.

நிலம்:
*********
பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் கல்லில் உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.

நெருப்பு:
************
கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று:
**********
கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.

ஆகாயம்:
**************
ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான், கருங்கல்லில் கட்டப்பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.

இக்காரணங்களினால், இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம், அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன.இதுவே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.

அசத்தும் மைக்ரோ சினிமாக்கள்!

பளிச் ஐடியாக்களால் கவனம் ஈர்த்த அண்மைக்கால சயின்ஸ்ஃபிக்ஷன்  குறும்படங்கள் (Sc-Fi short films) இவை... உலகம் முழுவதும் பல்வேறு விழாக்களில் ஸ்பெஷல் கவன ஈர்ப்பு பெற்று அசத்தியவையும்கூட!

அலைவ் இன் ஜோபர்க் (Alive in joburg) :

2006-ல் ரிலீஸான இந்த ஆறு நிமிடக் குறும்படத்தை தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல இயக்குநர் நெய்ல் ப்ளோம்காம்ப் இயக்கினார். வசூலை வாரிக் குவித்த உலகின் நம்பர் ஒன் சயின்ஸ்ஃபிக்ஷன் படமான 'டிஸ்ட்ரிக்ட் 9’ஐ இயக்கியவர் இவர். டாக்குமென்ட்ரி ஸ்டைலில், ஏலியன்களுக்கு எழும் ஒரு பிரச்னையைத் தத்ரூபமாகப் படமாக்கி இருக்கிறார். இப்படியும்கூட ஒரு இயக்குநரால் யோசிக்க முடியுமா என்பதுதான், இந்தக் குறும்படம் நமக்கு உணர்த்தும் செய்தி.

மெமொரைஸ் (memorize)

கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்கள்... உலகில் உள்ள எல்லோரும் வலுக்கட்டாயமாக கூகுள் கண்ணாடியை மாட்டிக்கொள்ளச் செய்யப்பட்டு அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ரெக்கார்டு செய்யப்படுகின்றன என்றால் எப்படி இருக்கும்? உச்சா போவதில் ஆரம்பித்து எல்லாமே கண்காணிக்கப்பட்டால், நம் வாழ்க்கை எத்தனை நரகமாகும்? அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பள்ளித் தோழர்கள் எரிக் ராம்பெர்க் மற்றும் ஜிம்மி எரிக்ஸன் இந்த ஒன்லைனை வைத்து மிரட்டலான ஆக்ஷன் படத்தைத் தந்துள்ளனர். எதிர்காலத்தில் நம் எல்லோரின் உடலிலும் சிப் பொருத்தப்பட்டு நம் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என்ற 'எனிமா’ விஷயத்தை இந்தப் படம் சொல்கிறது. அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், இந்தப் படத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல எவ்வளவுதான் குற்றங்களைத் தடுக்க டெக்னாலஜியை போலீஸ் பயன்படுத்தினாலும், டெக்னாலஜியைப் பயன்படுத்தித் தப்பிக்கும் கூட்டம் ஒன்றும் இருக்கும் என்பதை பொளேர் என ஏழு நிமிடங்களுக்குள் சொல்கிறது.

கிரவுண்டட் ( Grounded):

வினோதமான ஒரு கிரகத்திற்குள் சிக்கிக்கொள்ளும் விண்வெளி வீரர் பற்றிய எட்டு நிமிட அழகியல் குறும்படம் இது. கெவின் மார்கோ என்பவர் இயக்கி இருக்கிறார். உலகப்புகழ் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் (தல அஜீத்தின் முகச் சாயலில் இருப்பாரே... அவரேதான்.) ஸ்பேஸ் ஒடிஸி சாயலில் இந்தப் படம் இருக்கிறது. படம் முடிவடையும் கடைசி நிமிடம், மென்சோகக் கவிதை!

ரோபார்ட்ஸ் ஆஃப் பிரிக்ஸ்டன் (robots of Brixton)   

2011-ல் கிப்வே டாபரே என்ற அனிமேஷன் டைரக்டர் இயக்கிய இந்தப் படம், எதிர்காலத்தில் மனிதர்களே இல்லாமல் எல்லாமே எந்திரமயமாக மட்டுமே இருக்கும் என்கிறது. உலகம் முழுக்க மனிதர்களைப்போல எந்திரங்கள் மட்டுமே இயங்கும் இந்த விஷ§வல் மிரட்டலாய் இருக்கிறது. (பாய்ஸ் பட 'காதல் இதுதான் அதுதான்’ பாடல் ஞாபகம் வருகிறது) எந்திரங்களும் ஒரு கட்டத்தில் குறுக்குவழியில் யோசித்து தங்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொள்ளும் என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஐந்து நிமிடங்களில் பின்நவீனத்துவ பாணியில் சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதையின் மையமே 'வரலாறு எப்போதும் ரிப்பீட் ஆகும். முதலில் துன்பியலாகவும் பிறகு காமெடியாகவும்’ கார்ல் மார்க்ஸின் தத்துவமேதான்!

ஃப்ரம் தி ஃபியூச்சர் வித் லவ் ( From the future with love):

அமெரிக்காவைச் சேர்ந்த கே-மைக்கேல் பரன்டியின் இந்த 12 நிமிடக் குறும்படம் 2095-ல் உலகம் எப்படி இருக்கும் என்பதை டெரராய் காட்டுகிறது. ஜில்லிடவைக்கும் இந்த த்ரில்லர் செமத்தியான ரோலர் கோஸ்டர் சவாரி அனுபவத்தைப் பார்த்த முதல் நிமிடத்திலேயே தருகிறது. ஓவராய் பயமுறுத்தி இருந்தாலும் எதிர்காலத்தில் இப்படித்தான் மனித இனம் வாழ நேரிடுமோ என்ற வருத்தத்தையும் அளிக்கிறது!

லைஃப்லைன் (Life line)


அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டோரி போர்டு ஆர்ட்டிஸ்ட் -கம்- ரைட்டர் ஆண்ட்ரூஸ் இயக்கிய இந்த ஆறு நிமிடக் குறும்படம் காதலின் ஆழத்தை டைம்மெஷின் மூலம் உணரவைக்கிறது. வயதான ஒருவர் தன் காதலியை டைம்மெஷினில் ஏறி வெவ்வேறு காலப் பரிமாணத்துக்குள் நுழைந்து தேடிக் கண்டுபிடிக்கிறார். குழம்பவைக்கும் காலச்சுழற்சிதான் வில்லன். காதல் கைகூடி தன் காதலியின் கரம் சேர்கிறார். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் விலை என்ன என்பதே கிளைமாக்ஸ். பிரபல இயக்குநர் வோங் கர் வாய்யின் உலகப்புகழ் பெற்ற 'இன் தி மூட் ஃபார் லவ்’ படத்தின் ஆறு நிமிட மினியேச்சராய் படம் இருப்பது அழகோ அழகு!

கார்கோ (cargo)

இந்த Sci-Fi குறும்படங்களில் லிஸ்ட்டிலேயே மிகவும் சிலிர்க்கவைக்கும் படம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பென் ஹாவ்லிங் மற்றும் யோலன்டா ராம்கே என்ற இரட்டை இயக்குநர்கள் நடித்து இயக்கியிருக்கிறார்கள். ஸோம்பிக்கள் பற்றி படம் எடுத்தாலே க்ளிஷேவாய் கொலை வெறியோடு துரத்தும் சவ மனிதர்களைக் காட்டி நம்மைப் பயமுறுத்துவதுதானே நடக்கும்? இதுவும் ஸோம்பிக்கள் பற்றிய டெரர் படம்தான். ஆனால், அழகான தந்தைப் பாசத்தை உலகுக்கு உணர்த்துகிறது. ஏழு நிமிடங்களுக்குள் மிரட்டலான மற்றும் நெகிழ்ச்சியான அனுபவம் நமக்கு. பார்த்தே ஆக வேண்டிய உன்னதமான படைப்பு!

அஜீத்தை எரிச்சல் அடைய வைத்த அனுஷ்கா...பரபரப்பு தகவல்..?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் ‘தல 55′ என்ற படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என்று இரண்டு நாயகிகள். அதில் அனுஷ்கா வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனுஷ்காவால் பட வேலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.

தல 55′ படத்தில் நடிக்கும் அனுஷ்காவின் கால்ஷீட் பிரச்சனை அஜீத்தை எரிச்சல் அடைய வைத்துள்ளதாம்.
தெலுங்கு அனுஷ்கா தெலுங்கில் பாகுபலி, ருத்ரம்மா தேவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர அவர் அஜீத் படத்திலும் நடித்து வருகிறார்.

டேட்ஸ் தெலுங்கில் 2 பெரிய படங்களில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு டேட்ஸ் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தல 55 அஜீத், அனுஷ்தா வரும் காதல் காட்சிகள் ரகசிய இடத்தில் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அனுஷ்காவின் கால்ஷீட் சொதப்பலால் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பாதிக்கப்பட்டது.

அஜீத் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதால் அஜீத் எரிச்சல் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் கௌதம் மேனனை அணுகி பிரச்சனையை தீர்க்குமாறு தெரிவித்துள்ளார்.

லிங்கா கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்திலும் அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் அந்த படத்திற்கு இன்னும் அவர் டேட்ஸ் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரஜினியின் லிங்கா படப்பிடிப்பில் சோனாக்ஷிக்கு 50 போலீஸ், 30 பவுன்சர்கள் பாதுகாப்பு!

மைசூரில் நடக்கும் ரஜினியின் லிங்கா படப்பிடிப்புக்கு இதுவரை இல்லாத அளவு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினி – சோனாக்ஷி காட்சிகள் படமாக்கப்பட்ட நாட்களில் சோனாக்ஷிக்கு மட்டுமே 50 போலீசார், 30 பவுன்சர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்களாம்.

சலசலப்பு லிங்கா படப்பிடிப்பில் ரஜினியும் சோனாக்ஷியும் நடித்துக் கொண்டிருந்தபோது, வெளியில் அடிக்கடி கூச்சல் கேட்டுக் கொண்டே இருக்குமாம். இதை கவனித்த ரஜினி, ‘ஏன் இத்தனை கூட்டம், சத்தம்… இதுவரை இப்படி இருந்ததில்லையே,’ என்று கூறினாராம்.

பாதுகாப்பை மீறி.. சில முறை இந்த பாதுகாப்புக் கெடுபிடிகளையும் உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த ரசிகர்கள் ரஜினியைப் பார்த்துவிடத் துடித்திருக்கிறார்கள். ரஜினியுடன் சோனாக்ஷியும் இருக்கும் காட்சியைப் பார்க்க பலரும் ஆவலுடன் வந்தார்களாம்.

50 போலீஸ், 30 பவுன்சர்கள் மைசூர் அரண்மனைப் பகுதியில் ரஜினி – சோனாக்ஷி காட்சிகள் எடுக்கப்பட்ட போது, 50 போலீசார் மற்றும் 30 தனியார் பவுன்சர்கள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டார்களாம்.

இதான் முதல் முறை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து படத்தின் தயாரிப்பு நிர்வாகி சுரேஷ் குமாரசாமி கூறுகையில், ‘இதுவரை ரஜினியின் எந்தப் பட ஷூட்டிங்குக்கும் இந்த அளவு காவலர்கள் நியமிக்கப்பட்டதில்லை. இதுதான் முதல் முறை,” என்றார்.

சோனாக்ஷி இவ்ளோ பிரபலமா? மேலும் அவர் கூறுகையில், “ரஜினி சார் ஒரு சகாப்தம். அவருக்கான ரசிகர் கூட்டம் அனைவருக்கும் தெரியும். அவருடன் சோனாக்ஷியும் இருந்ததால் ரசிகர்கள் இன்னும் உற்சாகத்துடன் பார்க்க வந்தனர். சோனாக்ஷி இவ்வளவு பிரபலமாக இருப்பார் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை,” என்றார்.

ரோபோ சமயத்தில் கூட இப்படி இல்லை… முன்பு ரஜினி – ஐஸ்வர்யா ராய் நடித்த ரோபோ பட ஷூட்டிங்கில் கூட இந்த அளவு போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டதில்லை, பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டதில்லை என்றும் சுரேஷ் குமாரசாமி தெரிவித்தார். ஆக, ஐஸ்வர்யா ராயை விட சோனாக்ஷிக்கு ரசிகர்களிடம் ஏக மவுசு என்கிறார்களோ..!

சிம்புவை கடுப்பேற்றி வரும் ஹன்சிகா?

ஹன்சிகா தனது முன்னாள் காதலரான சிம்புவை கடுப்பேற்றி வருகிறாராம். ஹன்சிகா சிம்புவை பிரிந்த பிறகு படங்களில் பிசியாக உள்ளார். சிம்புவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். சிங்கிளாக இருப்பது ஜாலியாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹன்சிகா செய்யும் செயல்கள் சில சிம்புவை கடுப்பேற்றும் விதமாக உள்ளது என்று கூறப்படுகிறது.நெருக்கம் சிம்புவுக்கு யார், யாரை எல்லாம் பிடிக்காதோ அவர்களுடன் ஹன்சிகா நட்பாக உள்ளாராம். காதல் முறிவுக்கு பிறகு நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் ஹன்சிகா.

ஆர்யா சேட்டை படத்தை அடுத்து ஆர்யாவுடன் சேர்ந்து மீகாமன் படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. படப்பிடிப்பில் ஆர்யாவின் தோளில் சாய்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹன்சி.

சிம்பு ஹன்சிகா ஆர்யாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ரசிகர்களுக்காக அல்ல சிம்புவை கடுப்பேற்ற தான் ட்விட்டரில் போட்டுள்ளார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஜாலி படப்பிடிப்பு தளத்தில் ஹன்சிகா எப்பொழுதும் சிரித்துப் பேசி ஜாலியாக உள்ளாராம். வதந்தி ஹன்சிகா ஜெயபிரதாவின் மகன் சித்தார்த்தை காதலிப்பதாக சிம்பு தான் வதந்தியை பரப்பிவிட்டதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் டூ விஜய் சேதுபதி: தனுஷின் திட்டம்!


சிவகார்த்திகேயனுடன் டானா படத்தை அடுத்து தனுஷ் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதியை, ரம்மி மற்றும் பண்ணையாரும் பத்மினியும் சரிவிலிருந்து மீட்கும் திட்டதில் இருக்கிறாராம் தனுஷ். இப்படத்தை இயக்கப்போவது, உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி.

வணக்கம் சென்னை படத்திலேயே தன்னை ஒரு கமர்ஷியல் பட இயக்குனராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட கிருத்திகா. அடுத்த ஸ்கிரிப்டில் இன்னும் ஸ்ட்ராங்காக  களம் இறங்கப்போகிறாராம்.