Saturday, May 24, 2014

மணிரத்னம் படத்தில் தெலுங்கு நடிகர்கள்…!!

  'கடல்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்தைப் பற்றிய எந்த விதமான அறிவிப்பையும் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். ஆனாலும், அவரது படத்தில் தெலுங்கு நடிகர்களான நாகார்ஜுனா, மகேஷ் பாபு ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கப் போகிறார்கள் என கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளிவந்தன.

என்ன ஆயிற்றோ தெரியவில்லை…. திடீரென அந்த படத்திலிருந்து அவர்களிருவருமே விலகி விட்டார்கள் என்ற செய்தியும் வெளியானது. அவர்களின் விலகலுக்குக் காரணம் சம்பளப் பிரச்சனைதான் என்கிறார்கள். பொதுவாகவே மணிரத்னம் தயாரித்து, இயக்கும் படங்களுக்கு நட்சத்திரங்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் வழக்கமில்லை என்பது திரையுலகில் அனைவருக்குமே தெரியும்.

தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் எண்ணத்தில்தான் மணிரத்னம் தெலுங்கு நடிகர்களை நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஏனென்றால், தமிழ் நடிகர்களை தெலுங்கில் அவ்வளவாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், தமிழில் அப்படியல்ல, மற்ற மொழி நடிகர்களை சீக்கிரமே ஏற்றுக் கொள்வார்கள். மேலும், தெலுங்கிலும் பெரிய அளவில் பிசினஸ் செய்ய முடியும்.

நாகார்ஜுனா, மகேஷ்பாபு சம்மதிக்கவில்லை என்றதும் அதோடு நின்று விடாமல், சுஹாசினி ஏற்பாட்டின்படி கடந்த சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவியை சந்தித்துப் பேசியிருக்கிறார் மணிரத்னம். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவையும், அவருடைய சகோதரி மகன் அல்லு அர்ஜுனையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கும் எண்ணத்தை வெளியிட்டாராம் மணிரத்னம். அவரும் சம்மதித்து விட்டதாகத் தெரிகிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.

0 comments:

Post a Comment