Saturday, May 25, 2013

ஸ்மார்ட் போன் மூலம் உணவு மற்றும் நீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ்களைக் கண்டறியமுடியும்!1 புதுசு கண்ணா புதுசு!







                     இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப் படும் மென்பொருள்கள் நாள்தோறும் புதிது புதிதாக கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள்.  




                   அவைகளும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது நோய்க் கிருமிகளை கண்டறியும் ஒரு புதிய மென் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 







                 இதனை அமெரிக்காவின் இலினோய்ஸ் மாகாணத்தில் உள்ள இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 








                  இந்த மென்பொருள் ஸ்மார்ட் போனில் உள்ள கேமரா மற்றும் அதன் செயல்பாட்டுத் திறனை உயிர் உணரும் கருவியாக பயன்படுத்தி சுற்றுச் சூழலில் உள்ள நச்சுக்கள், பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை கண்டறியும் திறன் கொண்டது.




               இந்த முறையின் மூலம் தற்காலிக கள மருத்துவமனைகளில் சோதனைகளையும், உணவுப் பொருட்களின் மாசுகளையும் மிகக் குறைந்த செலவில் உடனடியாக கண்டறியலாம் என்று ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்தனர். 





               இதனைக்கொண்டு நிலத்தடி நீரில் உள்ள நோய்க்கிருமிகளைக் கூட கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




  <<<<O>>>>>   GoodLuckAnjana    <<<<<O>>>>>



 Smartphone turned into handheld biosensor to detect toxins, pollutants and pathogens:-

      Washington:


                       University of Illinois at Urbana-Champaign researchers have developed a cradle and app for the iPhone that uses the phone’s built-in camera and processing power as a biosensor to detect toxins, proteins, bacteria, viruses and other molecules. 


 மேலும் தகவல்களுக்கு இங்கே வரவும்...




ஆப்லைனில் மின்னஞ்சல் பார்க்கலாம்! & மின்னஞ்சல் அனுப்பலாம்!







                   ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.




                  ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஆன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே செய்யலாம்.






                   இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும். அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.







                  இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள்.




               இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள்.








              உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow OfflineMail என்பதை தேர்வு செய்யவும்.



             இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் னில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள்.



              அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும்.



              இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம் அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.




               மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print,Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஆப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.

பாட்டுத் தலைவனின்(T.M.Soundararajan) - நினைவுகள்






                  பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார். 



                  இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சௌந்தரராஜன் இன்று மதியம், சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார்.

 

 
                   டி.எம்.எஸ்…. தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்: தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்!



                டி.எம்.எஸ். என்பதில் உள்ள `எஸ்’ என்றால், செளந்தரராஜன்: `எம்’ என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்: `டி’ என்பது அவரின் குடும்பப் பெயர் `தொகுளுவா’, கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது!







                 டி.எம்.எஸ்- ஸீக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு (எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி), முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்!



               மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.



              டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் `ராதே என்னை விட்டு ஓடாதேடி’ ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதே பாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்!



              மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்தது இல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விஷேங்களுக்கும் சென்று, பஜனைப் பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய், வெற்றிலை பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஒடியது!






            டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும் `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்….’ `உள்ளம் உருகுதய்யா முருகா’, `சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா’, `மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்!



              டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய `கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’ இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்திப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்!



             `அடிமை பெண்’ படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். `பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு. அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது. அந்தப் பாடல்தான். `ஆயிரம் நிலவே வா!’





                 பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். `இல்லாட்ட ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா! `பாவம், டி.எம்.எஸ்ஸீக்கு என்ன கஷ்டமோ!’ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளிவேஷம் தேவையா இருக்கு’ என்பார்!




               கவிஞர் வாலியை த் திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல்.`இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ் போட்டது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி!



                  `நீராரும் கடலுடுத்த..’ என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், `ஜன கண மன’ என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன் வராத நிலையில் டி.எம்.எஸ்ஸீம் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது!



                 தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸீக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்!




                வசந்தமாளிகை’ படத்தில் வரும் `யாருக்காக’ பாடலை பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். `அதெல்லாம் வீண் வேலை’ என்று தயாரிப்பாளர் மறுத்துவிட `எக்கோ எஃபெக்ட்’ வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்!



                         வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் `யாரந்த நிலவு… ஏன் இந்தக் கனவு’. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்தை விட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்!







                        காஞ்சிப் பெரியவர். புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை `கற்பகவல்லி’ பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்!



                      கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்: அவன் காதலித்து வேதனையில் `சாக வேண்டும்’என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் `சாகவேண்டும்’ என்பதை `வாடவேண்டும்’ என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்!



                          *நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையவாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு விட்டு. பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண்டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போது தான்!



                            *எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி ஜெயலலிதா என அனைவைரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்!



                         *`பாகப் பிரிவினை’ படத்தின் 100- வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ். விழாவில் `கடவுள் வாழ்த்து’ பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன!







                         `நவராத்திரி’ படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்!



                      `பட்டினத்தார், `அருணகிரிநாதர்’ என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்!



                     *தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.(அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்.)



                     *சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர தனிப்பட்ட நண்பர்கள் வட்டாராம் என்று டி.எம்.எஸ்ஸீக்கு எதுவும் இல்லை.



                     *எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ் சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்!






 Awards and honours

  • Padma Shri by the Indian government in 2003.
  • Kalaimamani from Tamil Nadu
  • Tamil Nadu state awards many years continuously from early 60's and in 1975,it was shared with [[K. J. Yesudas]
  • T.M.S. was the beneficiary of the first stereo recording in South India for a Tamil devotional song "Mannanalum Thiruchenthooril Mannaven"
  • "Padakar Thilakam" pattam
  • "Singha Kuralon" pattam
  • "Bharat Kalajar" award
  • "Isai Chakravarthi" pattam
  • "Pesum Padam" award over 21 times, out of which from 1954 to 1969, continuously 15 times.
  • "Gnanakala Bharathi" Pattam
  • "Geethavaari" Pattam
  • "Karpagath Tharu Mannar" Pattam
  • "Geetharanjana Vaarithi" Pattam
  • "Arutpa Isaimani" Pattam
  • Honorary Doctorate
  • MGR gold medal winner
  • Former chief minister Tamil Nadu.M D Bhakthavalsalam recognition award 1963
  • Former Chief Minister Tamil Nadu Kamaraj Nadar recognition award
  • "IsaiKadal pattam" from KaviArasar Kannadasan award 1969
  • "EzhilIsai Mannar" from Former Chief Minister K.Karunidhi award 1970
  • Former Chief Minister"Arinjor AnnaDhuaria" recognition award 1964
  • "Kural Arasar" Pattam
  • Chief Minister "JayaLalitha" recognition
  • M. K. Thyagaraja Bhagavathar Lifetime achievement award from Tamil Nadu.
  • Tamil Nadu Musical Artist lifetime achievements award.
  • Tamil Film Fans award,(a very old )more than 22 times early 1950s, 1960s and 1970s.
  • P.Susheela trust recognition award
  • "Mega TV Amutha Ghanam" recognition award
  • Lifetime achievement for "MGR memorial award"
  • Lifetime achievement for "Shivaji memorial award".
  • "Sourashtra community recognition" award
  • Tamil Nadu Chief minister M. Karunanidhi recognition at Madurai,conducted by Alagiri.2010
  • Karuppai Muppanar recognition 1992
  • Periyar RamaSwami Naikkor recognition 1959
  • Raj TV for Raja Geetham recognition award 2006
  • Malaysian Tamil fans recognition award
  • Singapore Tamil Fans recognition award more than several times
  • French Tamil Fans recognition award
  • United Kingdom Tamil fans recognition award
  • 20th Century top play back singer from South African,City Mayor through Tamil fans 1995
  • U.S.A Tamil fans recognition award
  • Tamil Fans recognition from Canada award
  • Personal appreciations from the Prime Minister late Mrs. Indira Gandhi
  • Personal appreciations from President Dr. Sarvepalli Radhakrishnan
  • Personal appreciation from President VenkatRaman
  • Personal appreciation from President V V Giri
  • Personal appreciation from Prime Minister late Morarji Desai
  • Australian Tamil Fans appreciations in Sydney,Brisbane, Melbourne,and Perth awards
  • Personal appreciation from Sonia Gandhi in the year 1992 at Perumpathoor
  • Kairali Swaralaya Yesudas lifetime achievements award for the year 2012.

இனி டச் க்கு நோ! வந்துவிட்டது சென்சார் மொபைல்








                 மொபைல் போனிலுள்ள தொடுதிரையையே தொடவே சோம்பெறித்தனம் வந்து விட்டது நமக்கு எனலாம்.
             இனி நாம் டச் ஸ்கிரினை தொடக் கூட தேவையில்லை.அதற்காகவே தற்போது புதிதாக ஒரு மொபைலை வடிவமைத்துள்ளார் கோவா கல்லூரி மாணவி ஒருவர். 
            ஆண்ட்ரியா கோலகா என்பது இவர் பெயர்,இவர் வடிவமைத்த மொபைல் போன் நம் தொட்டு பயன்படுத்த தேவையில்லை நம் சைகையிலேயே மொபைல் செயல்படும். 
           அத்தகைய புது சென்சார் ஒன்றை வடிவமைத்திருக்கிறார் இந்த மாணவி.
          இவர் MIT யுனிவர்சிட்டியில் பயின்று வரும் மாணவி, இந்த கண்டுபிடிப்புக்காக இவருக்கு 50 இலட்சம் ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

           இதன் மூலம் மொபைல் போன்களின் அடுத்த கட்டத்திற்க்கு இவர் அடித்தளமிட்டுள்ளார்.
இதோ ஆண்ட்ரியா வடிவமைத்த மொபைல் போனின் புகைப்படங்கள்............











இனி நீங்களும் தலைவர்தான்!!!!








              காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள், பிரபலங்கள் போன்றவர்களது படங்களைத்தானே அஞ்சல்தலையில் பார்த்திருப்பீர்கள். இனி நீங்கள், உங்கள் முகத்தையும் பார்க்கலாம். அதிகம் செலவாகாது. வெறும் முந்நூறு ரூபாய்தான்!



                   இங்கே உள்ள உள்ளூர் அரசியல் தலைவர்கள் சிலருக்கு பிரான்ஸ் அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது என்றெல்லாம் வரும் செய்திகளின் பின்னணி ரகசியம் இதுதான்.




                     ஆனால், நம் நாட்டில் இதுவரை ஒருவருக்கு அஞ்சல் தலை வெளியிடுவது என்பது குறித்து, அரசுதான் முடிவெடுக்க முடியும். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சாதாரண மக்களின் முகங்களும் அஞ்சல்தலையில் வெளியிடப்படும் திட்டம் ஒன்றினை இந்தியத் தபால்துறை, தில்லியில் தொடக்கி வைத்தது.



              இத்திட்டத்துக்கு, ‘எனது அஞ்சல்தலை’ என்று பெயரும் சூட்டப் பட்டது. பிரமாதமான வரவேற்பு. தொடர்ச்சியாக உ.பி., மும்பை மாதிரி வடஇந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் அஞ்சல்தலையில் இடம்பெற்று விட்டார்கள். இதோ இப்போது அஞ்சல்தலையில் தமிழ் முகங்களும் சிரிக்க, நம் ஊருக்கும் வந்துவிட்டது ‘எனது அஞ்சல்தலை’ திட்டம்.



                உயிருடன் இருக்கும் யாரும் இந்தத் திட்டத்துக்காக விண்ணப்பிக்கலாம். ரூ.300/- கட்டணம் செலுத்தினால், 12 அஞ்சல்தலைகள் வழங்கப்படும்.



           இந்த அஞ்சல் தலைகளை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பும் கடிதங்களில் ஒட்டி, அவர்களை  அசத்தலாம்.



           விண்ணப்பிப்பவர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும் ஏதேனும் ஓர் அடையாள அட்டையின் நகலை (டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவை) சமர்ப்பிக்க வேண்டும்.



            தற்போது தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் இருக்கும் சிறப்பு அஞ்சல்தலை சேகரிப்பு மையங்களில் மட்டுமே, ‘எனது அஞ்சல் தலை’ திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி இருக்கிறது.



            சென்னையில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஒருவாரத்திலும், மற்ற மையங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு இரண்டு வாரங்களிலும் அஞ்சல்தலைகள் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.



              பொதுமக்களின் வரவேற்பைப் பொருத்து, விரைவில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்" என்று போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஸ்ரீமெர்வின் அலெக்ஸாண்டர் உறுதியினை அளித்திருக்கிறார்.


 
            மறைந்த நமது தாத்தா, பாட்டிகளின் முகத்தை அஞ்சல் தலையில் இடம் பெறச் செய்யவைக்க இத்திட்டத்தில் இப்போதைக்கு இடமில்லை.



          ஆனால், உயிரோடிருக்கும் நம் அம்மா, அப்பா ஆகியோர் (அடையாள அட்டை இருப்பின்) விண்ணப்பிக்கலாம்.



044-28543199 என்கிற தொலைபேசி எண்ணில் பேசினால், 



    ‘எனதுஅஞ்சல் தலை’ திட்டம் குறித்த சந்தேகங்களுக்கும் இந்தியத் தபால்துறை விளக்கமளிக்கிறது.

பசியைத் தூண்டும் மருந்து (Buclizine) - மற்ற நாடுகளில் தடைசெய்யப்பட்டது? அவசியம் படியுங்க!! குழந்தைகளைக் காப்பாற்றுங்க!!!








                    பல ஆண்டுகளாக பல்வேறு மீடியாக்கள் சொல்லி வந்த தகவல்தான். ஆனாலும் உலகின் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை, இந்தியாவில் மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்ற உண்மையை சமீபத்தில் பாராளுமன்றக் குழு ஒன்று வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





                  அதிலும் பெரியவர்களுக்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் இத்தகைய மருந்துகள் இங்கு அளிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. 








                   இத்தனைக்கும் சுகாதாரத்துறையும், ஒழுங்குமுறை ஆணையமும், இம்மருந்துகளைத் தடை செய்யும் திட்டத்தைச் செயல்படுத்தாமல் குழப்பத்தில் இருக்கின்றன.மேலும் பாராளுமன்றக் குழு, கடந்த ஆண்டு மே மாதமே இத்தகைய மருந்துகளைத் தடை செய்யும்படி உத்தரவிட்டது. இருப்பினும், இம்மருந்துகள் இன்னும் சந்தையில் இருந்து வருகின்றன. 





                        இவற்றை, சட்டத்திற்கு புறம்பான முறையில் அனுமதித்த, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகளின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.






 


                   அண்மையில் பாராளுமன்றக் குழு மேற்கொண்ட செயல் நடவடிக்கை அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு மே மாதம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்த மருந்துகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தது




                    மேலும், அந்த மருந்துகள் தயாரிக்கப்பட்ட நாடுகளே அவற்றின் விற்பனையைத் தடை செய்திருந்ததால், அவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது என்ற விதிமுறையும் சுட்டிக்காட்டியுள்ளது. 








                    பெல்ஜியம் நாட்டில் ஒவ்வாமைக்காக தயாரிக்கப்பட்ட பக்லிசைன் என்ற மருந்து, இந்தியாவில் பசியைத் தூண்டும் காரணத்திற்காக குழந்தைகளுக்கும், சிறுவயதினருக்கும் அளிக்கப்படுகின்றது. முறையான மருத்துவ ஆய்வுகளோ, மருத்துவ ஆராய்ச்சியாளர்களோ, உறுதி செய்யாத இந்த மருந்தினை பெல்ஜியம் தடை செய்துள்ளது.








                    இதேபோல், டென்மார்க் நாட்டில் தயாராகும் மனச்சோர்விற்கான மருந்து என்று இங்கு அனுமதிக்கப்படும் தீன்சிட் என்ற மருந்து அந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். 




                         இது குறித்து உத்தரவிட்டு பத்து மாதங்கள் கழிந்த பின்னும், நடைமுறைப்படுத்தப்படாத இதே நிலை நீடித்தால், மருத்துவ சுகாதார நெறிமுறைகளைக் காப்பது என்பது இயலாத ஒன்றாகிவிடும் என்று பாராளுமன்றக் குழு எச்சரித்துள்ளது.




 O<>O<>O<>O<>O<>O<>O<>O





Authorities unlawfully approve banned drugs, go scot-free


                    People of this country, even babies, are being given drugs banned in other parts of the world. The health ministry and regulatory authority responsible for ensuring the safety and efficacy of medicines sold here continue to dither over banning these drugs despite a parliamentary committee specifically recommending an immediate ban on such drugs.



கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள கட்டுரையைப் படிக்கவும்.



Authorities unlawfully approve banned drugs, go scot-free







                        People of this country, even babies, are being given drugs banned in other parts of the world. The health ministry and regulatory authority responsible for ensuring the safety and efficacy of medicines sold here continue to dither over banning these drugs despite a parliamentary committee specifically recommending an immediate ban on such drugs.









                    No action
has been taken against officials in the regulatory authority, Central Drug Standards Control Organization (CDSCO), who gave unlawful approval for these drugs to be marketed in India despite parliamentary committee seeking immediate action against them.





                 In its action taken report (ATR), on the recommendations of the parliamentary committee made in May last year, the health ministry seems to speak with a forked tongue.





                 In the ATR the ministry stated that it had decided to suspend marketing approval of all drugs prohibited for sale in the US, UK, EU, Australia, Japan and Canada for safety reasons but has not banned a single such drug since May 2012. The department-related parliamentary standing committee on health and family welfare has made specific references to several drugs which were either banned for adverse reactions or were being used in India for treatments for which they were not given approval.







                     For instance, the committee referred to the unlawful approval of Buclizine, a drug of no public health importance to India and which was being given to babies and children. This anti-allergic drug was approved in June 2006 for appetite stimulation without clinical trials and without consulting experts for use in children. This was done despite the fact that the company producing the medicine itself states that "because of lack of approved clinical studies and scientific data", Buclizine was not meant for appetite stimulation.








                       Even in Belgium, the originator country of Buclizine, it is not approved for appetite stimulation. Drugs and Cosmetic Rule 30-B bans the import and marketing of any drug the use of which is prohibited in the country of origin. The committee has sought action against officials in the CDSCO who approved Buclizine to be marketed for appetite stimulation in gross violation of the rules. Instead, the health ministry states that the DCGI will constitute an enquiry committee to look into the matter, a move the committee calls "dilatory tactics being adopted by the Ministry to somehow delay action against the wrongdoers".








                      Similarly, another medicine, Deanxit, an anti-depressant, was approved in 1998 flouting several rules. Deanxit is a combination of two drugs one of which has never been approved in India, plus, all combinations are treated as new drugs and can be used only after the necessary clinical trials. However, Deanxit seems to have no import permission and no document showing any clinical trials. Moreover, Deanxit was and continues to be prohibited for sale and use in Denmark, its country of origin.














                      And, Drugs and Cosmetic Rule 30-B bans the import and marketing of any drug the use of which is prohibited in the country of origin.








                      The committee felt that the DCGI should have gone into the reasons for the drug not being marketing in major developed countries such as United States, Britain, Ireland, Canada, Japan and Australia where there is greater demand for anti-depressants.





                  The committee sought immediate "concrete and exemplary action" by the ministry against functionaries of the CDSCO for the unlawful approval and reversal of the approval stating that it was "an open and shut case that needs immediate action, not promise of prolonged fruitless deliberation designed to delay action". "Why should the people of India consume a questionable drug approved in a questionable manner even for a day longer, more so when the drug regulator of the innovator country Denmark is not allowing its use within its jurisdiction but allowing its export to developing countries with weak or non-existent drug regulation? ", asked the committee.








                     In its May 2012 report the committee referred to several such cases of unlawful approval of drugs. But ten months later, beyond promising to constitute inquiry committees, no action has been taken against the officials who colluded neither have the approvals for these drugs been withdrawn.






                  "If perpetrators of such illegalities and collusive acts which are detrimental to public health are allowed to go scot-free then the total collapse of an ethical health care system is inevitable," stated the committee.