Sunday, June 1, 2014

விக்ரமால் முருகதாஸுக்கு நடந்த சோகம் - ஒரு ப்ளாஷ்பேக்..!

இந்த தலைப்பை கேட்ட உடனே ஏதோ ஒரு கதையை சொல்ல போகிறோம் என்று நினைக்க வேண்டாம் (இது கதையல்ல நிஜம்)

ஏ.ஆர்.முருகதாஸின் வளர்ச்சி இன்று பிரமிக்கதக்க நிலையை அடைந்திருப்பது என்றால் அது அவர் கடந்து வந்த பல இன்னல்களின் வெளிப்பாடு தான் இந்த வெற்றி என்று கூற வேண்டும்.

என்றோ ஒரு நாள் நடந்த ஒரு சம்பவத்தை இன்று நான் ஏன் கிளற வேண்டும் என்று நினைக்கும் உள்ளங்களுக்கு விஷயம் இருக்கு.

தற்போது விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்துக் கொண்டு இருப்பது நமக்கு தெரிந்த விஷயம். ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் என்றவுடன் விக்ரமிற்கு வேர்த்து விருவிருத்து விட்டதாம்.

ஏனென்றால் ஏ.ஆர்.முருகதாஸ் ரமணா படம் முடித்திருந்த சமயம். அப்போது ரமணா படத்தின் சர்ச்சையில் சிக்கி இருந்தாலும் பரவாயில்லை என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் விக்ரம் வெச்சு படம் பண்ண போரும். அதனால நீங்க ஒரு கதையை ரெடி பண்ணி தாங்க என்று முருகதாஸிடம் அட்வான்ஸ் கொடுத்தாராம்.

கொடுத்த வேகத்தில் கதையை ரெடி பண்ணிய முருகதாஸ் விக்ரம் கிட்ட கதையும் சொன்னாராம். அதற்கு பிறகு ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் பேசிய விக்ரம், ‘கதையெல்லாம் ஓ.கே தான், பட் அந்த பையன் மேல எனக்கு நம்பிக்கையில்ல’ என்று சொல்லி பல மாதங்கள் ஏ.ஆர்.முருகதாஸை காக்க வைத்து விட்டு கடைசியில் படம் வொர்கவுட் ஆக வில்லை என்று சொல்லி அனுப்பிவைத்தாராம்.

இந்த இடை பட்ட நேரத்தில் படம் கிடைத்துவிடும் என்ற சந்தோஷத்தில் தவணை முறையில் டி.வி, சோபா, கார் இன்னபிற அத்தியாவசிய பொருட்களையும் வாங்கியிருந்தாராம் முருகதாஸ்.

ஆனால் கடைசியில் அவர் கண் முன்பே எல்லாவற்றையும் ஒரு நாள் அள்ளிக் கொண்டு போனார்கள்.

காலங்கள் கடக்க முருகதாஸ் தற்போது இயக்குனர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் ஒரு நல்ல இடத்தை பிடித்து விட்டார். இந்த தருணத்தில் தான் விஜய் மில்டன் கோலிசோட ஹிட்கு பிறகு விக்ரம் கிட்ட கதை சொல்ல ஓகே ஆனது.

தற்போது எதையும் மனதில் வைத்து கொள்ளாமல் விக்ரம் ஓகே ஆனவுடன் ‘விக்ரமுக்கு அட்வான்ஸ் பணத்தை என் கையால் தான் கொடுப்பேன்’ என்று கூறிவிட்டாராம் முருகதாஸ்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் பல இன்னல்களும் துன்பங்களும் இருக்கும் என்பதற்கு இந்த செய்தி ஒரு சாட்சி.

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு !

உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம்.

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.

* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா !!

பிரசவத்திற்கு பின் சாப்பிடக்கூடாத உணவுகள்..?

குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிக மிக முக்கியம். தாய் பாலை மட்டுமே உணவாக அருந்தும் குழந்தைக்கு அந்த பாலை தூய்மையாக கொடுக்க  வேண்டும். பல நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியாக தாய்ப்பால் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மருத்துவத் தன்மைக் கொண்ட  தாய்ப்பாலை தூய்மையாக கொடுக்க வேண்டும்.

இந்த பாலின் தன்மை வெளி உணவுகளால் கெடாமல் பார்த்து கொள்வது தாயின் கடமையாகும். அலர்ஜி ஏற்படுத்தும் சில உணவுகளை தாய்  உட்கொள்வதால், அது குழந்தையின் பாலில் கலந்து குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆகவே அந்த  உணவுகள் எது என்று ஆராய்ந்து அதை தவிர்க்க வேண்டும்.

இந்த கடமையை செய்தாலே ஆரோக்கியமான உடலையும், வலிமையையும் குழந்தைக்கு கொடுக்க முடியும். பெற்றோர்களுக்கு இருக்கும் அலர்ஜி  குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குழந்தைக்கு உணவில் அலர்ஜி அதாவது ஒவ்வாமை இருக்குமெனில் அலர்ஜி  தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

இதில் பால் உணவு, சோயா, முட்டையின் வெள்ளை கரு, வேர்க்கடலை, கோதுமை போன்றவை அடங்கும். உணவில் பூண்டு சேர்த்து கொள்வதால்  குழந்தையின் பாலில் அதன் வாசம் வரக்கூடும். அதுவும் உணவு எடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் இந்த வாசனையை பாலில் காண முடியும். சில குழந்தைகளுக்கு இந்த வாசனை ஒற்றுக் கொள்ளாமல் போகும் என்பதால் தவிர்த்து விடுங்கள். எச்சில் வழிதல், டயப்பரால் வரும் எரிச்சல்  போன்றவை சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்வதால் வருகின்றது.

ஆகவே ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை தவிர்த்து, பப்பாளி மற்றும் மாங்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பாலாடைக் கட்டி, தயிர்,  ஐஸ் க்ரீம் போன்றவையை உட்கொண்டால் சில நேரங்களில் அவை பாலுடன் கலந்து குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருக்க  வேண்டும்.

குறிப்பாக வாந்தி, தூக்கமின்மை, வரட்டு இருமல் போன்றவை வரலாம். காபி அருந்துவதால் குழந்தைக்கு சில நேரங்களில் சோர்வும், தூக்கமின்மையும்  வர நேரிடும். ஆகவே காபி அருந்தி குழந்தைக்கு கஷ்டம் ஏற்படுத்த வேண்டாம். முக்கியமாக ஆரம்பக் காலத்தில் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது. மது அருந்துவதால் குழந்தைக்கு அதிக தூக்கம், மயக்கம், தளர்வு, அதிக உடல் எடை போன்றவை நேரலாம். மேலும் மது தாய் பால் சுரப்பதிலும்  பாதிப்பு ஏற்படுத்தலாம். ஆகவே குழந்தையை நல்ல முறையில் வளர்க்க மது அருந்துவது வேண்டாம்.

உணவில் அதிக அளவில் மசாலா மற்றும் காரத்தைக் குறைத்து கொள்ள வேண்டும். அதிக மசாலா மற்றும் காரம் குழந்தைக்கு அலர்ஜி, எரிச்சல்  போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே காரம் அதிகம் உள்ள மிளகு, இஞ்சி, எலுமிச்சை சாறு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

எண்ணெய் பசையுள்ள கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய சில டிப்ஸ்..!

 வீட்டிலேயே மிகவும் கஷ்டமான வேலை என்றால் அது சமைக்க உதவும் கேஸ் அடுப்பில் படிந்த எண்ணெய் பசையை சுத்தம் செய்வது தான். ஆனால் அடுப்பில் படியும் எண்ணெய் பசையை, சமைத்து முடித்த அப்போதே துடைத்துவிட்டால், எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அப்படி உடனே துடைக்காமல், மூன்று நாட்களுக்கு ஒருமுறை துடைத்தால், அடுப்பில் படித்த எண்ணெய் பசையை போக்குவது என்பது கடினமாகிவிடும்.

மேலும் பர்னரில் அழுக்குகள் படிந்தாலும், அதனை சுத்தம் செய்வதும் கஷ்டம். இதற்காக எத்தனையோ சுத்தம் செய்யும் பொருட்கள் விற்கப்பட்டாலும், அவற்றைப் பயன்படுத்தினால், பர்னர்களின் நிறம் மங்குவதுடன், சில சமயங்களில் அடுப்பு சரியாக வேலை செய்யாமலும் போய்விடும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை எண்ணெய் பசையுள்ள மற்றும் அழுக்குப் படிந்த கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய சில டிப்ஸ் கொடுத்துள்ளது.

ஸ்டாண்ட் சுத்தம் செய்ய...

ஸ்டாண்ட் சுத்தம் செய்வதற்கு, 1/4 கப் அம்மோனியாவை நீரில் ஊற்றி, அதில் ஸ்டாண்ட்டை வைத்து 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் கையில் கையுறை அணிந்து, ஸ்டாண்ட்டை சுத்தமான நீரில் தேய்த்து கழுவினால், ஸ்டாண்ட்டில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும்.

அடுப்பின் மேல்புறம் சுத்தம் செய்ய...

அடுப்பின் மேல் பேக்கிங் சோடாவை தூவி, அதன் மேல் லேசாக சுடுநீரை தெளித்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்தால், அடுப்பின் மேல் உள்ள எண்ணெய் பசை எளிதில் நீங்கிவிடும்.

பர்னரை சுத்தம் செய்ய...

பர்னரை அடுப்பில் இருந்து எடுத்து, அதனை சூடான சோப்பு நீரில் 1 மணிநேரத் ஊற வைத்து, பின் ஊசியால் ஒவ்வொரு ஓட்டையையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் பேக்கிங் சோடாவை பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு தேய்த்து, சுத்தமான நீரில் கழுவினால், பர்னர் நன்கு சுத்தமாக இருக்கும். பின்பு அதனை நன்கு உலர வைத்து, அடுப்பில் பொருத்த வேண்டும்.

அணு விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்..!

உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு.பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.

அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த ‘காஸ்மாஸ்’ என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.

இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.

இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.

இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!

விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற
அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை
உருவாகி உள்ளன.

கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.

பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான ‘தி எட்ஜ் ஃபார் எவரில்’ (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். “தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்’ (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!

அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-”மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை – தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக – அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது.”

அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை – நடனத்தை – சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:

“நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்.”

நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)

இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்) செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.

ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?

‘மந்தாகினி’ - திரைவிமர்சனம்!

நாயகி ஸ்ரீஐரா ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய பிறந்தநாளன்று வீட்டில் விழாவிற்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். ஸ்ரீஐரா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஒரு மர்ம கும்பல் அவளை கடத்துகிறது. பிறகு அந்த கும்பல் ஸ்ரீஐராவின் வீட்டிற்கு போன் செய்து தந்தையிடம் பணம் கேட்கிறார்கள். அப்பணத்தை தருவதற்கு தந்தையும் சம்மதிக்கிறார். அப்போது திடீர் என்று ஒரு மர்ம சக்தி வந்து அந்த கும்பலை அழித்துவிட்டு ஸ்ரீஐராவை காப்பாற்றுகிறது.

பிறகு வீட்டிற்கு வரும் ஸ்ரீஐராவை கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அதன்பிறகு ஸ்ரீஐராவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாட ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது ஸ்ரீஐராவின் தந்தை, தன் மனைவியிடம் ஸ்ரீஐராவிற்கு என் நண்பனின் மகனை திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளேன். இந்த செய்தியை அவளிடம் கூறப் போகிறேன் என்று சொல்கிறார். சொன்னபிறகு அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிடுகிறார். அவர் இறப்பதற்கு முன் ஸ்ரீஐராவிடம் என் நண்பனின் மகனை திருமணம் செய்து கொள் என்று கூறிவிட்டு இறக்கிறார்.

அதன்படி ஸ்ரீஐராவை பெண் பார்க்க நண்பனின் மகன் வருகிறார். அவர் வரும் வழியில் விபத்து ஏற்பட்டு இறந்து விடுகிறார். இதற்கிடையில் ஸ்ரீஐரா வேலை பார்க்கும் மருத்துவமனையில் சீனியர் டாக்டர் வலுக்கட்டாயமாக அவரை அடைய விரும்புகிறார். அதற்கு ஸ்ரீஐரா மறுக்கிறார். மறுநாள் அந்த சீனியர் டாக்டர் மர்மமான முறையில் இறக்கிறார். இப்படி அடுத்தடுத்து இறப்புகள் அதிகமாவதால் ஸ்ரீஜராவும் தாயும் சாமியாரிடம் ஆலோசனை கேட்கிறார்கள். அதற்கு அவர் ஜாதகத்தில் கண்டம் இருப்பதாகவும் கோவிலில் பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்றும் கூறுகிறார். அதன்படி பரிகாரம் செய்கிறார்கள். அதன்பிறகு போலீஸ் அதிகாரியான ரவிபிரகாஷ் வரன் கிடைக்கிறது.

இதற்கிடையில் ஸ்ரீஐராவின் முறைப்பையன் அவளை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ரவிபிரகாசும் ஸ்ரீஐராவும் பழகுவதை பொறுக்காமல் போதையில் ஸ்ரீஐராவின் வீட்டிற்கு வருகிறார். அங்கு ஸ்ரீஐராவின் கண்முன் மின்னல் போன்று அவர் உடம்பில் பட்டு இறக்கிறார்.

அவர் இறந்ததை விசாரிக்க ரவிபிரகாஷ், ஸ்ரீஐராவிடம் விசாரணை செய்கிறார். அதற்கு எனக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறார். உடனே ஸ்ரீஐராவை மனநிலை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் ரவிபிரகாஷ். அங்கு மருத்துவரிடம் செஞ்சிக் கோட்டை, மந்தாகினி என்று ஆக்ரோசமாக கூறிவிட்டு மயங்கி விழுகிறார்.

இறுதியில் மந்தாகினி யார்? எதற்காக நிறைய பேர் இறக்கிறார்கள்? செஞ்சிக் கோட்டையில் என்ன இருக்கிறது? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகி ஸ்ரீஐராவை சுற்றியே படம் நகர்கிறது. முழுப்பொறுப்பையும் ஏற்று கதையை தூக்கிச் செல்கிறார். நடனம், பதட்டம், அழுகை என நடிப்பை திறம்பட செய்திருக்கிறார்.

கிருஷ்னுடு, ரவிபிரகாஷ், ராஜீவ் ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள். ஊமையாக வரும் சபியின் நடிப்பு அருமை. அவருடைய நடிப்பில் சில காட்சிகள் ரசிக்கும் படியாக உள்ளது.

படத்தில் பின்னணி இசை கூடுதல் பலம். பல காட்சிகளில் இசை ரசிக்கச் செய்கிறது. ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படத்தின் முதல் பாதியில் தேவையற்ற காட்சிகள், தேவையற்ற பாடல்கள் வைத்து படத்தின் விறுவிறுப்பை குறைத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீவிஷால். குறிப்பாக முதல் பாதியில் வரும் பிளாஷ் பேக் காட்சி திரைக்கதைக்காக திணித்ததுபோல் உள்ளது. இரண்டாம் பாதியில் திரைக்கதை அமைத்தவிதம் அருமை.

மொத்தத்தில் ‘மந்தாகினி’ மிரட்டல் குறைவு.