Friday, June 6, 2014

பழக்க வழக்கங்கள்...!




தலைவாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன?



சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும்.



வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன?



இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள் படையெடுக்கா வண்ணம் தடுக்க.



முதலில் காகத்தைக் காகா என அழைத்து சாப்பாடு வைத்துப் பின்னர் நாம் சாப்பிடுவது ஏன்?




உணவில் நஞ்சு கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய.

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா கேரக்டரில் நடிக்கிறார் தீபிகா!

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக்குவது இந்தியில் இப்போது புதிய டிரண்ட். ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை பாஹ்க் மில்கா பாஹ்க் என்ற பெயரில் வெளிவந்து தேசிய விருது பெற்றது. தற்போது குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கை சினிமாவாகி வருகிறது. இதில் மேரிகோமாக பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெய்வாலின் வாழ்க்கையை படமாக்க பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட் முடிவு செய்திருக்கிறார். இதில் சாய்னா கேரக்டரில் தீபிகா படுகோனே நடிக்கலாம் என்று தெரிகிறது. படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்து சாய்னாவிடம் காட்டிய பிறகு சாய்னா நெய்வால் தான் தனது கேரக்டரில் நடிக்க சரியான நபர் தீபிகாதான் என்று மகேஷ் பட்டிடம் கருத்து தெரிவித்தாராம்.

காரணம் தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனே தேசிய பேட்மிட்டன் வீரர். தீபிகாவும் பள்ளி, கல்லூரி காலத்தில் பேட்மிட்டன் வீராங்கனையாக இருந்தவர். மாநில அளவில் விளையாடி இருக்கிறார். அதனால்தான் சாய்னா, தனது கேரக்டருக்கு தீபிகா பொருத்தமானவர் என்று கூறியிருக்கிறார். இது பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒருசில நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணவன் உண்டபின் அதே தட்டிலே உணவு உண்ணச் சொல்வது ஏன் தெரியுமா?

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா? 


அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான். அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான், 


அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

தலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு...?



>> முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.


>> முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.


>> மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் கலந்து அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் பூசினால் அந்த இடத்தில் முடி முளைக்கும்.


>> மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் தேங் காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்து வந்தால் முடி கருப்பாக மாறும்.


>>மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவளரும்.


>> பொடுதலைக் கீரைச்சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்.

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முதல் முறையாக அதிவேக காமிராவான பாந்தம் ப்ளக்ஸ் 4கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பமொன்றில் இத்தகைய கேமிரா பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

லிங்காவில் முதல் முறையாக நவீன அதிவேக காமிரா!

இந்த காமிராவை ஸ்டீரியோவிஷன் நிறுவனம் லிங்காவுக்கு வழங்கியுள்ளது.

ரஜினி நடித்த ஸ்டன்ட் காட்சி ஒன்றை இந்தக் கேமராவைக் கொண்டு படமாக்கியிள்ளனர். ஹாலிவுட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் இயக்குநர் லீ விட்டேகர் அமைத்த ஒரு பெரிய சண்டைக்காட்சியை பாந்தம் ப்ளக்ஸ் கேமிராவில் படமாக்கினார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.

இத்தகவலை ஸ்டீரியோயோவிஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போது லிங்கா படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. ஹைதராபாதில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நசக்கவிருக்கிறது.

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!


1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா? முருகதாஸ் விளக்கம்!

பாலிவுட்டிலும் கவனம் செலுத்தும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது ஜாகையை மும்பைக்கு மாற்றமாட்டாராம்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யை வைத்து கத்தி படத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். அந்த படம் நாளை ரிலீஸாகிறது. இதனால் கத்தி படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு முருகதாஸ் மும்பையில் தங்கி ரிலீஸ் வேலைகளை கவனித்து வருகிறார்.

ஜாகையை மும்பைக்கு மாற்றுகிறேனா?: முருகதாஸ் விளக்கம்

இப்படி பாலிவுட், கோலிவுட் என்று போகிறாரே மனிதர் பிரபுதேவாவை போன்று மும்பையில் செட்டிலாகிவிடுவாரோ என்ற சந்தேகம் எழுந்தது. இதை அவரிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

தமிழ் படங்கள் எனக்கு புகழும், பணமும் கொடுத்தன. எனக்கு மேலும் பல இந்தி படங்கள் எடுக்க ஆசை. இந்தி கற்க விரும்புகிறேன். ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவனம் செலுத்துவேன். நான் மும்பைக்கு வந்து செல்வேனே தவிர இங்கு செட்டிலாகிவிட வேண்டும் என்று நினைக்கவில்லை என்றார்.