Monday, June 2, 2014

உடல் எடையை குறைக்க உதவும் 9 சிறந்த வைட்டமின்கள் !!!!


உடல் எடையை குறைக்க, கடுமையான உடல் எடை குறையும் முறையை கையாள வேண்டும். அதற்காக தீவிரமான உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உண்ண வேண்டும். இவைகள் மட்டும் போதுமா? வேறு வழிகள் ஒன்றும் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறது! உடல் எடையை குறைத்து, ஆற்றல் திறனை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைத்து, கொழுப்பை எரித்து, செரிமானத்தை சீராக்க என பல உதவிகளைப் புரிகிறது வைட்டமின்கள்.

ஆனால் அதற்காக உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் விட்டு விட வேண்டும் என்றில்லை. அதனுடன் சேர்த்து முக்கிய வைட்டமின்களையும் சேர்த்துக் கொண்டால், எடையை குறைக்க முயலும் போது சுலபமாக இருக்கும். இதோ உடல் எடையை குறைக்க உதவும் 9 வைட்டமின்கள் பற்றிய ஒரு பார்வை. இதில் ஒருசில கனிமங்களும் அடங்கும்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்


வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் என்பது 8 வகை வைட்டமின் பி-க்களை கொண்டுள்ளதாகும். இது நம் உடலில் பல வகைகளில் வேலை செய்கிறது. உடல் எடையை குறைக்க, அவை தீவிரமாக உதவி புரிகிறது. அதற்கு காரணம் உடல் கார்போஹைட்ரேட்டை ஆற்றல் திறனாக மாற்ற இது உதவி புரிகிறது. மேலும் ஈரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, செரிமானத்திற்கு துணை புரிந்து கொழுப்பை குறைக்கவும் இது உதவும். அதிகமாக உண்ணுவதால் ஏற்படும் மன அழுத்தத்தை நீக்கவும் இது துணை நிற்கும். ஆகவே கீரைகளை அதிகம் உட்கொண்டால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.

வைட்டமின் டி

உடல் எடை குறைப்பு ஆய்வுகளில் பங்கேற்றவர்களில் ஆறுதல் மருந்து எடுத்துக் கொண்டவர்களை விட, வைட்டமின் டி கொண்ட உணவுகளை எடுத்து கொண்டவர்கள் தான் அதிக எடையை இழந்தனர். அதே போல் வைட்டமின் டி-யை குறைவாக எடுத்தவர்களை விட அதிகமாக எடுத்தவர்கள் தான் அதிக அளவில் எடை குறைந்துள்ளனர். வைட்டமின் டி கால்சிய ஈர்ப்பை அதிகரிப்பதால், அது உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது. வைட்டமின் டி சத்தானது மீன், காளான் போன்றவற்றில் அதிகம் நிறைந்துள்ளது.

வைட்டமின் சி

உடற்பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும். அதனுடன் சேர்ந்து வைட்டமின் சி-யும் அதற்கு துணை புரியும். அதனால் ஆற்றல் திறன் அதிகரித்து, கலோரிகள் எரிக்க உதவும். அதே சமயம் வைட்டமின் சி-யை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உடல் எடை குறைய உதவி புரியாது என்று விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் கூறுகிறது. இருப்பினும் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், அது மெட்டபாலிச செயல்பாட்டை குறைத்து, உடல் எடையை அதிகரித்துவிடும். சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

கால்சியம்

கால்சியத்திற்கும் உடல் எடை குறைவுக்கும் சம்பந்தம் உள்ளது என்று ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது. இதில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும், கால்சியம் மற்றும் கால்சியம் அடங்கிய பொருட்கள் உடல் எடை குறைப்புக்கு பெரிதும் உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. மேலும் கொழுப்புகளை உடைத்து அதை சேமித்து வைப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். கால்சியம் சத்தைப் பெற பால் பொருட்களை அதிகம் உட்கொண்டால், கால்சியம் குறைபாடு நீங்கிவிடும்.


குரோமியம்

உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை செயல் நிறுத்த உதவி புரிவதால், உடல் எடை குறைப்புக்கு குரோமியம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. மேலும் அது இன்சுலினுடன் சேர்ந்து குளுக்கோஸ் மற்றும் ஆற்றல் திறன் உற்பத்திக்கு உதவி புரிகிறது. இத்தகைய குரோமியம் சோளத்தில் அதிகம் நிறைந்துள்ளது.

கோலின்

கோலின் என்பது ஒரு வைட்டமின் கிடையாது. ஆனால் இந்த அதிமுக்கிய ஊட்டச்சத்து வைட்டமின் பி-யுடன் சேர்க்கப்பட்டிருக்கும். கொழுப்புகளை செயலற்றதாக மாற்ற இது உதவுவதால் உடல் எடை குறைவதற்கும் இது உதவும். இது இல்லையென்றால், கல்லீரலில் கொழுப்புகள் தேங்கி, மெட்டபாலிச செயல்பாடு தடைபட்டு போகும். சோயாவில் கோலின் என்னும் சத்தானது அதிகம் நிறைந்துள்ளதால், அதனை உட்கொள்வது நல்லது.

ஜிங்க்

தைராய்டு மற்றும் இன்சுலின் சீரமைப்பு திறம்பட செயல்படுவதற்கு ஜிங்க் அவசியமான ஒன்றாக விளங்குகிறது. இவை இரண்டில் ஏதாவது ஒன்று சரிவர செயல்படவில்லை என்றால் கூட போதும், மெட்டபாலிச செயல்பாடு வெகுவாக தடைபட்டுவிடும். அதனால் ஜிங்க் குறைபாட்டை தவிர்த்தால், தேவையற்ற உடல் எடையை குறைக்கலாம்.
ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

மீண்டும் இணைகிறது கார்த்தி - யுவன் சங்கர் ராஜா கூட்டணி!

இயக்குனர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கார்த்தி. அறிமுகப்படமே பட்டையைக் கிளப்ப யுவன் சங்கர்
ராஜாவின் பாடல்களும் முக்கியக் காரணமாக அமைந்தது.

பருத்திவீரன் திரைப்படத்திற்குப் பிறகும் கார்த்தியின் வெற்றிப்படங்களான பையா, நான் மகான் அல்ல மற்றும் பிரியாணி ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர்களது கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும்
வெற்றிப்படங்களாகவே அமைந்துவருகின்றன.

இந்த வகையில், குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள புதிய திரைப்படமான கொம்பன் திரைப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியாணி திரைப்படத்திற்குப் பிறகு கார்த்தி நடித்த காளி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் ஏற்கெனவே நிறைவடைந்து வெளியீட்டிற்குத்
தயாராகிவருகிறது.

Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி..?



உங்களுடைய Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி!!
நாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை பார்த்துள்ளார் இதனையும் அறிய முடியும்.

சரி முதலாவதாக உங்களின் Facebook LOGIN செய்து உங்கள் Profile பகுதிக்கு செல்லவும்.

அடுத்து Profile பக்கத்தில் வைத்து [ ctrl + u ] அழுத்தவும். அப்பொழுது profile பக்கம் Source Code
இல் புதிய Window மூலம் Open ஆகும்.
அதன்பிறகு Source Code இன் Window இல் [ ctrl + f ] அழுத்தவும், இப்போது Search Bar Open ஆகும்.

அந்த Search Bar இல்  {"list" இதை Type செய்து Enter பண்ணவும்.

இது மாதிரி {"list""1000011345400-2", "10000043254566-3"  இருக்கும் list கிடைக்கும்.

உங்களுக்கு தெரியுமா Facebook Username System அறிமுகமாக முன் அனைவருக்கும் இதுமாதிரி Code
அதாவது இதில் 1000011345400 இது உங்களுடைய FB Profile க்கு வந்தவர் -2" இது எத்தனை முறை வந்துள்ளார் என்பது

சரி இலக்கத்தை வைத்து நண்பரை கண்டுபிடிப்போம?
புதிய பக்கத்தில் www.facebook.com என்று type செய்து [ / ] sigh இதை இட்டு உங்கள் நண்பரின் இலக்கத்தை
paste பண்ணவும்
இதுமாதிரி [ www.facebook.com/1000011345400]
இப்பொது Enter கொடுக்கவும் உங்களின் profile இக்கு வந்தவரின் profile ஓபன் ஆகும்.

நண்பர்களுக்கு பகிருங்கள் இதன் மூலம் அவர்களும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்பதை அறியட்டும்........

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!


நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,

1. உட்காரும் தோரணை

அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி
கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

3.உணவு முறை:

பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

4. வைட்டமின்கள்:

 கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

5. தாதுக்கள்:

 எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

6. சூடான குளியல்:

 வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

7. சப்ளிமென்ட்ஸ்:


 நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

8. மசாஜ்: 

வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

9. கடுகு எண்ணெய்:

 எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

10.ஆரோகியமான சூழ்நிலை:

 சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

தமிழ் சினிமாவின் மாபெரும் தூண்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய தூண்களாக இன்றும் விளங்கிவரும் இயக்குனர் மணி ரத்னமும், இசைஞானி இளையராஜாவும் இன்று பிறந்தநாளினைக் கொண்டாடிவருகின்றனர்.

தமிழ் சினிமாவினை உலக அளவிற்கு உயர்த்திய பெருமை இயக்குனர் மணி ரத்னத்தையே சாரும். இவர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் இன்றளவும் பெருமளவில் போற்றப்பட்டுவருகிறது. அதே போல இசைஞானி இளையராஜாவின் பெருமைகளை ஒரே நாளில் சொல்லிமாளாது. உலகளவில் மாபெரும் இசை மேதையாக இளையராஜா விளங்கிவருகிறார் என்றால் அது மிகையல்ல.

இயக்குனர் மணி ரத்தினத்தின் ஆரம்பகாலப் படங்களுக்கு இளையராஜாவின் இசையே உயிரூட்டியது. குறிப்பாக இவர்களது கூட்டணியில் வெளியான மௌனராகம் திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்பட்டுவருகின்றன. அதுமட்டுமல்லாது நாயகன், அஞ்சலி, தளபதி உள்ளிட்ட படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!!!


நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

பால்

பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உணவிற்கு பின்பு டெசெர்ட்

உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்

மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்

விஜய் படத்தில் ஹிந்தி இசையமைப்பாளர்..!

இந்தியில் பிரபலமானவர்கள் விஷால்-சேகர் எனும் இரட்டை இசையமைப்பாளர்கள். இந்தியில் 'ஓம் சாந்தி ஓம்', 'ஐ ஹேட் லவ் ஸ்டோரீஸ்', 'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி', 'சென்னை எக்ஸ்பிரஸ்' தற்போது ஷாரூக்கான் நடிப்பில் உருவாகிவரும் 'ஹேப்பி நியூ இயர்' என பல படங்களுக்கு விஷால் - சேகர் எனும் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர்.

இந்த இரட்டையர்களில் ஒருவரான விஷால் தத்லானி அனிருத் இசையமைத்த 'வணக்கம் சென்னை' படத்தில் 'ஓ பெண்ணே' பாடலைப் பாடினார். தமிழில் இவர் பாடிய முதல் பாடல் இதுதான்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கத்தி' படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திலும் விஷால் தத்லானி ஒரு பாடலைப் பாடுகிறார்.

விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ல் 'கத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவர உள்ளது என்பது குறிப்படத்தக்கது.

கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?


மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்களில் சிலருக்கு இந்தமாதிரியான கொட்டைகளையும் பருப்புகளையும் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

 சிலருக்கு அது தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற சிறு சிறு உபாதைகளை ஏற்படுத்தினாலும் சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய தொண்டை அடைப்பு வரை செல்லக்கூடியதாக இருக்கிறது. ஒரு முறை இந்த ஒவ்வாமை வந்துவிட்டால், இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தொடர் பிரச்சனையாக நீடிக்கிறது. இப்படியான கொட்டைகள், பருப்புகள் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் இந்தமாதிரியான கொட்டைகளையும், பருப்புகளையும் வாழ்நாள் முழுவதும் சாப்பிடாமல் தவிர்ப்பது மட்டுமே அவர்கள் இந்த ஒவ்வாமை உபாதைகளில் இருந்து விடுபட இருக்கும் ஒரே வழி.
இந்த பின்னணியில் இந்தமாதிரியான ஒவ்வாமை ஒரு சிலருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும், அதை ஆரம்பகட்டத்திலேயே தடுக்க முடியுமா என்பது குறித்தும் மருத்துவ உலகில் நீண்டநாட்களாகவே தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
சுமார் எட்டாயிரம் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களிடம் ஆய்வு செய்யப்பட்ட மருத்துவர்களின் முடிவுகள், ஜமா குழந்தைநல மருத்து இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் ஆய்வின் முடிவுகளின்படி, கர்பகாலத்தில் தாய்மார்கள் எல்லாவிதமான கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம், கருவிலேயே அந்த குழந்தைகளுக்கு இந்த பருப்புக்கள் மற்றும் கொட்டைகள் பழகிவிடுவதால், அவர்கள் பிறந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு இந்த பருப்புகள் மற்றும் கொட்டைகளினால் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
அதேசமயம், இந்த ஆய்வின் முடிவுகள் முடிந்த முடிவல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம், இது தொடர்பாக ஐக்கிய ராஜ்ஜியம் உட்பட வேறு நாடுகளில் செய்யப்பட்ட வேறுபல ஆய்வுகள், கர்பகால உணவுக்கும் குழந்தைகளின் எதிர்கால ஒவ்வாமைக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை என்பதை காட்டியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
 
இப்போதைக்கு இப்படியான மாறுபட்ட ஆய்வின் முடிவுகள் தெரிய வந்திருப்பதால், கர்பகால பெண்கள் கொட்டைகள் மற்றும் பருப்புகள் சாப்பிடுவதாலேயே அவர்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இது தொடர்பான ஒவ்வாமை ஏற்படாது என்று உறுதியாக கூறமுடியாது என்றும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த இருவேறுபட்ட ஆய்வின் முடிவுகளுமே அந்தந்த இனக்குழுக்களுக்கு சரியாக இருந்தாலும், உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய பொதுவானதொரு அளவுகோளை இந்த விஷயத்தில் எட்டுவது கடினம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன்.

இந்திய வரலாறும், பழங்கால இந்திய வரைபடங்களும்-01

என்னுடைய கடந்த பதிவான பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை பதிவு எழுதிகொண்டிருக்கும் போது பழங்கால இந்திய வரைபடங்கள் பற்றி நான் தேடிய ஒரு தொகுப்பை இந்தியாவின் வரலாற்றுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இப்பதிவை ஆரம்பிக்கிறேன். இனி பயணத்தை தொடர்வோம்.



 


                  இந்தியாவின் வரலாற்றை பார்ப்பதற்கு முன்பு உலகில் இந்தியாவின் அமைவிடம் மற்றும் இந்தியாவில் முதல் மனிதனின் தோற்றம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பின்னர் இந்திய வரலாற்றுக்கு வருவோம்




 


                    
பிரபஞ்ச வெளியின் வரலாற்றில் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனோ, நாம் வாழும் பூமி என்ற சிறிய கோளோ கிடையாது. சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு முன்பு அகண்ட வெளியில் சுற்றி திரிந்த தூசுகளும், கொதித்து கொண்டிருந்த கற்களும் ஒன்று சேர்ந்து ஒரு நெருப்புகோலமாக ஒன்று திரண்டது பின்னர் பல லட்சம் ஆண்டுகளை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல குளிர்ந்து ஒரு திடமான உருண்டையாக உருப்பெற்றது. 




 


பின்னர் சூரிய மண்டலத்தின் தலைவரான சூரியனை சுற்றி வளம் வர ஆரம்பித்தது. பெயரில்லாத அக்கிரகத்தில் அப்போது கடுகளவு உயிரினம் கூட  கிடையாது. சுமார் நூறுகோடி ஆண்டுகளுக்கு பிறகு கடல்கள் உருவாகின.  அநேகமாக 350 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ ஒரு விசித்திரம் நிகழ்ந்ததில் கடலுக்கடியில் பாக்டீரியாக்கள் உருவாயின கூடவே செடிகள் வளர ஆரம்பித்தன.




 



 உலகில் உயிரனங்கள் வளர வழிவகுத்தது இந்த செடி கொடிகளே. ஆக்சிஜன் இல்லையேல் பூமியில் உயிரினங்கள் இல்லை.  


உலகில் முதன்முதலில் தோண்றிய உருப்படியான உயிரினம் மீன் வகைகளே. இவை தோன்றியது 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு. 




 


பின் பாம்பு, பல் போன்ற ஊர்வன தோன்றின  பின்பு அவை படிப்படியாக  வளர்ந்து டைனோசர்களாக  உருப்பெற்றன  85 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி 6 கோடி ஆண்டு வரை பூமியில் நடைபெற்றது டைனோசர் போன்ற ஊர்வன உயிர்னங்களின் ஆட்சியே. டைனோசர்கள் பார்ப்பதற்கு ஒரு செல் போன் டவர் அளவு உயரம் இருந்தாலும் அவை போட்டது முட்டைகளே.  பின்பு  குட்டி போடு பால் கொடுக்கும் எலி போன்ற உயிரினங்கள் தோன்றின. குட்டி போடு பால் கொடுப்பது என்பது ஒரு ஆச்சரியமான பரிணாம வளர்ச்சியே. 




 


mammals என்றழைக்கபடும் இந்த பாலூட்டிகளின் ஆட்சி சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது இதில் ஒரு உயிரினம் தான் மனிதன். பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியில் குரங்குகளை போல பல விதமான மனிதர்களும் தோன்றினர். அதில் modern man என்றழைக்கபடும் நாம் தோன்றியது 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான். 




 


homo sapien என்றழைக்கபடும்  நாம் முதலில்  தோன்றியது africa காடுகளில் தான். அதுவும் முதலில் தோன்றியது ஒரு ஆண் அல்ல பெண் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.அதுவும் ஐரோபிய வாழ் வெள்ளைகார பெண் அல்ல africa கருப்பு நிற பெண். ஆகவே விஞ்ஞான அடிப்படையில் பார்த்தாலும் சக்தி இல்லையேல் சிவம் இல்லை. 


                    ஆரம்பத்தில் பல விதமான மனித வகையினர் உலகில் நடமாடினர் காலப்போக்கில் அவை அழிந்து மிச்சம் இருந்தது இரண்டு வகையினரே..


     1. நாம் (kuromeknan)


      2. நியாண்டர்தால்(neandertal) மனிதன் 



 


ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதனும், நியாண்டர்தால் மனிதனும் சமமாக காடுகளில் வாழ்ந்து வந்தனர். CRO-MAGNON என்றழைக்கபடும் நாம் பல்கி பெருகியவுடன் நியாண்டர்தால் மனித இனம் அழிய தொடங்கியது. 


சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு நியாண்டர்தால் இனம் அழிந்தது இதற்கான உண்மை காரணம் தெளிவாக அறிவியலாளர்களால் கூறஇயலவில்லை. நியாண்டர்தால் மனிதனும் நம்மை போலவே உருவ ஒற்றுமையும் சற்று குறைவான புத்தி கூர்மையும்  படைத்திருந்தனர்.




 


           africa காடுகளில் விலங்குகளிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொண்டு ஒரு பயத்துடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்து வந்த மனிதன் கும்பல் கும்பலாக வாழ்வதற்கு ஏற்ற இடத்தை தேடி பயணிக்க ஆரம்பித்தனர் இப்பயணத்தில் நியாண்டர்தால் இனமக்களும் இருந்தனர். வழியில் பல புதிய பழங்கள் இல்லை தலைகளை சாப்பிட வேண்டியிருந்தது. சிலவற்றை சாபிட்டு இறந்தவர்களை பார்த்து மற்றவர்கள் எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிட கூடாது என்ற எச்சரிக்கை உணர்வை பெற்றனர். வழியில் வசதியான இடம் வந்தவுடன் ஒரு சிலர் அங்கேயே தங்கினர் மற்றவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். 


 



மனிதன் செல்லும் இடம் எங்கும் அவனை கடல் வலி மறிக்கவில்லை.  இது சற்று விசித்தரமாக தோணலாம். இதை பற்றி முழுமையாக அறிய நாம் ஆதி காலத்தில் உலகம் எப்படி இருந்தது என்பதை பற்றி முதலில் அறியவேண்டும். ஆதி காலத்தில் இருந்த உலகத்திற்கு அறிவியலாளர்கள் இட்ட பெயர் கொண்டவான லேன்ட்(gondwana land). இந்த கொண்டவான லேன்ட் என்பது என்ன? மனிதனின் அடுத்தக்கட்ட பயணம் எங்கே? என்பதை பற்றி அடுத்த தொடரில் விரிவாக பார்ப்போம்.   

23 முறை கேட்ட கேள்வி - (சிறுகதை)



23 முறை கேட்ட கேள்வி:-

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

கனவுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்....!


எல்லோருக்கும் கனவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.

சின்ன கனவோ பெரிய கனவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்?அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று கேட்கிறீர்களா?

கவலையை விடுங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றித்தரக்கூடிய நல்ல மனிதர்களை கண்டு பிடித்து தரும் இணைய‌தளம் ஒன்று உதயமாகியிருக்கிறது. ஸ்பியின் நாட்டில் குடியேறியுள்ள கொலம்பியா நாட்டைச்சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் உங்கள் கனவுகளை சொல்லுங்கள் அதனை நிறைவேற்றித்தருகிறோம் என்று உத்வேகம் அளிக்கிறது.

அதாவது சமூக வலைப்பின்னல் வகையைச்சேர்ந்த இந்த தள‌த்தில் எவர் ஒருவரும் தங்கள் கனவை குறிப்பிட்டால் சக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அதனை நிறைவேற்றித்தருகின்றனர்.ஆனால் அதற்கு முன் நாமும் பதிலுக்கு இப்படி முன்று உறுப்பினர்களின் கனவுகள் நிரைவேற உதவுவதாக வாக்கு தர வேண்டும்.

அது தான் இந்த தள‌த்தின் சிற‌ப்பம்சம்.நம்முடைய கணவு மற்றவர்கள் உஅதவியால் உண்மையாவதோடு நாமும் மற்றவர்களின் கனவு பூர்த்தியாக கைகொடுக்கிறோம்.இப்படி சங்கிலித்தொடராக கணவுகள் நிறைவேறிக்கொண்டே இருக்கும். சமூக வலைப்பின்னல் கருத்தாக்கத்தை நன்மை எல்லோருக்கும் நன்மை செய்யும் நோக்கத்தோடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

லாபாப்பயா என்னும் பெயரில் பிலிப் வேலாகியூஸ் இதனை உருவாக்கியுள்ளார். மனிதர் கொலம்பியாவில் வெற்றிகரமான கட்டிட கலை நிபுணராக திகழ்ந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் தொழில் மீது வெறுப்பு வந்திருக்கிறது.அதாவது வீடுகளை வாங்கி வசிக்கும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தும் வகையில் தனது தொழில் அமையவில்லை என அவர் உணர்ந்திருக்கிறார்.

இதனையடுத்து கொலம்பியாவில் இருந்து ஸ்பெயின் நாட்டில் குடியேறி எல்லோருக்கும் நன்மை பய்க்கும் நோக்கத்தொடு லாப்பபயா இணையதளத்தை நிறுவினார்.

கொலம்பியாவில் அதிகம் காணப்படும் பப்பாளியின் ஆங்கில பெயரிலேயே தளத்தை அமைத்துள்ளார்.பப்பாளி விதைகளை போல இந்த தளம் மூலம் பலரது கணவுகள் நிறைவேறி மேலும் பலரது கணவுகள் நிறைவேற வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார்.

இப்போது உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு நிலவும் பொது சக மனிதர்கள் கை கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.

உதவி செய்ய வேண்டும் என்பது தொற்று வியாதியைப்போல் இண்டெந்ர்நெட் முலம் பரவ வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.தனி மனிதர்களின் கணவுகளை நினைவாக்க வேண்டும் என்ப்தே இந்த முயற்சியின் நோக்கம் என்கிறார் அவர்.

நகரச‌பைகளோடு இணைந்து பெரிய அளவிலான மக்கள் நலத்திட்டங்களுக்கும் கைகொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
http://lapapaya.org/home/

குளத்தில் சங்கு பிறக்கும் அதிசய கோவில்!




வேதமே, மலையாய் இருப்பதால் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள்.

மலைமேல் ஒரு கோயில் உள்ளது.  ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலையில் தினமும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் – வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி – சொக்கநாயகி. இங்கு சுனை ஒன்றும் உள்ளது.

திருக்கயிலையில் பரமேஸ்வரன்–

பார்வதி திருமணம் நடைபெற்றவுடன், ஈசன் பார்வதி தேவியுடன் தனியாக எழுந்தருளி அருள்புரிந்த இடம் திருக்கழுக்குன்றம். மேலும் திருவாலங்காட்டில் காளியுடன் போட்டியிட்ட சிவன், ஊர்த்துவ தாண்டவம் ஆடிய களைப்புத் தீர, இத்தலத்திலேயே இளைப்பாறியதாகவும் புராண தகவல்கள் கூறுகின்றன.

சிவலிங்கத்தின் முன் மார்க்கண்டேயரும், பின்புறச் சுவரில் திருமாலும், திருமகளும் தம்பதியராக பரமேஸ்வரன்– பார்வதியை வணங்கிய வண்ணம் உள்ளனர். ஆலயக் கருவறை வெளிச்சுவரில் யோக தட்சிணாமூர்த்தியும், பிரம்மதேவரும் உள்ளனர். வேதகிரீஸ்வரர் முன் மண்டப வாசலின் இருபுறமும் விநாயகரும், முருகனும் அருள்பாலிக்கின்றனர்.

இந்த கோவிலில் உள்ள அம்மன் பாதாள அம்மன் என்னும் சொர்க்கநாயகி அம்மன். இவரது கருவறை வேதகிரீஸ்வரரை பார்த்த வண்ணம் பாதாளத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஈசன் கோவில் கொண்டுள்ள இந்த மலை 500 அடி உயரம் கொண்டது. 650 திருப்படிகள் இந்த மலைக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ளன.

இடி வழிபாடு:

 வேதகிரீஸ்வரர் கருவறைக் கூரையில் சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அதன் வழியாக இந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடி மூலமாக ஈசனை வழிபடுவதாக ஐதீகம். ‘இடி வழிபாடு’ மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருக்குமாம். இடி பூஜை மூலம் ஆலயத்திற்கோ, பக்தர்களுக்கோ பாதிப்பு ஏற்படாது. மழைக்காலங்களில் மின்னல், இடி இவைகள் நம்மை தாக்காமல் இருக்க கழுக்குன்றத்து ஈசனை நினைத்து வழிபட்டாலே போதும். மலைக் கோவில் அடிவாரத்தில் இரண்டு விநாயகர்கள் தனித்தனி சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். பூரணை புஷ்கலா தேவி சமேதராக சாஸ்தாவும் எழுந்தருளியுள்ளார்.

கழுகுகளுக்கு விமோசனம்:

கிருதயுகத்தில் சிரவர முனிவரின் மகன்களான சண்டன், பிரசண்டன் தீய குணங்களுடன் இருந்தனர். அடுத்தடுத்து வரும் யுகங்களில் கழுகாய் பிறந்து, கலியுகத்தில் கழுக்குன்றத்து ஈசனை வழிபட்டு சாப விமோசனம் அடையலாம் என அறிந்து, அவ்விருவரும் கழுகாகப் பிறந்து தினமும் காலையில் காசி விஸ்வநாதரையும், பகலில் கழுக்குன்ற நாதனையும், இரவில் ராமேஸ்வரத்து மகாதேவரையும் வணங்கி, மறுநாள் காலை காசி என ஈசனை வழிபட்டு வந்தனர். இதில் பகலில் திருக்கழுக்குன்ற ஈசனை வழிபட்டு, பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் தரும் நைவேத்தியப் பிரசாதத்தையும் அக்கழுகுகள் உண்டு வந்தன. சிறிது நாட்களில் அக்கழுகுகள் சாபம் நீங்கப்பெற்றன.

வேதங்களே இங்கு மலையாக இருப்பதால் இத்தலத்தில் கிரிவலம் செய்வது சிறப்பாகும். புத்திர பாக்கியத்துக்கான பிரார்த்தனை தலமாக இது உள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அல்லது பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவது உகந்தது. 48 நாட்கள் அதிகாலை வேளையில் திருக்கழுக்குன்ற மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வழிபட்டால் புத்திரப் பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மாணிக்கவாசகருக்கு இத்தல இறைவன் தனது பற்பலத் திருக்கோலங்களைக் காட்டி குருவடிவாக காட்சியளித்துள்ளார். பிரகஸ்பதி இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்.

தாழக்கோவில்:


மலைக் கோவிலில் வேதகிரீஸ்வரராக அமர்ந்த ஈசன், பக்தர்களுக்காக மலையின் கீழே தனிக்கோவிலில் பக்தவச்சலேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அருகிலேயே பார்வதி தேவிக்காக காட்சியளிக்கும் பொருட்டு மலைக்கோவிலில் வேதகிரீஸ்வரரே பிரத்யட்ச வேதகிரீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இந்தக் கோவிலை ‘தாழக்கோவில்’ என்று அழைக்கின்றனர். இந்த கோவிலில் அம்பாள் திரிபுரசுந்தரி என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார்.

இந்த ஆலயத்தில் நெடிதுயர்ந்த நான்கு கோபுரங்கள் உள்ளன. இதில் வடக்கு கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது. மேற்கு கோபுரம் 6 நிலைகளையும், கிழக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் 7 நிலைகளைக் கொண்டது. கிழக்கு கோபுரமே ராஜ கோபுரமாகும். ராஜ கோபுரத்தின் உள்ளே கோபுரச் சுவரில் திருவண்ணாமலையைப் போல் கோபுரத்து கணபதி உள்ளார்.

சனி பகவான் வழிபாடு:


கோபுரத்தை அடுத்து உள்ளே சென்றால் பதினாறு கால் மண்டபம் உள்ளது. அதில் உள்ள சனிபகவான் சிலை அழகு. இவரை சனிக்கிழமைகளில் 5 நல்லெண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல விதமான சனிக்கிரக தோஷங்களும் அகலும்.

அடுத்ததாக நான்கு கால் மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் விநாயகரும், முருகரும் உள்ளனர். இருவரையும் வணங்கி நிமிர்ந்தால், 5 நிலை கொண்ட உள்கோபுரத்தைத் தரிசிக்கலாம். அங்கிருக்கும் அனுக்கிரக நந்திகேஸ்வர தம்பதியரை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலிபீடம், நந்தி உள்ளது. அருகில் அகோர வீரபத்திரர் உள்ளார். இவருக்கு பவுர்ணமி நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது சிறப்பாகும். அப்படியே உள்ளே நுழைந்தால் மூலவர் பக்தவச்சலேஸ்வரரை தரிசிக்கலாம்.

சுயம்பு அம்பாள்:

 இத்தல அம்பாள் திரிபுரசுந்தரி சுயம்புவாய் தோன்றியவள். இதனால் வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் அம்மனின் பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். நான்கு திருக்கரங்களுடன், கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அம்பாள் வீற்றிருக்கிறார். அம்மன் சன்னிதியின் எதிரில் தனியாக கொடி மரமும், பலிபீடமும் இருக்கிறது.

சங்கு தீர்த்தம்:


மிகப் பழமையான கோயில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன – கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம். கோயிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய ‘சங்கு தீர்த்தம்’ உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க இறைவன் சங்கை உற்பத்தி செய்துதந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பது மிகவும் விஷேசமாகும்.

சங்கு தீர்த்தம் – பெரிய குளம். ஒரு பாதி படித்துறைகள் மட்டுமே செம்மையாக்கப்பட்டுள்ளன. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.

செங்கல்பட்டு, திருப்போரூர், கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருக்கழுக்குன்றம் திருத்தலம்.

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன.?



சஹாரா:

“சஹாரா’ என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் “பாலைவனம்’ என்று பொருள்.


“ஆரஞ்ச்’ வந்த வழி:

வடமொழியில் “நருகுங்கோ’ (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் “நாருங்கோ’ ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் “ஆரஞ்சியா’வாகி ஆங்கிலத்தில் “ஆரஞ்ச்’ ஆகிவிட்டது இந்த ORANGE.


தாய் + தந்தை:

தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் “தாய்’ என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது “தந்தை’ ஆனது.


உதகமண்டலம்:

தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு “மந்து’ என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு “உத மந்து’ என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு “உதகமண்ட்’ என்றும் “உதக மண்டலம்’ என்றும் பெயர் வந்தது.


காகிதம்:

“காகிதம்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். “காகஸ்’ என்ற அரபுச் சொல்தான் தமிழில் “காகிதம்’ என்று வழங்கப்படுகின்றது.


திங்கள்:

திங்கள் என்றால் “சந்திரன்’. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே “திங்கள்’ அல்லது “மாதம்’ ஆகும்.


கிருதா:

“கிருதா’ என்ற சொல் “கிர்தா’ என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.


சர்க்கரை:

சர்க்கரை என்ற சொல் “சொர சொரப்பு’ என்று வழங்குவதால் சர்க்கரை. இது “ஜர்ஜரா’ என்ற வடசொல்லின் திரிபு.


டொபாக்கோ (புகையிலை):

ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகிய மூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகை பிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார். இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக் கண்டுபிடித்தனர்.

 இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் “டோபாகோ’ என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.


பஞ்சாங்கம்:

கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் – இவைகள் அடங்கியதுதான் “பஞ்சாங்கம்’. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது.

முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் “பஞ்சாங்கம்’ என்று பெயர் வந்தது.

ஆலமரம்:

ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் “பன்யன்’ என்று பெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் “பந்ரா அப்பாஸ்’ என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்

கத்திக்கு இப்படி ஒரு வரவேற்ப்பா? ரசிகர்கள் பரவசம்..?

துப்பாக்கி வெற்றியை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் கத்தி படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒவ்வோரு நாளும் இது குறித்து செய்திகள் அல்லது படங்களோ வருகிறதா என்பதை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.

கூகுள் தேடுபொறி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவல் ஒன்றில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் இந்தியாவின் தேடல்களில் மூன்றாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.  இந்த வருடம் ரிலீஸாகவுள்ள திரைப்படங்களில் எந்த படத்தை இந்தியர்கள் அதிகளவு தேடுகின்றார்கள் என்ற தகவல் ஒன்றை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவர இருக்கும் “ஹேப்பி நியூ இயர்” என்ற திரைப்படம் உள்ளது. இரண்டாவது இடத்தில் சல்மான் கானின் “கிக்’ மற்றும் மூன்றாவது இடத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ உள்ளது.

விஜய் நடிக்கும் கத்தி படம் இந்திய அளவில் மூன்றாவது தேடுதல் படமாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிந்தவுடன் கத்தி படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தாங்க முடியவில்லை.இதற்கு முன்னர் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படமும் கூகுள் தேடுபொறி நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் பின்பற்றலாமே...!

ஒவ்வொரு, பெண்களின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவது திருமணம்!

அன்றைய நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள்.

திருமண நேரத்தில் எல்லோரின் பார்வையும் மணப்பெண்ணையே மையமாகக் கொண்டிருப்பதால் பெண்மைக்கே உரிய நாணம் அவளைத் தலை குனிய வைத்து விடும். இது போன்ற சூழலில் மணப்பெண் தனது தன்னம்பிக்கையை ஒருபோதும் தளரவிட்டு விடக்கூடாது.

சில பெண்கள் பயத்தில் மணமேடையிலேயே கண்ணீர் உதிர்த்தபடி இருக்கிறார்கள்.

மகிழ்ச்சியான நாளில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தேவை. அப்போதுதான் அன்று எடுக்கப்படும் போட்டோ, வீடியோ காமிராவில் மிக அழகாக காட்சி அளிப்பீர்கள்.

அதுபோல திருமணத்தின் போது மணப்பெண்கள் புடவை கட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

பட்டுப்புடவையானது அதிகம் தூக்கலாகவோ, தொங்கலாகவோ இருக்கக்கூடாது.

மணமேடையை நோக்கி நடக்கும் போது மிகவும் மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும். குறிப்பாக படிக்கட்டில் ஏறும்போது கவனமாக இருப்பது நல்லது.

வழக்கம் போல் அங்கும் இங்கும் பார்வையைச் சிதற விடாமல் கீழே கவனமாக பார்த்து அடியெடுத்து வைக்க வேண்டும்.

உங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் யாராவது குரல் கொடுத்தாலோ, சிரித்தாலோ அதை கண்டு கொள்ளாதீர்கள்.

உங்கள் பட்டுப் புடவையின் டிசைன் மற்றும் நகைகளின் தேர்வு ஒன்றுக்கொன்று தொந்தரவு செய்யாத வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக நகைகளில், மாலையில் சுற்றப்பட்டிருக்கும் நூல் சிக்கிக் கொள்வதுண்டு.

நீங்கள் மண்டப வாசலில் இருந்து உள்ளே நுழையும் சமயத்தில் பாதையில் உறவினர்கள். பூக்கள் தூவாமல் இருக்க வீட்டாரிடம் சொல்லி வையுங்கள்.

மனமகளுக்கு பீடா, புகையிலை, பபுள்கம், அடிக்கடி சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிடுவது... போன்ற பழக்கம் இருந்தால் மணநாளின் போது அதை தவிர்ப்பது நல்லது.

சில மணப்பெண்கள் அளவுக்கு அதிகமாக மேக்-அப் போட்டு வலம் வருகிறார்கள். இது நல்லதல்ல. ஒரிஜினல் முகம் தெரியாத அளவுக்கு ஒரு போதும் மேக்-அப் போடாதீர்கள்.

போட்டோ கிராபர் சொல்லாத வரை கண்களை அகல விரிக்க வேண்டாம். அதுபோல வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போது கண்களை அங்கும் இங்கும் அலைய விடக்கூடாது. மணப்பெண் நடந்து வரும் போது அருகில் உள்ள தோழியுடன் அனாவசியமாகப் பேசவேண்டாம். பற்கள் தெரிய சிரிப்பதோ, கோபப்படுவதோ தவறு.

மணமேடையில் அமர்ந்திருக்கும் போது யாருடைய பேச்சாவது உங்களுக்கு பிடிக்காமல் போனால், உங்கள் அதிருப்தி அல்லது கோபத்தை உடனே காட்டக்கூடாது.

அப்போது நீங்கள் கோபப்பட்டால் மணமகன் வீட்டார் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும்.

அதனால் அந்த ஒரு நாள் மட்டும் கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ளுங்கள். வாழ் நாள் முழுவதும் நினைவில் வைத்து பூஜிக்க வேண்டிய புனித நாள் அல்லவா?

இரட்டை வேடத்தில் சமந்தா நடிக்கிறாரா..?

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற அழகியாகத் திகழ்ந்துவரும் நடிகை சமந்தா தற்பொழுது விஜயுடன் கத்தி திரைப்படத்திலும், சூர்யாவுடன் அஞ்சான் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில், சியான் விக்ரம் நடித்துவரும் பத்து எண்ணுறதுக்குள்ள படத்திலும் நடித்துவருகிறார்.

சியான் விக்ரமுடன் சமந்தா ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடிப்பதாகச் சில வதந்திகள் பரவின. ஆனால் இந்த வதந்திகளைச் சமந்தா மறுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஐ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்துவரும் இப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகின்றன. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

கோலிசோடா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கும் படமென்பதாலும், விக்ரம் - சமந்தா ஜோடி நடிக்கும் படமென்பதாலும்
எதிர்பார்ப்புக்கள் கூடிவருகின்றன.


சூர்யாவுடன் நடிக்க விரும்புறேன் - சோனாக்‌ஷி சின்ஹா!

சூப்பர் ஸ்டாரின் லிங்கா திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளார் சோனாக்‌ஷி சின்ஹா. பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவரான சோனாக்‌ஷி தற்பொழுது தென்னிந்திய சினிமாக்களிலும் கால்பதித்துள்ளார்.

சமீபமாக அவர் அளித்துள்ள பேட்டியில் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதற்கு விரும்புதாகத் தெரிவித்துள்ளார். நல்ல தரமான படங்களில்
நடிப்பதற்குத் தனக்குத் தயக்கமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய ஹீரோக்களில் யாருடன் இணைந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு” மகேஷ் பாபு, ரவிதேஜா மற்றும் சூர்யாவுடன் இணைந்து
நடிக்கவிரும்புவதாகவும் தெரிவித்துள்ளாராம்.

சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்திலேயே சோனாக்‌ஷி அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது நினைவிருக்கலாம்.

ஹாலிடே படம் வெற்றிபெற வாழ்த்தியுள்ள இளையதளபதி..!

கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய்- காஜல் அகர்வால் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் துப்பாக்கி. விஜயின் மாஸ் ஹிட் படங்களில் இப்படமும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தின் ஹிந்தி ரீமேக் ஹாலிடே என்ற பெயரில் உருவாகியுள்ளத். ஹிந்தி ரீமேக்கில் அக்‌ஷய்குமாரும், சோனாக்‌ஷி சின்ஹாவும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் வெளியீட்டினை ஒட்டி மும்பை சென்றிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படம் வெற்றியடைய இளையதளபதி வாழ்த்தியதற்காகத தனது இதயப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படமான கத்தி திரைப்படம் மின்னல்
வேகத்தில் படமாக்கப்பட்டுவருகிறது. இவ்வருட தீபாவளியைக் கத்தியுடன் கொண்டாட விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.

ஒன்பது நாயகிகளுடன் ஜெய்..!

இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வாலு திரைப்படம் ஒரு வழியாக முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் விஜயசந்தர், அடுத்து வித்தியாசமான ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தப் புதிய படத்திற்கு கன்னி ராசி என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார்.

ஆனால் நாயகி ஒருவரல்ல. ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா, த்ரிஷா, ஆன்ட்ரியா, லட்சுமிராய், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட 9 கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்களாம். மேலும் படத்தில் சிம்புவும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கலாம் எனத் தெரிகிறது.

ஒரு படத்தில் ஒரு நாயகியை சமாளிப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்கையில் எப்படி 9 நாயகிகள் என்றுதான் கேட்கிறீர்கள். பொறுத்திருந்துதான் பார்ப்போம். ஏற்கெனவே, பாண்டியராஜன் இயக்கத்தில், பிரபு கதாநாயகனாக நடித்து ‘கன்னி ராசி’ என்ற பெயரில் ஒரு படம் 1985-ல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லிங்குசாமிக்கு பாடம் எடுத்த ராஜ்கிரண்..!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து 2005ம் ஆண்டு வெளிவந்த படம் 'சண்ட கோழி'. இந்த படத்தில் ராஜ்கிரண் அப்பாவாகவும், அவருடைய மகனாக விஷாலும் நடித்திருந்தனர். ஏறக்குறைய 'தேவர் மகன்' படத்தின் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் கதாபாத்திரங்களை ஞாபகப்படுத்தும் கதாபாத்திரங்களில்தான் ராஜ்கிரணும், விஷாலும் நடித்திருந்தனர்.

சண்ட கோழி படம் வெற்றிப் படமாகவும், விஷால் தன்னை தமிழ் சினிமாவில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் நிலை நிறுத்திக் கொள்ளும் படமாகவும் அமைந்தது. ராஜ்கிரணும் ஒரு அருமையான குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், ராஜ்கிரண் கதாபாத்திரத்தின் தன்மையை இயக்குனர் லிங்குசாமி முதலில் சரியாக உருவாக்கவில்லையாம். ராஜ்கிரண்தான் அந்த கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்று திருத்தினாராம். இதை லிங்குசாமியே சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சொன்னார்.

“சண்ட கோழி' படத்தின் ஒரு பாடல் காட்சியில் ராஜ்கிரண் சாரை, அப்படியே நடக்க விட்டு படமாக்கிட்டிருந்தோம். திடீர்னு நடிக்கிறத நிறுத்திட்டு ராஜ்கிரண் சார் என்கிட்ட வந்து, “என் கதாபாத்திரம் எப்படிப்பட்ட மரியாதையான கதாபாத்திரம். ஆனால், இந்த பாடல் காட்சியில் போறவன், வர்றவனெல்லாம் என்னை இடிச்சி தள்ளிட்டு போறாங்களே. அப்புறம் எப்படி அந்த கதாபாத்திரத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கும்,” அப்படின்னு சொன்னாரு. அவர் சொன்னதுக்கப்புறம்தான் நான் யோசிக்க ஆரம்பிச்சி, அவர் கிட்ட யார் யாரு எப்படி பேசணும், எவ்வளவு தூரம் நின்னு பேசணும், எவ்வளவு தூரம் நடக்கணும்னு உருவாக்கினேன். இதுதான் உங்க கதாபாத்திரம்னு அவர் கிட்ட கொடுத்திட்டால் போதும், அதுக்கேத்தபடி தன்னை அருமையா மாத்திக்குவாரு ராஜ்கிரண்,” என அவரைப் பற்றிப் புகழ்ந்து தள்ளினார் இயக்குனர்லிங்குசாமி.

ஜெயராமுக்கும் கமலுக்கும் என்ன தொடர்பு..? விளக்குகிறார் இவர்..?

 அதிகளவு விளம்பரமில்லாமல் திடீரென தொடங்கப்பட்டது கமலின் உத்தம வில்லன். கமலின் வழக்கமான காமெடிப் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் நூற்றாண்டுகள் தாவிச் செல்லும் கதையும், படத்துக்கான உழைப்பும், படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களும் இது வழக்கமான காமெடிப் படம் இல்லை என்கின்றன.
கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் போன்ற சூப்பர் சீனியர்கள் தொடங்கி ஜெயராம், ஊர்வசி போன்ற சீனியர்களும் ஆண்ட்ரியா, பூஜா குமார் மாதிரியான ஜுனியர்களும் பார்வதி மேனன் என்ற சப் ஜுனியரும் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களில் பார்வதி மேனனுக்கு உத்தம வில்லன் கொஞ்சம் ஸ்பெஷல்.

பூ படத்தில் அறிமுகமான பார்வதி மேனனுக்கு அதற்கடுத்து சரியான வாய்ப்பு அமையவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த மரியான் நல்ல பெயரை வாங்கித் தந்தாலும் படம் ஓடாததால் ஓட்டைப் பானையில் நீர் இறைத்த மாதிரியானது நிலைமை. இந்நிலையில்தான் கமலின் உத்தம வில்லனில் நடிக்க அழைப்பு வந்தது பார்வதி மேனனுக்கு.
படத்தில் ஜெயராமின் மகளாக வருகிறார் பார்வதி. கதைப்படி கமலின் மருமகள். கமலின் ஜோ‌டி இல்லாவிடினும் கமலுடன் காம்பினேஷன் காட்சிகள் இருக்கிறதாம். அதுவே என்னுடைய பாக்கியம்தான் என புல்லரிக்கிறார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடகக் கலைஞராகவும் இந்த காலத்து சினிமா நடிகராகவும் இரு வேடங்களில் கமல் நடித்து வருகிறார். ஜிப்ரான் இசை.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும், கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷனலும் இணைந்து படத்தை தயாரித்து வருகின்றன.

புளுடூத் பற்றி சில தகவல்கள்....!

இன்று இரண்டு மொபைல்களுக்கு இடையில் வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன.

 நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.

புளுடூத் பற்றி சில தகவல்கள்....!

புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன. ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை.

 இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.


மொள்ளமாரி பயலே... !!!

போடா மொள்ளமாரி பயலே என்று நாம் திட்டுவது உண்டு. ஆனால் அது என்ன மொள்ளமாரி?

முல்லை என்பது ஒருவரிடம் இருக்க வேண்டிய இயைபு ஆகும். இந்த இயைபில் இருந்து வேறுபடுபவர்களை தான் முல்லைமாரி என்று பழங்காலத்தில் அழைத்தனர். தொல்காப்பியர் வாகை திணையில் படைவீரத்தில் வெற்றிவாகை சூடுகிரவர்களை மட்டுமின்றி தத்தம் துறையில் சிறந்து விளங்குபவர்களை வாகை என்றார். அன்று இதை பின்பற்றி அரச முல்லை , பார்ப்பன முல்லை, வல்லான் முல்லை என பல துறைகள் புறப்பொருள் வெண்பாமாலை வகுத்துரைத்தது.

ஆக முல்லை என்பது கற்பு நிலை ஆகும். இது ஆணின் கற்பும் அடங்கியது ஆகும். எனவே கற்பு அல்லது ஒழுக்க நிலையிலிருந்து தவறும் ஒருவரை முல்லை மாறி என்று அழைத்து , பிற்காலத்தில் அது திரிந்து தான் மொள்ளமாரியானது.

வதந்திகளை போல்டாக்கிய ஸ்ருதிஹாசன்...!

 கடந்த இரு நாள்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த வதந்திக்கு கறாரான முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ருதி.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், ஸ்ருதியும் காதலிக்கிறார்கள் என்பதுதான் அந்த வதந்தி. இதனை இரண்டு பேரும் மறுக்கவோ, ஒத்துக் கொள்ளவோ செய்யும் முன், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில இணையதளங்கள் எழுதின. அவர்களுக்கு வலு சேர்ப்பது போல் சென்னை சூப்பர் கிங்ஸில் ரெய்னாவுடன் விளையாடும் ரவீந்திர ஜடேஜா, ரெய்னாவின் ஆட்டத்தைவிட அவரது கேர்ள் ஃப்ரெண்ட் ஸ்ருதிதான் அழகு என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இருவரின் புகைப்படங்களை அருகருகே வெளியிட்டே இந்த தகவலை அவர் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வதந்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார் ஸ்ருதி.

நான் யாரையும் டேட் செய்யவில்லை என்று அதில் கூறியிருப்பவர், இத்தனை மீடியாக்களில் யாரும் தன்னிடம் இந்த விஷயம் குறித்து உறுதி செய்து கொள்ளவில்லை என குறைப்பட்டுள்ளார். இப்படியொரு மறுப்பை ரெய்னாவும் அளித்துள்ளார்

ஸ்ருதி - ரெய்னா காதல் இப்படி காற்றடைத்த பலூனாக இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

வணங்காமுடிக்கும் அரவிந்த்சாமிக்கும் என்ன தொடர்பு..?

 இயக்குனர் செல்வாவின் வணங்காமுடியில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக அரவிந்த்சாமி நடிக்கிறார்.

கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அரவிந்த்சாமி Kaksparsh என்ற மராத்தி படத்தின் தமிழ், இந்தி ரீமேக்கில் நடித்து வந்தார்.

அந்தப் படம் முடிவடைந்த நிலையில் அஜீத் - கௌதம் இணையும் புதுப்படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி நடிப்பதாக செய்தி வெளியானது. நான்சென்ஸ் என்று அந்தச் செய்தியை அரவிந்த்சாமி மறுத்தார். எதுவாக இருப்பினும் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் செல்வாவின் புதிய படம் வணங்காமுடியில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அதில் அரவிந்த்சாமிக்கு நேர்மையான போலீஸ் அதிகாரி வேடம். செல்வா சொன்ன கதையும், ஹீரோ கதாபாத்திரமும் பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதற்கு முன் செல்வாவின் இயக்கத்தில் புதையல் படத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதம் வணங்காமுடியின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கம்பியூட்டரை வேகமாக இயக்க...!

இன்று கம்ப்யூட்டர் பாவிக்கும் போது நிறைய பிரச்சனைகளுக்கு நாம் முகம் கொடுக்க நேரிடும்.கம்ப்யூட்டர் பூட் ஆகுவதற்கு அப்பிளிகேஷன்ஸ் ஓபன் பண்ணுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். ஆகவே கீழ்வரும் சில வழிமுறைகளை செய்து பாருங்கள் கணனியின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 உங்கள் கணனி பூட் ( Boot) ஆகி முடியும் வரை எந்த அப்பிளிகேஷனையும் (Application) ஓப்பன் ( Open) பண்ணாதிருங்கள்.ரிப்பிரஷ் ( Refresh) பண்ணுங்கள் ஏதாவது ஒரு அப்பிளிக்கேஷனை குளோஸ் பண்ணும் போதும்.அவ்வாறு பண்ணும் போது தேவையல்லாத பைல்கள் ரம்மில் ( RAM ) இருந்து நீக்கப்படும். டெக்ஸ்டோப்பில் பெரிய அளவிலான படங்களை ( Large file size images) வோல்பேப்பராக ( Wallpaper ) போடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.அதன் மூலமாக ரம்முக்கு ( RAM ) செல்லும் 64 (MB) மீதப்படுத்த முடியும்.

டெக்ஸ்டோப்பை ( Desktop ) ஷாட்கட்களால் ( Shortcuts) நிரப்பி வைக்க வேண்டாம்.தேவையான ஷாட்கட்டை மட்டும் வைத்திருங்கள்.ஒவ்வொரு ஷாட்கட்டுக்கும் 500 பைட்ஸ் ( Bytes) ரம்முக்கு ( RAM ) செல்லும்... எப்போழுதும் ரிஸக்கல்பீன்குள் ( Recyclebin) இருக்கும் அழித்த பைல்களை அதற்குள்ளும் இருந்து நீக்கி விடுங்கள்.தினமும் இன்டநெட் டெம்பரி பைல்களை அழித்துவிடுங்கள்.( Temporary Internet Files) கம்பியூட்டரை வேகமாக இயக்க...! இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை டீபோறோமன்ட் ( Defragment) பண்ணுங்கள் அதன் மூலமாக உங்கள் ஹாட்டிஸ்கில் இருக்கும் இடைவெளிகள் சரி செய்யப்படும்.

உங்கள் ஹாட்டிஸ்கை இரு பார்டிஸ்சனாக ( Partitions) பிரித்து வையுங்கள்.ஒன்றில் சிஸ்டம் பைல்களும் மற்றையதில் அப்பிளிகேஷன் பைல்களையும் இன்ஸ்ரோல் பண்ண முடியும். இவ்வாறான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் கணனியை எப்போழுதும் வேகமாக வைத்திருக்க முடியும்


உணவு பொருட்களை உண்ணும் முன்…?

உணவை உண்ணும் முன்பு கை கால்களைக் கழுவி சுத்தம் செய் என்பார்கள். பழம், காய்கறி ஆகியவற்றை நீரால் சுத்தப்படுத்து என்பார்கள். கடையில் வாங்கும் பழத்தை அப்படியே உண்ணக் கூடாது. நீரால் சுத்தம் செய் என்பர்கள்.

தானியங்களை நன்கு தண்ணீர் விட்டுக் களையச் சொல்வார்கள். நமது பெரியவர்கள் வாழைப்பழத்தைக்கூட நன்கு நீரால் கழுவிவிட்டுத்தான் தோலை உரித்து உண்பார்கள். தண்ணீரில் அப்படி என்ன விசேஷம்? தண்ணீர் திரவமாக உள்ளதால் சுத்தமாகிறது என்பது மட்டுமல்ல. விஞ்ஞான அடிப்படையில் தண்ணீரில் காற்றுவடிவாக – “ஆக்சிஜன்’ உள்ளதால் தண்ணீரை “”உயிர் நீர்” என்பார்கள். நமது உயிர் பிழைக்கவே நீரில் கழுவுகிறோமோ?

1950 பதிற்றாண்டுக் காலகட்டத்தில் விவசாயத்தில் விஷம் இல்லை. பூச்சிமருந்து அடிக்கும் பழக்கம் இல்லை. இயற்கை உரம் கொண்டு விளைவிக்கப்பட்ட பழங்கள், காய்கறிகளைக்கூடப் பெரியவர்கள் தண்ணீர் விட்டுக் கழுவ வேண்டும் என்பார்கள். புழுதி, எச்சில் துளி, இருமல் துளி, தும்மல் துளி, மண் போன்ற மாசுகள் உண்டு.

ஊட்டச்சத்து நிபுணர்கள் தோலில் உள்ள சத்துகளைப் பற்றிக் கூறுவதுண்டு. ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றைத் தோலோடு சாப்பிட வேண்டும் என்பார்கள். அரிசியை, பருப்பைக் களைவதுகூட தவறு, “பி’ வைட்டமின் இழக்கப்படும் என்பார்கள்.

ஆப்பிளில் இப்போது ஒருவித மெழுகைத் தடவுகிறார்கள். அது நச்சுப்பொருள். பழைய ஆப்பிளைப் புதிதுபோல் பளபளப்பாகக் காட்டுமே தவிர அழுகாமல் காப்பாற்றாது. இப்படிப்பட்ட நச்சு தடவப்பட்ட ஆப்பிளின் தோலைச் சீவாமல் தோலுடன் சாப்பிட்டால் கல்லீரல் – மண்ணீரல் பழுதுறும். தோலுடன் உண்டாலும் தோலை நீக்கி உண்டாலும் மாம்பழம் தின்றால் சிலருக்கு வயிறு ஓட்டம் (வயிற்றுப் போக்கு) ஏற்படும். ஏனெனில் சிலர், “கார்பைட்’ விஷக்கல்லைப் பயன்படுத்தி வேகமாக மாங்காய்களை மாம்பழமாக்கி விற்கிறார்கள். தண்ணீரில் கழுவுவதால் நச்சு நீங்காது. இதற்கு ஒரே வழி முற்றிய மாங்காய்களை வாங்கி நாமே பழுக்க வைத்து உண்பதுதான். பத்திரிகைக் காகிதங்களைக் கிழித்துப் போட்டு மாங்காய்களைப் போட்டு வைத்தால் மெதுவாகப் பழுக்கும். பழுக்கப் பழுக்க ஒவ்வொன்றாக எடுத்து உண்ணலாம்.

திராட்சைப்பழம் அறுவடையாகும் முன்னர் பல தடவை பூச்சிமருந்து அடிப்பார்கள். திராட்சைப் பழத்தை வாங்கியதும் நன்கு கழுவிவிட்டு 6 மணிநேரம் தண்ணீரில் ஊறப் போட்டுப் பின்னர் வெளியே நீரை வடியவிட்டு உண்டால், சுமார் 80 சதவீதம் விஷம் இறங்கிவிடலாம்.

அரிசி, கோதுமை, பருப்பு போன்ற தானியங்களில் வண்டு பிடிக்காமல் இருக்க போரிக் பவுடர், கந்தகம் கலந்த தூள் போட்டிருப்பார்கள். இவை நச்சு என்பதால் வைட்டமின் “பி’ ஐப் பற்றிக் கவலைப்படாமல் பல தடவை நீர்விட்டுக் களைந்து சமைப்பது நல்லது. நீரில் மற்றொரு சிறப்பு உண்டு. முதல் நாள் சமைத்த சாதத்தை வீணாக்காமல் மறுநாள் பழைய சோறாகச் சாப்பிட நிறைய நீரை ஊற்றி மூடி வைத்தால் சோறு கெட்டுப்போகாது. உயிர் நீரில் உயிரிகள் பெருகும். மேலும் ஒருநாள் நீரில் வைத்திருந்தால் புளிப்பு ஏற்படும். அதில் ஈஸ்டு உருவாகும். இது இயல்பான ஈஸ்டு. உளுந்தை இட்லி தோசைக்கு நீரில் ஊறவைத்துவிட்டுப் பின்னர் அரைக்கிறோம். அரிசியையும் அவ்வாறே. நீரில் ஊறவைத்து அரைப்பதால் வயிற்றுக்கு நன்மை செய்யும் உயிரிகள் வளர்கின்றன.

அரைத்த மாவை ஒன்றுகலந்து ஒரு இரவுக்குப் புளிக்க வைத்தால் மறுநாள் காலை மாவு பொங்கி வழியும். இதிலும் இயல்பான ஈஸ்டு உருவாகிறது. திடீர் இட்லி மாவு, திடீர் தோசை மாவு என்று விற்பதை வாங்கக் கூடாது. ரசாயன செயற்கை ஈஸ்டு கலக்கப்படலாம்.

இப்போதெல்லாம் சப்பாத்தியைக்கூட பாலித்தீன் கவரில் போட்டு ரெடிமேடாக விற்கிறார்கள். கோதுமை மாவை நீரில் பிசைந்து உருட்டித்தட்டி அடித்து உருண்டையாக்கிச் சற்றுப் புளிக்க வைத்தோ – புளிக்க வைக்காமலோ அவரவர் ருசிப்படி எளிதில் இட்டு அடுப்பில் போட்டு சப்பாத்தி செய்ய முடியாதவாறு – பெண்களும், சில சமயங்களில் ஆண்களும் மாலை தொடங்கி இரவுவரை டி.வி.யில் சீரியல் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவழிப்பது நோய்க்குறியே. மனநோயாளியாக மாறவும் வாய்ப்புள்ளது. உடலையும் உள்ளத்தையும் கெடுக்கக்கூடிய டி.வி. விளம்பரதாரர் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க இயலுமானால் தேக சுகம், மன அமைதி கிட்டும்.

ஜெயம் ரவியின் அடுத்த இயக்குநர் இவர் தான்..?

கார்த்தி, அனுஷ்கா நடித்த 'அலெக்ஸ் பாண்டியன்' என்ற படுதோல்விப் படத்தை இயக்கிய சுராஜுக்கு அடுத்த படம் கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருந்ததாம். ஆனாலும், சிறந்த கதையாசிரியர், நகைச்சுவைக் காட்சிகளை அமைப்பதில் வல்லவர் என்பதால் அவர் சிறிதும் தடுமாறாமல் அடுத்த கதை ஒன்றை ரெடி செய்துவிட்டாராம்.

'அலெக்ஸ் பாண்டியன்' படத்தின் தோல்விக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமும், படத்தின் நாயகனும்தான் காரணம் என இயக்குனர் வட்டாரங்களில் காரணம் சொல்கிறார்கள். இருந்தாலும் அதைப் பற்றிப் பேசிப் பிரயோஜனமில்லை என்பதால் தன்னை நிரூபித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் அடுத்து அட்டகாசமான கதை ஒன்றை உருவாக்கி நடிகர் ஜெயம் ரவியிடம் சொல்லியிருக்கிறார்.

அந்தக் கதையைக் கேட்ட ஜெயம் ரவி படத்திற்கு உடனே சம்மதம் சொல்லியிருக்கிறார். அநேகமாக இந்த படம் படம் ஆரம்பமாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வரை பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார்களாம்.
ஜெயம் ரவி ஜோடியாக யாரை நடிக்கவைக்கலாம் என அலசிப் பார்த்திருக்கிறார்கள். பொதுவாக படத்திற்குப் படம் புது ஜோடியுடனே நடிக்கும் ஜெயம் ரவியுடன், இதுவரை யார் ஜோடி சேர்ந்ததில்லை என ஆராய்ந்து, காஜல் அகர்வாலை தேர்வு செய்திருக்கிறார்களாம். அதோடு, ஆந்திராவிற்கு ஓடிப் போய் எங்கோ ஒளிந்து கொண்டுள்ள அஞ்சலியை மீண்டும் இந்தப் படம் மூலம் தமிழுக்குக் கொண்டு வரும் எண்ணத்திலும் இருக்கிறார்களாம்.

படத்தைப் பற்றிய மற்ற விவரங்களை இயக்குனர் சுராஜ் விரைவில் அறிவிப்பார் என்று இயக்குனருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

'காவியத் தலைவன்' தாமதத்துக்கு யார் காரணம்..?

'அரவான்' படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கி வரும் படம் 'காவியத் தலைவன்'. பல மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் மெதுவாகவே வளர்ந்து வந்தது. சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

சுதந்திரக் காலத்திற்கு முந்தைய கதையாக இருப்பதாலும், பல சவாலான காட்சிகள் இருப்பதாலும் படத்தின் படப்பிடிப்பு தாமதமானாலும், ஏ.ஆர்.ரகுமானும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. படம் ஆரம்பமான நேரத்தில் ஒரு சில பாடல்களைக் கொடுத்த ஏ.ஆர். ரகுமான் அதன் பின் ஒவ்வொரு பாடலையும் இசையமைத்துக் கொடுப்பதற்கு மிகவும் நேரம் எடுத்துக் கொண்டாராம்.

படத்தை எப்படியாவது கோடை விடுமுறையில் வெளியிட்டு விடலாம் என்று நினைத்த தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் ரொம்பவே ஏமாந்து போய்விட்டார்களாம். ஒரு பாடலைக் கொடுப்பதற்கே ஏ.ஆர். ரகுமான் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
மற்ற புது இசையமைப்பாளர்களாக இருந்தால் விரட்டி கேட்டு விடலாம், ரகுமானாயிற்றே அப்படியெல்லாம் கேட்க முடியாது. அதனால் அவர் தரும் பொறுமையாகக் காத்திருந்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். படத்திற்காக அவர் தர வேண்டிய கடைசிப் பாடலை தர மட்டும் மூன்று மாத காலம் எடுத்துக் கொண்டாராம். அதன் பின் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரகுமான் தமிழில் வருடத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார். அதிலும் சிறிய படங்களுக்கு அவர் இசையமைப்பதேயில்லை என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருந்து வருகிறது. ரஜினிகாந்த் போன்ற நடிர்களுக்கும், ஷங்கர் , மணிரத்னம் போன்ற மிகப் பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைக்கிறார் என மற்ற இயக்குனர்களே குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், ரகுமான் இதற்கெல்லாம் பதிலளிப்பதேயில்லை.

தற்போது 'காவியத் தலைவன்' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமா நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம்.

'லிங்கா' தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடி…!

ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ள 'லிங்கா' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம்.

இது சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத் தரப்பிலிருந்து கசிந்துள்ள செய்தியில் பல தயாரிப்பாளர்கள் 'லிங்கா' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்க போட்டி போடுகிறார்களாம். பொதுவாகவே, ரஜினி நடிக்கும் படம் என்றால் தெலுங்கிலும் நல்ல வியாபாரம் நடக்கும். அவருடைய படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த அளவுக்கு படத்துக்கு 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

அது மட்டுமல்ல படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் வேறு ரஜினியுடன் நடிப்பதால் படத்தின் மதிப்பு அதிகமாகவே உள்ளது. படம் ஆரம்பமான நாள் முதல் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. மைசூரில் ஆரம்பமான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

ஒரு டப்பிங் படத்திற்கு 30 கோடி ரூபாய் அளவில் விலை பேசப்பட்டு வருகிறது என்பது தெலுங்குத் திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளதாம். எந்த ஒரு படத்திற்கும் இல்லாத விலை இந்த படத்திற்காக பேசப்படுவது நேரடியாக தெலுங்குப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது.

ரஜினிகாந்திற்கு கடந்த சில வருடங்களாகவே இந்திய அளவில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி அவரைச் சந்தித்துப் பேசியது, சமீபத்திய அவரது ட்விட்டர் அறிமுகம், 'கோச்சடையான்' திரைப்படம் என கடந்த சில மாதங்களாக மீடியாக்களில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறார்.

தெலுங்கு டப்பிங்கே இவ்வளவு விலை என்றால் தமிழில் ஏரியா விற்பனை எப்படி இருக்கும் ?

தமிழ்நாட்டு மக்களோட பணம் மட்டும் வேணும் - ரஜினியை தாக்கிய மன்சூர் அலிகான்..?

மதுரக்காரங்கே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் திடைத்துறையைச் சார்ந்த சில முக்கிய சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் பேசும்போது சூப்பர் ஸ்டாரை குறித்து தாக்கி பேசியதால் விழவில் பரபரப்பு ஏற்பட்டது.

 அவர் பேசியபோது, . மன்சூர் அலிகான்  மதுரக்காரங்கே படத்தின் தலைப்பை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு, படத்தின் அனைத்து காட்சிகளும் தமிழ்நாட்டிலேயே எடுத்திருக்கிறார்கள் இதை கேள்விபடும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் சில ஸ்டார்களெல்லாம் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்தவே கேவலப்படுகிறார்கள்.

மைசூர், ஆந்திரான்னு பறந்துட்றாங்க. 10 கோடி, 20 கோடி செலவு பண்ணி வெளியூர்ல ஷூட்டிங் நடத்துவாங்க, ஆனா அந்த படத்தை தமிழ்நாட்ல ரிலீஸ் பண்ணி தமிழ்நாட்டு மக்களோட பணத்தை மட்டும் பங்கு போட்டுக்க வருவானுங்க என்று போட்டு தாக்கினார்.

ஆனால் தற்போது எந்த முன்னனி நடிகர் படங்களும் தமிழ் நாட்டில் எடுப்பதில்லை என்பதுதான் உண்மை