Monday, June 2, 2014

தமிழ்நாட்டு மக்களோட பணம் மட்டும் வேணும் - ரஜினியை தாக்கிய மன்சூர் அலிகான்..?

மதுரக்காரங்கே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் திடைத்துறையைச் சார்ந்த சில முக்கிய சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான் பேசும்போது சூப்பர் ஸ்டாரை குறித்து தாக்கி பேசியதால் விழவில் பரபரப்பு ஏற்பட்டது.

 அவர் பேசியபோது, . மன்சூர் அலிகான்  மதுரக்காரங்கே படத்தின் தலைப்பை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு, படத்தின் அனைத்து காட்சிகளும் தமிழ்நாட்டிலேயே எடுத்திருக்கிறார்கள் இதை கேள்விபடும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் சில ஸ்டார்களெல்லாம் படப்பிடிப்பை தமிழ்நாட்டில் நடத்தவே கேவலப்படுகிறார்கள்.

மைசூர், ஆந்திரான்னு பறந்துட்றாங்க. 10 கோடி, 20 கோடி செலவு பண்ணி வெளியூர்ல ஷூட்டிங் நடத்துவாங்க, ஆனா அந்த படத்தை தமிழ்நாட்ல ரிலீஸ் பண்ணி தமிழ்நாட்டு மக்களோட பணத்தை மட்டும் பங்கு போட்டுக்க வருவானுங்க என்று போட்டு தாக்கினார்.

ஆனால் தற்போது எந்த முன்னனி நடிகர் படங்களும் தமிழ் நாட்டில் எடுப்பதில்லை என்பதுதான் உண்மை

1 comments: