Thursday, May 29, 2014

கோபம் இல்லாத மனைவி தேவையா..?

              குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக் கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர்.

மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்:

1. மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள்.

2. மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது.

3. முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது தொந்தரவு செய்வது போல மனைவியிடம் பேசி கொண்டே இருக்காதீர்கள். இதனால் மனைவி கோபமடைந்து, உங்களை திட்ட வாய்ப்பு உண்டு. இதனால் 2 பேரின் ‘மூடு அவுட்’டாக வாய்ப்பு அதிகம்.

4. வேலைக்கு செல்லும் மனைவியாக இருந்தால், வேலை முடிந்து வரும் போது அவர்களின் அனுபவங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். அதேபோல நீங்களும் உங்கள் அனுபவங்களை, அவரிடம் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.

5. மனைவி செய்யும் சிறு உதவிகளுக்கும் அன்புடன் நன்றி கூறலாம். அதனை சற்று கொஞ்சலாக கூறினாலும் தவறில்லை. நாம் செய்யும் தவறுகளுக்காக உடனே மன்னிப்பு கேட்டு கொள்ளுங்கள். இதன்மூலம் மனைவியிடம் கோபம் நீடிப்பதை தவிர்க்க முடியும்.

6. மனைவி செய்த தவறுகளை மனதில் வைத்து கொண்டு, அதனை குத்தி காட்டி பேச கூடாது. மேலும் சம்பந்தமே இல்லாமல் மனைவியின் பெற்றோரையும், குடும்பத்தையும் திட்ட கூடாது. இதனால் மனைவியின் மனதில் வெறுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

7.வேலைக்கு செல்லாத மனைவியாக இருந்தால், நேரம் கிடைக்கும் போது மனைவியை வெளி இடங்களுக்கு கூட்டி செல்ல மறக்க வேண்டாம்.

8. மனைவி விரும்பி ஏதாவது பொருட்களை கேட்கும் போது, பணம் இருந்தால் வாங்கி கொடுக்கலாம். இல்லா வி்ட்டால் பணம் இல்லை என்றோ அல்லது குறிப்பிட்ட பொருள் இப்போது தேவையில்லை என்றோ சாந்தமாக மனைவியிடம் எடுத்து கூறலாம்.

9. கணவனும் மனைவியும் பேசும் போது பிடிவாதமாக பேசாமல், விட்டுக் கொடுத்து பேசுங்கள். மனைவியும் தனது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க தவறாதீர்கள்.

10. மனைவி செய்த சமையல், தோட்ட வேலைகள், வீட்டை அலங்கரிப்பது உள்ளிட்ட பணிகளை பார்த்து குறை கண்டுபிடிக்காதீர்கள். நன்றாக இருப்பதாக கூறிவிட்டு, மாற்றத்தை பணிவாக தெரிவிக்கலாம்.

11. மற்றவர்களின் முன் மனைவியை கேவலமாக பார்ப்பது, பேசுவது, திட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால், மனைவி தனிமை உணர்ந்து தாய்வீ்ட்டு நினைப்பு வந்துவிடுகின்றது.

12. வீட்டில் இருக்கும் போது மனைவிக்கு சிறு சிறு உதவிகள் செய்வதன் மூலம், இருவருக்கும் இடையே உறவும் பலப்படும், அன்பும் பெருகும். கோபம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

கடைசி கடைசியாக ஒரு யோசனை: இதை உங்கள் மனைவி பார்க்கிற மாதிரி வச்சு படிக்காதிங்க

நட்புக்கு மரியாதை கொடுக்கும் ரஜினி!

தன் கடந்த கால வாழ்க்கையை உச்சத்திற்க்கு சென்ற போதும் மறக்காதவர் சூப்பர் ஸ்டார். தற்போது இவரின் நிஜ வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட நட்பை பற்றி, 'ஒன் வே' என்ற கன்னடப்படமாகவும் 'ஒரு வழிச் சாலை' என்ற தமிழ்ப் படமாகவும் வரயிருக்கிறது.

ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராஜ் பகதூர் இந்த படத்திலும் நண்பராகவே நடிக்கிறார், மேலும் இப்படத்தை பார்க்க ரஜினி ஆர்வமாக உள்ளதாகவும், படம் வெளியானதும் தன் நண்பருடன் சேர்ந்து பார்ப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்களாம். ரசிகர்கள் திரையரங்குக்கு வந்து பார்த்தால் மட்டுமே ரஜினி கதாபாத்திரத்தில் யார் நடித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என படக்குழு தெரிவித்துள்ளது.

திருநங்கை...?

திருநங்கை

*புதன், சனி, கேது கோள்கள் திருநங்கை

*இந்தியாவை ஆண்ட மாலிக்காபூர் ஓர்  திருநங்கை

*திருநங்கைகளுக்கு முகப்பரு உண்டாவதில்லை

*அர்ச்சுனன் ஓராண்டு திருநங்கையாக  வாழ்ந்தார்

*ஆண்டுக்கு ஒரு முறை கூவாகத்தில் திருநங்கை திருவிழா நடை பெறுகிறது.

தனது வில்லனைப் பாராட்டியுள்ள விஜய்!

கத்தி திரைப்படத்திற்குப் பிறகு இளையதளபதி விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் நடிக்கவுள்ளார்.

கன்னட நடிகரான சுதீப் சமீபமாக இயக்கி, நடித்திருக்கும் மானிக்யா திரைப்படம் கர்னாடகாவில் மாபெரும் வெற்றி கண்டதுடன், பலரது
பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது. மிர்ச்சி தெலுங்குப் படத்தின் ரீமேக்கான இப்படம் கன்னடத் திரையுலகினைக் கலக்கிவருகிறது. இப்படத்தில்
வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபமாக இப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளித்த விஜய், இப்படத்தினால் மிகவும் ஈர்க்கப்பட்டதுடன், சுதீப்பின் நடிப்பினையும்
வெகுவாகப் பாராட்டியுள்ளாராம். இதனால் சுதீப் மகிழ்ச்சியில் திளைத்துவருவதாகக் கூறப்படுகிறது.

பேசுங்க அனுஷ்கா.. நல்லா இருக்கும்” – கௌதம் மேனன் வேண்டுகோள்!!!

அஜீத் நடித்துவரும் பெயரிடப்படாத தங்களது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் படு மும்முரமாக இருக்கிறது கௌதம் மேனனின் படக்குழு. சமீபத்தில் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் அஜித் நடித்த சில காட்சிகளை படமாக்கினார்கள்.

இரு வேறு கெட்டப்புகளில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று தெரிகிறது.

அனுஷ்கா இதுவரை நடித்துள்ள படங்களில் இருந்து இந்தப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கேரக்டர் முற்ரிலும் வித்தியாசமாக இருக்குமாம்.

இதனால் அதன் தனித்தன்மையை இன்னும் கூடுதலாக மெருகேற்றும் வகையில் அனுஷ்காவையே சொந்தக்குரலில் டப்பிங் பேசும்படி சொல்லியிருக்கிறாராம் கௌதம் மேன்ன். அந்த வகையில் அனுஷ்கா தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 18ல் பீட்சா 3டி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்து வெளியான படம் 'பீட்சா'. த்ரில்லர் படமான 'பீட்சா' ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வணிகரீதியிலும் லாபத்தைத் தந்தது.

இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 'டேவிட்' பட இயக்குநர் பிஜோய் நம்பியார் வாங்கினார். இந்தியில் இப்படத்தை அக்‌ஷய் அக்கினேனி இயக்கியிருக்கிறார். ஹீரோவாக அக்‌ஷய் ஓபராய் நடித்திருக்கிறார். பார்வதி ஓமனக்குட்டன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஜெயகிருஷ்ணா குமடி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மிக்கி, சுரப் கால்சி, ஷமிர் டான்டன் ஆகிய மூவரும் இசையமைத்துள்ளனர். ’யுத்தம் செய்’, ’முகமூடி’ போன்ற படங்களுக்கு இசையமைத்த கே இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்.

3டி தொழிநுட்பத்தில் உருவாகிவரும் இப்படம் ஜூலை 18ல் வெளியாகிறது. இப்படத்தை சித்தார்த் ராய் கபூருடன் இணைந்து, பிஜோய் நம்பியார் தயாரித்திருக்கிறார். யுடிவி ஸ்பாட்பாய் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

சின்ன சின்ன யோசனைகள்....!

         புக் செல்ப்புக்ளில் பூச்சிகள் தொல்லயா? பாச்சா உருண்டைதான் போடவேண்டும் என்பதில்லை.  வீட்டில் கர்ப்பூரம் இருந்தால் போட்டு வையுங்கள். பூச்சிகள் மாயமாய் மறைந்து போகும்.

என்னதான் பல் துலங்கினாலும் பற்களில் கரை போகவில்லையா? புதினா, எலுமிச்சை தோல் இது இரண்டில் எதையாவது ஒன்றை நன்கு காய வைத்து  பொடி செய்து, அந்த பொடியுடன் உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி பாருங்கள். பற்கள் பளிச்...

மல்லிகை, முல்லை செடிகள் நன்கு செழித்து வளர வில்லையா? அவற்றின் இலைகளை உருவி அந்த செடிக்கே உரமாக போட்டால் செடி செழித்து வளரும்.

கைக்குழந்தைகள் இரவில் தூங்காமல் அழுது கொண்டிருந்தால் 1 /2 மேசைக்கரண்டி தேன் கொடுத்தால் நன்கு தூங்கும்.

அருகம்புல்லை சுத்தமாக கழுவி வாயில் போட்டு நன்றாக மென்று பல்வலி உள்ள இடத்தில் அடக்கி வைத்து கொண்டால் பல்வலி குறையும்.

பெண்களுக்கு ஏற்ப்படும் பல நோய்களுக்கு வாழைப்பூ சிறந்த மருந்தாகும், வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்வது நல்லது.  ஆண்கள் வாழைத்தண்டை சமைத்து உண்ண வேண்டும்.

அதிக நார் சத்த்துள்ள வெங்காயத்தை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்வதால், ரத்த அழுத்தம் வராமல் தடுத்து கொள்ளலாம். உடலில் வெப்பத்தை குறைக்கிறது. மலச்சிக்கல்  வரமால் தடுக்கும்.

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சண்ட காய்ச்சி பால் சக்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு நீங்கும்.

அடிக்கடி நாவறட்சி ஏற்ப்பட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருக்கிறதா.  கொஞ்சம் துளசி இலையை பறித்து நன்றாக மென்று விடுங்கள். நாவறட்சி மட்டுப்படும்.

வாழை தண்டை சுட்டு அதன் சாம்பலை எண்ணையில் கலந்து தீப்புண், சீழ்வடிதல், மற்றும் ஆறாத காயங்கள் மீது தடவி வந்தால் காயங்கள் விரைவில் குணமாகும்.

உங்கள் வீட்டு தோட்டத்தில் ஒட்டு கொய்யா, மா, சப்போட்டா போன்றவை வாங்கி வளர்க்கிறிங்களா? முதல் வருடம் பூக்கும் பூக்களை உருவி விட்டு விடுங்கள். அடுத்த வருடம் அமோகமாய் காய்க்கும்.

சித்த வைத்திய சிகாமணி MBBS! - 'கல்யாணத்துக்குப் பிறகு தாம்பத்தியத்தில் தடுமாற்றமா..?

                  'கல்யாணத்துக்குப் பிறகு தாம்பத்தியத்தில் தடுமாற்றமா..? என்கிட்ட வாங்க!’னு ஊர்ல இருக்கும் வாலிப-வயோதிகர்களுக்கு அழைப்பு விடுக்கும் நம்ம ஹீரோவுக்கே, கல்யாணத்துக்குப் பொண்ணு கிடைக்கலை. அதுவும்... பரம்பரை பரம்பரையா, பாரம்பரிய வழியில் இளைஞர்களின் மன, உடல் குறைகளைத் தீர்த்துவெச்ச குடும்பத்தோட அஞ்சாவது தலைமுறை இளைஞனுக்கு (ஹீரோ), கல்யாணம் பண்ணிக்கிறதுல சிக்கல். ஹீரோ அதை எப்படிச் சமாளிக்கிறார்..? இதுதான் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’ படம்!'' - ஒரு வரியில் நம் ஆர்வத்தைத் தன் பக்கம் திருப்புகிறார் இயக்குநர் எல்.ஜி.ரவிசந்தர்.

 ''பாரம்பரியச் சித்த வைத்தியம் தமிழ்நாட்டுல எவ்வளவு பெரிய நெட்வொர்க். அதை வெச்சு காமெடி பண்ணிட முடியுமா?''

''அட, கதையை முழுசாக் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க. ஒளிச்சு மறைச்சு எந்த ரகசியமும் கதையில இல்லை. க்ளைமாக்ஸ் வரைக்கும்கூட இப்பவே முழுக் கதையையும் சொல்றேன். பொண்ணு கிடைக்காத வெறுப்புல இருக்கும் ஹீரோ பரத், ஹீரோயின் நந்திதாவைப் பார்த்ததும் காதலில் விழுறார். அதனால, நந்திதா போற இடம் எல்லாம் ஃபாலோ பண்ணிட்டே இருக்கார். 'இவன் நம்மளைக் கடத்த வர்றான் போல’னு தப்பாப் புரிஞ்சுக்கிட்ட நந்திதா, அவங்க அப்பா, தம்பி ராமையாகிட்ட சொல்றாங்க.

கொம்புச் சண்டை மாஸ்டர் தம்பி ராமையா, தன் சிஷ்யர்களோட போய், பரத்தைக் கட்டிவெச்சு வெளுக்கிறார். அப்போ பரத் மொபைலுக்கு வர்ற ஒரு அழைப்பு, 'மருந்து தீர்ந்துடுச்சு. அடுத்து எப்போ மருந்து கொடுப்பீங்க?’னு ஸ்பீக்கர் போன்ல அலற, 'ஐயோ..! தம்பி நீங்க எம்.பி.பி.எஸ். டாக்டரா? இது தெரியாம உங்களை அடிச்சிட்டேனே!’னு தம்பி ராமையா பதற, அடி, உதைல இருந்து தப்பிக்க, 'ஆமாங்க... இவன் டாக்டர்தான்’னு பரத் ஃப்ரெண்ட் கருணா உளற... அடிச்ச கையாலயே பரத்துக்குக் கை-கால் அமுக்கிவிட்டு, 'எம்.பி.பி.எஸ். டாக்டரே மாப்பிளையா அமையுறது வரமாச்சே!’னு ஃபீலிங்ஸ் ஆரம்பிச்சிடுவார் ராமையா.

'நான் எம்.பி.பி.எஸ். டாக்டர் இல்லை. சித்த வைத்தியர்’னு பரத் உண்மையைச் சொன்னா, கல்யாணம் நடக்காது. ஆனா, அதுக்காக நந்திதா மேல இருக்கிற காதலைவிட முடியாது. அப்புறம் ஆரம்பிக்கும் பாருங்க... காமெடி ரைடு. வயித்து வலிக்கு டாக்டரைத் தேடுவீங்க!''

''எப்பவோ ஒரு காமெடி படம்னா சிரிக்கலாம்... எப்பப் பார்த்தாலும் காமெடி படம்னா..?''

''இது சும்மா உங்களைச் சிரிக்க வைக்கணும்கிற அச்சுபிச்சு காமெடி இல்லை. கதை, காட்சி, வசனத்தோட பின்னிப் பிணைஞ்ச காமெடி.

ஸ்கிரிப்ட் பார்த்த கே.பி. சார், 'இதுல எந்த ஆர்ட்டிஸ்ட் நடிச்சாலும் படம் ஹிட். யாரை வேணும்னாலும் ஃபிக்ஸ் பண்ணுங்க. ஷூட்டிங் ஆரம்பிச்சுடலாம்’னு சொன்னார்.

பரத், நந்திதா தவிர, தம்பி ராமையா, கருணாகரன், மனோபாலா, மயில்சாமி, இமான் உள்ளிட்ட 21 காமெடி நடிகர்கள் நடிக்கிறாங்க. ஆனா, யாரும் படத்துல தனியாத் தெரிய மாட்டாங்க.

பெங்களூருல இருந்து ரஜினிகாந்த், பிரகாஷ்ராஜ்...னு தமிழுக்கு அறிமுகப்படுத்தின கே.பி சார், இந்தப் படத்துல கோமல் குமாரை அறிமுகப்படுத்துறார். கன்னடத்துல நம்பர் ஒன் காமெடி ஆர்ட்டிஸ்ட் அவர். 'சந்திரமுகி’ கன்னட வெர்ஷன்ல வடிவேலு கேரக்டர் பண்ணவர். அங்க 99 படங்கள் முடிச்சிட்டு, 100-வது படம் தமிழ்ல பண்றார்.

எங்களோட ஆர்வம், டீம் எல்லாத்தையும் பார்த்துட்டு, 'ஸ்கிரிப்ட்ல உள்ளதை உள்ளபடி எடுத்துட்டு வந்துடுங்க. கண்டிப்பா ஹிட்’னு ஆசீர்வாதம் பண்ணியிருக்கார் கே.பி. சார்.

அந்த ஆசீர்வாதமே எங்களுக்குப் பெரிய வரம்!''

கோடையில் காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!

              கோடை க்காலத்தில் வெயிலின் தாக்கமானது அளவுக்கு அதிகமாக இருப்பதால், மார்கெட் சென்று வாங்கி வரும் காய்கறிகளானது சீக்கிரம் வாடிவிடும். காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக வைத்துக் கொள்வது என்பது ஈஸியானது அல்ல. அதிலும் ஃபிரிட்ஜ் இல்லாத வீடுகளில் காய்கறிகளானது ஒரு நாளைக்கு மேல் நிலைக்காது.

மேலும் நிபுணர்கள் காய்கறிகளை சமைத்து சாப்பிடும் வரை பிரஷ்ஷாக வைத்துக் கொள்ள சில வழிகள் இருப்பதாக சொல்கின்றனர். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை வெயிலில் கஷ்டப்பட்டு மார்கெட் சென்று வாங்கி வரும் காய்கறிகள் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளது. அதன்படி காய்கறிகளைப் பராமரித்தால், காய்கறிகளானது பிரஷ்ஷாக இருக்கும்.
       
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வாங்கி வந்தால், அதனை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைக்கக்கூடாது. குறிப்பாக வெங்காயத்துடன் சேர்த்து வைக்கக்கூடாது. ஏனெனில் வெங்காயத்தில் இருந்து வெளிவரும் வாயுவானது உருளைக்கிழங்கை விரைவில் வாடச் செய்யும்.

வெங்காயம்

வெங்காயத்தை எப்போதும் தனியாகவும், காற்றோட்டமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
       
செலரி

செலரி நீண்ட நாட்கள் ஃப்ரட்ஜில் இருக்க வேண்டுமானால், தண்டுப்பகுதியில் தண்ணீரை தெளித்து ஒரு கவரில் போட்டு வையுங்கள்.

காளான்

காளானை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, அதில் ஆங்காங்கு சிறு ஓட்டைகளைப் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் வரும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காயை நீண்ட நாட்கள் சேகரித்து வைப்பது மிகவும் சுலபம். ஏனெனில் இதை கனிந்த பின்னரும் சமைக்கப் பயன்படுத்தலாம்.
   
முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை வெயில் படாதவாறு, எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் இடத்தில் வைத்துக் கொண்டால், நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

குடைமிளகாய்

குடைமிளகாய் வாங்கிய பின், அதன் காம்புகளை வெட்டி எடுத்துவிட்டு, அதனை ஈரமான துணியால் சுற்றி வைத்தால், நீண்ட நாட்கள் இருக்கும்.

கேரட்

 கேரட்டின் மேல் பகுதியை வெட்டி, ஈரமான டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் வரும்.
       
ப்ராக்கோலி

ப்ராக்கோலியை ஈரமான துணியால் சுற்றி, ஃப்ரிட்ஜில் வைத்தாலும் சரி அல்லது ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தாலும் சரி நீண்ட நாட்கள் இருக்கும்.

வெள்ளரிக்காய்

கோடையில் வெள்ளரிக்காய் சீசன் என்பதால் பலர் இதனை அதிகம் வாங்கி வருவார்கள். அப்படி வாங்கி வரும் வெள்ளரிக்காயை ஈரத்துணியில் போட்டு சுற்றி வைத்தால், நீண்ட நாட்கள் வரும்.

பூண்டு

பூண்டு நீண்ட நாட்கள் வர வேண்டுமானால், அதனை இருட்டான இடத்திலோ அல்லது குளிர்ச்சியான இடத்திலோ பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.
       
பீன்ஸ்

 ஈரப்பதமான இடத்தில் பீன்ஸ் நீண்ட நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும். எனவே பீன்ஸை ஈரத்துணியில் போட்டு சுற்றி வைக்க வேண்டும்.

வெண்டைக்காய்

இது மற்ற காய்கறிகளைப் போல் ஈரப்பதமுள்ள இடத்தில் இருக்காது. ஆகவே வெண்டைக்காயை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையை டப்பாவில் போட்டு மூடாமல், அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால், அது பல நாட்கள் நன்றாக இருக்கும்.

ஹாலிவுட் படங்களுக்கே கிடைக்காத அனுமதி, ரஜினியின் லிங்காவுக்கு கிடைத்தது எப்படி? ஆச்சரிய தகவல்..!

               ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் தயாராகி வரும் ‘லிங்கா’ படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் சில காட்சிகள் மைசூர் மகாராஜா அரண்மனையில் படமாக்க தற்போது சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புவரை அனுமதி தர மறுத்து வந்த மைசூர் அரண்மனை நிர்வாகிகள் தற்போது திடீரென அனுமதி வழங்கியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒரு காரணம் மத்தியில் ஆட்சி மாறியது என்பது.

மைசூர் அரண்மனையின் சில முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்ததோடு அல்லாமல், மகாராஜா பயன்படுத்திய தங்கத்தில் ஆன அறை ஒன்றிலும் படப்பிடிப்பு நடத்த அரண்மனை நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. ஹாலிவுட் பட இயக்குனர்கள் கேட்டும் அனுமதி கொடுக்காத அரண்மனை நிர்வாகம் ரஜினி படத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

ஆனால் மகாராஜா பயன்படுத்திய அறைக்குள் செல்ல நான்கு நபர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால், ரஜினி, அனுஷ்கா, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகிய நான்கு பேர் மட்டுமே தங்கத்தில் ஆன அறையில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

லிங்கா படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க உள்ளது.

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டு பிடித்துவிட முடியும் தெரியுமா..?

1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...தைரிய பார்ட்டிகள், நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..

3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..

4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..

6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்..நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாக இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..

8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..

9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ? ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?

குற்ற உணர்ச்சியினால் குமையலாமா..?

இருவரின் பழைய அனுபவங்கள் இவை.

ஒருவர், ஒருநாள் அவசரமாக ஒரு வேலையாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குட்டி நாய் வேகமாக ஓடி வந்து அவரது குதிகாலைக் கௌவியது. கோபமடைந்த அவர் அதைத் தூக்கி எறியவே, அருகிலிருந்த பெரிய கல்லின் மீது அதன் தலை இடித்து இரத்தம் ஒழுக உடனே அது இறந்துவிட்டது.

இன்னொருவர், தன்னுடன் விடுதியில் தங்கியிருந்த நண்பனுக்குத் தெரியாமல் இரண்டாயிரம் ரூபாய் பணத்தைத் திருடி விட்டார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் பல ஆண்டுகளுக்கு முன்னே அவர்கள் வாழ்வில் நிகழ்ந்திருந்தாலும் இன்றும் அவர்களை அந்தக் குற்ற உணர்ச்சிகள் துரத்துகின்றன. எவ்வளவோ ஆண்டுகள் ஆகியும் இந்தக் குற்ற உணர்வு அவர்களை விட்டு நீங்க மறுக்கிறது. இந்த மாதிரி நிலைகளை எப்படிச் சமாளிப்பது?

குற்ற உணர்ச்சி என்பது மிகவும் பலம் வாய்ந்த எதிர்மறை உணர்வு! ஒரு தீராத நோயைப்போல அது பாதிக்கப்பட்டவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும் தன்மை வாய்ந்தது!

அது, தான் செய்தது குற்றம் என்னும் நிலைமையிலிருந்து மாற்றி "நான் நல்லவனே இல்லை" எனத் தன்னைத்தானே நினைத்துக் கொள்ளுமளவுக்கு ஒரு தன்னிலைப் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

இதனால்-

•தன் மீதே வெறுப்பு.
•தன்னம்பிக்கை இன்மை.
•தான் எதற்குமே உதவாதவன் என்கிற தாழ்வு மனப்பான்மை.
•ஒரு வகை வெட்க உணர்ச்சி - ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இத்தகைய மனிதர்கள் சிலர் இதைச் சுய பச்சாதாபத்திற்கும் சுயநலத்திற்கும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதாகக் கூறுகிறார்கள் உளவியல் மருத்துவர்கள் சிலர். இத்தகைய குற்ற உணர்ச்சி நீடித்தால் அது மன உளைச்சலை ஏற்படுத்தி, வாழ்வின் முன்னேற்றத்தை வெகுவாகப் பாதிக்கும்.

இந்தக் குற்ற உணர்ச்சியை எப்படி மாற்றுவது?

இதோ சில வழிகள்!

•தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்வது.

•நாம் எப்படி அந்தத் தவறு செய்தோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்து, அது போன்ற குற்றங்களை இனிச் செய்யாமல் இருக்கத் தீர்மானிப்பது.

•நாம் அந்த நாளில் புரிந்தோ, புரியாமலோ ஒரு தவறான காரியத்தைச் செய்துவிட்டோம் என மனதார உணர்ந்து கொள்வது.

•இரக்கமோ, யோசனையோ, சுயக் கட்டுப்பாடோ இல்லாததால் செய்த தவறு அது என்பதைப் புரிந்து கொள்வது.

இப்படியெல்லாம் செய்வதால் நம்மை நாமே மன்னித்துக் கொள்கிறோம். இதனால் தேவையில்லாமல் குற்ற உணர்வைச் சுமந்துகொண்டு அலைய வேண்டியதில்லை.

கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய இரண்டு நண்பர்களும் இப்படிச் செய்தார்கள்...

நாய்க் குட்டியைத் தூக்கி அடித்தவர், இப்போது தானே ஒரு நாயை அன்புடன் வளர்த்து அதற்கு ஜோசஃபின் என அழகான பெயரிட்டு வளர்க்கிறார். அந்த நாய்க்குட்டியை நாய் என மற்றவர்கள் சொன்னால் கூட அவருக்கு இப்போது கோபம் வருகிறது. அதன் செல்லப் பெயரான ஜோசஃபின் என்றுதான் அழைக்க வேண்டுமாம்.

நண்பனின் பணத்தைத் திருடிய நண்பர், நண்பனை இப்போது தொடர்பு கொள்ள முடியாததால் இப்போது முதியோர் இல்லங்களுக்குச் சென்று அவர்களுக்குப் பிடித்த உணவை 2000 ரூபாய் அளவிற்கு அளித்து வருகிறார். இப்போது அவர் மனம் அமைதியாகி விட்டது.

குற்ற உணர்ச்சிகளால் குமைந்து போகாமல் அவற்றை இப்படி நேர்மறையான உணர்ச்சிகளாக மாற்றிக் கொள்ளலாமே!


--திரு.கே.ஆர்.ரவி எம்.பி.ஏ அவர்களின் Thinking between the lines எனும் ஆங்கிலக் கட்டுரைத் தொகுப்பிலிருந்து நன்றியுடன்.

எந்த நேரத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும்?

          * தயிரைத் தயிராக உண்ண ஒரு பக்குவம் இருக்கிறது. முப்பது வயதுக்கு மேல் தயிரை மோராக்கித்தான் உண்ண வேண்டும். அந்த வயதுக்கு மேல் நிறைய மோரே சாப்பிட வேண்டும். தயிரைச் சாப்பிடுவதானால் அதை ரசம், குழம்பு, சாதம் சாப்பிட்ட பின் கடைசியாக உண்ணக் கூடாது. தயிரை காலையில்தான் உண்ண வேண்டும்.

காலையில் வெறும் தயிரில் லேசாக உப்புச் சேர்த்து ஸ்பூனால் எடுத்து விழுங்கலாம். இட்லியில் தோய்த்து உண்ணலாம். ரொட்டிக்குப் போட்டு கொண்டால் உப்புத் தேவையில்லை. ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

இரவில் தயிர் சேர்த்துக் கொள்ளக் கூடாது. மோர் சேர்த்துக் கொள்ளலாம். இரவு வெறும் மோர் சோறும், பழங்களும் போதும். இரவில் பலகாரங்களை உண்ணக் கூடாது. பழங்கள் நல்ல இரவு ஆகாரம்.

* காலையில் முழுச்சாப்பாடு சாப்பிடக் கூடாது. அப்போது ஆவியில் அவித்த அல்லது அதிகம் எண்ணெய் சேராத இட்லி, தோசை, ரொட்டி, சாப்பாத்தி,  கொழுக்கட்டை ஆகியவைகளை உண்ணலாம்.

* உண்ணும் உணவில் மிளகாய்(சிவப்பு) அறவே இருக்கக் கூடாது. அவசியமானால் சில பச்சை மிளகாய்களைச் சேர்த்துக் கொள்ளலாம். காரம் தேவை என்றால் மிளகைத்தான் பயன்படுத்த வேண்டும். வடை, போண்டாக்களில் கட்டாயம் மிளகு இருக்க வேண்டும். இஞ்சியும், மிளகும் சேர்ந்த அரிசிப் பொங்கல் மிகச்சிறந்த உணவு. முழுமையான சத்துள்ள உணவு. அதில் உடலின் எதிரிகளே இல்லை.

* பொரித்த அப்பளம் கூடாது. சுட்ட அப்பளம் சிறந்தது. கரி அடுப்பில்தான் அப்பளம் சுட வேண்டும்.

* தினசரி உணவில் பருப்புச் சேர்க்கக் கூடாது. வாரத்தில் இரண்டு நாள்தான் பருப்புச் சேர்க்க வேண்டும். அதாவது இரண்டு நாள்தான் சாம்பார், ரசம் வைக்கலாம். மற்ற நாட்களில் மோர்க் குழம்பு, மிளகு ரசம், எலுமிச்சை ரசம் சேர்க்க வேண்டும்.

* மதிய உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுச் சாப்பாடு சாப்பிடலாம். பருப்புச் சாதம், மோர் சாதம் என்று பலவகையாக அது இருக்க வேண்டும். அல்லது வற்றல் குழம்பு சாதம், மோர் சாதம் என்றும் இருக்கலாம். கட்டாயம் கீரை இருக்க வேண்டும். தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம். ஏதாவது ஒரு கடலை சுண்டல் உணவில் இருப்பது நல்லது.

* மாலை நேரம் நவதானியங்களை முளைகட்டி சுண்டல் செய்து சாப்பிடலாம். ரஸ்க், பன், கார்ன்ப்ளாக், ஓட்ஸ் இது போன்ற ஏதாவது எண்ணெய் இல்லாத ஓர் அயிட்டத்தை கொஞ்சமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஐந்து லட்சத்தைத் தொட்டார் ரஜினி!

இணையத்தின் அதிரடி வளர்ச்சியின் காரணமாக சமூக வலைத்தளங்கள் படுவேகமாக வளர்ச்சியடைந்துவருகின்றன. சாதாரண மக்களையும் பிரபலங்களையும் இணைப்பதில் சமூக ஊடகங்களான டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் முன்னணியில் இருந்துவருகின்றன.

கடந்த மே 5ல் ட்விட்டரில் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெறும் 23 நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ட்விட்டரில் இணைந்த சில மணி நேரங்களிலேயே அவரது டிவிட்டர் அக்கவுண்ட் வெரிபைடு செய்யப்பட்டதுடன் முதல் நாளிலேயே சுமார் 2 லட்சத்திற்கும் அதிமான பாலோயர்களைப் பெற்றார். முழுதாக மூன்று வாரங்கள் மட்டுமே ஆகியிருக்கும் இச்சூழலில் 5 லட்சம் பாலோயர்களைக் கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கோச்சடையான் திரைப்படம் 50 கோடிகளுக்கும் மேலாக வசூல் செய்துள்ளது. தற்பொழுது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் லிங்கா திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

மறுபடியும் ஒரு ’புரட்சி’யா?

தமிழ் சினிமாவில் அடுத்த ரீஎன்ட்ரிக்கு ரெடியாகிவிட்டார் சரத்குமார். ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுக்கே போட்டியாக இருந்த இவர், பின்பு அரசியல் வேலைகளில் இறங்கி அதிலும் வெற்றி பெற்றார்.

சில நாட்கள் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மீண்டும் ‘காஞ்சனா’, ‘சென்னையில் ஒரு நாள்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பழைய சரத்குமாராக முழுநீள கதாநாயகனாக ‘சண்டமாருதம்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

எப்போதும் தன் பெயருக்கு முன் ‘சுப்ரீம் ஸ்டார்’ என்ற அடைமொழியை பயன்படுத்திய இவர் தற்போது ‘புரட்சி திலகம்’ என்று மாற்றியுள்ளார். இது சினிமாவையும் தாண்டி அரசியலுக்கும் பொருந்தும் என்பதால் இந்த பெயராம்.

‘உயிர பணையம் வச்சு நடிக்கிர ஜாக்கி ஜானே பெயருக்கு முன்னாடி பட்டம் போடுறது இல்ல...!!!’

காப்பர் பொருட்களை சுத்தம் செய்வதற்கான சில டிப்ஸ்...

            இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளின் சமையலறையிலும் நிச்சயம் காப்பர் பொருட்கள் இருக்கும். இத்தகைய காப்பர் பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால், அவற்றின் நிறம் கருமையாக ஆரம்பிக்கும். மேலும் காப்பர் பொருட்களை சுத்தம் செய்வதற்கு நிறைய பொருட்கள் தற்போதைய மார்கெட்டில் கிடைக்கின்றன.

இருப்பினும் அனைத்து பெண்களும் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்வதையே விரும்புவார்கள். ஏனெனில் இயற்கை பொருட்களால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்கும் என்பதால் தான். இங்கு காப்பர் பொருட்களை சுத்தம் செய்ய உதவும் சில இயற்கை பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு சுத்தம் செய்தால், காப்பர் பொருட்கள் பளிச்சென்று மின்னும். சரி, இப்போது அந்த பொருட்களைப் பார்ப்போமா!!!

வினிகர் மற்றும் உப்பு

காப்பர் பொருட்களை வினிகர் மற்றும் உப்பு பயன்படுத்தி தேய்த்து கழுவி, உலர வைத்தால், காப்பர் புதிது போன்று மின்னும்.

எலுமிச்சை

எலுமிச்சையைக் கொண்டு காப்பர் பொருட்களை தேய்த்து கழுவினால், எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், காப்பர் பாத்திரங்களானது சுத்தமாக இருக்கும்.
       
எலுமிச்சை மற்றும் உப்பு

இல்லாவிட்டால் எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டும் காப்பர் பொருட்களை தேய்த்து கழுவலாம்.

வினிகர் மற்றும் அரிசி மாவு

ஒரு டேபிள் ஸ்பூன் உப்பில், 1 கப் வெள்ளை வினிகரை ஊற்றி கலந்து, அதில் சிறிது அரிசி மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை காப்பர் பாத்திரத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தேய்த்து கழுவினால், பாலிஷ் போட்டது போன்று மின்னும்.

பேக்கிங் சோடா

 பேக்கிங் சோடாவைக் கொண்டும் காப்பர் பொருட்களை தேய்த்து கழுவலாம். வேண்டுமானால் அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் காப்பர் பாத்திரத்தில் உள்ள கருமையை எளிதில் போக்கலாம்.

தொழில் தொடங்குமுன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!!

1. ஒருவர் ஒரு தொழிலை தொடங்கி நடத்தும்போது அதில் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் போவதினால், அடுத்தடுத்து தவறு செய்து, பெரிய அளவில் கையைச் சுட்டுக்கொள்வதற்கு வாய்ப்புண்டு. தொழில் செய்வது அலுவலகத்தில் வேலை பார்க்கிறமாதிரி அல்ல. தொழிலுக்காக முழுநேரத்தையும், உழைப்பையும் தந்தால் மட்டுமே அதில் ஜெயிக்க முடியும்.

2.  பணம் இருக்கிறது அல்லது பணம் கடனாகக் கிடைக்கிறது. அதனால் தொழில் தொடங்க லாமே என்று நினைப்பது தவறு. ஒரு தொழிலைத் தொடங்கும்முன் அந்தத் தொழிலின் மீதுள்ள ஆர்வம், அனுபவம், பலம் பற்றி தெரிந்துகொண்டு ஆரம்பிப்பது நல்லது.

3.  முழுநேர தொழிலா அல்லது பகுதிநேர தொழிலா என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தொழில் தொடங்குவது தவறு. முழுநேர தொழிலாக இருந்தால், அதற்குத் தேவையான நேரத்தையும் நிதியையும் ஒதுக்கவேண்டும். இல்லையெனில், அது உங்கள் வருவாயை சமாளிக்க உதவும் ஒரு பகுதிநேர தொழிலாக இருக்குமே தவிர, அது உங்களை வளர்ச்சியடையச் செய்யும் தொழிலாக இருக்காது.

4. ஆரம்பத்தில் நிறையப் பணியாளர்களையோ அல்லது உயர்பதவிகளுக்கான ஆட்களையோ நியமிக்கும்போது சரியான விகிதத்தில் நியமிப்பது அவசியம். இந்த விகிதம் அதிகமாகும்போது, சம்பளத்துக்காகவே ஒருபகுதி தொகையைச் செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே, இந்த விஷயத்தில் அதிகக் கவனத்துடன் இருப்பது அவசியம். உங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிக தொகையைச் சம்பளமாக வழங்காமல், குறிப்பிட்ட தொகைக்குப் பதில் பங்குகளாகத் தரும்போது பொறுப்பு அதிகரிக்கும். நிறுவனத்துக்குச் செலவும் குறையும்.

5. ஒருவரைப் பணியில் அமர்த்தும் போது அவரால் 1:5 என்ற விகிதத்தில் தொழிலுக்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். அதாவது, ஒருவருக்கு ஒருபங்கு சம்பளம் வழங்கினால், அவரால் தொழிலுக்கு 5. பங்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். இது தவறும்போது தொழிலில் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சேவைத் துறையில் இந்த 1:5 விகிதம் கட்டாயம் இருக்க வேண்டும்.

6.உறவினரையோ அல்லது நண்பரையோ பங்குதாரராகச் சேர்க்கும்போது, அவருக்குப் பங்குகளை வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் அவர்களது பங்களிப்பு குறைவாக இருந்தும், குறைவான பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரரின் பங்களிப்பு அதிகமாகும்போது தேவையற்ற அதிருப்தியான சூழல் உருவாகும். இந்தத் தவறை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நல்லது.

7.மதிப்பிடலில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நம் தொழிலின் மீதுள்ள அதிக நம்பிக்கையினால், நம் தொழிலின் மதிப்பை அதிகமாக நிர்ணயிப்பது தவறு. அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர்கள் அதை எளிதில் கண்டுபிடித்து, நம் தொழிலில் முதலீடு செய்யாமலே போய்விடுவார்கள். எனவே, சரியான மதிப்பை நிர்ணயித்தால்தான் மற்றவர்கள் நமது தொழிலில் முதலீடு செய்ய முடியும்!

8.வர்த்தகத்தில் எப்போதும் ஒரு மாற்றுத் திட்டம் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த மாற்றுத் திட்டத்தை ‘பிளான் பி’ என்பார்கள். சிலர் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே நம்பி இருப்பார்கள். அது தவறு. ஏதோ ஒரு காரணத்தினால் அந்தத் திட்டம் செயல்படாமல் போகும்போது, பிளான் பி கைகொடுக்கும்.

9.மார்க்கெட் பற்றிய ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் அவசியம் தேவை. இல்லையெனில் சரியான நேரத்தில், சரியான வாடிக்கையாளரை சென்றடைய முடியாமல் போய்விடும். மார்க்கெட் ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் இருந்தால்தான் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் கணிக்க முடியும்.

10.ஆரம்பத்தில் விளம்பரங் களுக்கு அதிகம் செலவு செய்யவேண்டியிருந் தாலும், இது ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டாமல் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் தொழில் சரியாக நடக்கவில்லையெனில், விளம்பரத்துக் காகச் செலவழிக்கப்பட்ட பணம் வீணாகாமல் இருக்கவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.....

படப்பிடிப்பை முடித்த பார்வதி..!

விஸ்வரூபம் - 2 படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துக் கொண்டிருக்கும் படம் உத்தம வில்லன். இப்படத்தில் நடிகர் ஜெயராமின் வளர்ப்பு மகளாக நடித்திருக்கிறார் பார்வதி மேனன்.

தற்போது பார்வதி மேனன் இப்படத்தில் அவர் நடிக்க இருக்கும் காட்சிகளை முடித்து விட்டாராம்.

உத்தம வில்லன் படக்குழுவினர் 21ம் நூற்றாண்டு காட்சிகளை முடித்து விட்டனர். இப்போது 80ம் நூற்றாண்டு காட்சிகளை படமாக்கிக் கொண்ருக்கின்றனர்.

ரமேஷ் அரவிந்த் இயக்கும் இப்படத்திற்கு எம். ஜிப்ரான் இசையமைக்கிறார். உத்தம வில்லன் படம் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது.

ஒரே மேடையில் பில் கிளிண்டன், அர்னால்ட், கமல்ஹாசன்!!!

கடந்த மூன்று வருடங்களாக முழு மூச்சோடு உழைத்துக் கொண்டிருந்த ஐ படக்குழுவினருக்கு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் ஒரு இனிமையான ஆச்சர்யம் கலந்த சந்தோஷ செய்தி காத்திருக்கிறது.

ஒரு பக்கம் ஏமி ஜாக்சனுக்கு சம்பள பாக்கி, அதனால் அவர் ஒரு பாடலுக்கு ஒத்துளைப்பு கொடுக்காமல் ஓடி விட்டார். இதன் காரணமாக ஷங்கர் கடும் கோபத்தில் உள்ளார். இன்னொரு பக்கம் எப்படியோ என் வேலை முடிந்த விட்டது என்ற நிம்மதியில் அடுத்த படமான முருகதாஸ் தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில், சமந்தாவோடு ஜோடி சேர்ந்து நடிக்கப் போய் விட்டார் விக்ரம்.

இப்படி ஏகப்பட்ட கசப்பு செய்திகளை அந்த ஒரு விஷயமே வெள்ளக்கட்டியாக்கிவிட்டது. ஆம். ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், அர்னால்ட் கலந்துகொள்கிறார்களாம். இவர்களுடன் நமது உலகநாயகனும் கலந்து கொள்கிறாராம்.

அப்போ ஐ பிரமாண்டம் இன்னும் முடியவில்லை….

கமலுக்கு போட்டியாக வித்யா பாலன்..?

'தி டர்ட்டி பிக்சர்', 'கஹானி' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த வித்யா பாலன் சமீபத்தில் நடித்து முடித்துள்ள படம் 'பாபி ஜாசூஸ்'. சமர் ஷைக் இயக்கியுள்ள இப்படத்தில் அலி ஃபாசலும், வித்யா பாலனும் நடித்துள்ளனர்.

கவர்ச்சி நடிகை, கர்ப்பிணி என்று வித்தியாசமான வேடங்களை விரும்பி ஏற்று தேசிய விருது பெற்ற வித்யாபாலன் இன்னும் புதுப்புது முயற்சிகளில் இறங்கி இருக்கிறார்.

'பாபி ஜாசூஸ்' படத்தில் துப்பறியும் நிபுணராக அதிரடி ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார். அதற்காக 122 கெட்டப்புகளைப் போட்டுப் பார்த்து அதில் 12 கெட்டப்புகளை ஓ.கே செய்து படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

12 கெட்டப்புகளைத் தேர்வு செய்வதற்காக தினமும் நான்கைந்து கெட்டப்புகளில் வித்யா பாலன் தெருக்களில் நடப்பாராம். இதில் எது பொருத்தமாக இருக்கிறது என்று பார்த்துப் பார்த்து செலக்ட் செய்தார்களாம்.
இந்த செலக்ஷனுக்காக ரொம்பவே பொறுமையோடு இருந்திருக்கிறார் வித்யா பாலன்.

வித்யா பாலன்  ஆசிரியை, பிச்சைக்காரன், மீனவப் பெண் என 12 கெட்டப்புகளில் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 4ல் ரிலீஸ் ஆகிறது. பல விதமான கெட்டப்களில் நடித்து லேடி கமலாக உருவெடுத்துள்ளார் வித்யா பாலன்

சேர்ந்து லோன் வாங்கினால் சுமை குறையும் வரிச்சலுகையும் கிடைக்கும்..!

                  சொந்தமாக வீடு வாங்கவேண்டும் என்று எல்லாருக்கும்தான் ஆசை இருக்கிறது. நகரத்தில் இருக்கும் வாடகை ஏற்றத்தை தாக்குப்பிடிக்கவே முடியவில்லை. இதோடு கொஞ்சம் சேர்த்து லோனாக கட்டினால் சொந்த வீடாவது வாங்கலாம் - இப்படித்தான் நடுத்தர மக்கள் பலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். ஆனால், எத்தனை பேரின் கனவு நிறைவேறிக்கொண்டிருக்கிறது? இதைப்பற்றி கேட்டால், என் சம்பளத்துக்கு யார் வீட்டு லோன் தருவார்கள்? டூவீலர் வாங்கவே படாத பாடுபட்டுவிட்டேன். இதில் சொந்தவீடு வேறா என அலுத்துக்கொள்வார்கள்.

 சம்பளம் குறைவு என்றால் வீடு வாங்க முடியாது என்று யார் சொன்னது? கணவன்- மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் இந்த நகர வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே வழி இருக்கிறது. கொஞ்சம் யோசித்தால் போதும். நிச்சயமாக தீர்வு கிடைக்கும். இதுபோல் நடுத்தர  சம்பளக்காரர்கள் வசதிக்காகத்தான் ஜாயின்ட் லோன் உள்ளது. கணவன் - மனைவி மட்டுமல்ல ரத்த உறவு கொண்ட சகோதரன், சகோதரி, பெற்றோர் என இணைந்தும் லோன் போட்டு வீடு வாங்கலாம்.  உதாரணமாக நீங்களும் உங்கள் மனைவியும் வேலைக்கு செல்பவர்கள் என வைத்துக்கொள்வோம். இருவரும் நடுத்தர வருவாய் பிரிவினராக இருந்தால் லோன் மறுக்கப்படும். ஆனால், இருவரும் இணைந்து கடன் கேட்டு விண்ணப்பிக்கும்போது வருவாய் உயர்ந்துவிடும். எனவே கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

கணவன்-மனைவி சேர்ந்து வீடு வாங்குவதற்கு இது பொருந்தும். ஆனால், ரத்த உறவு கொண்டவர்கள் சேர்ந்து லோன் வாங்குவதை சில வங்கிகள் ஏற்றுக்கொள்வதில்லை.

 சேர்ந்து வீட்டுக்கடன் வாங்குவது என்பது, சேர்ந்து வசிப்பதை குறிக்கிறது. இதுகுறித்து ஹவுசிங் லோன் வழங்கும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வீட்டுக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்பவர், மனைவியை கடன் கூட்டாளியாக சேர்த்து சொத்து வாங்கும்போது, வாங்கப்படும் சொத்துரிமையில் இருவரும் பங்குதாரர்கள் என்று குறிப்பிட வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால், பெற்றோரையோ, சகோதரன் அல்லது சகோதரியை கூட்டாக சேர்த்து கடனுக்கு விண்ணப்பித்தால், வாங்கப்படும் சொத்தில் இருவருக்கும் உரிமை உள்ளது என்பது கட்டாயம்’ என்றார்.

 இப்படி சேர்ந்து வீட்டுக்கடன் வாங்கும்போது வருமான வரிகள் சட்டம் பிரிவு 24ன் கீழ் வட்டி திரும்ப செலுத்துவதிலும், அசல் தொகை திரும்ப  வரிவிலக்கு பெற வகை உள்ளது. எனவே, சேர்ந்து யோசித்து செயல்பட்டால் கனவு நிறைவேறுவது நிச்சயம். நண்பர்கள் சேர்ந்து சொத்து வாங்க லோன் கிடைக்குமா? சேர்ந்து வசிப்பது என்று வரும்போது, நண்பர்களுடன் சேர்ந்து வசிப்பது, சகோதரியுடன் வசிப்பது, திருமணம் ஆகாமல் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்று வரும்போது, இவர்கள் ஜாயின்ட் லோன் கேட்டு விண்ணப்பிக்க முடியாது.

நண்பர்கள், சகோதரிகள், திருமணமாகாமல் சேர்ந்து வசிக்கும் தம்பதிகள் ஒரு சொத்துக்கு உரிமை உடையவர்களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சேர்ந்து கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களாக இருக்க முடியாது. கடன் வாங்குபவர்கள் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து கடன் வாங்கிவிட முடியாது. அவர்கள் திருமணமான தம்பதி அல்லது ரத்த உறவு உடையவர்களாக இருப்பது அவசியம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்...

                   ஒரு இரவில் 90 நிமிடங்கள் முதல் 2 மணி நேரங்கள் வரையில் அல்லது அதற்கும் மேலான நேரத்திற்கு மனிதர்கள் உறக்கத்தில் கனவு காணுகிறார்கள். சில நேரங்களில், இந்த கனவுகளின் அர்த்தம் கனவு காண்பவருக்கு நேரடியாக புரியும். நெடுநாளைய நண்பர் மீண்டும் தெரிதல், ஒரு கடற்கரையின் ரம்மியமான காட்சி அல்லது லாட்டரியில் ஜாக்பாட் அடித்தல் என கனவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால், கனவுகள் எப்பொழுதும் கதைகள் சொல்வதில்லை. வேறு வேறு வகையான கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளை கொண்டவர்களுக்கு ஒரே மாதிரியான கனவுகள் வரும் வேளைகளில், கனவுலக ஆராய்ச்சிக்கு புதிய வடிவம் கிடைக்கிறது. இந்த கட்டுரையில், சில வகையான பொதுவான கனவுகளும், அவற்றின் அர்த்தங்களும் தரப்பட்டுள்ளன.
       
விழுதல்

'உங்களுடைய ஆழ்மனம் காட்டும் சிவப்பு கொடி தான் இந்த கனவு' என்கிறார் லோய்வென்பெர்க் என்னும் பெண்மணி. தங்களுடைய பணி, உறவு அல்லது வேறு ஏதாவது இடங்களில் பெரிய பிரச்சனைகளை எதிர் கொள்பவர்களுக்கு இந்த வகையான கனவுகள் வரும் என்று இவர் நம்புகிறார்.
       
பணியிடம் அல்லது பள்ளியில் ஆடையில்லாம் தெரிதல்

பலவீனம் மற்றும் பயம் ஆகியவற்றையே இந்த கனவு குறிப்பிடுகிறது என்பது வல்லுநர்களின் கருத்தாகும். இந்த வகை கனவுகள் 'பணி உயர்வை ஏற்றுக் கொண்டவர்கள், புதிய பணிக்கு சென்றவர்கள், அல்லது பொது மக்களின் பார்வைக்கு இலக்காக இருப்பவர்களுக்கு வரும்' என்கிறார்கள்.
       
தேர்வு எழுதுதல்

பெரியவர்களிடம் இந்த கனவுகள் பள்ளி மற்றும் வேலைகளுக்கு இணையானவையாக வருகின்றன என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், இந்த இரண்டு இடங்களிலும் கடுமையான நெருக்கடியான சூழல்களை நாம் எதிர் கொள்கிறோம். பணியிட நெருக்கடிகளுடன் இந்த கனவுகள் தொடர்பு பெற்றுள்ளதாக லோய்வென்பெர்க் கூறுகிறார்.
       
இறத்தல்

இறப்பு என்பதை நாம் எதிர்மறையான விஷயமாக பார்த்தாலும், அது கனவு காண்பவரின் வாழ்வில் நிகழக் கூடிய பெரிய மாற்றத்தை குறிப்பிடுவதாகவே இருக்கும். அது ஏதோ ஒரு புதிய விஷயத்தின் வருகைக்காக, பழைய விஷயம் மறைவதை குறிப்பிடுவதாக இருக்கும்.

வாதம்

கனவு காணும் போது நமது உடல் ஒரு வகையான வாதத்திற்கு உள்ளாகிறது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஆதன் மூலம் கனவில் செய்யும் விஷயங்களை நாம் உடல் ரீதியாக செய்யாமல் தவிர்க்கப்படுகிறோம். எனவே வாதம் பற்றி அடிக்கடி கனவு காண்பது என்பது, விழிக்கும் நிலை மேல் இருக்கும் நிலையாக இருக்கிறது. இவ்வாறு வாதம் பற்றி கனவு காண்பவர், தான் விழித்திருக்கும் வேளைகளில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதாக நினைக்கிறார்.
       
பந்தயத்தில் தோற்கடிக்கப்படுதல்

இது மிகவும் அதிகமாக குறிப்பிடப்படும் கனவுகளில் ஒன்றாகும். கனவின் போது நாம் கொண்டிருக்கும் பயத்தின் காரணமாக இந்த கனவு மிகவும் உயிரோட்டம் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும், இந்த கனவுகளின் காரணம் நாம் தோற்கடிக்கப்படுவதல்ல, நாம் எதைப் பார்த்து ஓடுகிறோம் என்பதைப் பொறுத்ததே. இது போன்று கனவுகளில் பந்தயங்கள் வந்தால், நாம் இது வரை சரியாக கவனிக்காத ஒரு விஷயம், நம்முடைய கவனத்தைப் பெற எத்தனிக்கிறது என்று அர்த்தமாகும்.
   
துணைவர் ஏமாற்றுதல்

பெரும்பாலானவர்கள் இந்த வகை கனவுகளை நுண்ணறிவுடன் சேர்த்து யோசிக்க வேண்டாம் என்கிறார்கள். உங்களுடைய துணைவர், உங்களுக்கு சம்மந்தமில்லாத ஒரு விஷயத்தில் அதிக கவனத்தை செலுத்தும் வேளைகளில், அவர் ஏமாற்றுவது போன்ற கனவுகள் வரும்.
       
ஏதோ ஒரு விஷயத்திற்கு தாமாதமாக வருதல்

வால்லஸ் என்பவரின் கருத்துப்படி, யாரோ ஒருவர் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறார் மற்றும் அதிகமாக செய்து கொண்டிருக்கிறார் என்று பொருளாகும். இது தொடர்பாக, 'உங்களால் காப்பாற் முடியாத சத்தியத்தை செய்யாதீர்கள்' என்று காலதாமாத்திற்கான கனவைப் பற்றி கிராண்ட் குறிப்பிடுகிறார்.
       
பறத்தல்

இந்த கனவின் மூலம் தற்போது நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை கவனிக்கவும் மற்றும் இயற்கையாகவே அனைத்து விஷயங்களும் நடக்கச் செய்யவும் உதவும். அதே நேரம், 'வாழ்க்கையில் சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டை மீறி செல்வதையும்' பறத்தல் குறிக்கும் என்று கிராண்ட் கூறுகிறார்.

குழந்தை

கனவில் ஒரு குழந்தை வந்தால், புதியதொரு விஷயத்தை அது பிரதிபலிக்கிறது என்று பொருளாகும். அது ஒரு புதிய ஐடியாவாகவோ, புதிய பணிக்கான திட்டமாகவோ, புதியதொரு வளர்ச்சியாகவோ அல்லது நமது வாழ்க்கையின் ஒரு பகுதியயில் நடக்கும் குறிப்பிடத்தக்க மாற்றமாகவோ இருக்கும்.

ரஜினியுடன் இணையும் பிரிட்டிஷ் நடிகை!!!

கோச்சடையான்’ படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்திருப்பதால் ரொம்பவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ரஜினிகாந்த்! இதனை தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வரும் ‘லிங்கா’வில் படு உற்சாகத்துடன் நடித்து வருகிறார் ரஜினி! மைசூரில் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வர, இப்படத்தில் ரஜினியுடன் பிரபல பிரிட்டிஷ் நடிகையும், பாடகியுமான லாரன் ஜெ. இர்வினும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் ரஜினிக்கு ஒரு ஜோடி அனுஷ்கா, இன்னொரு ஜோடி பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா! ரஜினி - சோனாக்‌ஷி சின்ஹா சம்பந்தப்பட்ட சில காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் மைசூரில் நடந்தது. இதனை தொடர்ந்து ரஜினி, பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜெ. இர்வின் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம்! இந்த காட்சிகள் 1940 காலகட்டத்தில் நடப்பது மாதிரியாம்! ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் என்பதும், இப்படம் நிறைய பொருட் செலவில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது..

ரஜினியின் இளம் வயது நட்பு படமாகிறது உயிர் நண்பர் நடிக்கிறார்!!!

ரஜினியின் இளவயது நட்பு படமாகிறது. இதில் ரஜினியின் உயிர் நண்பர் ராஜ் பகதூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நடிகராவதற்கு முன் பெங்களூரில் பஸ் கண்டக்டராக ரஜினி பணிபுரிந்தபோது அதே பஸ்சில் டிரைவராக இருந்தவர் ராஜ் பகதூர். ரஜினியின் நடிப்பு ஆர்வம் கண்டு அவரை நடிப்பு கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவியவர். சூப்பர் ஸ்டார் ஆனபிறகும் ராஜ் பகதூருடன் ரஜினி நெருக்கமான நட்புடன் இருக்கிறார்.

இவர்களின் நட்பு தற்போது ‘ஒரு வழி சாலை என்ற பெயரில் தமிழ், கன்னடத்தில் படமாக உருவாகிறது. இதில் முக்கிய வேடத்தில் ராஜ் பகதூர் நடிக்கிறார். ருஷி டைரக்டு செய்கிறார்.இது பற்றி ராஜ்பகதூர் கூறியது: இக்கதை ரஜினியுடன் எனக்கிருந்த நட்பை மையமாக வைத்து உருவாகிறது. நாடகங்களில் நாங்கள் நடித்திருக்கிறோம். எங்கள் நட்பு எப்படி உருவானது. இன்றைக்கும் அது எப்படி குறையாமல் இருக்கிறது. இதில் ரஜினி வேடத்தில் நடிக்கப்போவது யார் என்பது ரகசியம். தியேட்டரில் படம் ரிலீஸ் ஆகும்போதுதான் அது ரசிகர்களுக்கு தெரியும்.

ரஜினியின் புகழை வைத்து சம்பாதிப்பதற்காக இப்படத்தை எடுக்கவில்லை மாறாக சமூகத்துக்கு இதன் மூலம் ஒரு செய்தியை சொல்ல முற்படுகிறோம். இது பற்றி கூறி ரஜினியிடம் அனுமதி கேட்டபோது உடனடியாக சம்மதம் தந்தார். படம் உருவாகி முடிந்ததும் என்னுடன் அமர்ந்து படம் பார்ப்பதாக தெரிவித்தார்.இவ்வாறு ராஜ் பகதூர் கூறினார்...

ஜூன்-23ல் ரஜினியுடன் களத்தில் குதிக்கிறார் சந்தானம்..?

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் கலக்கியெடுத்து விட்டது. ஆனால் தான் ஒரு ஹீரோ ஆகிவிட்டோம் என்கிற நினைப்பை தலைக்கு ஏற்றாமல் மீண்டும் காமெடியனாக களம் இறங்குகிறார் சந்தானம்.. அதுவும் யாருடன்..? சூப்பர்ஸ்டாருடன்..

கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில் ‘லிங்கா’ படத்தில் நடிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இரண்டுவித கெட்டப்புகள்.. இதில் இளமையான ரஜினிக்கு நண்பராக நடிக்கிறார் சந்தானம். குசேலன், எந்திரனை தொடர்ந்து மூன்றாவதாக ரஜினி படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்பதும் அத்துடன் கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனிலும் முதல் முறையாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சஸ்பென்ஸ் திகில், த்ரில் என மிரட்டல் கலவையாக உருவாகிவரும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. அனேகமாக வரும் ஜூன் -23ஆம் தேதி ரஜினியுடன் ‘லிங்கா’ படப்பிடிப்பில் சந்தானம் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது...

அஞ்சான்’ டப்பிங்கில் சூர்யா தீவிரம்!!!

பெரும்பசியுடன் காத்திருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள். ‘சிங்கம்-2’ என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்துவிட்டு அடுத்து சாதாரணமாக ஒரு படத்தை கொடுத்து அவர்களை திருப்தி படுத்திவிட முடியுமா..? அதனால் அதைவிட அதிகமாக ஃபுல்மீல்ஸ்’ பரிமாறும் பொருட்டு சூர்யாவும், லிங்குசாமியும் இராப்பகலாக ‘அஞ்சான்’ வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

‘அஞ்சான்’ படத்தில் ஒரு பாடல் தவிர அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் வேகம் பிடித்துள்ள நிலையில் சூர்யா தற்போது தீவிரமாக டப்பிங் பேசிவருகிறார். இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விவேக்.

முத்தக் காட்சியின் மூலம் உலக சாதனை படைக்க இருக்கும் இயக்குநர்!!!

அகடம்' என்ற எடிட்டிங் இல்லாத திரைப்படத்தை எடுத்து கின்னஸ் உலக சாதனைப் படைத்த இயக்குநர் ஜே.எம்.இசாக், தனது இரண்டாவது படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஒரு நிமிடத்தில் அதிகப்படியான முத்தம் கொடுப்பது மூலம், மீண்டும் உலக சாதனை படைக்க இருக்கிறார்.

அகடம் படத்திற்குப் பிறகு ஜே.எம்.இசாக், தனது இயக்கும் இரண்டாவது படத்திற்கு 'லாரா' என்று தலைப்பு வைத்திருக்கிறார். இதில் புதுமுகம் ஹரி, ஸ்ரீபிரியங்கா, கீதாஞ்சலி, லஷ்மிகிரண், கணேஷ், சந்துரு, சிபி, சேத்தன், விக்னேஷ், காட்பாடி சண்முகம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

காதல், நகைச்சுவை, திரில் நிறைந்த இப்படத்தின் கதைப்படி, வித்தியாசமான படங்கள் எடுக்கும் ஒரு இயக்குநர் கதை எழுதுவதற்காக யாரும் இல்லாத ஒரு தனிமையான இடத்திற்கு செல்கிறார். அவர் மீது சந்தேகப்படும் மனைவியும், அவருடன் செல்கிறார். இயக்குநர் கதை எழுத ஆரம்பிக்கும் போது தங்கள் வந்துகொண்டே இருக்கிறது. கிளைமேக்ஸ் வரை இயக்குநர் கதை எழுத முடியாமல் தவிக்கிறார். அந்த தடங்களுக்கான விடை தேடும் போது ஒரு அதிர்ச்சி தகவல் அவர்களுக்கு கிடைக்கிறது. அந்த தகவலே அவருக்கு கதையாக கிடைக்கிறது. அவருடைய மனைவியின் சந்தேகமும் தீர்கிறது.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.எம்.இசாக் இயக்குகிறார். ஈ.ஜே.நெளஷாத் ஒளிப்பதிவு செய்ய, கே.பாஸ்கர் இசையமைக்கிறார். செந்தமிழன், கவியரசன் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.