Thursday, May 22, 2014

கோச்சடையான் எப்படி... இன்றே தெரிந்துவிடும்!


ஒருவழியாக ரஜினி ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த கோச்சடையான் இன்றே உலகமெங்கும் வெளியாகிவிட்டது. தமிழகத்தில் நாளை வெளியாகிறது. கோச்சடையான் படத்தை இன்று காலையில் பார்த்த மலேசிய ரசிகர்கள், படம் சிறப்பாக வந்திருப்பதாகத் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கோச்சடையான் எப்படி... இன்றே தெரிந்துவிடும்! கோச்சடையான் துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் இன்றே படத்தை ரசிகர்கள் பார்க்கின்றனர். அமெரிக்காவில் 250 அரங்குகளுக்கும் மேல் படம் வெளியாகிறது. இவற்றில் நூற்றுக்கும் அதிகமான அரங்குகளில் இன்றே கோச்சடையான் சிறப்புக்காட்சி திரையிடப்படுகிறது. பிரிட்டனில் 40 அரங்குகளில் கோச்சடையான் தமிழும், 15 அரங்குகளில் இந்திப் பதிப்பும் வெளியாகிறது.

 பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளில், இதுவரை எந்த தமிழ்ப் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது. இந்த நாடுகளிலும் கோச்சடையான் சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது.

 இலங்கையில் 10 அரங்குகளில் கோச்சடையான் வெளியாகிறது. இங்கு மட்டும் அனைத்து அரங்குகளுக்கும் பிரிண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் 20-க்கும் அதிகமான அரங்குகளில் படம் வெளியாகிறது. டிஜிட்டலில் திரையிடப்படும் அனைத்து நாடுகளுக்கும் கேடிஎம் எனும் 'சாவி' அனுப்பப்பட்டுவிட்டது. பெரும்பாலான நாடுகளில் ஒரு நாள் முன்பாகவே படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படுவதால், கோச்சடையான் ரிசல்ட் இன்றே வெளியாகிவிடும்.

இதுவரை வந்துள்ள கருத்துக்கள்படி கோச்சடையான் யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு சிறப்பாக வந்திருப்பதாகவும், விஎப்எக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.


அன்பே சிவத்தால் என் வீட்டை இழந்தேன் - சுந்தர் சி புலம்பல்!


தொடர்ந்து நகைச்சுவைப்படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி தான் கமல் நடித்த அன்பே சிவம் படத்தின் இயக்குநர் - என்ற தகவல் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அன்பே சிவம் கமல் படமாகவே மக்களின் மனதில் பதிந்ததாலோ என்னவோ, அப்படத்தின் இயக்குநரான சுந்தர்.சி பெயர் மறக்கடிப்பட்டுவிட்டது.

அன்பே சிவம் படம் வெளியாகி பல வருடங்கள் கடந்துவிட்டநிலையில், அன்பே சிவம் படத்தினால் என் சொத்துக்களை இழந்தேன் என்று வேதனைப்பட்டார் இயக்குநர் சுந்தர் சி.
தற்போது அவர் இயக்கி வரும் அரண்மனை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது இப்படி குறிப்பிட்டார்.

அன்பே சிவம் படம் வெளியானபோது அந்தப் படத்தை யாரும் பார்க்கவில்லை. இப்போது டிவியில் பார்த்துவிட்டு பலரும் பாராட்டுகிறார்கள். காலம் கடந்த பாராட்டினால் என்ன பிரயோஜனம்? என்று வருத்தப்பட்ட சுந்தர் சி, அன்பே சிவம் படத்தை இயக்கியதால் தன் சொத்தக்களை இழந்த கதையையும் பகிர்ந்து கொண்டார்.

அன்பே சிவம் படத்தினால் நஷ்டம் ஏற்பட்டதால் எனக்கு பேசிய சம்பளத்தை தயாரிப்பாளர் தரவில்லை. அதனால் அப்போது என்னால் இன்கம்டாக்ஸ் கட்ட முடியாமல் போனது. எனவே என் பேங்க் அக்கவுண்ட்டை முடக்கியது இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட். நான் கட்ட வேண்டிய இன்கம்டாக்ஸ் தொகையை கட்டுவதற்காக என் வீட்டை விற்று அந்தப் பணத்தில் டாக்ஸ் கட்டினேன். அதன் பிறகே என் அக்கவுண்ட்டை ரிலீஸ் பண்ணினார்கள். அதனால் அன்பே சிவம் என்னைப்பொருத்தவரை கெட்ட கனவுதான் என்று வேதனையுடன் குறிப்பிட்டார் சுந்தர் சி.

தேடிவந்த அரிய வாய்ப்பு - தீபிகா காட்டுல மழைதான்..!


ஐரோப்பிய யூனியன் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் சாம்பியன் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இணையாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் என்பதால் இந்த போட்டிக்கு நல்ல மவுசு. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் லிஸ்பன் நகரில் வருகிற 24ந் தேதி நடக்கிறது.

இதில் ரியல் மாட்ரிட், மற்றும் அட்லெட்டிகோ அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்தி நடிகை தீபிகா படுகோனேவை அழைத்திருக்கிறது ஐரோப்பிய கால்பந்து யூனியன். இது மிக்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.

"சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் இரு சிறந்த அணிகள் பங்கு பெற உள்ள கடும் போட்டியை நேரில் காண ஆவலாக இருக்கிறேன்" என்று தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார் தீபிகா

கோர்ட் படியேறுகிறார் சிவகார்த்திகேயன்! புடிங்க சார்......புடிச்சு ஜெயில போடுங்க ..!

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான்கராத்தே படம் பரவலான வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. நாளை (மே 23) அது 50வது நாளை தொடுகிறது. இந்த நிலையில் மான்கராத்தே 50வது நாள் பரிசாக சிவகார்த்திகேயன் கோர்ட் படியேறும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஜார்ஜ் டவுன் 15வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு: நான் குத்துச் சண்டை போட்டிகளில் பல பதக்கங்களை பெற்றிருக்கிறேன். விதிமுறைகள், மரபுகளை பின்பற்றித்தான் குத்துச் சண்டை போட்டிகள் நடக்கிறது. அண்மையில் வெளியான மான்கராத்தே என்ற படத்தில் கவுரவமிக்க குத்துச் சண்டை போட்டியை கேலி செய்திருக்கிறார்கள். போட்டியில் ஜெயிக்க உன் காதலியை அனுப்பு என்று ஒரு குத்துச் சண்டை வீரன் கேட்கிறான். இன்னொருவன் வெற்றிக்காக ஒருவன் காலில் விழுந்து அழுகிறான்.

 இது குத்துச் சண்டை வீரர்களை இழிவுபடுத்துவதாகும்.
எனவே தயாரிப்பாளர், கதை எழுதிய ஏ.ஆர்.முருகதாஸ், நடித்த சிவகார்த்திகேயன், வம்சி, இயக்கிய திருகுமரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி வருகிற 30ந் தேதி சம்பந்தப்பட்டவர்களான ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன், வம்சி, திருக்குமரன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

உலக பணக்கார நடிகர் பட்டியலில் ஷாருக்கான் 2-வது இடம்


ஹாலிவுட், பாலிவுட் உள்ளிட்ட சினிமா நடிகர்களின் உலக பணக்கார பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் ஷாருக்கான் ரூ. 3 ஆயிரத்து 600 கோடி சொத்துக்களுடன் 2–வது இடத்தை பிடித்துள்ளார். ரூ. 4 ஆயித்து 800 கோடி சொத்துக்களுடன் காமெடி நடிகர் ஜெரி செயின் பில்டு முதலிடத்தை பெற்றுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குருஸ் ரூ. 3 ஆயிரம் கோடி சொத்துக்கள் சேர்த்துள்ளார். அவரைவிட ஷாருக்கான் அதிக அளவில் சம்பாதித்திருக்கிறார்.

ஷாருக்கான் ஐ.பி.எல். கிரிக்கெட் அணி உரிமையாளராக இருப்பதுடன் பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். மேலும் விளம்பர படங்களிலும் நடிக்கிறார். இவற்றின் மூலமும் அவருக்கு ஏராளமான வருமானம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

’பேய்க்கு மவுசு அதிகம்’


 மொத்தம் 21 முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கும் கலகலப்பும், காமெடியுமாக வெளிவர இருக்கிறது ‘அரண்மனை’. இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் முதல் பேய் படம் இது.
‘இன்றைக்கு பேய் பற்றிய படங்கள் நன்றாக ஓடுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு ‘சந்திரமுகி’, ‘பீட்சா’, ’காஞ்சனா’ தற்போது ’யாமிருக்க பயமே’ போன்ற படங்கள் நன்றாகத்தான் ஓடியது. அந்த வரிசையில் ’அரண்மனை’ யும் வெற்றிபெறும்.

இன்னும் சொல்லப் போனால் பேயை வைத்து காமெடி பண்ணியிருக்கிறேன். பாழடைந்த பங்களா ஒன்றை அந்த குடும்பத்தினர் விற்க முயற்சிக்கின்றனர்.

அதை யாரெல்லாம் வாங்க வருகிறார்கள். விற்க முயற்சி செய்யும் போது அந்த பங்களாவில் என்னென்ன சம்பவங்கள் நடக்கிறது என்பதுதான் கதை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மூன்று நாயகிகள் இதில் நடித்திருக்கிறார்கள். மூவருக்குமே வித்தியாசமான கதாபாத்திரங்கள். கண்டிப்பாக அனைவருக்கும் ‘அரண்மனை’ பிடிக்கும்’ என்கிறார் சுந்தர்.சி.

ரஜினிக்காக குதிரையேற்ற பயிற்சி பெறும் சோனாக்ஷி !


ரஜினியுடன் ஜோடியாக நடிக்கும் சோனாக்ஷி குதிரை ஏற்ற பயிற்சி பெறுகிறார்.ரஜினி நடிக்கும் புதிய படம் ‘லிங்கா. கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார். தமிழக மக்கள் வறட்சியால் பாதிக்கப்படும் காலகட்டத்தில் அவர்களுக்காக அணை கட்டும் இன்ஜினியர் வேடத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

முல்லை பெரியாறு அணை கட்டிய சரித்திர பின்னணியை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் மைசூரில் காவிரி கரையோர பகுதிகளில் நடந்தது. முதல்கட்ட ஷெட்டியூல் முடிந்து அடுத்த கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

ஏற்கனவே மைசூரில் ஷூட்டிங் நடந்தபோது அங்குள்ள அரண்மனையில் ஷூட்டிங் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அதற்கான சிறப்பு அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து ரஜினி நடித்த காட்சிகள் அரண்மனையின் முன்புறத்தில் நேற்று நடந்தது. இதுவரை அரண்மனையில் உள்ள மன்னர் அறையில் எந்த படத்துக்கும் ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்ததில்லை.

 இப்படத்துக்காக அந்த அறையில் ஷூட்டிங் நடத்த முதன்முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இன்ஜினியர் வேடத்தில் வரும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். அணை பின்னணி காட்சிகளில் இவர் நடிப்பதால் குதிரையில் வரவேண்டிய காட்சிகள் இடம்பெறுகின்றன.

இதற்காக சோனாக்ஷி குதிரை ஏற்ற பயிற்சி பெறுகிறார். தற்போது இந்தியில் ‘தேவர் என்ற படத்தில் சோனாக்ஷி நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் நேற்று மும்பையில் நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் ‘லிங்கா படத்துக்காக குதிரை ஏற்ற பயிற்சி பெற்று வருகிறார்.

அனிருத் இசையில், தனுஷ் எழுத்தில் விஜய் பாடும் பாடல்!

ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் படம் 'கத்தி'. விஜய், சமந்தா , சதீஷ் நடிக்கும் ’கத்தி’ படத்தைப் படு வேகமாக இயக்கிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்த வருட தீபாவளிக்கு 'கத்தி' படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். அதற்காக கத்தி படக்குழு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துவிட்டார் அனிருத்.மீதமிருக்கும் ஒரு பாடலை தனுஷ் எழுதுகிறார்.இந்தப் பாடலை விஜய் பாடப்போகிறார்.

அனிருத் இசையில், தனுஷ் எழுத்தில், விஜய் பாடும் பாடல் என்பதால் இப்பாடல்மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

ரஜினி ஃபார்முலாவில் நயன்தாரா! இமயமலைப் பயணம்

இப்போ... தமிழ் சினிமாவின் குயின்... நயன்தாரா!

டாப் ஹீரோயின்களே பொறாமைகொள்ளும் 'ரீ என்ட்ரி ரெக்கார்டு’ கொடுத்துவிட்டு அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருக்கிறார். 'ராஜா ராணி’, 'ஆரம்பம்’, 'நீ எங்கே என் அன்பே’ என தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்து ஹிட், இரண்டே படங்களில் இரண்டு மடங்கு எகிறிவிட்ட சம்பளம், 'நல்லா நடிச்சிருக்குல்ல பொண்ணு’ என விமர்சகர்களின் பாராட்டு, 'நம்ம படத்துக்கு நயனை ஃபிக்ஸ் பண்ணிடுங்க’ என ஹீரோக்களின் டிமாண்ட்... முன் எப்போதையும்விட உச்சத்தில் இருக்கிறது நயன்தாராவின் கிராஃப்.

ஆனால், 'இது ஏதோ நேற்று திட்டமிட்டு இன்று நடந்தது அல்ல. பிரபுதேவாவுடனான பிரிவுக்குப் பிறகு, 'மீண்டும் சினிமா’தான் என்று முடிவெடுத்தது முதல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் அவராகத் திட்டமிட்டது’ என்கிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள். இதில் ஹீரோயின்களுடன் நட்பு, ரஜினி பாணியில் ஆன்மிக நாட்டம், சிம்புவுடன் மீண்டும் நடிப்பு, தேடித் தேடி 'ஹீரோயின் ஸ்கோப்’ கதை பிடிப்பது... எனப் பல வியூகங்கள் வகுத்துச் செயல்படுகிறாராம்.

சமீபத்தில் சென்னையில் ஒரு ஹோட்டலில் நடந்த த்ரிஷா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நயன்தாராதான் 'ஷோ-ஸ்டாப்பர்’!

த்ரிஷா, தமன்னா, காஜல், அமலா பால் என ஹீரோயின்கள் மத்தியில் ஸ்டாராக ஜொலித்திருக்கிறார் நயன். ஆர்யா, சிம்பு குறித்த தோழிகளின் விசாரிப்புகளுக்கு நயன்தாராவிடம் 'ஸ்மைல்’ மட்டுமே பதில். ஆனால், 'காதல்’ குறித்து ஹீரோயின் தோழிகளுக்கு நயன் கொடுக்கும் டிப்ஸ்களில் அத்தனை முதிர்ச்சி. சக ஹீரோயின்களின் நல்லது-கெட்டதுகளை விசாரிப்பது, பிறந்த நாள்களுக்கு வாழ்த்துவது என நட்பு வட்டத்தை ஆரோக்கியமாகப் பராமரித்துக்கொள்கிறார்.

'இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவுடன் 'வான்டெட்’ ஆக நடித்த நயன், அதன் பிறகு அவருடன் டச்சில் இல்லை. சிம்புவே முயன்றாலும்கூட நயன்தாரா 'நாட் ரீச்சபிள்’தான். இது குறித்துக் கேட்டால், ''படத்துல நடிக்கிறதோட நம்ம வேலை முடிஞ்சிருச்சு. அதுக்கு மேல என்ன இருக்கு?'' என்று சிம்பிளாக முடித்துக்கொள்கிறார்.

சமீபமாக 'நயன்தாரா, சிம்புவுடன் மீண்டும் பிரியம்’ என்று வரும் செய்திகளில் துளி உண்மை இல்லையாம். 'இது நம்ம ஆளு’ படத்தில் நடிக்க நயன் ஒப்புக்கொண்டதற்கு, அது இண்டஸ்ட்ரியில் உண்டாக்கும் பரபரப்பு மூலம் மைலேஜ் ஏற்றிக்கொள்ளலாம் என்பதே காரணம். அந்தப் படத்துக்கு அதுவரை வாங்காத சம்பளம் கேட்டது முதல், '25 நாள்கள் மட்டும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை நடிப்பேன். என்ன சாக்குச் சொன்னாலும் 26-வது நாள் வர மாட்டேன். நீங்கள் வேறு ஹீரோயினைக்கூட வைத்து படத்தை முடித்துக்கொள்ளுங்கள்’ என்றெல்லாம் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்திருக்கிறார். ஆக, அந்த புராஜெக்ட் மூலம் பணப் பலன் முதல் பப்ளிசிட்டி வரை 'மேக்ஸிமம் லாபம்’ பெற்றது நயன்தாராவே!

இன்னோர் ஆச்சரிய செய்தி...   நயன்தாராவின் ஆன்மிகப் பயணம் குறித்த தகவல்தான்.   சுவிட்ஸர்லாந்து, நியூஸிலாந்துகளில் படப்பிடிப்புக்காகச் சென்றாலும், அடிக்கடி இமயமலைப் பயணமும் மேற்கொள்கிறாராம் நயன். அதோடு வாரணாசிக்கும் அடிக்கடி பறந்து காசி விஸ்வநாதரை மனமுருகத் தரிசித்து வருகிறாராம். சென்னையில் படப்பிடிப்பு என்றால், நடை சாத்தப்படுவதற்குச் சற்று முன்னதாக மயிலாப்பூர் கபாலீஸ்வரரைத் தரிசித்துவிடுவாராம் நயன். இதில் இமயமலை விசிட் அடிக்கடி நிகழ்கிறது என்கிறார்கள் அவரது 'மூவ்மென்ட்’ அறிந்தவர்கள்.

கிறிஸ்தவரான 'டயானா மரியம் குரியன்’ என்ற நயன்தாரா, சில வருடங்களுக்கு முன்னரே சென்னையில் உள்ள ஓர் அமைப்பில் சேர்ந்து இந்து மதத்துக்கு மாறிவிட்டார். ஆனால், அப்போது எல்லாம் இல்லாத ஆன்மிக ஆர்வம், சமீப மாதங்களில் ஏகத்துக்கும் நயன்தாராவிடம் அதிகரித்திருக்கிறது. ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்துக்காக உத்தரகாண்ட் சென்றிருந்தபோது, படப்பிடிப்பு இடைவேளைகளில் அமிர்தசரஸ் போன்ற கோயில் ஸ்தலங்களுக்குச் சென்று வந்திருக்கிறார்.

கிசுகிசுக்கள், சர்ச்சைகள்தான் ஒரு ஹீரோயினின் மார்கெட் வேல்யூவை நிர்ணயிக்கும் என்பதில் தெளிவாக இருக்கிறார் நயன்தாரா. ஆனால், சினிமா வட்டாரத்தில் யாரையும் முழுக்க நம்பாமல் இருப்பவர், தன் மன ஆறுதலுக்காக ஆன்மிகத்தில் நாட்டம்கொண்டிருக்கிறார். அது கொடுக்கும் புத்துணர்ச்சி தன் சினிமா கேரியருக்கும் அவசியம் என்று நினைக்கிறார். அடுத்து இந்திப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பவருக்கு, இப்போதைய மார்க்கெட் ரேட்டைவிட 'ஒரு சி’ சம்பளம் அதிகம் என்று கேள்விப்படும்போது, நயன் பாலிசி நச் பாலிசி என்றே தோன்றுகிறது!

வெளிச்சத்துக்கு வருகிறது, வாழ்க்கை ரகசியங்கள்!


நடிகை பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை சினிமாவாக உருவாகுவதாக ஒரு பரபரப்புத் தகவல் பாலிவுட்டில் உலா வருகிறது. அது உண்மையாக இருந்தால் அவரது வாழ்க்கை ரகசியங்கள் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படி வெளிச்சத்துக்கு வருவது அவரது பொதுவாழ்க்கைக்கு ஏற்றமாக இருக்குமா? இறக்கமாக இருக்குமா?

‘நடிகை அல்லவா, அவரது புகழுக்கான விஷயங்களை மட்டும் படத்தில் சேர்ப்பார்!’ என்று ரசிகர்கள் சொல்லாமல் சொல்வது ஒருபுறம் இருந்தாலும், இதுபற்றி பிரியங்கா சோப்ரா என்ன சொல்கிறார்?!

“என்னைப் பற்றி ஒரு சினிமா உருவாவதற்கு நான் தடை ஒன்றும் போடப்போவதில்லை. ஆனால் அது சரியான நேரத்தில் உருவாக்கப்பட வேண்டும்” என்கிறார்.

பிரியங்கா மாடலிங் துறையில் அடியெடுத்துவைத்து அழகுப்போட்டிகளில் பங்கேற்றவர். பின்பு அவரை இந்தி சினிமா வரவேற்றது. கதாநாயகியாக உச்சத்தில் இருக்கிறார். அவர் மாடலிங் செய்த காலத்தில் இருந்தே அஸீம் மெர்ச்சன்ட் என்பவர் அவருக்கு நண்பராக இருக்கிறார். பிரியங்காவின் வாழ்க்கை ரகசியங்கள் அனைத்தையும் அறிந்த அவர்தான் பிரியங்கா பற்றிய படத்தை உருவாக்கப் போகிறாராம்.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த ‘வான்டட்’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்த அஸீம், தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார்.

“என்னைப் பற்றி ஒரு படம் எடுக்குமளவு நான் பெரிய ஆளாகி விட்டேனா என்று நினைக்கும்போது எனக்கு சந்தோஷத்தில் தலை, கால் புரியவில்லை. சீரியசாக சொல்ல வேண்டுமென்றால், என்னைப் பற்றி படம் உருவாக்குமளவு நான் பெரிய ஆளில்லை” என்று அடக்கமாகச் சொல்கிறார் பிரியங்கா.

“அந்த படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் என்பதெல்லாம் உண்மையிலேயே எனக்குத் தெரியாது. நான் வாழ்க்கையில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. வேண்டுமானால், எனது 40 வயதில் என்னைப் பற்றி ஒரு படம் உருவாக்கலாம். காரணம், நான் அப்போது, சாதிக்க நினைத்தவற்றைச் சாதித்திருப்பேன்” என்கிறார்.

பிரியங்கா பற்றி உருவாகும் படத்தில், அவரது மாடலிங் நாட்கள், அவரது முன்னாள் மேலாளர் பிரகாஷ் ஜாஜுவுடன் அவர் நடத்திய சட்டப் போராட்டம் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிகிறது. பிரியங்காவை ஏமாற்றியதற்காக பிரகாஷ், இரண்டு மாதங்களை சிறையில் கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர், பிரியங்காதான் தனக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டினார். இருவரும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியது பெரும் பரபரப்பை உருவாக்கியது.

‘அந்த விஷயங்களும் திரையில் இடம்பிடிக்கப் போகிறதாமே?’ என்று கேட்டால் பிரியங்காவின் முகம் சிவக்கிறது.

“என்னைப் பற்றி ஒருவர் சினிமா தயாரிக்கப் போகிறார் என்பது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனால் நீங்கள் இந்த கேள்வியை கேட்பது எனக்கு தாங்க முடியாத ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. காரணம், அந்தப் பிரச்சினையின்போது நானும், எனது குடும்பத்தினரும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். எனது வாழ்வின் வலி மிகுந்த ஒரு பகுதியை வெளிச்சமிட்டுக் காட்ட நினைப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மனரீதியாக அது ரொம்பவே தொந்தரவான விஷயம்” என்கிறார் படபடப்பாக.

தற்போது பிரியங்காவே ஒரு சுயசரிதைக் கதையில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அதாவது, உலக குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோமாக அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

“மேரி கோமின் நிஜவாழ்க்கைக் கதையில் நான் நடிக்கிறேன். அதன் ஒவ்வொரு காட்சி படம்பிடிக்கப்      படும்போதும் மேரி கோம் உடனிருந்து கவனிக்கிறார், குறிப்பிட்ட சூழல்களில் தனது உணர்வுகள் எப்படி இருந்தன என்று விளக்குகிறார். அது எனக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது” என்று கூறி முடிக்கிறார், பிரியங்கா சோப்ரா.

இணையதளத்தில் படங்கள் வெளியீடு நடிகை சுருதிஹாசன் போலீசில் புகார்!


நடிகை சுருதிஹாசன் ‘யேவடு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதில் சில படங்கள் தகாத கோணங்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் எந்த அனுமதியும் இன்றி இணையதளங்களில் வெளியானது.

இதனை அறிந்த சுருதிஹாசன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி நடிகை சுருதிஹாசன் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் சி.ஐ.டி. பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஆக்‌ஷனில் கலக்கல் - கவர்ச்சியால் கலக்கம் - விஷால் தயக்கம்!


விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ஸ்ருதிஹாசனுடன் ‘பூஜை’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் கவர்ச்சிப் புயலாக வலம் வரும் ஸ்ருதி இதிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ளாராம். தமிழில் சூர்யாவுடன் ‘ஏழாம் அறிவு’ படத்துக்குப் பிறகு ‘பூஜை’ படத்தில் விஷாலுடன் நடிக்கிறார் ஸ்ருதி.

அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுடன் ‘பட்டத்து யானை’ படத்தில் நடித்தார் விஷால். அப்போது பேசிய விஷால், 'அர்ஜூனிடம் நான் உதவி இயக்குனராக இருந்ததால், அவரை என் குருவாகத்தான் பார்க்கிறேன். குருவின் மகளோடு நெருங்கி நடிப்பதும், டூயட் பாடுவதும் ஒரு வித பயத்தையே கொடுக்கிறது’ என்றார்.

அடுத்து சரத்குமார் மகள் வரலட்சுமியோடு ‘மதகஜ ராஜா’ படத்தில் ஜோடி போட்டு நடித்தார் விஷால். அப்போதும் விஷாலுக்கு இதே தயக்கம் இருந்தது. இப்படி சீனியர் நடிகர்களின் மகள்களோடு ஜோடி போடும் விஷால், தொடர்ந்து தனக்கு இருக்கும் தயக்கத்தையே வெளிப்படுத்தி வருகிறார். அடுத்து கமல் மகள் ஸ்ருதியுடனும் நெருக்கம் காட்டி நடிக்கும் காட்சிகளில் இதே காரணத்தை சொல்கிறாராம் விஷால்.

காதல் காட்சிகளில் மட்டும் தான் இந்த தயக்கமே தவிர, ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்புகிறாராம் விஷால். ‘சத்யம்’ படத்திற்குப் பிறகு இதில் போலிஸ் அதிகாரியாக நடிக்கும் விஷால் உண்மையான என்கவுண்டர் ஸ்பெஷலிட்டுகளை நேரில் சந்தித்து அவர்களின் அனுபவங்களை அறிந்துகொண்டு படத்தில் நடித்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலிஸ் கதையை விறுவிறுப்பாக எடுக்க ‘சிங்கம்’ இயக்குனர் ஹரிக்கு சொல்லியாத் தரவேண்டும்!

ரஜினிக்கு மட்டும் சம்மதமா? நயன்தாராவின் பதில்...


பொதுவாகவே நடிகைகளைப் பொருத்த வரை படவாய்ப்புகள் இல்லாத நிலையில் தான் ஒரு பாடலுக்கு நடனமான முன்வருவார்கள். ஆனால், நயன்தாரா தன் ஆரம்ப காலத்திலேயே ஒரு பாடலுக்கு ஆடியவர்.

சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான சூழ்நிலையில் ‘நான் சூப்பர்ஸ்டாரு ஜோடி தான், கூட ஆடுடா’ என்று விஜய்யுடன் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் நயன்தாரா.

அதிக படங்களில் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் முதலிடத்தில் இருந்தாலும் சிவாஜி படத்தில் ‘பல்லேலக்கா...’ பாடலுக்கு நடனம் ஆடினார். தனிப்பட்ட வாழ்க்கையில் சில கசப்புகள் ஏற்பட்டு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைக்கு வந்த நயன்தாரா, எதிர்நீச்சல் படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடினார். அதே சமயம் சூர்யாவுடன் சிங்கம் படத்தில் நடனமாட அழைத்தபோது அதை மறுத்துவிட்டார் நயன்.

இப்போது மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெரிவித்துள்ளார் நயன். இது பற்றி நயன்தாராவிடம் கேட்டபோது ‘ரஜினி ஒரு சூப்பர்ஸ்டார், அதனால் தான் அவருடன் ஆட நான் சம்மதிக்கிறேன், மற்றபடி அதில் எந்த ரகசியமும் இல்லை’ என்றார்.  

லிங்கா படத்தில் ரஜினியுடன் இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

இந்திய கலைஞர்கள் உலக அரங்கிற்கு வர வேண்டும்: கேன்ஸ் திரைப்பட விழாவில் கமல் பேச்சு


பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா கடந்த 14ந் தேதி தொடங்கியது. வருகிற 25ந் தேதி வரை நடக்கிறது. இங்கு இந்திய அரசும், இந்திய பிக்கி அமைப்பும் இணைந்து அரங்கம் அமைத்துள்ளன. இதனை பிக்கி அமைப்பின் மீடியாப் பிரிவு தலைவரான கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

பின்னர் அங்கு வந்திருந்த இந்திய பிரிதிநிதிகளிடையே அவர் பேசியதாவது: சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் இருப்பது பாராட்டுக்குரியது. இதன் மூலம் இந்திய சினிமா வர்த்தகத்தை, உலக சினிமாவுடன் ஒருங்கிணைக்க முடியும். இதுபோன்ற விழாக்களுக்கு தனியாக வர முடியாத கலைஞர்கள், இந்த அமைப்புடன் இணைந்து கலந்து கொண்டு உலக சினிமா பிரபலங்களை சந்தித்து உரையாடலாம்.

அதேபோல இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் திறமைகள் உலக சினிமா பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இது அமையும். இந்திய கலைஞர்களின் பிரச்னையே அவர்கள் சின்ன சின்ன சாதனைகளுக்குகூட தன்னிறைவு பெற்று விடுவதுதான். அதிலேயே முழு திருப்தி அடைந்துவிடுகின்றனர். அதனால் சர்வதேச சந்தைகளின் அறிமுகம்கூட அவர்களுக்கு இல்லாமல் போகிறது. சர்வதேச சந்தை குறித்த பயம்தான் நம்மிடம் உள்ளது. இந்திய கலைஞர்கள் உலக அளவில் பாராட்டப்படுகிறார்கள். அது அவர்களுக்கு தெரியவில்லை. தங்களிடம் இருக்கும் திறமையை உணர்ந்து இந்திய படைப்பாளர்கள் உலக அரங்கிற்கு வரவேண்டும், உலக சினிமாவில் ஜொலிக்க வேண்டும்.

இவ்வாறு கமல் பேசினார்.

கார்த்தி நடிக்கும் புதிய படம் மெட்ராஸ்!

பருத்தி வீரன் கார்த்தி சில படங்களின் வெற்றி காரணமாக வேகமாக வளர்ந்து வந்தார். அந்த நேரங்களில் அவர் தனது அண்ணன் சூர்யாவுடன் இணைந்து ஏதாவது சினிமா விழாக்களுக்கு வந்தால், எம்.ஜி.ஆர்., சிவாஜி ரேஞ்சுக்கு சில சினிமா பிரபலங்கள் அவர்களை உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

ஆனால், அதன்பிறகு கார்த்தி நடித்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து அவரது காலை வாரிவிட்டதால், தடுமாறிப்போய்க் கிடக்கிறார். சகுனி, அலெக்ஸ்பாண்டியனை அடுத்த அவர் அதிக நம்பிக்கை வைத்து நடித்த அழகுராஜா, பிரியாணி படங்களும் தோற்று விட்டதால் இப்போது அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துககொண்டிருக்கிறார்.

இந்த படத்தைப்பற்றி இதுவரை எந்தவித தகவலும் வெளியிடாமல் நடித்து வரும் கார்த்தி, படத்தின் தலைப்பு விசயத்தில் ரொம்பவே யோசிக்கச்சொன்னாராம. அதனால் முதலில் கபாலி என்று வைத்த டைரக்டர் ரஞ்சித், அதையடுத்து பலத்த ஆலோசனைக்குப்பிறகு இப்போது மெட்ராஸ் என்றொரு தலைப்பை வைத்திருக்கிறாராம்.

இந்த தலைப்பு கதைக்கு ரொமப் பொருத்தமாக இருப்பதாக ஓ.கே செய்திருக்கும் கார்த்தி, தனது பிறந்த நாளான மே 25-ந்தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போகிறாராம்.

நெற்றியில் வரும் பொரியை தடுக்க!


என் நெற்றியில் பொரிப்பொரியாக இருக்கிறது. மஞ்சள், வியர்க்குரு பவுடர் என்று எல்லாம் போட்டுப் பார்த்துவிட்டேன். கொஞ்சமும் குறையவில்லை. இப்போது கன்னங்களிலும் அது பரவிவிட்டது. இதைப் போக்க வழி சொல்லுங்களேன் என்பது பல பெண்கள் மற்றும் ஆண்களின் கேள்வியாக உள்ளது. முதலில், இது ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்போம். தலை வாரும்போது நெற்றியில் சீப்பு படுதல், தலையைத் துவட்டும்போது ஏற்படும் அழுத்தம், பொடுகு, முகத்தில் அதிக முடி இருப்பது... இந்தக் காரணங்களால் நெற்றியில் முள் போன்று பொரிப்பொரியாகத் தோன்றும். இதற்கு நிரந்தரமான தீர்வு உண்டு.

ரோஜா இதழ்களை சந்தன மனையில் வைத்து உரசி. அதே அளவு சந்தனம் சேர்த்துக் இரண்டையும் கலந்து பொரி இருக்கும் இடங்களில் இதைப் போட்டு, பத்து நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்துவந்தால், பொரிகள் மறையத் தொடங்கும். இதோடு, கசகசா - 2 டீஸ்பூனுடன், 10 கருந்துளசி இலைகளை சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். கொதிநீரில் வெட்டிவேரை போட்டு வையுங்கள்.

மெல்லிய ஆர்கண்டி துணியை ஜில் தண்ணீரில் நனைத்து, பிழிந்து, நெற்றியில் வைத்து, அதன்மேல் இந்த விழுதை பத்து போல் போடுங்கள். 15 நிமிடம் கழித்து வெட்டிவேர் தண்ணீரால் கழுவுங்கள். இப்படி, வாரம் ஒரு முறை செய்யுங்கள். இதில் சேர்க்கப்பட்டுள்ள கசகசா, பொரிகளை அடியோடு போக்குவதுடன், முகத்தையும் வழுவழுப்பாக்கும். துளசி, தோலின் முரட்டுத் தன்மையை நீக்கி மிருதுவாக்கும். இந்த சிகிச்சைகளை ஒரு மாதம் தொடர்ந்து செய்து வந்தாலே, துருத்தி நிற்கும் பொரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இந்த சிகிச்சையின்போது முகத்துக்கு க்ரீம் போடு வதைத் தவிர்ப்பது நல்லது.

பொலிவான முகத்துக்கு எளிதான குறிப்புகள்!

முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டு கலந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக,  முகப்பருக்கள் மறையும்.  பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம்  மிருதுவாக இருக்கும். முகத்தின் நிறம் மாறும்.  தக்காளியை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய வேப்பங்கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்து பூசி ஊறிய பின் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.   கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய உருளைகிழங்கை வட்டமாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சி அடையும்.  கருவளையம் மறைந்து விடும்.

முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசி ஊறவைத்து அலம்பினால் பூனை முடி வராது நல்ல பலன்  கிடைக்கும். மோரை பஞ்சில் நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து வர துவாரங்கள் விரைவில் மறையும்.  ஈஸ்ட் மாத்திரை 1  தேக்கரண்டி, பால் 4 தேக்கரண்டி, சர்க்கரை 1 தேக்கரண்டி மூன்றையும் நன்றாக கலந்து 10 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.
 

மணிரத்னம் மகேஷ்பாபு மோதல், படம் ட்ராப்!


கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கை வைத்து மணிரத்னம் இயக்கிய கடல் படு தோல்விப்படம். அதற்கு முன் இயக்கிய ராவணன் படமும் தோல்விதான். எனவே மணிரத்னம் கால்ஷீட் கேட்டு வந்தால் என்ன பதில் சொல்லி அவரை திருப்பி அனுப்புவது என்ற சிந்தனையில் இருக்கின்றனர் நம்ம ஊர் ஹீரோக்கள். எனவே மகேஷ்பாபு, நாகார்ஜுனா ஆகிய தெலுங்கு நடிகர்களை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் அடுத்தப்படத்தைத் தொடங்க இருந்தார் மணிரத்னம். அப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யாராய் ஆகிய இருவரும் நடிக்க இருந்தனர்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்குவதாக இருந்த புதிய திரைப்படம் திடீரென கைவிடப்பட்டதாக தகவல் அடிபடுகிறது. மகேஷ்பாபு கேட்கும் ரூ.5 கோடி சம்பளத்தை குறைத்துக்கொள்ளுமாறு மணிரத்னம் தரப்பில் இருந்து வந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நாகார்ஜுனன், ஐஸ்வர்யாராய், ஸ்ருதிஹாசன் ஆகிய பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்க இருப்பதால் அனைவருமே சம்பளத்தை குறைத்து நடிக்க மணிரத்னம் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், இதற்கு மகேஷ்பாபு தரப்பில் இருந்து மட்டும் பாசிட்டிவ்வான பதில் வராததால், படம் கைவிடப்படுவதாகவும் கேள்வி.

இந்த படம் டிராப் ஆனதை நாகார்ஜுனா, தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

6 ஆயிரம் தியேட்டர்கள்...! பரபரப்பானது கோச்சடையான் வெளியீடு!!


கோச்சடையான் படம் வெளியாக இன்னும் இரு தினங்களே இருப்பதால் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் பரபரப்பு அடைந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமாரின் மேற்பார்வையில், ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கி, இயக்குநராக களம் இறங்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக மோசன் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது இப்படம். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரகி உள்ள இந்தப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மீடியா ஒன் குளோபல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

பல்வேறு பிரச்னைகளால் இப்படம் ரிலீஸ் ஆவதில் அடிக்கடி தாமதம் ஏற்பட்டது. இதுவரை இப்பட ரிலீஸ் 6 முறை தள்ளிப்போய் உள்ளது. இந்நிலையில் வருகிற மே 23ம் தேதி படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் கோச்சடையான் வெளியாக இருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 450 தியேட்டர்களிலும், கேரளாவில் 140 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 650 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும், போஜ்புரி, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழி பேசும் மாநிலங்களில் 1200 தியேட்டர்களிலும் ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் 3000 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 3000 தியேட்டர்களிலும் கோச்சடையான் ரிலீஸ் ஆக இருக்கிறது. நேற்றே வெளிநாடுகளுக்கான தேவையான 3000 பிரிண்ட் காப்பிகளும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் பிரிண்ட் காப்பிகள் அனுப்பி வைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.


வெளியீட்டில் சாதனையை நிகழ்த்துகிறது கோச்சடையான்!

'கோச்சடையான்' திரைப்படத்தை சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட தீர்மானித்துள்ளனர். இவற்றில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில்தான் அதிகமான எண்ணிக்கையில் வெளியாகிறது. சென்னையில் உள்ள முக்கியமான மல்ட்டிபிளக்ஸ்களான சத்யம் எஸ்கேப் வளாகத்தில் 3 திரையரங்குகள், சத்யம் வளாகத்தில் 3 திரையரங்குகள், ஐனாக்ஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், அபிராமி வளாகத்தில் 4 திரையரங்குகள், பிவிஆர் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 பெரம்பூர் வளாகத்தில் 3 திரையரங்குகள், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் வளாகத்தில் 4 திரையரங்குகள், ஓஎம்ஆர் ஏஜிஎஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், உதயம் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 தியாகராஜா வளாகத்தில் 2 திரையரங்குகள், தேவி வளாகத்தில் 2 திரையரங்குகள், உட்லண்ட்ஸ் வளாகத்தில் 2 திரையரங்குகள் என பல திரையரங்குகளில் வெளியாகிறது.

கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள சென்னையின் புறநகர் பகுதியான காணாத்துர் என் இடத்தில் உள்ள மாயாஜால் வளாகத்தில் 16 தியேட்டர்கள் உள்ளன. இங்கு அனைத்து திரையரங்குகளிலும் 'கோச்சடையான்' படம் மட்டுமே வெளியாகிறது. அதாவது இந்த மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 100 காட்சிகள் நடைபெறவிருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் மொத்தம் 300 காட்சிகள். இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படமும் புரியாத மிகப் பெரிய சாதனை இது என திரையுலகினர் கூறுகின்றனர்.

அஜீத்துடன் டூயட் பாட வரும் வித்யாபாலன்!


கெளதம்மேனன் இயக்கும் தனது 55வது படத்தில் படு சீரியசாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். என்றாலும், அவ்வப்போது இயக்குனர்களிடம் கதை கேட்கவும் நேரம் ஒதுக்கி வருகிறார். மங்காத்தாவிற்கு பிறகு தொடர் வெற்றிகளை சந்தித்து வருபவர், அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது கதை விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல் தன்னுடன் இணைந்து நடிக்கும் ஹீரோயின், வில்லன் போன்ற முக்கிய நடிகர்களும் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார். அதனால், மங்காத்தாவில் த்ரிஷா, ஆரம்பம் படத்தில் நயன்தாரா, வீரம் படத்தில் தமன்னா என்று நடித்த அஜீத், இப்போது தனது 55வது படத்தில் அனுஷ்காவுடன் இணைந்திருக்கிறார்.

இதையடுத்து மீண்டும் வீரம் சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், அந்த படத்திற்கு நல்ல பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய ஹீரோயினாக புக் பண்ண சொன்னாராம். அதையடுத்து, இப்போது இந்தியில், தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி போன்ற அதிரடிப்படங்களில் நடித்த வித்யாபாலனை, அஜீத்துடன் ஜோடி சேர்க்க பேசி வைத்துள்ளார் டைரக்டர் சிவா.

ஆக, தமிழ் சினிமாவில் இருந்து ஏற்கனவே சில படவாய்ப்புகள் சென்றபோது பாலிவுட்டில் பிசி என்று கைவிரித்த வித்யாபாலன் இப்போது அஜீத் படம் என்றதும் கண்டிப்பாக கால்சீட் தருவதாக டைரக்டர் சிவாவிடம் உறுதி அளித்துள்ளாராம்.