Thursday, May 22, 2014

ரஜினிக்கு மட்டும் சம்மதமா? நயன்தாராவின் பதில்...


பொதுவாகவே நடிகைகளைப் பொருத்த வரை படவாய்ப்புகள் இல்லாத நிலையில் தான் ஒரு பாடலுக்கு நடனமான முன்வருவார்கள். ஆனால், நயன்தாரா தன் ஆரம்ப காலத்திலேயே ஒரு பாடலுக்கு ஆடியவர்.

சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமான சூழ்நிலையில் ‘நான் சூப்பர்ஸ்டாரு ஜோடி தான், கூட ஆடுடா’ என்று விஜய்யுடன் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் நயன்தாரா.

அதிக படங்களில் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் முதலிடத்தில் இருந்தாலும் சிவாஜி படத்தில் ‘பல்லேலக்கா...’ பாடலுக்கு நடனம் ஆடினார். தனிப்பட்ட வாழ்க்கையில் சில கசப்புகள் ஏற்பட்டு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைக்கு வந்த நயன்தாரா, எதிர்நீச்சல் படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ஆடினார். அதே சமயம் சூர்யாவுடன் சிங்கம் படத்தில் நடனமாட அழைத்தபோது அதை மறுத்துவிட்டார் நயன்.

இப்போது மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெரிவித்துள்ளார் நயன். இது பற்றி நயன்தாராவிடம் கேட்டபோது ‘ரஜினி ஒரு சூப்பர்ஸ்டார், அதனால் தான் அவருடன் ஆட நான் சம்மதிக்கிறேன், மற்றபடி அதில் எந்த ரகசியமும் இல்லை’ என்றார்.  

லிங்கா படத்தில் ரஜினியுடன் இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.

0 comments:

Post a Comment