Thursday, May 22, 2014

தேடிவந்த அரிய வாய்ப்பு - தீபிகா காட்டுல மழைதான்..!


ஐரோப்பிய யூனியன் கால்பந்து கூட்டமைப்பு சார்பில் சாம்பியன் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இணையாக கருதப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் என்பதால் இந்த போட்டிக்கு நல்ல மவுசு. இதன் இறுதிப் போட்டி ஸ்பெயின் நாட்டின் லிஸ்பன் நகரில் வருகிற 24ந் தேதி நடக்கிறது.

இதில் ரியல் மாட்ரிட், மற்றும் அட்லெட்டிகோ அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்தி நடிகை தீபிகா படுகோனேவை அழைத்திருக்கிறது ஐரோப்பிய கால்பந்து யூனியன். இது மிக்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.

"சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் இரு சிறந்த அணிகள் பங்கு பெற உள்ள கடும் போட்டியை நேரில் காண ஆவலாக இருக்கிறேன்" என்று தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார் தீபிகா

0 comments:

Post a Comment