Thursday, May 22, 2014

மணிரத்னம் மகேஷ்பாபு மோதல், படம் ட்ராப்!


கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்கை வைத்து மணிரத்னம் இயக்கிய கடல் படு தோல்விப்படம். அதற்கு முன் இயக்கிய ராவணன் படமும் தோல்விதான். எனவே மணிரத்னம் கால்ஷீட் கேட்டு வந்தால் என்ன பதில் சொல்லி அவரை திருப்பி அனுப்புவது என்ற சிந்தனையில் இருக்கின்றனர் நம்ம ஊர் ஹீரோக்கள். எனவே மகேஷ்பாபு, நாகார்ஜுனா ஆகிய தெலுங்கு நடிகர்களை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் அடுத்தப்படத்தைத் தொடங்க இருந்தார் மணிரத்னம். அப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யாராய் ஆகிய இருவரும் நடிக்க இருந்தனர்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்குவதாக இருந்த புதிய திரைப்படம் திடீரென கைவிடப்பட்டதாக தகவல் அடிபடுகிறது. மகேஷ்பாபு கேட்கும் ரூ.5 கோடி சம்பளத்தை குறைத்துக்கொள்ளுமாறு மணிரத்னம் தரப்பில் இருந்து வந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நாகார்ஜுனன், ஐஸ்வர்யாராய், ஸ்ருதிஹாசன் ஆகிய பிரபலங்கள் ஒரே படத்தில் நடிக்க இருப்பதால் அனைவருமே சம்பளத்தை குறைத்து நடிக்க மணிரத்னம் தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், இதற்கு மகேஷ்பாபு தரப்பில் இருந்து மட்டும் பாசிட்டிவ்வான பதில் வராததால், படம் கைவிடப்படுவதாகவும் கேள்வி.

இந்த படம் டிராப் ஆனதை நாகார்ஜுனா, தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

0 comments:

Post a Comment