Tuesday, June 3, 2014

சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தம் - சரத்குமார் பேட்டி

 நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக சரத்குமார். படம் சண்டமாருதம். இந்தப் படத்தின் இன்னொரு விசேஷம் சரத்குமாரின் புதிய அடைமொழி. இதுவரை சுப்ரீம் ஸ்டாராக இருந்தவர் இந்தப் படத்திலிருந்து புரட்சி திலகமாக மாறியிருக்கிறார். புரட்சித்தலைவரிலுள்ள புரட்சியையும், மக்கள் திலகத்திலுள்ள திலகத்தையும் சேர்த்து... புரட்சி திலகம். சண்டமாருதத்தின் படப்பிடிப்பு தொடங்கிய கையோடு பத்திரிகையாளர்களுக்கு படப்பிடிப்பு இடைவேளையில் பேட்டியும் அளித்தார்.
ஜக்குபாய்க்குப் பிறகு ஹீரோவாக நடிக்க ஏனிந்த பெரும் இடைவெளி...?

நான் அரசியலில் பிஸியாக இருந்ததால் ஹீரோவாக நடிக்க நேரம் கிடைக்கலை. அதனால்தான் சென்னையில் ஒருநாள், நிமிர்ந்து நில் படங்களில் கௌரவ வேடத்தில் நடித்தேன். நல்ல கதைக்காக நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அது என்ன சண்டமாருதம்...?

சண்டமாருதம் என்றால் ஊழிப்பெருங்காற்று என்று அர்த்தம்.

படத்தின் கதையை நீங்களே எழுதியிருக்கிறீர்களாமே?

என்னுடைய படங்களின் கதைக்கருவில் நான் அபிப்பிராயங்கள் சொல்லி திருத்தியிருக்கேன். ஆனா முழுக்கதையையும் எழுதியது இப்போதுதான். சமீபமாக திகில் - நகைச்சுவை கலந்த கதைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. அப்படியொரு கதைதான் சண்டமாருதம். நான் எழுதிய கதையை ஏ.வெங்கடேஷிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது.  என்னுடைய கதைக்கு ரான்ஜஷ்குமார் திரைக்கதை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார்.

படத்தில் உங்களுக்கு என்ன மாதிரியான கேரக்டர்...?

ரவி, சர்வேஸ்வரன் என்கிற இரண்டு கேரக்டர்களில் நடிக்கிறேன். இரண்டுமே மாறுபட்ட கதாபாத்திரம். புலன்விசாரணைக்கு அப்புறமா இந்தப் படத்தில் வில்லனாகவும் வர்றேன்.

மற்ற நட்சத்திரங்கள்...?

சரயு, அவ்னி மோடின்னு இரண்டு ஹீரோயின்கள். நிமிர்ந்து நில் படத்தில் சமுத்திரகனியுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவரும் என்னுடைய மனைவி ராதிகாவும் முக்கிய வேடங்களில் நடிக்கிறாங்க. விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, கன்னட நடிகர் அருண் சாகர்னு நிறைய பேர் நடிக்கிறாங்க. ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். அருண் சாகருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம்.

இயக்குனர் ஏ.வெங்கடேஷ்...?

அவரும் நானும் இதற்குமுன் இணைந்து பணியாற்றிய மகாபிரபு, சாணக்யா, ஏய் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. அதே மாதிரி  இந்தப் படமும் வெற்றிப் படமாக அமையும்.

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..


சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
 அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
 பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
 வளி திரிதரு திசையும்
 வறிது நிலைஇய காயமும்
 என்றிவை
 சென்று அளந்து அறிந்தார் போல
 என்றும் இனைத்து என்போரும் உளரே


 இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
 வலவன் ஏவா வான ஊர்தி எய்துப


 இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

 "எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
 விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
 புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
 எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.


விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!

பாலூட்டும் புறா..?


தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?

DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகம். ஆனால் மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.

தாய்ப்புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரு புறாக்களுமே அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளி வருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன.

குஞ்சுப் புறாக்களுக்கு முதல் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை இந்தப் பால் மட்டும்தான் உணவு. பால் சுரக்கும் தொண்டைப் பையானது சாதாரண நாட்களில் புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்க உதவும் உறுப்பாகும். பால் கொடுக்கும் சமயத்தில் புறாக்கள் தானியம் உட்கொண்டால் பாலில் குஞ்சுகளால் ஜீரணிக்க முடியாத தானியம் கலக்க வாய்ப்புண்டு. அதனால் புறாக்கள் தாங்கள் பட்டினியாக இருந்து தங்களின் சிறிய குஞ்சுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பாலூட்டுகின்றன. எப்பேர்ப்பட்ட தியாகம் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஈரப்படுத்தி மென்மைப்படுத்தப்பட்ட தானிய உணவு குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.

அதிபுத்திசாலியான புறா இனம், கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் (pass the mirror test) ஆற்றல் படைத்தவை மனிதர்களைத் தவிர குரங்கு, யானை, டால்ஃபின் போன்ற இன்னும் சில மிகக் குறைந்த உயிரினங்களுக்கே இந்த ஆற்றல் உண்டு. இதுபோல் இந்தப் புவியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாவற்றிலும் நமக்குத் தெரியாத பல்வகை அதிசய ஆற்றல்கள் உள்ளன. இவற்றை அறியும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். எல்லா உயிர் இனங்களையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை வளர்க்க வேண்டும். இந்தப் புவியானது, மனிதர்களாகிய நமக்கே சொந்தம் என்ற அகந்தை உணர்வு மழலைச் செல்வங்களிடம் தலைதூக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

அமலாபாலின் கடைசிப் படமா 'மிலி..?'

2009ல் மலையாளத்தில் வெளியான 'நீலத்தாமரா' படம் மூலம் அறிமுகமானவர் அமலாபால். தமிழில் 'வீரசேகரன்', 'சிந்துசமவெளி' படங்களில் நடித்திருந்தாலும், பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்த 'மைனா' படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

அதன் பின்பு 'தெய்வத்திருமகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'வேட்டை', 'தலைவா', 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

தற்போது தனுஷுக்கு ஜோடியாக  'வேலையில்லா பட்டதாரி' படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் விஜய்யுடன் இருந்த நட்பு காதலாக மாறியதால், இருவரும் ஜூன் 12ல்திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள்.

தற்போது தன் தாய் மொழியான மலையாளத்தில் நிவின் பவுலியுடன் இணைந்து நடித்திருக்கும் 'மிலி' படமே இவரின் கடைசிப் படம் என கூறப்படுகிறது. இப்படத்தை 'ட்ராஃபிக்' படத்தை இயக்கிய ராஜேஷ் பிள்ளை இயக்குகிறார்.

திருமணத்திற்குப் பிறகு பிரமாதமான கதைகள் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார் அமலாபால். ஆனால், கண்டிப்பாக நடிப்பேன் என்று உறுதியாக சொல்லவில்லை.

அமலா பாலின் கடைசிப் படம் 'மிலி' தானா? அல்லது தொடர்ந்து அமலாபால் நடிப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

கருணாநிதிக்கு ரஜினி பிறந்த நாள் வாழ்த்து..!

91வது பிறந்த நாள் காணும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அரசியல் தாண்டி, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சமூகப் பிரபலங்களும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்களில் சினிமாக்காரர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்த்துகளை மிக மிக ரகசியமாக அவருக்குத் தெரிவித்து வருகின்றனர். இத்தனைக்கும் கடந்த முறை கருணாநிதி ஆட்சியில் இருந்த போது கிட்டத்தட்ட அவர் மடியில் ஏறி உட்கார்ந்து கொள்ளாத குறையாக செல்லம் கொஞ்சியவர்கள்.

சினிமாக்காரர்களுக்கு என்று தனி வாரியமே அமைக்கச் சொல்லி கேட்டு வாங்கி அனுபவித்தவர்கள். கருணாநிதியும் சினிமாக்காரர்கள் என்ன கேட்டாலும் இல்லையென்ற சொல்லே சொல்லாமல் வாரி வழங்கத்தான் செய்தார்.

இன்று அவர்களில் யாரும் கருணாநிதிக்கு பிறந்த நாள் சொல்லவோ.. அட, அவர் வீடு இருக்கும் கோபாலபுரம் அல்லது சிஐடி காலனி பக்கமோ எட்டிப் பார்க்கவும் விரும்புவதில்லை.

ஆனால் கருணாநிதி பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரை தங்கள் நெருங்கிய நண்பராகப் பாவிப்பதில் எந்தத் தயக்கமும் காட்டாதவர்கள் ரஜினிகாந்த், இளையராஜா போன்றவர்களே.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கருணாநிதிக்காக ஒரு நாள் முன்பாகவே தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை இளையராஜா முடித்துக் கொண்டார்.

சூப்பர் ஸ்டாரான ரஜினியோ, வழக்கம்போல, கருணாநிதிக்கு தன் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மைசூரில் லிங்கா படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, போனில் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு, 'நீண்ட ஆயுளுடன் நலமாய் வாழ' வாழ்த்து தெரிவித்தார். ரஜினி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் கருணாநிதி.

சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி!

சகல பாதுகாப்பு வசகளுடன் கூடிய புதிய வீட்டை மும்பையில் வாங்கி குடியேறினார் நடிகை ஸ்ருதிஹாஸன்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாஸன், கடந்த ஆண்டு வரை மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் அவரது ரசிகன் என்று கூறிக் கொண்டு வந்த ஒருவர் திடீரென தாக்கினார். ஸ்ருதி ஹாஸன் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பினார். பிறகு போலீசார் தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி!

இந்த சம்பவத்தை தொடர்ந்து சில நாட்கள் தோழி வீட்டில் தங்கி இருந்தார். பிறகு பலத்த பாதுகாப்புடன் வாடகை வீட்டுக்கே திரும்பி சென்றார்.

இருந்தாலும் சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்த வகையில் ஒரு வீடு கிடைக்க, அதை உடனடியாக பேசி முடித்து, குடிபுகுந்துவிட்டார்.

இந்த வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் நடிகர் இம்தியாஸ் அலி, நடிகை பிராச்சி தேசாய் போன்ற சினிமா பிரபலங்கள் வசிப்பதால், பயமின்றி இருக்கலாம் என நினைத்து குடிவந்திருக்கிறாராம்.

இருந்தாலும் பாதுகாப்புக்கு இரு காவலாளிகளை நியமித்துள்ளாராம் ஸ்ருதி.

மரங்களை வெட்டுங்கள்......??

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால்  நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் '  என்று சொல்வீர்கள்.  அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற  முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள்  நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

 மண்ணின் வில்லன்

 அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட  போகிற விஷ மரம்.  தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது.  ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே  விளக்கம் சொல்வாரே ! )

 நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை  இங்கு தூவியதாக ஒரு கருத்தும் ,  கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் )  வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய  பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.  முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த  வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.  பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல  மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக  வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி  செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!  இப்படி காற்றின் ஈரபதத்தையும்  , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே  முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
   
உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.  முக்கியமான விஷயம் ஒன்றும்  உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.  இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால்  அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி  நீரை விஷமாக  மாற்றிவிடுகிறது மற்றொரு புறம்  இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ  முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற  காற்று மண்டலமே நச்சுதன்மையாக  மாறிவிடுகிறது.

அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்  என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!  அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.   ஆனால்  நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும்,  இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம்  இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....!  நம் மண்ணின் மாண்பை காப்போம்..

ராய் லக்‌ஷ்மி ஆனார் லக்‌ஷ்மி ராய்!

கோலிவுட்டின் உயரமான மற்றும் அழகான நடிகையான நடிகை லக்‌ஷ்மி ராய் தனது பெயரினை ராய் லக்‌ஷ்மி என்று மாற்றம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அழகான மற்றும் திறமையான நடிகையாக இருந்தபோதும் லக்‌ஷ்மிராய் திரைத்துறையில் அவ்வளவாகச் ஜொலிக்கவில்லை. தல அஜித்துடன் இவர் நடித்த மங்காத்தா மற்றும் காஞ்சனா உள்ளிட்ட படங்கள் இவருக்குக் கொஞ்சம் வெளிச்சத்தைக் கொடுத்தன. ஆனாலும் ஒரு ஹீரோயினாக இன்றும் இவருக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்பது சற்றே வருந்ததக்கது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது பெயரினை ராய் லக்‌ஷ்மி என்று மாற்றம் செய்திருப்பதாகவும், இந்தப் பெயர் மாற்றம் குறித்துத் தான் நீண்ட
நாட்களாகச் சிந்தித்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தன் குடும்பத்தில் பெரும்பாலும் தன்னை யாரும் லக்‌ஷ்மி ராய் என்று
அழைப்பதில்லை என்றும், ராய் என்றே பெரும்பாலும் தான் அறியப்படுவதாகவும், இதனாலேயே தனது பெயரினை ராய் லக்‌ஷ்மி என்று மாற்றியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

லக்‌ஷ்மிராய் தற்பொழுது அரண்மனை மற்றும் இரும்புக்குதிரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இரும்புக்குதிரை திரைப்படத்தில் பைக் ரேஸராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி!

தொப்பை குறைய உதவும் க்ரஞ்சஸ் பயிற்சி                     
இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை: 

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும். 

ஹன்சிகாவுடன் போட்டியிடுகிறார் விஜய் டிவி ஆனந்தி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ரியாலிட்டி ஷோவான டேன்ஸ் தமிழா டேன்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், விஜய் டி.வியில் நடைபெற்ற சீசன் செவன் என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி பெரும்பாலனவர்களின் பாராட்டுக்களைப் பெற்ற போட்டியாளருமான ஆனந்தி இப்பொழுது சினிமாவிலும் அடி எடுத்து வைத்துள்ளார்.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் மீகாமன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறாராம். ஆர்யா மற்றும் ஹன்சிகா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துவரும் திரைப்படம் மீகாமன். இப்படத்தில் ஹன்சிகாவிற்கு அடுத்த முக்கிய வேடத்தில் ஆனந்தி நடித்துவருகிறாராம்.

சீசன் செவன் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுப் பலரும் பாராட்டிவருவதாகவும், அதில் தனது நடனத்தைப் பார்த்துவிட்டுத்தான் மகிழ்திருமேனியும் இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததாகவும் கூறியுள்ளார்.

மீகாமன் படத்தின் மூலம் திரையுலகிற்கு எட்டிப்பார்த்திருக்கும் ஆனந்தி இனிமேல் சீரியல்களில் நடிப்பதில்லை என்றும் கூறியுள்ளாராம்.

பெயர் வைப்பதில் கில்லாடி தமிழர்கள்...!


பாலங்கள், சாலைகள், கட்டடங்கள் என அனைத்திற்கும் பெயர் வைப்பதில் கில்லாடிகள் தமிழர்கள். பெயர் வைக்கும் போது எதை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை பற்றி கவலை கொள்வதும் கிடையாது.

குறிப்பாக திராவிட ஆட்சிக்காலத்தில் இந்த பெயர் வைக்கும் வைபவம் அரசின் சாதனை பட்டியலாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த பெயர் வைக்கும் படலம் விவசாயத்துறையையும் விட்டு வைக்க வில்லை.

நெல் பயிரையும் அலையாய் அலைக்கழித்து இருக்கின்றனர். நமது அரசியல்வாதிகளின் நகைச்சுவை. நெல் சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பம் திருந்திய நெல் சாகுபடி. குறைவான தண்ணீரில் கூடுதல் மகசூல் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம் ஆங்கிலத்தில் System of Rice Intensification என்றழைக்கப்படுகிறது.

1970களிலேயே இதற்கான ஆய்வுகள் நடைபெற்ற போதும், அமெரிக்காவின் நியூார்க்கின் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைகழகம் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டது. உணவு, வேளாண்மை, மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனத்தின் தலைவர் நார்மன் உபாஃப் இதனை உலகெங்கும் எடுத்துச் சென்றார்.

2005களில் தான் ஆசியாவில் திருந்திய நெல் சாகுபடி வளர்ந்தது. தமிழகத்திலும் சில ஆண்டுகளாகவே பிரபலமடைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, திருந்திய நெல் சாகுபடி குறித்து விரிவாக காணொளி தொகுப்பு ஒன்றை தமிழக வேளாண்மை துறை தயாரித்துள்ளது.

 அரை மணிநேரத்திற்கும் மேலாக ஒளிபரப்பப் தக்க வகையிலான இந்த காணொளி தொகுப்பை அப்போதைய முதலமைச்சரிடம் காண்பிப்பதற்காக சில நிமிடங்கள் கொண்ட தொகுப்பாக குறைத்து முதலமைச்சரிடம் காண்பித்துள்ளது. திருந்திய நெல் சாகுபடி தொடர்பான அந்த காணொளியை பார்த்த முதலமைச்சர் தான் பிறந்த தஞ்சை தரணிக்கு இது உபயோகமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

ரொம்பவும் மகிழ்ந்து போன அவரிடம் முழு படத்தையும் காண்பித்து இருக்கிறார்கள். முடிவில், “இந்த முறையில் நெல் சாகுபடி செய்தால் மகசூல் அதிகரிக்கும். இதனால் செழுமை ஏற்படும். அதனால் செழுமை நெல் சாகுபடி என்று பெயர் வைங்கய்யா,” என்று சொல்லி இருக்கிறார். System of Rice Intensification என்பதற்கு திருந்திய நெல் சாகுபடி என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

அப்படி தான் வேளாண் பல்கலைக்கழகம் பெயர் வைத்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சரோ அதனால என்னய்யா? கடைசியில விவசாயிகளுக்கு செழிப்பு தானே வரும் செழுமை நெல் சாகுபடினு பெயர் வைய்ங்கய்யா. தமிழ்ல அது தான் சரியா வரும் என்று சொல்லியிருக்கிறார். சரி என்ன செய்வது சொல்லியது முதலமைச்சர் ஆயிற்றே! புதிய பெயர் சூட்டப்பட்டு விட்டது.

பொருத்தமாக இருக்கிறதோ இல்லையோ செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தமிழக வேளாண் துறையும் செழுமை நெல் சாகுபடி என்று புதிய நாமகரணம் சூட்டியது. வேளாண் பல்கலை முதல் உலக நெல் ஆராய்ச்சி நிலையம் வரை நெல் சாகுபடி தொழில்நுட்பத்திற்கு தமிழகத்தில் பயன்படுத்தும் பெயர் செழுமை நெல் சாகுபடி என்று தெரிவிக்கப்பட்டது.

 சில மாதங்கள் உருண்டோடின. தமிழகத்தில் செழுமை நெல் சாகுபடி தொழல் நுட்பத்தில் எவ்வளவு நிலம் பயிரிடப்படுகிறது. என்பது போன்ற விவரங்கள் முதலமைச்சரிடம் தரப்பட்டன. அதனை பார்த்துக் கொண்டிருந்த முதலமைச்சர் திடீர் யோசனையில் ஆழ்ந்தார். அப்போது ராஜ ராஜ சோழனின் சதய விழா நடைபெற்ற காலம். ஏன்ய்யா பேசாம செழுமை நெல் சாகுபடிங்கிறதுக்கு பதிலா ராஜாராஜன் 1000ம் னு என் பெயர் வைக்க கூடாது என்று கேட்டிருக்கிறார்.

நெல் என்றால் தஞ்சை, தஞ்சை என்றால் ராஜ ராஜ சோழன், அதனால் ராஜ ராஜன் பெயர் வைத்து விடலாம் என்று கூறியிருக்கிறார். அதிகாரிகளோ அதிர்ந்து போய் விட்டார்கள். ஐயா இது வெறும் தொழில்நுட்பம் தான். இதனை தமிழில் எப்படி அழைக்க வேண்டும் என்பது தான் பிரச்னை. இது புது ரக நெல் கிடையாது. கோ 40, அம்பை 16 என்று நெல் ரகங்களுக்கு பெயர் வைப்பது போன்று இதற்கு பெயர் வைக்க முடியாது என்று தெரிவித்து இருக்கின்றனர்.

அதனால என்னய்ய தமிழகத்தில நாம தானய்யா முடிவு செய்யணும். பேசமா ராஜ ராஜன் 1000ம்னு பெயர் வையுங்க என்று முடிவாக கூறி விட்டார் முதலமைச்சர். வேறு என்ன செய்வது சொல்லியது முதலமைச்சராயிற்றே. ராஜ ராஜன் 1000ம் என்று பெயர் சூட்டப்பட்டது. திருந்திய நெல் சாகுபடி, செழுமை நெல் சாகுபடியாகி, ராஜ ராஜன் 1000 ஆக பெயர் மாறியது. பிறகு ஆட்சி மாறியது. கட்டடங்கள் முதல் திட்டங்கள் வரை அனைத்திற்கும் பெயர் மாற்றம் நடந்தது.

அதுபோலவே ராஜ ராஜன் 1000ம் என்ற பெயரும் மாற்றப்பட்டது. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்தது போல மீண்டும் திருந்திய நெல் சாகுபடி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வேளாண் துறை அதிகாரிகளும், வேளாண் பல்கலைகழகமும், விவசாயிகளும் என்ன செய்வது? மீண்டும் திருந்திய நெல் சாகுபடியானது System of Rice Intensification.

ஜாலியாக ஆரம்பித்த வெங்கட் பிரபு-சூர்யா படம்!

தம்பியை வைத்து பிரியாணி ஹிட் கொடுத்தவர் தற்போது அண்ணனை வைத்து ஹிட் கொடுக்க ரெடியாகி விட்டார். கடந்த தமிழ் புத்தாண்டு அன்று வெங்கட் பிரபு இயக்க போகும் சூர்யா படத்திற்கு பூஜை போடப்பட்டது.

முதன் முதலாக இப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் கவிஞர் மதன் கார்க்கியும் இணைந்து வசனம் எழுத உள்ளார். இதை அவர் டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் ‘சூர்யா படத்தின் வேலைகள் ஆரம்பித்து விட்டது, வெங்கட் பிரபுவுடன் பணியாற்றுவது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது’ என டுவிட் செய்துள்ளார்.

மூக்குத்தி அணிவது ஏன்..?!


மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள்.

இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனைஎல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதேமாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.

நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.இதனைச் செயல்படுத்துவதற ்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படிஇந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகசெயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்யவைக்கிறோம். அதனால்வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வுபோல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ளமூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ளவெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

ஒரே கதை கருவில் முண்டாசு பட்டி மற்றும் அப்புச்சி கிராமம்!

இன்றைய தமிழ் சினிமாவில் புது புது முயற்சிகளை கையாள தொடங்கி விட்டார் .அதற்கெல்லாம் விதை போட்டவர் தயாரிப்பாளர் சி.வி குமார் இவருடைய தயாரிப்பில் ஜூன் 13 தேதி வெளிவரவிருக்கும் படம் முண்டாசு பட்டி. இப் படத்தில் விஷ்ணு, நந்திதா, காளி நடிக்க புதுமுக இயக்குனர் ராம்குமார் இயக்குகிறார்.அதே சமயம் செந்தில்குமார் தயாரிக்க. புதுமுகங்கள் நடிக்கும் அப்புச்சி கிராமமும் வரும் 13 தேதி வெளியாகிறது.

இதில் இரண்டு படங்களுக்கு ஒரு ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படங்களுமே எரிகல் சம்பந்த பட்ட கதை அதுமட்டும் இல்லாமல் கிராமத்தை கதை களமாக கொண்ட காமெடி படங்கள்.

அப்புச்சி கிராமம் பொறுத்து வரை மூட நம்பிக்கைகள் நிறைந்த கிராமத்தில் ஒரு பெரிய எரிகல் விழிந்து 20 நாட்களில் உலகம் அழியப்போகிறது என்ற தகவல் அந்த கிராமத்துக்கு கிடைக்கிறது. அந்த 20 நாளும் அந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்பது கதை. சொல்லி வைத்தமாதிரி எரிகல் அந்த கிராமத்தில் விழுகிறது, உலகமும் அழியவில்லை. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்

முண்டாசுபட்டியில் 1947ம் ஆண்டு ஒரு எரிகல் அந்த கிராமத்தில் விழுகிறது. அதை பார்த்து பயந்த மக்கள் அதிலிருந்த பல மூட நம்பிக்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். அதில் ஒன்று போட்டோ பிடித்தால் இறந்து விடுவோம் என்பது. ஒரு போட்டோ எடுக்க ஹீரோவும், அவரது நண்பர்களும் அந்த கிராமத்துக்கு செல்லும் அனுபவங்களை காமெடியாக சொல்வது முண்டாசுபட்டியின் கதை.

 இது ஒருபுறம் இருக்க மூடநம்பிக்கைகளை போன்ற விஷயங்களை மைய படுத்தி காமெடியாக சொல்லிருக்கும் படமாம்

முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இதை பற்றி கூறியபோது "அப்புச்சி கிராமத்தில் எரிகல் பற்றித்தான் மொத்த படமே என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முண்டாசுப்பட்டியில் எரிகல் படத்தின் ஆரம்பத்தில் வரும் சின்ன பிளாஷ் பேக்தான். மற்றபடி மூடநம்பிக்கை, காமெடி என்ற ஒற்றுமைகள் யதேச்சையாக அமைந்தது" என்கிறார்.

7-ம் அறிவு படம் பாத்திருந்தா இது உங்களுக்கு புரியும்...?

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த செயல்களும் பழக்க வழக்கங்களும் மிகவும் ஆராய்ந்து அறிவுபூர்வமாக ஏற்படுத்தப்பட்டவையே.நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட மெய்ஞ்ஞானம் தான் இன்றைய விஞ்ஞானம்  அப்படி நிரூபிக்க நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட பல நல் வழக்கங்களில் ஒன்றை மட்டும் உதாரணமாக இங்கே எடுத்துக்கொண்டு அலசுகிறேன். இதே போல் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அனைத்து செயல்களிலும் பழக்கவழக்கங்களிலும் விஞ்ஞானம் கலந்தே இருக்கிறது என்பதை இந்த ஒரு உதாரணத்தினால் விளக்க முற்பட்டிருக்கிறேன்.

மெய்ஞ்ஞானம்தான் விஞ்ஞானம், விஞ்ஞானம்தான் மெய்ஞ்ஞானம் என்பதைக் கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று ஒரு சொல் வழக்கு இருக்கிறது, அதைக் கண்ணேறு படுதல் என்று நம் முன்னோர்கள் கூறுவர். அந்த திருஷ்டி கழிய, சுற்றிப் போடுதல் அல்லது திருஷ்டி கழித்தல் என்று ஒரு வழக்கத்தை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர் அதை ஆராய்ந்தால் கொஞ்சம் கல் உப்பு எடுத்து அதோடு மிளகாய் வற்றலையும் கையில் வைத்துக்கொண்டு நம்மை நிற்க வைத்து அந்த உப்பை வைத்து நம்மைச் சுற்றிவிட்டு அந்த உப்பையும் காய்ந்த மிளகாயையும் எரிகின்ற நெருப்பில் இடுவார்கள்.

அந்த உப்பு நெருப்பில் பட்டவுடன் வெடிக்கும்; காய்ந்த மிளகாய் கருகி மிளகாய் நெடி மூக்கைத் தாக்கும். இந்த நிகழ்வில் உப்பும் காய்ந்த மிளகாயும் பஞ்ச பூதங்களாகிய நெருப்பில் இணைந்து ஒரு விதமான ரசாயனக் கலவை ஏற்பட்டு அந்த வேதிய மாற்றம், நமக்கு இருக்கும் வியாதிகளைப் போக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை மட்டுமல்ல; விஞ்ஞானப் பிரகாரம் உப்பும் காய்ந்த மிளகாயும் நெருப்பும் சேர்ந்த கலவையான மணம், நம் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

கொஞ்சம் சுண்ணாம்பு, மஞ்சள் இரண்டையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் கலக்கும்போது மஞ்சளும் சுண்ணாம்பும் சேர்ந்து ஒரு சிவப்பு நிறத்தை அந்தத் தண்ணீருக்கு அளிக்கும்; அந்தச் சிவப்புத் தண்ணீர் கலப்பதால் ஏற்படும் வேதிய மாற்ற விளைவுகளால் நம் நோய்கள் தீரும் என்றும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றனர்.அதேபோல இந்த இரண்டு செயல்களிலும் ஏற்படும் வேதிய மாற்றத்தால் விளையும் மணம், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய காற்றில் கலந்து, நம் நாசியில் புகுந்து நமக்குக் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.அதே போல கிராமங்களில் வீட்டு வாயிலில் மார்கழி மாதங்களில், அல்லது அனைத்து மாதங்களிலுமே சாணம் தெளித்து வைப்பர்.

பசுமாட்டின் சாணம் ஒரு உயர்தரமான கிருமி நாசினி, இந்தக் கிருமி நாசினி, பசுமாட்டின் சாணத்தைப் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமியின் மேல் தெளிப்பதால் ஏற்படும் வேதிய மாற்றங்களினால் ஏற்படும் வெளிப்பாடாகிய ஒரு விதமான மணம் கிருமிகளிடமிருந்து ஒரு கவசம் போல் நம்மைக் காக்கிறது.

அதே போல பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயத்தில் காற்றின் மூலமாகக் கலந்து ஏற்படும் வேதிய மாற்றங்கள் நம்மை பாதிக்கின்றன, அல்லது காக்கின்றன என்பது எவ்வளவு உண்மை!ஆகாயத்தில் இருக்கும் மேகங்களிலிருந்து பெய்யும் மழை, நமக்கு மிகவும் சுத்தமான குடிநீரையும் அளிக்கிறது; பயிர் செழித்து வளரத் தேவையான இயற்கைச் சத்துகளைப் பூமியிலிருந்து காற்றின் மூலமாகவும், சூரிய வெப்பத்தால் தண்ணீர் நீராவியாக மாறும்போது, அந்த நீர் ஆவியாகி அந்த ஆவியோடு பூமியிலுள்ள இயற்கையான பல சத்துகள் தாமாகவே கலந்து அந்தச் சத்துகளும் நீராவியோடு ஆகாயத்தில் சென்று மேகமாக உருக்கொண்டு, மீண்டும் அங்கே ஏற்படும் குளிர்ச்சியான சூழலால் மழையாக மாறும் வேதியியல் விந்தையால் நீராக, சுத்தமான நீராக மாறி மழையாகப் பொழிகிறது.

ஆகவே பஞ்ச பூதங்கள் என்று மெய்ஞ்ஞானிகளாலும் ஐந்து வகை சக்திகள் என்று விஞ்ஞானத்தாலும் ஒப்புக்கொள்ளப்படும் இந்தப் பஞ்ச பூதங்களிலிருந்து உருவாகும் ஜீவராசிகளுக்கு இந்தப் பஞ்ச பூதங்களின் சக்திகள், எப்போதும் உதவுகின்றன என்பதை ஏற்கெனவே அறிந்து வைத்திருந்த நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே மக்களுக்கு விஞ்ஞானம் என்று சொன்னால் புரியாது என்றுணர்ந்து விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவர்கள் பாமரர்களா அல்லது விஞ்ஞானம் வளர்ந்த இந்த நிலையிலும் இவை எல்லாவற்றையும் அதாவது நம் மெய்ஞ்ஞானமே விஞ்ஞானம் என்றுணராமல் இருக்கும் நாம் பாமரர்களா என்று எண்ணி வியப்படைகிறேன்.

ஆகவே இன்றைய முன்னேற்றமான விஞ்ஞானத்தின் அடிப்படை, அன்றைய மெய்ஞ்ஞானமே என்பது அசைக்க முடியாத உண்மை. மெய்ஞ்ஞானம் எதைக் கடவுள் என்று சொல்லுகிறதோ அந்தக் கடவுளை விஞ்ஞானம் இயற்கை என்று சொல்லுகிறது.இயற்கையோடு இணைந்து வாழ்வோம், அதே நேரத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அனைத்து நல் வழக்கங்களையும் பழமை என்று ஒதுக்காமல் அவர்கள் கூறிய மெய்ஞ்ஞானத்தில் அந்தக் காலத்திலேயே எப்படி அவர்கள் அவற்றை முறையாக ஆராய்ந்து, விஞ்ஞானத்தை உட்பொருத்தி வைத்திருந்தனர் என்பதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து அவற்றில் உள்ள நன்மைகளை அடைவோம்.

ஆகவே கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த நல் வழக்கங்களையும் இயற்கையையும் நம்பி வாழக் கற்றுக்கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.

முதுமையின் வலிகள்...


முதுமை பருவம் குழந்தை பருவத்துக்கு சமம் என்பார்கள். உடல், மன வேதனைகளை குழந்தைகளுக்கு எப்படி சொல்ல தெரியாதோ அதே மாதிரி  தான் முதியவர்களுக்கும். 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள். அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர்  என்கிறது உலக சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக, ஆக அவர்களின் உடல் நலப்பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும்.

65 வயசுக்குப்பிறகு ஆண்களும், பெண்களும் அதிக வலிகளால அவதிப்படறாங்க. அவங்களோட வலிகள், மத்தவங்களோடவலிகள் லேர்ந்து முற்றிலும்  மாறுபட்டது. அதுக்கான அணுகுமுறை, சிகிச்சைனு எல்லாமே வேறு என்கிற வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார் வயோகத்தால வரக்கூடிய வலி  திசுக்களோட தேய்மானம், பலவீனத்தால வரக்கூடியது.

ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு மூட்டுப்பிரச்சனைனு, வேற நோய்களோட விளைவால் வரக்கூடியது, தனிமை, வாழ்க்கையைப்பத்தின பயம்,  வருமானம், இல்லாததுனு வேற காரணங்களால உணரப்படற வலி புற்றுநோயால வரக்கூடிய வலி... இதெல்லாம் வயசானவங்களோட வலிக்கான  காரணங்கள். 65 வயசுக்குப் பிறகு புற்றுநோய் தாக்கற ஆபத்து அவங்களுக்கு அதிகம்.

இவங்களுக்கு சிகிச்சை கொடுக்கிறது அத்தனை சுலபம் இல்லை.. சிகிச்சைக்கு ஓத்துழைக்க மாட்டாங்க. காது கேட்காதது, கவனமின்மை, மறதி,  மனரீதியான பிரச்சனைகள்னு பல காரணங்களால சிகிச்சைகளை பத்திப் புரிஞ்சிக்கிற சக்தி அவங்களுக்கு இருக்காது. உடற்பயிற்சி, பிசியோதெரபி  மாதிரியான விஷயங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டாங்க. ரொம்ப பொறுமையோடத்தான் அவங்களை அணுகணும் என்கிற டாக்டர் குமார், மூட்டு வலி,  தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, காலட எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் காணப்படுகிற வலிகள் என்கிறார்..

ஏற்கனவே அவங்களுக்கு ஏதாவது நோய் இருந்தா, வலிகளுக்கான மருந்துகளை கொடுக்கிறப்ப, அதிக பட்ச கவனம் தேவை.. எல்லா மருந்துகளும்  அவங்களுக்கு ஒத்துக்காது. நோயோட தன்மை, அவங்களோட உடல் மற்றும் மனநிலையை தெரிஞ்சிக்கிட்டு தான் மருந்துகள் தரணும். 60 வயசுக்கு  மேலானவங்க எக்காரணம் கொண்டும், எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாதுங்கிற வலிகளுக்கு கவுன்சிலிங்கும், உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி  செய்யறது மூலமா வலியோட தீவிரம் அதிகமாகிறதைத் தவிர்க்கலாம்.  சிலவலிகளுக்கு அறுவைசிகிச்சை தான் தீர்வா இருக்கும். ஆனா வயோதிகம்  காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்துகளும் தர முடியாதுங்கிற நிலைமையில உள்ளவங்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை  அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுக்கிறது பலன் தரும் என்கிறார். 

கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி!

உண்மையில் இளையராஜா பிறந்தது ஜூன் 3-ம் தேதிதான். இதே தேதியில்தான் கருணாநிதியின் பிறந்த நாளும் வருகிறது. முன்பெல்லாம் இளையராஜா தன் பிறந்த நாளை பொதுவில் கொண்டாடாமல் இருந்தார்.

 அந்த நாளில் அவர் திருவண்ணாமலையிலோ அல்லது மூகாம்பிகைக் கோயிலிலோ இருப்பார். ஆனால் திரையுலகினரும் அவரது நண்பர்களும் அவர் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியபோது அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனையுடன். அப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரம். அவருக்கும் ஜூன் 3-ம் தேதிதான் பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட வேண்டாம் என்ற நோக்கில் தன் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாடிவிடலாம் என்ற யோசனை சொன்னார் இளையராஜா.

அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஒரு நாள் முன்பே தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இளையராஜா. கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த வழக்கத்தை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. கடந்த ஆண்டு பிறந்த நாளன்று இதுபற்றி இளையராஜா கூறியதை இங்கே தருகிறோம்: "உண்மையில் இன்று எனக்குப் பிறந்த நாள் கிடையாது.

 ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன். ஜூன் 3-ம் தேதிதான் எனக்குப் பிறந்த நாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது. அந்த தினத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத்தான் நான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். இந்த முறை உங்கள் அன்பு இங்கே இருக்கும்படி ஆகிவிட்டது!"


இன்னும் எத்தனைவாட்டிதான் பூஜாவுக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்பாங்களோ!

நடிகை பூஜாவுக்கு திருமணமாகிவிட்டது என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுபுதுப்புது விதமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு அழகு சாதனை கடைத் திறப்புக்கு வந்து நின்றார் பூஜா. கேட்டால், திருமணமா.. எனக்கா... நான் பாட்டுக்கு பெங்களூரில் என் பெற்றோர் விருப்பப்படி அவர்களுடன் இருந்தேன் என்றார்.

 அடுத்த ஒரு ஆண்டில், பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வந்த வாய்ப்பைக் கூடத் துறந்துவிட்டு, விடியும் முன் என்ற படத்தில் நடித்தார். நல்ல பலன். படம் ஹிட். பூஜாவுக்கு நல்ல பெயர். தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் நடிப்பைத் தொடர்வதாகக் கூறி வந்தார்.

 இந்த நேரத்தில்தான் திடீரென அவருக்குத் திருமணம் நடந்ததாக செய்திகள் பரவின கடந்த இரு தினங்களாக. அவருடன் யாரோ ஒரு இளைஞர் நிற்க, கைகளில் மாலையுடன் பூஜா. ஆனால் இதனை அடியோடு மறுத்துள்ளார் பூஜா. தான் நடிக்கும் ஒரு படத்தின் காட்சி இது என்றும், அந்த இளைஞர் தன் நண்பர் மட்டும்தான் என்றும் பூஜா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

 இப்படித்தான் சில தினங்களுக்கு முன் இன்னொரு நடிகை, இதே போல மாலையும் கையுமாக நிற்க, உடனே அவருக்கு திருமணம் என்று செய்தியைக் கிளப்பிவிட்டார்கள் சிலர். அப்புறம்தான் தெரிந்தது, அதுவும் ஒரு படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று!


மொத்தத்தில் கல்பனா ஹவுஸ் திகில் வீடு - திரைவிமர்சனம்!

படத்தின் நாயகனான வேணுவுக்கு போலீஸ் வேலை. அவரது மனைவியாக நாயகி மதுஷாலினி. நாயகன் தனது குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் சதா போலீஸ் வேலையே கதி என்று கிடக்கிறார். ஒரு நாள்  நாயகி எங்காவது பிக்னிக் செல்லலாம் என்று நாயகனிடம் கூறுகிறார். அப்போது புதிதாக வாங்கிய பண்ணை வீட்டுக்கு செல்லலாம் என முடிவெடுத்து அனைவரும் அங்கு செல்கின்றனர். அந்த பண்ணை வீட்டுக்கு அருகே ஒரு கல்லறை இருக்கிறது. அனைவரும் அந்த வீட்டில் தங்கியுள்ளபோது நாயகிக்கு மட்டும் பேய் நடமாடுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதற்கேற்றவாறு பொருட்கள் கீழே விழுவது போன்ற நிகழ்வுகள் நடப்பதும், நாயகியின் பின்னால் பேய் நடப்பது போல் உருவம் காணப்படுகிறது.

வீட்டுக்குள் ஆவி நடமாடுவதாக நாயகி தெரிவிக்க அதை அனைவரும் நம்ப மறுக்கின்றனர். இந்த நிலையில் வேலைக்கு வருமாறு நாயகனுக்கு அவரச அழைப்பு வருகிறது. இதனால் அந்த வீட்டை விட்டு நாயகன் வெளியே கிளம்புகிறார். நாயகன் வீட்டை விட்டு சென்றவுடன் தனது தோழியிடம் வீட்டில் ஆவி நடமாட்டம் இருப்பதாக நாயகி கூறுகிறார். உடனே தோழியின் உதவியுடன் நாயகி சாமியார் ஒருவரை அணுகுகிறார். அவர் வீட்டில் பரிகாரம் செய்து பேயை விரட்டலாம் என்கிறார்.

அதன்படி சாமியார் வீட்டில் பூஜை செய்து கொண்டிருக்கும் போதே வீட்டின் காவலாளி இறந்து விடுகிறார். உடனே சாமியார் வீட்டில் ஆவி நடமாட்டம் இருப்பது உண்மை தான் என்று கூறுவதுடன் வரும் அமாவாசை அன்று பூஜை செய்து பேயை விரட்டிவிடுகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.

இந்த நிலையில் வேலை நிமித்தமாக வெளியே சென்ற நாயகன் மீண்டும் பண்ணை வீட்டுக்கு திரும்புகிறார். அவர் வீட்டில் என்ன நடந்தது என கேட்கிறார். நாயகி நடந்த சம்பவம் அனைத்தையும் கூறுகிறார். இதை கேட்ட நாயகன் உடனே அங்கிருந்து கிளம்பி விடலாம் என்று கூறுகிறார். அப்போது நாயகியின் உடலுக்குள் புகுந்துவிடும் ஆவி நாயகனை நோக்கி உன்னை விடமாட்டேன் என்கிறது.

ஆவி நாயகனை பழிவாங்கியதா? அந்த ஆவி யார்? எதற்காக அது நாயகனை பழி வாங்க நினைக்கிறது என்பதே மீதிக்கதை. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் வேணு போலீஸ் வேடத்தில் மிடுக்காக வந்து கலக்குகிறார். ஆனால் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு. நாயகி மது ஷாலினி அழகாகவும், பேயை கண்டு மிரளும் காட்சியில் பயந்தவராகவும் அருமையாக நடித்திருக்கிறார். படத்திலுள்ள மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.

படத்தின் பின்னணி இசை அசத்தலாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் பேயை பற்றிய படம் என்பதால் பெரும்பாலான காட்சிகளை இருட்டிலேயே எடுத்துள்ளார். திகில் காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பேயை காண்பிக்காமலேயே வெவ்வேறு காட்சிகளின் மூலம் பேய் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் தேவையில்லாத ஒரு சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சியும் மிக நீளமாக அமைந்து ரசிகர்களை நெளிய வைக்கிறது. படத்தில் பண்ணை வீடும், கல்லறை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பற்றுள்ள போது திடீரென்று பாழடைந்த வீடு எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து - இயக்குனரின் பரபரப்பு புகார்

சரவணன் என்கிற சூர்யா படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ ராஜ சுப்பையா.பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் ஆதரவு வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார்.அதனை நாம் வெளியிட்டிருந்தோ. தற்போது சூர்யா குடும்பத்தாரால் எனது உயிருக்கு ஆபத்து என்று பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:

சரவணன் என்கிற சூர்யா, என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து, இயக்கி, நானே கதாநாயகனாகவும் நடித்துள்ளேன். இந்த படத்தின் தலைப்பை முறையாகவும் பதிவு செய்துள்ளேன். இந்த சூழ்நிலையில் படத்தின் தலைப்பை மாற்றச்சொல்லி, நடிகர் சூர்யா தரப்பில் இருந்து எனக்கு வற்புறுத்தல் வந்தது.

நான் படத்தின் தலைப்பை மாற்ற மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அடியாட்கள் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. படத்தையும் வெளியிட விடாமல் தடுத்துவிட்டனர். நடிகர் சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு முருகராஜா புகார் தெரிவித்துள்ளார்.

இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்..!


தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.

சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை கிலோ பாக்கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்.

தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவு தரமான உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே. இம்மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை தொழில் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழிலை முறைப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான முறையில் தரமான மாவு பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும்.

மதுரை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில் ‘இட்லி, தோசை மாவு தரமான அரிசி, உளுந்து கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்கப்படும் போது யாருக்கும், எவ்வித பாதிப்பும் கிடையாது. மாவு தயாரிக்க நல்ல தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுவது அவசியம்.

மாவு தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்கள் வரை தான் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியும். அதற்கு மேல் கெட்டுப் போய் விடும். இம்மாதிரியான சூழலில் மாவு தயாரிக்கும் அனைவரும் தரமான அரிசி, உளுந்துகளை பயன்படுத்துகிறார்கள் என சொல்ல முடியாது. கடைகளில் மக்கி போன, பூஞ்சை படர்ந்த அரிசி, உளுந்து போன்றவை மாவு தயாரிப்பவர்களுக்காக மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.35 என்றால் காலாவதியான அரிசி கிலோ ரூ.5 முதல் ரூ.10க்கு கிடைக்கிறது. அதே போல் உளுந்து கிலோ ரூ.70 என்றால் இந்த உளுந்து அதிகபட்சம் கிலோ ரூ.20 தான். தற்போது கிடைக்கும் விலையில்லா அரிசியைக் கொண்டு குறைவான செலவில் அதிக லாபம் ஈட்டலாம். மாவு வெண்மையாக, பஞ்சு போல் இருப்பதற்காக சிறிதளவு சுண்ணாம்பு, பிளீச்சிங் லிக்குவிட் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அரைத்தவுடன் புளிப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.

மாவு தயாரிக்கும் அனைவரும் இம்மாதிரியான முறைகளையே பின்பற்றுகின்றனர் என்று சொல்ல இயலாது. பெரும்பாலானவர்கள் குறிப்பாக வீடுகளில் மாவு தயாரிப்பவர்கள் சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது கடினம்.  மினரல் வாட்டரை மாவு தயாரிக்கும் அனைவருமே பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறியே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும் போது  உடனடியாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.

சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இருந்தால் நீரில் பரவும் நோய்களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனையே தொடர்ந்து பயன்படுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல்(புட் பாய்சன்) ஏற்படும். செறிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும். பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவிர்ப்பதன் மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும்‘ என்றார்.

மாவு விற்பனை மூலம் அதிக லாபம்

வீடுகளில் மாவு விற்பனை செய்யும் சாந்தி கூறியதாவது: ‘ஒரு படி ரேஷன் அரிசிக்கு, கால் கிலோ ரேஷன் உளுந்து பயன்படுத்துவோம். ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடுவோம். ரேஷன் அரிசி இலவசமாக கிடைக்கிறது. ரேஷன் உளுந்து ஒரு கிலோ ரூ.30 தான். அப்போது கால் கிலோ உளுந்து ரூ.7.50. இதனை அரைக்க ஒரு யூனிட் கரன்ட் தான் செலவாகும். ஆக மொத்தம் ஒரு படி மாவு அரைக்க தயாரிப்பு செலவு ரூ.10 தான். மாவு பஞ்சு போல் சாப்ட்டாக வருவதற்கு கொஞ்சம் ஆப்ப சோடா சேர்த்துக்கலாம். ரேசன் பச்சரிசி பாதி, ரேஷன் புழுங்கல் அரிசி பாதி சேர்த்தால் மாவு வெள்ளையா தான் இருக்கும். நல்லா கழுவிட்டா வாடையே இருக்காது. இந்த மாவை ஒரு கப் ரூ.20க்கு 5 பேருக்கு விற்கலாம். ஒரு நாளைக்கு எப்படியும் 5 படி அரைச்சு விற்போம். இதனால் குறைந்தது ரூ.400 லாபமாக கிடைக்கும்‘ என்றார்.

புகார் வந்தால் நடவடிக்கை உறுதி

மதுரை மாவட்ட உணவு மற்றும் மருந்தியல் பாதுகாப்பு நிர்வாக அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது: ‘மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உணவு பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8 ஆயிரம் பேர் இட்லி, தோசை மாவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் பாக்கெட் செய்து இட்லி தோசை மாவு விற்பனை செய்பவர்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் தயாரிப்பு இடம், தயாரிப்பு முறை, பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தையும் ஆய்வு செய்து உரிமம் வழங்கியிருக்கிறோம். வீடுகளில் மாவு தயாரிப்பவர்களையும் எங்களிடம் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் முன்வருவது இல்லை. மேலும், சுகாதாரமான முறையில் எவ்வாறு மாவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  புகார் பெறப்பட்டால் மாவு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, கலப்படம், சுகாதாரமின்மை கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

3 வருடம் சிறை தண்டனை உண்டு

நுகர்வோர் கண்காணிப்பகத்தின் தலைவர் வக்கீல் பிறவிப்பெருமாள் கூறுகையில், கலப்பட தடைச் சட்டம் மற்றும் உணவுப்பொருள் தர நிர்ணயம் சட்டப்படி புகாருக்குள்ளான உணவுப்பொருளின் மாதிரி எடுக்க வேண்டும். 14 நாட்களுக்கு பகுப்பாய்வு செய்து அதன் முடிவை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கொடுக்க வேண்டும். ஆய்வு முடிவின் அடிப்படையில் இருவிதமான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் வழக்கு நடைபெறும். இதில் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். அடுத்த நிலையில் டிஆர்ஓ கோர்ட் மூலம் வழக்கு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலப்பட தடுப்பு பிரிவிற்கு என தனியாக நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

நான் டப்பிங் கொடுப்பதை நாகேஷ் ரசித்துப் பார்ப்பார்: ‘நாகேஷ்’ கிருஷ்ணமூர்த்தி

 இந்தியாவின் முதல் சலனப் பதிவாக்க தொழில்நுட்பத்தில் (மோஷன் கேப்சர்) உருவாக்கப்பட்டுள்ள ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் சம்புமித்ரர் கதாபாத்திரத்தில் நடிகர் நாகேஷை வடிவமைத் திருக்கிறார்கள். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த கதாபாத்திரத்துக்கு நாகேஷின் 30 ஆண்டுகால நண்பர் கிருஷ்ணமூர்த்தி தன் குரலால் உயிரூட்டியிருக்கிறார். தங்களது ‘நட்புக்காலம்’ பற்றி உற்சாகமாக பேசுகிறார், ‘நாகேஷ்’ கிருஷ்ணமூர்த்தி.

நான் இன்ஜின்ல ஏறிட்டேன்

நாகேஷ் நடித்த ‘மின்னலே’, ‘ரிதம்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘காதல் கொண்டேன்’, ‘தசாவதாரம்’ படங்களில் நான்தான் அவருக்கு டப்பிங் கொடுத்திருப் பேன். பெரும்பாலும் என்கூடவே இருந்து நான் டப்பிங் கொடுப்பதை ரசித்து பார்த்துக்கொண்டிருப்பார். அவர் நடித்த தெலுங்கு படங்களின் தமிழ் டப்பிங் முழுக்க நான்தான். நாங்கள் இருவரும் நெருக்கமானது மேடை நாடங்களில்தான். என் அம்மா கையால் சாப்பிடுவதை நாகேஷ் ரொம்பவே விரும்புவார். ‘என் நண்பன் கிருஷ்ணமூர்த்தியின் திறமையை பாராட்டுவது நானே என் முதுகை தட்டிக்கொள்வதுபோல’ என்று என் அம்மாவிடம் அடிக்கடி சொல்வார் நாகேஷ். நாடகம், சினிமா என்று நாகேஷ் பிஸியாகத் தொடங்கியபோது “ரயிலில் ஏறும்போது நான் இன்ஜின்ல ஏறிட்டேன். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட என் நண்பர்கள் எல்லாம் 4 பெட்டி பின்னாடி ஏறிட்டாங்க’’ என்று நண்பர்கள் கூடி அரட்டை அடிக்கும்போது சொல்லி சிரிப்பார். எதார்த்தம், அன்பு இதெல்லாம் நாகேஷிடம் கொட்டிக்கிடக்கும்.

நாகேஷிடம் சண்டை பிடிப்பேன்

நான் சுங்கதுறையில் பணியாற்றியவன். சினிமாவை நம்பி வேலையை விட மனமில்லாமலேயே முழுக்க சினிமாவுக்குள் குதிக்காமல் இருந்து விட்டேன். நானும் நாகேஷும் மௌலியோட நாடகங்களில்தான் அதிகம் சந்திக்கும் சூழல் உண்டாகும். அப்படி யான சூழலில் தான் எங்கள் முதல் சந்திப் பும் நடந்தது. படத்தில் ஒப்பந்தமாகும்போதே அந்த படக்கம்பெனிக்கு போன் செய்து என்னை வைத்து டப்பிங்கை முடித்துவிட சொல்லிவிடுவார், நாகேஷ்.

‘காதல்கொண்டேன்’ படத்துக் காக டப்பிங் கூப்பிட்டபோது, ‘போப்பா நடிக்குறதுக்கு லட்ச லட்சமா பணம் கொடுக்குறாங்க. டப்பிங் பேசும் எனக்கு என்ன பெரிதாக பணம் கொடுக்குறாங்க’ என்று நாகேஷிடம் சண்டை போட்டேன். அதைக்கூட நாகேஷ் ரசிக்கத்தான் செய்தார். ‘மின்னலே’ படம் எடுத்தபோது புகைப்பழக்கத்தால் தொடர்ச்சியாக இருமல் தொந்தரவுக்கு ஆளாகி ‘என்னால ஒரு இடத்தில் கூட டப்பிங் கொடுக்க முடியாது. கிருஷ்ணமூர்த்தி எங்க இருக்கான்னு புடிங்க’ என்று அக்கறை

யோட சொன்ன அவரும், நானும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகால நண்பர்கள். ரெண்டு பேருமே ‘போடா, வாடா’ என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நண்பர்கள். இயற்கையே எங்க ரெண்டு பேரோட குரலையும் ஒரே மாதிரி அமைத்துக் கொடுத்து நண்பர்களாகவும் ஆக்கியது நான் செய்த பாக்கியம்.

‘பிரமாதம்டா’ கிருஷ்ணா

‘தசாவதாரம்’ படத்தில் நாகேஷ் நடித்தபோது அவரது உடல் அவ்வளவாக ஒத்துழைக்கவில்லை. அந்தப் படத்துக்காக டப்பிங் கொடுத்த அனுபவம் ரொம்பவே சுவாரஸ்யம்.

நாகேஷ் படத்தைப் பார்த்துவிட்டு ‘பிரமாதம்டா கிருஷ்ணா’ என்று பாராட்டி னார். இன்று என்னைப் பாராட்ட அவர் இல்லாமல் போனது பெரும் சோகம்.

மேடை நாடகங்களில் நடித்து வந்த நான் ‘பாபு’ படத்தில்தான் முதன் முதலாக சினிமாவுக்கு வந்தேன். கமல் நடித்த ‘மீண்டும் கோகிலா’ படத்தில் ஸ்ரீதேவிக்கு அண்ணனாக நடித்திருப்பேன். அந்த நேரத்தில் இருந்தே கமல் என் நண்பர்.

ரஜினியின் பாராட்டு

‘கோச்சடையான்’ படத்திற்கு டப்பிங் கொடுத்தது ரொம்பவே திரில்லான அனுபவம். காட்சி பின்னணி இல்லாமல். இந்த இடத்துக்கு நாகேஷ் இப்படித்தான் வெளிப்படுத்தி இருப்பார் என்று ஒவ்வொரு தடவையும் பேசிப் பேசி கே.எஸ்.ரவிக்குமாரிடம் காட்டுவேன். இந்த படத்துக்கு டப்பிங் கொடுப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஒவ்வொன்றையும் வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டுபோய் சௌந் தர்யா அவங்க அப்பா ரஜினியிடம் போட்டு காமிப்பாங்க. அவர் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்ததாக வந்து சௌந்தர்யாவும் ரவிக்குமாரும் சொல்லியிருக்காங்க.

கோச்சடையான் வசூலில் தோல்வியை சந்திக்குமா.?

 'கோச்சடையான்' படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு வசூலில் வெற்றி வாகை சூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட படம் 'கோச்சடையான்'. கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுத செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்தினை மீடியா ஒன் நிறுவனம் தயாரித்தது. ஈராஸ் நிறுவனம் வெளியிட்டது.

இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. முதல் 3 நாட்களில் 42 கோடி வசூல் செய்ததாக படத்தினை வெளியிட்ட ஈராஸ் நிறுவனம் தெரிவித்தது. 'கோச்சடையான்' படத்தின் இறுதிக் காட்சியில் அடுத்த பாகத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன. தற்போது படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்

"கிடைத்த நேரத்திலும், பட்ஜெட்டிலும் 'கோச்சடையான்' படத்தினை பண்ணினோம். இன்னும் நன்றாக பண்ணி இருக்கலாம். 'கோச்சடையான்' அடுத்த பாகத்தில் அதிக சிரத்தை எடுத்து பணியாற்றுவோம்.

மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் என்பது இந்திய ரசிகர்களுக்கு புதிது. தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் படத்தினை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இந்தி ரசிகர்கள் இந்த தொழில்நுட்பத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. வட இந்தியாவில் 'கோச்சடையான்' படத்திற்கு வரவேற்பு இல்லை என்பது உண்மை தான்.

தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திக்கு போட்ட முதலீட்டை எடுக்க எதிர்பார்த்த நாட்களை விட அதிகம் தேவைப்படுகிறது. ஆனால், நாங்கள் முதலீடு செய்த பணத்தினை எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்" என்று முரளி மனோகர் தெரிவித்து இருக்கிறார்.

தயாரிப்பாளரின் இந்த பேச்சால் 'கோச்சடையான்' படத்தின் வசூல் வெற்றியா, தோல்வியா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

''கத்தி'' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லையாம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும், ''கத்தி'' படத்தில் தற்போது இரண்டு வேடங்களில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். ஒரு வேடம் என்றாலே அவரை பரபரப்பு தொற்றிக்கொள்ளும், ஆனால் இந்த படத்தில் ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே என்பதால் ஏகப்பட்ட பிசியில் விஜய் வட்டாரம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், அடுத்தபடியாக சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் பட வேலைகளும் இன்னொரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என்றெல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார் சிம்புதேவன். ஆனால், அவர்கள் கேட்ட சம்பளம் தலைசுற்ற வைத்து விட்டது. அதனால், இப்போது ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோரிடம் பேசியிருக்கிறார்கள்.

அதேப்போல், முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்கும் முடிவில்தான் இருந்தார்கள். ஆனால், வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்துக்கு பல மாதங்களாக பாடல்களை கொடுக்காமல் அவர் இழுத்தடிப்பதைப்பார்த்தவர்கள, இப்போது தேவிஸ்ரீ பிரசாத்தை ஒப்பந்தம் செய்து விட்டனர்.

தமிழில், சிங்கம், சிங்கம்-2, மன்மதன் அம்பு உள்பட பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த அவர், விஜய் நடித்த சச்சின் படத்துக்கும் இசையமைத்திருந்தார். ஆக, இப்போது இரண்டாவதாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் தேவிஸ்ரீ பிரசாத்.

போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ?


நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம்.


இப்போதெல்லாம், இது போன்ற ஸ்கேம் மெயில்களை வடிகட்டி, ஸ்கேம் மெயில் போல்டருக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தை கூகுள் போன்ற மின் அஞ்சல் தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், சில அஞ்சல்கள், இவற்றின் பிடியில் சிக்காமல், நம்மை வீழ்த்தப் பார்க்கின்றன. அப்படிப்பட்ட ஓர் அஞ்சலைப் பெற்றால், சந்தேகம் ஏற்பட்டால், என்ன செய்வது?


இந்த வகையில் நமக்கு உதவ ஓர் இணைய தளம் இயங்குகிறது. வந்திருக்கும் அஞ்சலில் உள்ள சில சொற்களை, இந்த தளத்திற்கு அனுப்பினால், அது சோதனை செய்யப்பட்டு, நமக்கு அது ஸ்கேம் வகை அஞ்சலா அல்லது வழக்கமான அஞ்சலா என்று தெரிவிக்கிறது. இந்த தளத்தின் இணைய முகவரி  jasonmorrison.net


இந்த தளமானது கூகுளின் தேடல் இஞ்சின் ஒன்றைப் பயன்படுத்துகிறது. இந்த தேடல் இஞ்சின், ஏற்கனவே ஸ்கேம் மற்றும் திருட்டு முயற்சிகளுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் தளங்கள் மற்றும் சில குழு தகவல் தளங்களின் உதவியுடன், வந்திருப்பது ஸ்கேம் மெயிலா எனக் கண்டறிகிறது. இந்த தளத்தை அடைந்தவுடன், தேடல் கட்டத்தின் கீழாக உள்ள LEARN MORE என்ற லிங்க்கில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பாருங்கள். இந்த தளம் ஏற்பட்டதன் நோக்கம் என்ன, என்ன வகையில் உங்களுக்கு உதவுகிறது என்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.


எனக்கு வந்த மெயில் ஒன்றில், ரொஸட்டா என்ற பெயரில் விலை உயர்ந்த மரகதக் கல் ஒன்று குறைந்த விலைக்குக் கிடைப்பதாக தகவல் இருந்தது. அப்படியே அதன் முக்கிய சொற்களைக் காப்பி செய்து, இந்த தளத்தில் போட்டு கிளிக் செய்த போது, சில விநாடிகளில் தகவகள் கிடைத்தன. இது போன்ற ஸ்கேம் மெயில்கள் எங்கெல்லாம் அனுப்பப் பட்டுள்ளன என்ற தகவலும் கிடைத்தது. இனி, எந்த சந்தேகம் தரும் மெயில் வந்தாலும், அதனை இந்த தளத்தின் உதவியுடன் சோதனை செய்து, அதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளுங்கள்.

‘உத்தம வில்லன்’ படத்தில் 21 முடிந்தது.. இனி 8 தான் பாக்கி!!

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் ‘உத்தமன்’ என்ற 8ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா கலைஞனாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல்.

தற்போது 21ஆம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இனிமேல் தான் 8ஆம் நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைக்கப்போகும் இயக்குனர் ரமேஷ் அரவிந்த், நட்புக்காக ஒரு முக்கியமான ஹெஸ்ட் ரோலில் நடித்தாலும் நடிப்பேன் என்று கூறியுள்ளாராம்.

ஜெயராம், நாசர், பூஜாகுமார், ஆண்ட்ரியா, பார்வதி மேன்ன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

நம்முடைய நான்கு மனைவிகள்! குட்டிக்கதைகள்!

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தன...க்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டாள்.

ஒருநாள்...

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.

அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.

நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.

ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
 4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

அஞ்சான் சுதந்திர தினத்தில் ரிலீஸ்..!

லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வரும் படம் அஞ்சான். இதில் சூர்யா சாப்ட்வேர் என்ஜினீயராகவும், மும்பை தாதாவாகவும் நடிக்கிறார். மும்பையில் முதல் ஷெட்யூலும், புனேயில் இரண்டாவது ஷெட்யூலுமாக படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் கோவாவில் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் படம் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திரதினத்தன்று வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.

இதுகுறித்து லிங்குசாமி கூறியிருப்பதாவது: பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. சுதந்திரத்தன்று வெளியிடுவதற்கு ஏற்ற மாதிரி பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு பாடல் காட்சியும் ஒரு சில வசன காட்களும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. வருகிற 8ந் தேதி முதல் கோவாவில் பாடல் படமாகிறது என்றார்.

படத்திற்கான டிரைலரை புதுமுமையான முறையில் வெளியிட இருக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் டிரைலர் வெளியிடப்பட்டுவிடும். ஜூலையில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் வெளியிடப்படும். கோவாவில் எடுக்கப்படும் பாடல் காட்சியில் சூர்யாவும், சமந்தாவும் ஆட இருக்கிறார்கள். இது ஒரு குத்துப்பாட்டு. அவர்களுடன் 200 நடன கலைஞர்களும் ஆடுகிறார்கள். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வருகிற 15ந் தேதிக்குள் படப்பிடிப்பு தொடர்பான அத்தனை பணிகளும் முடிந்து விடும்" என யூனிட் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

எங்களுக்கு அன்பளிப்பே வேண்டாம் - விஜய், அமலாபால் அறிவிப்பு!!

இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தார்கள். இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். வருகிற 7ந் தேதி கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி திருமண நிச்
சயதார்த்தமும். வருகிற 12ந் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் இந்து முறைப்படி திருமணமும் நடக்கிறது. அன்று மாலை அதே ஹாலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருமண நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் எங்களுக்கு அன்பளிப்பு தரவேண்டாம் என்று இருவரும் திருமண பத்திரிக்கையுடன் ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் வைத்திருக்கிறார்கள்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: எங்கள் திருமணத்துக்கு மலர் கொத்துகளோ, பரிசு பொருட்களோ, அன்பளிப்புகளோ யாரும் வழங்க வேண்டாம். உங்களின் அன்பான வாழ்த்துக்களே போதும். அப்படி நீங்கள் எங்களை கவுரவப்படுத்த விரும்பினால் உங்கள் அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ "எபிலிட்டி பவுண்டேஷன்" என்ற அமைப்புக்கு வழங்குங்கள்.

 இந்த அமைப்பு 1995ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாற்றுத் திறன் குழந்தைகளையும், ஆதரவற்ற குழந்தைகளும் பராமரித்து படிக்க வைத்து வாழ்கைக்கு வழிகாட்டும் அமைப்பாகும். உங்கள் பரிசு அவர்களுக்கு சென்றால் அவர்கள் வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். 80சி விதியின்படி உங்கள் பரிசு தொகைக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும்.