Tuesday, June 3, 2014

ஜாலியாக ஆரம்பித்த வெங்கட் பிரபு-சூர்யா படம்!

தம்பியை வைத்து பிரியாணி ஹிட் கொடுத்தவர் தற்போது அண்ணனை வைத்து ஹிட் கொடுக்க ரெடியாகி விட்டார். கடந்த தமிழ் புத்தாண்டு அன்று வெங்கட் பிரபு இயக்க போகும் சூர்யா படத்திற்கு பூஜை போடப்பட்டது.

முதன் முதலாக இப்படத்தில் வெங்கட் பிரபுவுடன் கவிஞர் மதன் கார்க்கியும் இணைந்து வசனம் எழுத உள்ளார். இதை அவர் டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் ‘சூர்யா படத்தின் வேலைகள் ஆரம்பித்து விட்டது, வெங்கட் பிரபுவுடன் பணியாற்றுவது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது’ என டுவிட் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment