Tuesday, June 3, 2014

இன்னும் எத்தனைவாட்டிதான் பூஜாவுக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்பாங்களோ!

நடிகை பூஜாவுக்கு திருமணமாகிவிட்டது என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுபுதுப்புது விதமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். திடீரென ஒரு அழகு சாதனை கடைத் திறப்புக்கு வந்து நின்றார் பூஜா. கேட்டால், திருமணமா.. எனக்கா... நான் பாட்டுக்கு பெங்களூரில் என் பெற்றோர் விருப்பப்படி அவர்களுடன் இருந்தேன் என்றார்.

 அடுத்த ஒரு ஆண்டில், பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வந்த வாய்ப்பைக் கூடத் துறந்துவிட்டு, விடியும் முன் என்ற படத்தில் நடித்தார். நல்ல பலன். படம் ஹிட். பூஜாவுக்கு நல்ல பெயர். தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் நடிப்பைத் தொடர்வதாகக் கூறி வந்தார்.

 இந்த நேரத்தில்தான் திடீரென அவருக்குத் திருமணம் நடந்ததாக செய்திகள் பரவின கடந்த இரு தினங்களாக. அவருடன் யாரோ ஒரு இளைஞர் நிற்க, கைகளில் மாலையுடன் பூஜா. ஆனால் இதனை அடியோடு மறுத்துள்ளார் பூஜா. தான் நடிக்கும் ஒரு படத்தின் காட்சி இது என்றும், அந்த இளைஞர் தன் நண்பர் மட்டும்தான் என்றும் பூஜா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

 இப்படித்தான் சில தினங்களுக்கு முன் இன்னொரு நடிகை, இதே போல மாலையும் கையுமாக நிற்க, உடனே அவருக்கு திருமணம் என்று செய்தியைக் கிளப்பிவிட்டார்கள் சிலர். அப்புறம்தான் தெரிந்தது, அதுவும் ஒரு படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று!


0 comments:

Post a Comment