Tuesday, June 3, 2014

சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து - இயக்குனரின் பரபரப்பு புகார்

சரவணன் என்கிற சூர்யா படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தாரோ ராஜ சுப்பையா.பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை.கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யாவின் ஆதரவு வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார்.அதனை நாம் வெளியிட்டிருந்தோ. தற்போது சூர்யா குடும்பத்தாரால் எனது உயிருக்கு ஆபத்து என்று பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:

சரவணன் என்கிற சூர்யா, என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து, இயக்கி, நானே கதாநாயகனாகவும் நடித்துள்ளேன். இந்த படத்தின் தலைப்பை முறையாகவும் பதிவு செய்துள்ளேன். இந்த சூழ்நிலையில் படத்தின் தலைப்பை மாற்றச்சொல்லி, நடிகர் சூர்யா தரப்பில் இருந்து எனக்கு வற்புறுத்தல் வந்தது.

நான் படத்தின் தலைப்பை மாற்ற மறுத்துவிட்டேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அடியாட்கள் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. படத்தையும் வெளியிட விடாமல் தடுத்துவிட்டனர். நடிகர் சூர்யா தரப்பினரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு முருகராஜா புகார் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment