Thursday, May 22, 2014

அனிருத் இசையில், தனுஷ் எழுத்தில் விஜய் பாடும் பாடல்!

ஐங்கரன் தயாரிப்பு நிறுவனமும், லைகா புரொடக்ஷனும் இணைந்து தயாரிக்கும் படம் 'கத்தி'. விஜய், சமந்தா , சதீஷ் நடிக்கும் ’கத்தி’ படத்தைப் படு வேகமாக இயக்கிவருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்த வருட தீபாவளிக்கு 'கத்தி' படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்கள். அதற்காக கத்தி படக்குழு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். அதில் நான்கு பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துவிட்டார் அனிருத்.மீதமிருக்கும் ஒரு பாடலை தனுஷ் எழுதுகிறார்.இந்தப் பாடலை விஜய் பாடப்போகிறார்.

அனிருத் இசையில், தனுஷ் எழுத்தில், விஜய் பாடும் பாடல் என்பதால் இப்பாடல்மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

0 comments:

Post a Comment