Thursday, May 29, 2014

ஹாலிவுட் படங்களுக்கே கிடைக்காத அனுமதி, ரஜினியின் லிங்காவுக்கு கிடைத்தது எப்படி? ஆச்சரிய தகவல்..!

               ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் தயாராகி வரும் ‘லிங்கா’ படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் சில காட்சிகள் மைசூர் மகாராஜா அரண்மனையில் படமாக்க தற்போது சிறப்பு அனுமதி பெறப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்புவரை அனுமதி தர மறுத்து வந்த மைசூர் அரண்மனை நிர்வாகிகள் தற்போது திடீரென அனுமதி வழங்கியதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒரு காரணம் மத்தியில் ஆட்சி மாறியது என்பது.

மைசூர் அரண்மனையின் சில முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்ததோடு அல்லாமல், மகாராஜா பயன்படுத்திய தங்கத்தில் ஆன அறை ஒன்றிலும் படப்பிடிப்பு நடத்த அரண்மனை நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. ஹாலிவுட் பட இயக்குனர்கள் கேட்டும் அனுமதி கொடுக்காத அரண்மனை நிர்வாகம் ரஜினி படத்திற்கு அனுமதி கொடுத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

ஆனால் மகாராஜா பயன்படுத்திய அறைக்குள் செல்ல நான்கு நபர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால், ரஜினி, அனுஷ்கா, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகிய நான்கு பேர் மட்டுமே தங்கத்தில் ஆன அறையில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

லிங்கா படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க உள்ளது.

0 comments:

Post a Comment