Monday, June 2, 2014

இரட்டை வேடத்தில் சமந்தா நடிக்கிறாரா..?

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற அழகியாகத் திகழ்ந்துவரும் நடிகை சமந்தா தற்பொழுது விஜயுடன் கத்தி திரைப்படத்திலும், சூர்யாவுடன் அஞ்சான் திரைப்படத்திலும் நடித்துவருகிறார். இப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில், சியான் விக்ரம் நடித்துவரும் பத்து எண்ணுறதுக்குள்ள படத்திலும் நடித்துவருகிறார்.

சியான் விக்ரமுடன் சமந்தா ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தில் சமந்தா இரட்டை வேடத்தில் நடிப்பதாகச் சில வதந்திகள் பரவின. ஆனால் இந்த வதந்திகளைச் சமந்தா மறுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஐ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்துவரும் இப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவருகின்றன. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

கோலிசோடா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கும் படமென்பதாலும், விக்ரம் - சமந்தா ஜோடி நடிக்கும் படமென்பதாலும்
எதிர்பார்ப்புக்கள் கூடிவருகின்றன.


0 comments:

Post a Comment