Saturday, May 24, 2014

பொம்மையாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் தான்: ராகவா லாரன்ஸ் அறிக்கை..!

"கோச்சடையான்” படம் பார்த்து ராகவா லாரன்ஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

கோச்சடையான் படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடித்துள்ளார் அவர் பொம்மையாக நடிப்பது பற்றி பலர் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தனர்.

ரஜினி பொமையாக நடிப்பது ரசிகர்களை திருப்திபடுத்துமா? என்றார்கள்.

படம் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி ரசிக்கிறார்கள் பொமையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இந்த படம் சூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் படங்களில் ஒன்றாக இருக்கும். யாரிடமும் உதவியாளராக இல்லாமல் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ஹாலிவுட் தரத்துடன் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கி இருப்பது பாராட்டுக் குரியது.

இந்த படம் வழக்கம் போல் ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்பத்தினரையும் திருப்பதிபடுத்தும் புது முயற்சி இது, இந்த முயற்சி வரும் காலத்தில் இது போன்ற படங்கள் தமிழில் தயாரிக்க முன்னுதாரணமாக இருக்கும்.

பொமையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் குரல் பதிவாக வந்தாலும் சூப்பர்ஸ்டார் சூப்பர்ஸ்டார்தான் என்று நிரூபித்திருக்கிறார் என்று லாரன்ஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment