Thursday, June 5, 2014

கத்தி படத்துக்கு பிரேக் போட்ட ஏ.ஆர்.முருகதாஸ்...!

ஏ.ஆர்.முருகதாஸ் கத்தி படத்தின் படப்பிடிப்பை மிக வேகமாக நடத்தி வந்தார். துப்பாக்கி பிறகு இவர்களது கூட்டணி மீது மக்களிடைய பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

இதற்கிடையிலும் ஏ.ஆர்.முருகதாஸ் , துப்பாக்கி படத்தை அக்ஷய் குமாரை வைத்து, ஹாலிடே என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார்.தமிழ் ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளுக்கும் தனித்தனியே உதவியாளர்களை வைத்திருப்பதால் கத்தி மற்றும் ஹாலிடே படங்களின் வேலைகளை ஒரே நேரத்தில் கவனித்து வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்

வருகிற 6-ஆம் தேதி ஹாலிடே வெளியாக உள்ளதால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மும்பை சென்றுள்ளார்.இதன் காரணமாக வளசரவாக்கத்தில் உள்ள புஷ்பா கார்டனில் நடை பெற்ற வந்த கத்தி படத்தின் ஷூட்டிங்க்கு ஒரு சின்ன பிரேக் விட்டு உள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்

ஹாலிடே படத்தின் புரமோஷன்க்காக சென்றுள்ள முருகதாஸ் அடுத்து பத்துநாட்கள் ஷூட்டிங் இல்லை என்றவுடன் விஜய் இந்த நாட்களை அடுத்து நடிக்க உள்ள படத்திற்கான போட்டோ செஷன் பண்ணிவிடலாமா என்ற யோசித்து வருகிறாராம்.

0 comments:

Post a Comment