Wednesday, June 4, 2014

சிம்பு-செல்வராகவன் படம் டிராப் ஆனதற்கு இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் இணையமாட்டார்கள் என்று சொன்னவர்கள் ஒரு படத்தில் இணைந்தார்கள். செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஒரு படம் நடிப்பதாக கூறிவந்த நிலையில் ’அட இதெல்லாம் நடக்காதுபா’ என்று அனைவரும் சொன்னது போல் சேர்வதற்கு முன்னாடியே இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த படத்தை தயாரிக்க முன்வந்தவர் வாயை மூடி பேசவும் படத்தினை எடுத்தவர்தான். இருவரின் நடவடிக்கைகள் தெரிந்தும் மகராசன் எப்படிதான் அந்த படத்தை தயாரிக்க முன்வந்தாரோ என எல்லோருமே ஆச்சரியப்பட்டனர்.

படபூஜையும் இனிதே ஆரம்பிக்க முதல் நாள் படப்பிடிப்பிற்கு செல்வராகவன் காலையிலேயே ஆஜரானாராம்.ஆனால் சிம்பு மாலை வரை வரவேயில்லையாம். இதனால் முதல் நாள் படப்பிடிப்பு கேன்சல். அடுத்த் நாளில் சிம்பு காலையில் வந்தாராம். ஆனால் செல்வராகவன் எஸ்கேப். முன்றாவது நாள் இருவரும் வந்தார்களாம். நம் பணத்தில் இவர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறார்களே என்று நினைத்த தயாரிப்பாளர் இதற்கு மேலும் இது தொடர்ந்தால் நாம காலியாகிவிடுவோம் என நினைத்தாரோ என்னவோ இருவரையும் அழைத்து, ஐயா உங்க ரெண்டு பேரையும் பத்தி நிறைய கேள்விபட்டிருக்கிறேன்.. இப்பதான் நேருலையே பார்த்தேன். இதற்கு மேல் படப்பிடிப்பை தொடர்ந்தால் என் நிலைமையை ந்யாஆலும் காப்பாற்ற முடியாது.எனவே கிளம்புங்க என்றாராம்.

வாயை மூடி பேசவும்னு சொன்னவரையே இப்படி வாய் பேசவச்சிட்டாங்களே!!

0 comments:

Post a Comment