Wednesday, June 4, 2014

அடுத்த பேரழகன் தயார்..!

சூர்யா - ஜோதிகா இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் பேரழகன். பெரும்பாலானவர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட இப்படம், வசூலிலும்
ஜமாய்த்தது. இப்படத்தில் இடம்பெற்ற அம்புலி மாமா அம்புலி மாமா பாடல் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பேரழகன் திரைப்படத்தினை இயக்குனர் சசிசங்கர் இயக்கியிருந்தார். இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் அடுத்த திரைப்படம்தன பகடை பகடை. திலீப்குமார் ஹீரோவாகவும், திவ்யா சிங் ஹீரோயினாகவும் நடித்துவரும் இத்திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவையினை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

வி.ஆர்.டி.டி ஆர்ட்ஸ் மற்றும் விஷ்டம் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் இப்படத்திற்கு ராம்ஜி - ஏ.சி.ஜான்பீட்டர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்காட்சிகள் மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாம். சிங்கமுத்து, கோவைசரளா உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புக்கள் வெளியாகலாம்.

0 comments:

Post a Comment