Wednesday, June 4, 2014

தனது மகளுடன் நடிப்பிற்குத் திரும்புகிறாரா ஜோதிகா?

தமிழ் சினிமாவின் மிக முக்கியக் கதாநாயகியாகத் திகழ்ந்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவுடனான திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகியே இருந்துவந்த ஜோதிகா விரைவில் நடிப்புலகிற்குத் திரும்பவுள்ளதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாகவும், அதற்கு ஜோதிகாவும் சம்மதம்
தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பிற்குத் திரும்பவுள்ள ஜோதிகா இப்படத்தில் தனது மகள் தியாவுடன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக வதந்திகள் கிளம்பியிருந்தன.

இதுகுறித்து பாண்டிராஜ் மறுப்புத் தெரிவித்துள்ளார். சூர்யா - ஜோதிகாவின் மகளான தியா தனது படத்தில் நடிப்பது குறித்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் வதந்திகள் என்றும், அவற்றில் உண்மை இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.

சிம்பு - நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் இது நம்ம ஆளு திரைப்படத்தினை இயக்கிவரும் பாண்டிராஜ் இப்படத்திற்குப் பிறகு ஜோதிகா நடிக்கவுள்ள
படத்தினை இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகலாம்.

0 comments:

Post a Comment