Wednesday, June 4, 2014

சிம்புவிடமிருந்து கெளதம்மேனனை காப்பாற்றிய ஆன்மீகம்!

சிம்பு என்றாலே வம்பு என்று நினைக்கும் டைரக்டர்கள் அவரை வைத்து படம் இயக்கவே பயப்படுகிறார்கள். காரணம், முன்பெல்லாம் எந்த டைரக்டர் சிம்புவிடம் கதை சொன்னாலும், அவர்கள் சொல்லி முடித்ததும், இவர் அதே கதையை தனது ஸ்டைலில் பிரிச்சு மேய்ந்து விடுவார். அதனால் டோட்டல் கதையே மாறிப்போயிருக்கும். இப்படியிருந்தால்தான அது சிம்பு ஸ்டைல் கதை என்றும் பின்னர் அவர்களிடம் சொல்வார்.

இதன்காரணமாக, அவரிடம் சென்றால், தலையை வாலாகவும், வாலை தலையாகவும் மாற்றி விடுவார் என்று டைரக்டர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால், சமீபகாலமாக சிம்புவிடம் ஏகப்பட்ட மாற்றங்கள், மற்றவர்கள் சொல்லும் விசயங்களை காது கொடுத்து கேட்கிறார். அவர்களின் கருத்துக்களுக்கும் மரியாதை கொடுக்கிறார். இதனால் சிம்புவிடம் இத்தனை பண்பு எங்கிருந்து எப்படி வந்தது என்று பலரும் ஆச்சர்யமாக அவரை பார்க்கின்றனர்.

ஆனால் சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்துக்கு காரணமே ஆன்மீகம்தானாம். சமீபத்தில் இமயமலையிலுள்ள ஆலயங்களுக்கு சென்று வந்த பிறகுதான் சிம்பு இப்படி அடியோடு மாறிப்போயிருக்கிறாராம். அதனால்தான் தான் நடித்து வந்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விட்டு அஜீத் பட வேலைகளில் கெளதம்மேனன் இறங்கியபோதுகூட அவரிடம் கடினமாக ஒரு வார்த்தைகூட பேசவில்லையாம் சிம்பு.

இதே பழைய சிம்புவாக இருந்திருந்தால் அக்கப்போர்தான். ஆனால், கெளதமுக்கு நல்ல நேரம் சிம்பு ஆன்மீகத்துக்குள் நுழைந்து விட்டார் என்கிறார்கள்.

0 comments:

Post a Comment