Wednesday, June 4, 2014

சூர்யா -வெங்கட் பிரபு படம் என்ன ஆச்சி..?

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
தற்பொழுது டப்பிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

அஞ்சான் திரைப்படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தினை இயக்கவுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இப்படத்தின்
படப்பிடிப்புக்கள் விரைவில் துவங்கவுள்ளன.

சூர்யா - வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகவுள்ள இத்திரைப்படம் குழந்தைகளையும் கவரும் விதமாக உருவாக்கப்படும் என்று ஏற்கெனவே
அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு பாடலாசிரியர் கார்க்கி வசனங்களை எழுதிவருகிறார்.

மதன் கார்க்கி வெளியிட்டு டிவிட்டின் அடிப்படையில் இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். நயன்தாரா மற்றும் எமி ஜேக்சன் ஆகியோர் இப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.

0 comments:

Post a Comment