Saturday, May 31, 2014

நடிகர் சூர்யா ஆதரவு வேண்டும் - இல்லையெனில் சாவதை தவிர வேற வழியில்லை..?

நடிகர் சூர்யா ஆதரவு வேண்டும்;இல்லையெனில் சாவதை தவிர வேற வழியில்லை-ஒரு இயக்குனரின் கண்ணீர் கடிதம்  

சரவணன் என்கிற சூர்யா இது படத்தின் தலைப்பு. இந்த படத்தை இயக்கியிருப்பவர் ராஜா சுப்பையா என்கிற புது இயக்குனர். இந்த தலைப்பில் என்ன பிரச்னை என்கிறீர்களா? இங்குதான் பிரச்னை ஆரம்பமானது.  நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன்.

சினிமாவிற்காக சூர்யாவாக மாற்றப்பட்டவர். படத்தின் பெயர் இவரை பிரதிப்பலிப்பதால் ஆரம்பம் முதலே எதிர்ப்பு வந்ததாக  கூறப்படுகிறது. படத்தின் தலைப்பை மாற்றக்கோரி இயக்குனர்க்கு பல தரப்பிலிருந்தும்  கூற்ப்பட்டன. ஆனால் இது நடிகர் சூர்யாவுக்கு எந்த விதத்திலும் இழுக்கு ஏற்படுத்தாது என்றும்,இந்த கதைக்கு இந்த தலைப்பே பொருத்தமானது என்றும் இயக்குனர் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு  வந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து விளம்பரங்கள் வெளியிடும் நேரத்தில் சிக்கல்..சூர்யா மற்றும் சிவக்குமாரிடம் அனுமதி கடிதம்கொடுத்தால் மட்டுமே படம் தொடர்பான விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்று  கூறப்பட்டதாம். இதனால் மனம் நொந்த  இயக்குனர், என் படத்துக்கு சூர்யா ஆதரவு தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் தான் சாவதை தவிர வேறு வழியில்லை என்று  கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு…..

பலபேர் வாழ்க்கைக்கு வழி அமைத்துகொடுத்துள்ள சூர்யா நிச்சயம் இந்த இயக்குனருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்பதே ரசிகர்களின் எண்ணம்!!

0 comments:

Post a Comment