Saturday, May 31, 2014

கோச்சடையான் படத்தால் தீபிகா படுகோனே கோபம்..?


‘கோச்சடையான்’ படத்தில் தனது உருவத்தை அலங்கோலமாக காட்டி விட்டதாக தீபிகா படுகோனே கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனே தமிழில் அறிமுகமான முதல் படம் கோச்சடையான்.

ஏற்கனவே ராணா படத்தில் ரஜினி ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அது நின்று போனதால் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடிக்க வைக்கப்பட்டார். இந்த படத்தை அதிகம் எதிர்பார்த்தார். இதன் மூலம் தென்னிந்திய மார்க்கெட்டை பிடிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. சென்னையில் நடந்த இந்த படத்தின் பாடல், டிரெய்லர் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றார்.

கோச்சடையான் ரிலீசானதும் தனது நடிப்பு பற்றி ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் இணைய தளங்களில் ரசிகர்கள் அவரது நடிப்பை விமர்சித்து கருத்துக்களை பதிவு செய்தனர். அனிமேஷனில் தீபிகா படுகோனே அழகை அலங்கோலபடுத்தி விட்டதாகவும் விமர்சனங்கள் வந்தன. படம் வெற்றிகரமாக ஓடினாலும் கூட தீபிகா படுகோனே கேரக்டருக்கு வரவேற்பு இல்லை. இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனது கேரக்டர் முக்கியத்துவம் இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டதாகவும் அனிமேஷனில் தன்னை அழகாக காட்டவில்லை என்றும் நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம். தீபிகா படுகோனே கேரக்டரை கேலி செய்தும் இன்டர்நெட்டில் ஜோக்குகள் பரவுகின்றன. கோச்சடையான் படம் குறித்து இதுவரை அவர் கருத்து எதுவும் கூறவில்லை. படம் ஹிட்டானது பற்றியும் எதுவும் பேசவில்லை. ஆனால் தீபிகாவுக்கு நெருக்கமானவர்கள் இது வதந்தி என்று மறுக்கின்றனர்.

கோச்சடையான் படக்குழு மீது தீபிகா படுகோனேவுக்கு கோபம் இல்லை. படம் நன்றாக ஓடுவதை பார்த்து சந்தோஷத்தில் இருக்கிறார் என்றனர்.

0 comments:

Post a Comment