Friday, November 1, 2013

இசைப்பிரியா கொலை : சானல் 4 வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்!



இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தினரால் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. ஆனால் இசைப் பிரியா போரின் போதே கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது.


இந்நிலையில் இலங்கை போர்குற்றம் தொடர்பாக சானல் -4 தொலைக்காட்சி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இசைபிரியாவை இலங்கை ராணுவத்தினர் அழைத்துச் செல்லும் காட்சியுடன் அவரை மிரட்டும் காட்சிகளும் உள்ளதால் பெரும் அதிர்ச்சி அலை கிளம்பியுள்ளது.



விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் மிகவும் கொடூரமான முறையில் கொன்றது தொடர்பான புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. மனதை பதைபதைக்கச் செய்யும் இந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை பிரிட்டனைச் சேர்ந்த சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.


வயல்வெளி ஒன்றின் வழியாக தப்ப முயன்ற இசைப்பிரியாவை மிகவும் கொடூரமான முறையில் இலங்கை ராணுவ வீரர்கள் இழுத்துச் சென்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரே அந்த காட்சியை படம் பிடித்திருப்பதும் தெளிவாக தெரிகிறது.
அப்போது பிரபாகரனின் மகள் என சிலர் கூறுவதும், அதை இசைப்பிரியா மறுப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.இதுதவிர மேலும் பல பெண்கள், ஆண்களை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


nov 1 - isaipriya











விடுதலைப் புலிகளுடன் நடந்த போரில் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு இதுவரை கூறிவந்த நிலையில் உயிருடன் இருந்த இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்று அவரை கொடுமைப்படுத்தி கொன்றிருப்பது தற்போது வெளியான வீடியோ மூலம் உறுதியாகிறது.


இதற்கிடையில் இசைப் பிரியாவை இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றது குறித்த வீடியோ உண்மை என்று தெரிய வந்தால், நிச்சயமாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

Related Posts:

  • இதையும் பாருங்க..... இதையும் பாருங்க ... நாங்கன்னா சுனாமில சும்மிங் போடுவோம்......  நாங்கன்னா எவ்வளவு தைரியசாலி தெரியுமா?......அப்ப நீங்கதான் இதைப் பார்க்கனும்............... பாருங்களேன்..................... கருத்தை… Read More
  • இது உனக்கு தேவையா! இது உனக்கு தேவையா................ இதுக்குதான் அதிகமா ஆட்டம் போடக்கூடாதன்னு சொல்றாங்க.....என்ன புரியுதா தம்பி....போ..... போ...... போயி....... பொழப்ப பாறு...... … Read More
  • பறவைக்கு இவர்தான் GOD! இவரைப் போன்ற கருணை உள்ளம் கொண்ட கருணாமூர்த்திகள் இருப்பதால்தான் தரணி தழைக்கிறது  நண்பர்களே!.......தங்கள் கருத்துகளைக் கீழே பகிரவும்........… Read More
  • என்ன கொடுமை சார்!என்ன கொடுமை சார்...................... இதெல்லாம் தப்பில்லையா..........................பாவம் பயபுல்லைய மன்னிச்சு விடுங்க சார்..........… Read More
  • அபார சிந்தனை! வேலை மிச்சம்!அபார சிந்தனை! வேலை மிச்சம்! என்னமா யோசிக்கறாங்க பாருங்க...... பாருங்கள் மக்களே! .... பாருங்கள் மக்களே! ....   உங்கள் கருத்துகளைக் கீழே கிறுக்கி வையுங்கள்.......… Read More

0 comments:

Post a Comment