Wednesday, May 28, 2014

அஜீத் பட ஷுட்டிங் – பட யூனிட் தூக்கம் காலி..!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் ஒரு புதிய படம் நடித்துக் கொண்டு வருவது நமக்கு தெரிந்த பழைய விஷயம்.

அஜீத் ஈசிஆர் ரோட்டில் படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார் என்ற செய்தி அப்படியே சென்னையை சுற்றி பரவ, வந்தது பாருங்க கூட்டம், அப்படி ஒரு கூட்டம்.

இந்த கூட்டத்தை பார்த்து படம் எடுக்க முடியலையேனு கடுப்பாகி அதிரடியாக கௌதம் மேனன் எடுத்த முடிவின் விளைவு சுமார் 100 பேருக்கு தூக்கம் போச்சு

பகலில் படப்பிடிப்பு நடத்தினால் நம்ம படம் எடுக்க முடியாதுனு புரிந்து கொண்ட கௌதம், ஷுட்டிங்கை நள்ளிரவில் நடத்துகிறார். அதுவும் தனது யூனிட்டை சேர்ந்தவர்களுக்கு கூட ஈசிஆரில் எந்த இடத்தில் படப்பிடிப்பு என்பதையும் கடைசி நேர தகவலாகவே சொல்கிறாராம்.

இவ்வளவு ஜாக்கிரதையாக படம் எடுத்தாலும், நடு இரவில் தலலலலனு குரல் மட்டும் வருதாம்.

தல ரசிகர்கள் நாங்கள், தல காட்டாம இருப்போ மா.

0 comments:

Post a Comment