Wednesday, May 28, 2014

மீடியாவை கண்டு பயப்படும் கவுண்டமணி..?

இரண்டு, மூன்று வருடமாக சினிமா பக்கம் தலைக்காட்டாத கவுண்டமணி, தற்போது 49 ஓ திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

அவர் சினிமா திரையுலகில் தலைக்காட்டாத பட்சத்திலும் அவரது காமெடிகள் இப்போதும் ஓயாத அலையாய் அடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மிக எளிமையாக அவர் பிறந்தநாளை அவரது அலுவலகத்திலேயே கொண்டாடிய கவுண்டமணி,

மீடியாக்கு அளித்த பேட்டியில், படங்களே பார்ப்பதில்லை என்றும் ஆனால் ஆங்கில படத்தின் காமெடியை மட்டும் ரசிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் பத்திரிக்கைகளை கண்டு பயப்படுவதாகவும், தான் ஒன்று சொன்னால் அவர்கள் வேறு ஒன்றை எழுதி, ஏழரையை கூட்டுகிறார்கள் என்றும் கூறியிருகிறார் நம்ம கவுண்டர்.

அதையடுத்து, மற்ற அனைத்து கேள்விகளுக்கும் 49 ஓ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் பதிலளிப்பதாக தெரிவித்துள்ளாராம்.

49 ஓ திரைப்படத்தில் கவுண்டரின் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் !

0 comments:

Post a Comment