Wednesday, May 28, 2014

பார்த்திபனின் புதிய போட்டி!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிவருகிறது கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாமல் ஒரு படம்
என்ற சப்டைட்டிலுடன் உருவாகிவரும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். முன்னணி நடிகர் மற்றும்
நடிகைகளில் பெரும்பாலானவர்கள் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்குவரவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தினை விளம்பரப்படுத்தப் புதிய முயற்சியிலும் இறங்கியிருக்கிறது படக்குழு. இப்படத்தின் டைட்டிலை நான்கு முக்கிய
இயக்குனர்கள் எழுதிக் கொடுத்ததாகவும், அதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையினை எடுத்து இப்படத்தின் டைட்டிலை வைத்ததாகவும் கூறியுள்ள பார்த்திபன், அந்தத் டைட்டிலை வைத்துக் கொண்டு அதன் ஒவ்வொரு வார்த்தையினையும் எந்த இயக்குனர் எழுதினார் என்று சரியாகக் கண்டுபிடிப்போருக்குப் படத்தினைப் பார்ப்பதற்கான நான்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

சரியான விடையைக் கண்டுபிடிப்போர் ktvimovie2014@gmail.com என்ற மெயில் ஐடிக்கு தங்களது விடைகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுனர். மேலும் அத்துடன் உங்களின் முகவரி, போன் நம்பர் உள்ளிட்டவற்றையும் அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment