Sunday, May 25, 2014

நல்ல நண்பன் 100 உறவினர்களுக்குச் சமம்..!

இரண்டு நண்பர்கள் வியாபாரம் சம்பந்தமாக ஒரு பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர், கடுமையான வெயிலின் காரணமாக இருவருக்கும் மிகுந்த தாகம் ஏற்பட்ட்து, அதே வழியில் இருவரும் ஒரு தண்ணீர் ஊற்றை கண்டு ஆவலுடன் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு தண்ணீர் குடிப்பதில் தகறாரு ஏற்பட, ஒருவர் தன்னுடைய நண்பனை அடித்துவிடுகின்றார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த நண்பர், அந்த பாலைவன மணலில் ஏதோ எழுதிவிட்டு, அந்த இட்த்தை விட்டு நகர்கின்றார், அதை கண்ட பின் தொடர்ந்து வந்த அவரது நண்பர், என்ன எழுதினான் என்று பார்க்கையில் “என் நண்பன் என்னை கன்னத்தில் அறைந்துவிட்டான்” என்ற வார்தையைப் பார்கின்றார்.

ஒருவருக்கொருவர் பேசாமலேயே, மீண்டும் பயணத்தை தொடர்கின்றார்கள்

சற்றும் எதிபாரத நேரத்தில், அடி வாங்கிய நண்பர் ஒரு புதைகுழியில் மாட்ட, கன்னத்தில் அறைந்த நண்பனோ, தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய நண்பனை காப்பாற்றுகின்றார். இந்த சம்பவம் நடந்த பின்பு, ஒரு பாறையில், புதைகுழியில் விழுந்த அந்த நண்பன் மீண்டும் ஏதோ எழுதுவதைக் கண்ட அவருடைய நண்பர், அருகில் வந்து பார்த்தார் “என் நண்பர் என் உயிரைக் காப்பாற்றினான்” என்று எழுதியிருந்த்தைக் கண்டு, அவரிட்ம் வினவினார்.

நான் உன்னை அடித்ததை மணலில் எழுதிவிட்டு, உயிரைக் காப்பாற்றியதை மட்டும் பாறையில் ஏன் எழுதினாய்?

”என்ன இருந்தாலும் நீ என் நண்பன், ஏதோ ஒரு கோபத்தில் அடித்துவிட்டாய், அது நான் பாலைவனத்தில் எழுதிய எழுத்து போல, கொஞ்ச நேரத்தில் என் மனதில் இருந்துவிட்டு மறைந்துவிட வேண்டும் என்றும், என் உயிரைக் காப்பாற்றியதை நான் என் வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சில், இந்த பாறையில் எழுதிய எழுத்து போல மறையாமல் இருக்க வேண்டும் என்றும் அப்படி செய்தேன்

0 comments:

Post a Comment