Tuesday, December 24, 2013

கூகிள் சொல்லாது இறையின் இரகசியம் !





விதைக்குள்
 விருட்சம்
 உறங்கியதெப்படி

 விசித்திர வானில்
 வாழும்
அண்டங்கள் எப்படி

 பூவுக்குள் தேன்
 பிறந்தது எப்படி

 பூமி தன்னையும் சுற்றி
 சூரியனையும்
 சுற்றுவது எப்படி

 பனித்துளி புல்லில்
 அமர்ந்தது எப்படி

 பசுவுக்கு நாளும்
 பால் சுரப்பது எப்படி

 பகலும் இரவும்
 மீன்கள்
 தூங்காதிருப்பது எப்படி

 பாதி நிலவும்
 வளர்வது எப்படி

 பசியும் தாகமும்
 வருவது எப்படி

 எண்ணமும்
 செயலும்
 உருவாகிறதே எப்படி

 உடலுக்குள்
 உயிரும் ஒட்டியிருப்பது எப்படி

 சும்மா கசக்கு
 மூளையை கொஞ்சம்

 கூகிள் சொல்லாது
 இறையின் இரகசியம் !

0 comments:

Post a Comment