Saturday, December 28, 2013

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கான வேலைகள் தொடங்கின ? -




இளைய தளபதி விஜய் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி மாபெரும்
வெற்றி பெற்ற திரைப்படமான துப்பாக்கி திரைப்படத்திற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக ஏற்கெனவே கூறப்பட்டது. அதற்கான படப்பிடிப்புத் தளங்களைப் பார்வையிட ஏ.ஆர்.முருகதாஸ் தற்பொழுது கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமின்றி அவருடன் இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் தற்பொழுது கொல்கத்தாவில் படப்பிடிப்பிற்கான லொகேசன்களைத் தேர்வு செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கி திரைப்படம் முழுவதும் மும்பை நகரை மையப்படுத்தி
உருவாக்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்பொழுது கொல்கத்தாவை மையப்படுத்தி அடுத்த திரைப்படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் அடுத்த ஆண்டு துவக்கம் முதல்
படப்பிடிப்புத் துவங்கவுள்ள இத்திரைப்படம், அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீசாக
இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment