Saturday, December 28, 2013

நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா...



நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...!


உங்களுக்கு சரக்கு அடிக்க ரொம்ப பிடிக்குமா? அப்படி சரக்கு அடித்த பின்னர் நீங்கள் செய்த அட்டகாசங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இல்லையா.. அப்படியெனில் இந்த கட்டுரையைப் படித்து பாருங்கள்.


பொதுவாக சரக்கு அடித்தவர்களுக்கு, சரக்கு அடித்தப் பின்பு செய்யும் லூட்டிகள் எதுவும் ஞாபகத்தில் இருக்காது. ஆனால் உங்களுக்கு சரக்கு அடித்த பின்னர் ஆண்கள் செய்யும் லூட்டிகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியானால், தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக சரக்கு அடித்தப் பின்னர், ஆண்கள் செய்யும் சில லூட்டிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்துப் பாருங்கள்.


நான் நல்ல அழனும்டா.. அதுக்காக 'சியர்ஸ்'டா... குடிக்க இப்படியும் காரணம் சொல்றாங்கய்யா...!


* சில ஆண்கள் சரக்கு அடித்தப் பின்னர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்தும் பாசத்திற்கு அளவே இருக்காது. அதுமட்டுமின்றி, அந்நேரத்தில் யாராவது ஒருவர் அவர்களிடம் சிக்கினால் போதும், அவ்வளவு தான். வேறு என்ன இதுவரை எங்கும் பார்த்திராத அளவில் பாச மழையில் நனைவார்கள்.


* சிலருக்கு போதை ஏறிவிட்டால் போதும், சூப்பர் மேன் போல் எதையும் செய்யும் தைரியம் வந்துவிடும். மேலும் அந்நேரத்தில் அவர்கள் இவ்வுலகில் தன்னை ஒரு பெரிய ஹீரோ போன்று பாவித்துக் கொண்டு, சிறு தவறு நடந்தாலே அதைத் தட்டி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.


* ஆண்களிடம் எப்போதும் இரகசியமே நிலைக்காது. ஏனெனில் அவர்கள் ஒரு கட்டிங் போட்டால் போதும், எப்பேற்பட்ட இரகசியத்தையும் ஒரு நொடியில் சொல்லிவிடுவார்கள்.


* சிலர் சரக்கு அடித்தால், காரணமே இல்லாமல் அழ ஆரம்பித்துவிடுவார்கள். அதிலும் சிலரோ பல வருடங்களுக்கு முன்பு இறந்து போன தாத்தா அல்லது பாட்டியை நினைத்து அழுவார்கள்.


* எப்படி அழும் பழக்கம் உள்ளதோ, அதுப்போல சிலருக்கு போதை ஏறிவிட்டால் சிரிக்க ஆரம்பிப்பார்கள்.


இதுப்போன்று பல லூட்டிகளை போதை ஏறிவிட்டால் ஆண்கள் செய்வார்கள். சரி, நீங்க என்ன லூட்டி செய்வீங்கன்னு எங்களோடு பகிர்ந்து கொள்ளலாமே!

0 comments:

Post a Comment