Wednesday, December 18, 2013

வெளி நாட்டு வாழ்க்கை....



வெளி நாட்டு வாழ்க்கை....


தெரியாத ஊர்...

அறியாதமொழி...

புதிதான சூழல்...

புரியாத சுற்றம்...

அனைத்தும் தாண்டி நாம்

 அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே...

முதலில்

 வெளிநாட்டில் வாழ்வோரெல்லாம்

 தகுதியானவர்கள் இல்லை

 பிறர்க்கு வாழ்க்கையை கற்றுகொடுக்கவும்

 தகுதியானவர்கள்...

இங்கே

 முடிந்தால் சாப்பிடுவோமே தவிர

 மூன்றுவேளையும் சாப்பிடுவது இல்லை...

முடிவெட்டினால் கூட

 ஒட்ட வெட்டுவோமே தவிர

 ஒருபோதும் விட்டு வெட்டியதில்லை...

இது

 எங்களின் கஞ்சதனமில்லை

 நான் அசிங்கமானாலும் பரவாயில்லை

 என் குடும்பம் அழகாக இருக்கவேண்டுமென்ற

 அபூர்வ குணமே....

அது போல

 வெளிநாட்டு வாழ்க்கை

 சில பிரிவை தந்தாலும்

 பொருத்துக்கொள்வோம்

 ஏனென்றால் அதுதானே

 நமக்கு பிழைப்பையும்

 தந்திருக்கிறது.

0 comments:

Post a Comment