Wednesday, December 18, 2013

வரலாற்று குறிப்பில் இருந்து...



நாடு சுதந்திரம் அடந்தபின் ஒருநாள் நள்ளிரவு டில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர், அம்பேத்கர் அவர்களைச் சந்திக்க வந்தார். அப்போது அம்பேத்கர் படித்துக் கொண்டிருந்தார்.


காந்தி,நேரு இருவரையும் சந்திக்கச் சென்றோம் அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள், நீங்கள் இந்த நள்ளிரவிலும் படித்துக்கொண்டிருக்கிறீர்களே” என்று செய்தியாளர் வியந்து கேட்டார்.


 "அவர்கள் சமுதாயம் விழித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே அவர்கள் தூங்கப் போய்விட்டார்கள். என்னுடைய சமுதாயம் தூங்கிக் கொண்டிருக்கிறது. எனவே நான் விழித்துக் கொண்டிருக்கிறேன்" என்று அம்பேத்கர் பதில் கூறினார்.

0 comments:

Post a Comment