Thursday, December 12, 2013

இத்தனை பெயர்களா?



அடிசில்,

அமலை,

அயினி,

உண்டி,

 உணா,

 ஊண்,

கூழ்,

சொன்றி,

 துற்றி,

பதம்,

பாளிதம்,

 புகா,

புழுக்கல்,

புற்கை,

பொம்மல்,

 மடை,

மிசை,

மிதவை,

மூரல்...

இவை எல்லாம் என்ன?

ரொம்ப யோசிக்காதீங்க நண்பர்களே...

நாம் தினமும் சாப்பிடும் 'சோறு’க்கான தமிழ்ப் பெயர்கள்தான் இவை.

ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்களைச் 'சொல்லாட்சி’ என்பர்.


 இத்தகைய சொல்லாட்சிச் சிறப்பு கொண்ட முதல் மொழி, நம் தமிழ் மொழிதான்.

0 comments:

Post a Comment