Monday, December 16, 2013

சற்று சிந்தியுங்கள் அன்பர்களே..



ஆடம்பரத்திற்காக
 பட்டு புடவை வாங்கும்பொழுது பேரம்
 பேசுவதில்லை, நம்
 உடல்நலத்தை கெடுக்கும்
 குளிர்பானம், பீட்சா, பர்கர்,
வெளிநாட்டு கோழிக் கறிகள்
இவற்றை வாங்கும்
 பொழுது பேரம் பேசுவதில்லை,

நம் அந்தஸ்த்தை காட்ட அணியும்
 அணிகலன்கள் வாங்கையில் பேரம்
 பேசுவதில்லை,

ஆனால் நமக்காக
 நம் உடல்நலத்தை மனதில்
 கொண்டு நல்ல
 காய்கறிகளை உற்பத்தி செய்யும்
 ஏழ்மை பட்ட விவசாயிகளிடமும்,
காய்கறிகளை நம்மிடம்
 கொண்டுவந்து சேர்க்கும்
 காய்காரர்கள், கீரை விற்கும்
 பெண்மணியிடமும் பேரம்
 பேசுகிறோம்.

அந்நிய நாட்டில் தயாரிக்கப்
 பட்டது என்றால்
 அது என்னவென்றே தெரியாவிட்டாலும்
 அதிக விலை கொடுத்து வாங்க
 முன்வரும் இந்த சமூகம்
 நம்நாட்டில் தயாரிக்கப் படும்
 தின்பண்ட்களை வாங்க
 மறுக்கிறது.

அந்நிய
 நாட்டு பொருட்களை வாங்கி உன்னை அழித்துக்கொண்டு
 அந்நியர்களை வாழவைப்பதை விட
 நம்
 நாட்டு பொருட்களை வாங்கி உண்டு நீயும்
 வாழலாம் மற்றவர்களையும்
 வாழவைக்கலாம்.

சற்று சிந்தியுங்கள் அன்பர்களே..

0 comments:

Post a Comment