Saturday, November 23, 2013

பொது அறிவு - தெரிந்துக் கொள்ளுங்கள்!

1. தேசியகீதம் முதன் முதலில் ஜப்பானில்தான் தோன்றியது.

2. ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 450 அடி நீளமுள்ள வலையைப் பின்னுகிறது.

3. பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் முதல் தேதியை மீன்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

4. முதலையின் ஆயுள் 60 ஆண்டுகள். அதன் முதுகில் இருக்கும் பெரிய புடைப்புகளைக் கொண்டு அதன் வயதைக் கணிக்கிறார்கள்.

5. புல் வகையில் மிக உயரமாக வளரக்கூடியது மூங்கில். 36 மீட்டர் உயரம் வரை இது வளரும். ஒரு நாளைக்கு அரை மீட்டர் அளவு வளரும்.

6. மண்புழுவிற்கு கண்ணும் காதும் கிடையாது. ஆனால், ஒளியையும் அதிர்வையும் உணரக் கூடிய ஆற்றல் உண்டு.

7. "வீனஸ் கிர்டில்' என்பது நாடா போன்ற, இரண்டடி நீளமுடைய ஒரு வகை மீன். இது கடல் நீரில் பல நிறங்களில் தோன்றும். இதை, கிரேக்கர்களின் அழகுத் தேவதை அணியும் ஒட்டியாணம் என்று சொல்வார்கள்.

8. கண்ணாடி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால், வெண்கலத் தகடுகள்தான் முகம் பார்க்கப் பயன்பட்டன.

9. நில நடுக்கத்தை அளக்கும் கருவிக்கு "ரிக்டர் ஸ்கேல்' என்று பெயர். சார்லஸ் ரிக்டர் எனும் அமெரிக்கரே இதைக் கண்டுபிடித்தார்.

10. "அறிவியலின் தந்தை' என்று போற்றப்படுபவர் கலிலியோ. இவர் இத்தாலிய வானியல் மேதை. தேவாலய விளக்கு காற்றில் அசைவதைப் பார்த்ததன் மூலம் - ஊசல் தத்துவம் எனும் பெரிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.

11. "மேக்மா' என்பது பூமிக்குள் உருகிய நிலையில் உள்ள பாறைக் குழம்பின் பெயர்.

12. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22.

13. வளர்ச்சியடைந்த மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் இருக்கும்.

14. ஒரு மரத்தின் பெயரால் அழைக்கப்படும் நாடு "பிரேசில்.'

15. சவுதிஅரேபியா நாடு, பொதுமக்களிடமிருந்து வருமான வரி வசூலிப்பதில்லை.

0 comments:

Post a Comment