Saturday, November 23, 2013

எச்சரிக்கை.... எச்சரிக்கை.... எச்சரிக்கை....


எச்சரிக்கை.... எச்சரிக்கை.... எச்சரிக்கை....

பேரூந்தில் பயணம் செய்யும்போதோ அல்லது வெளியிலோ யாரேனும் முகம் தெரியாதவர்கள் உங்களது செல்போனை கேட்டால் கொடுப்பதை தவிர்ப்பதே நலம்.

கடந்த மாதம் பாம்பேயில் ஒரு பயணியிடம் அடுத்திருந்த ஒருவர் தனது போனில் சார்ஜ் இல்லையென கூறி வாங்கி 2..3 ..முறை
 யாருடனோ பேசியுள்ளார்...

இச்சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் இந்த
 செல்போன் காரரின் வீடு தேடி போலிஸ் வந்து
 கைது செய்துள்ளனர், ஒரு பெண் கொலை
 செய்யப்பட்டுள்ளதாகவும் அவளின் செல்போனில்
 இவரது நம்பர் இலிருந்தே கடைசி 3 கால்கள் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.

போன்காரர் காவல்துறையினரிடம், தனது போனை வாங்கி 2, 3முறை ஒருவர் பேரூந்தில் வாங்கி பேசியதை கூறியும் காவல்துறையினர் சந்தேகம் முழுவதுமாக நீங்கிய பாடில்லை.

பிறகு பேசியவரின் குரலை பதிவு செய்து சோதனை
 செய்ததில் பேசியவர்கள் மராத்தி மொழியில் பேசியுள்ளார்கள்.

ஆனால் இந்த போன்காரருக்கோ மராத்தி மொழியே
 தெரியாது, இன்னமும் வழக்கிலிருந்து பூரணமாக
 இவர் விடுபடவில்லை.

உதவி செய்யப்போய் உபத்திரவமா?

0 comments:

Post a Comment